Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலுக்கு வந்து திருநீறு வாங்கிட்டு போனார் மதுரை ஆதினம் ...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை: என் ஆதீனத்திற்கு நிறை நடிகர் நடிகைகள் வந்துள்ளனர். சிவாஜி வந்துள்ளார்.. ஏன் சில்க் ஸ்மிதாவே வந்துள்ளாரே...என்னிடம் திறுநீறு வாங்கிக் கொண்டு போனார். பருத்தி வீரன் பிரியாமணி கூட வந்தார்.. வந்த பிறகுதான் அவருக்கு அவார்டே கிடைத்தது என்று ஒரு பேட்டியில் சிலாகித்துக் கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.

மதுரை ஆதீனத்தின் ஒருபக்கம் ரொம்ப ஆன்மீக மயமானது என்றால், மறுபக்கம் மகா சுவாரஸ்யமானது.

சீரியஸாகவும் பேசுவார்.. கிச்சுகிச்சென சிரிக்கவும் வைப்பார்.. டென்ஷன்படுத்தவும் செய்வார்.. டெர்ரிபிளாகவும் சில நேரங்களில் பேசுவார்.

அப்படி ஒரு பேச்சை, பேட்டியை விகடனுக்குக் கொடுத்துள்ளார் ஆதீனம். வாங்க படிச்சுப் பார்ப்போம்.

-

அம்மாவை மறந்துட்டீங்களேப்பா...

வரும் தேர்தலில் நரேந்திர மோடி, ராகுல் காந்தி... இருவரில் யார் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

இவர்களைத் தவிர மூன்றாவதாக ஒருவர் இருக்கிறாரே... அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்? தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்திவரும் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிரதமர் பதவியில் அமர்வார். ஆம், அம்மாதான் அடுத்த பிரதமர்!

.

உங்களுக்கு சினிமா பிடிக்கும் என்று எங்களுக்குத் தெரியும். சினிமாவில் எந்த நடிகர், நடிகைகளைப் பிடிக்கும்? எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்குமே. இன்னார்தான் பிடிக்கும் என்று சொல்லி மற்ற பலர் மனதைப் புண்படுத்துவது எனக்குப் பிடிக்காது -

விஜயகாந்த்.. சிவாஜி

யார் மனமும் புண்படாமல் தகவல்களைப் பகிரலாமே..!

விஜயகாந்த் என் மடத்துக்கு வந்திருக்கிறார். சிவாஜியை சில நிகழ்ச்சிகளில் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.

-

சில்க் ஸ்மிதா வெகு பிரபலமாக இருந்தபோது, மடத்துக்கு வர அனுமதி கேட்டார். மடத்தின் மாண்பை மதித்து வரவேண்டுமென்று அனுமதி கொடுத்தேன். அவர் வரும் தகவல் தெரிந்து மடத்தின் வாசலில் பெரும் கூட்டம். நெரிசலை சமாளித்து உள்ளே வந்த சில்க், 1,000 ரூபாய் பாதகாணிக்கை வைத்து என்னை வணங்கினார். -

ஆறுதல் கூறி திறுநீறு கொடுத்தேன்

என்ன பிரச்னை? என்றேன். எனக்கு அழகு இருக்கிறது. புகழ் இருக்கிறது. பணம் இருக்கிறது. ஆனால், மனநிம்மதி இல்லை! என்றார். எல்லாம் தீரும் என்று ஆறுதல் கூறி அவருக்குத் திருநீறு கொடுத்தேன்.

-

நீயெல்லாம் நல்லா வருவம்மா.. பிரியா மணிக்கு ஆசி

சில வருடங்களுக்கு முன்பு பருத்திவீரன் ப்ரியாமணி ஆசி வாங்க வந்தார். நீ சிறப்பாக வருவாய் என வாழ்த்தினேன். அடுத்த சில நாட்களிலேயே, சிறந்த நடிகைக்கான மத்திய அரசு விருது அவருக்குக் கிடைத்தது!''

நோ.. நோ.. நோ.. கமெண்ட்ஸ்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் யாரோடு கூட்டணி வைப்பார் சந்நிதானம்? என்ற கேள்விக்கும், உங்கள் நண்பர் ம.நடராசன் தேர்தல் கூட்டணிகள் தொடர்பாக உங்களிடம் ஆலோசிப்பாரா? என்ற கேள்விக்கும், உங்கள் நண்பர் நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் மற்றும் நடிகர் கார்த்திக்கின் அரசியல் வியூகங்கள் என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கும் ஆதீனம் அளித்த பதில்...''நோ கமெண்ட்ஸ்!''

:(:D :d :D

தலைப்பு: சுண்டல்

செய்தி: தட்ஸ்தமிழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காபி மெஷினில் ஞானப் பால்

நித்தியானந்தா இருக்கும்போது மடத்தில் காபி மெஷின் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஞானப்பால், தற்போது வழங்கப்படுவது இல்லையாமே?

இது அபாண்டமான குற்றச்சாட்டு! இப்போதும் மடத்தில் ஞானப்பால் வழங்கப்படுகிறது. ஆனால், மெஷின் மூலம் அல்ல. இறைவன் அருளோடு மனிதக் கரங்களால் தயாரிக்கப்பட்டு, வழங்கப்படுகிறது. உங்களுக்கு ஒரு டம்பளர் வேண்டுமா? என்று கேட்டு அதிர வைத்தார் ஆதீனம்.

-:D :d :D

ஆறுதல் கூறி திறுநீறு கொடுத்தேன்

என்ன பிரச்னை? என்றேன். எனக்கு அழகு இருக்கிறது. புகழ் இருக்கிறது. பணம் இருக்கிறது. ஆனால், மனநிம்மதி இல்லை! என்றார். எல்லாம் தீரும் என்று ஆறுதல் கூறி அவருக்குத் திருநீறு கொடுத்தேன்.

 

சிலுக்கு எந்த பாணியில் நடித்தார் என்பதல்ல; தனது புகழை வைத்து தான் ஜாலியாக வாழ்ந்திருக்க வேண்டிய காலத்தில் மறைந்தார் என்பதுதான் ஆதங்கம். பானையில் இல்லாதது அகப்பையில் வராது. இந்த இல்லாமையிடம் மன அமைதி கேட்டுத்தான் சிலுக்கு வந்தார். இதன் ஆசீர்வாதம் போலும் அவரின் ஆவியையே அடித்துச்சென்றுவிட்டது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம மல்லை அண்ணா சிலுக்கின் தீவிர விசிறி போல :D

அட நம்ம மல்லை அண்ணா சிலுக்கின் தீவிர விசிறி போல :D

உண்மையை சொன்னால் சுண்டல் நான் சிலுக்குவை மூன்றாம் பிறை ஒன்றில் மட்டும்தான் பார்த்தேன். அந்தப் படத்தில் களையில்லாத கட்டம் அந்த இடங்கள்தான். அதனால் தியேட்டரில் களைப்பாற அந்த இடங்களை பாவித்துவிட்டேன். கனகாலத்தின் பின்னர்தான் அதில் வந்த நடிகைத்தான் சிலுக்கு என்பது தெரியும். (அட நித்திரையால் எழும்பி இவ்வளவு சசலப்பை ஏற்படுத்தும் அந்த நடிகை யார் என்று பார்த்திருந்திருக்கலாமே என்று கவலைப்பட்டேன் :D ). ஆனாலும் இளமையில் கான்சரால் இறந்ததை கேள்விப்பட்டபோது கவலையாக இருந்தது. இப்போது இந்த மனிதன் "சிலுக்குவும் கூட" என்று சொல்வதை கேட்டபோது அட இந்த மாதிரி அற்பத்தன கோணல்களை தேடி மனச்சஞ்சலம் உள்ளவர் ஆசீர்வாதம் பெற போகிறார்களே என்று பட்டது.  அப்போதுதான் சிலுக்கு தனக்கு கான்சர் என்ற மன சஞ்சலத்துடன் தான் இவரிடம் சென்றாரா என்று சந்தேகம் வந்தது. இந்த மனிதன் வாழ்த்திதான் சிலுக்கு வீழ்ந்தாரா என்றும் பட்டது. 

 

ஒரு தடவை பலரால் துஸ்டனாக அறிந்து வைத்திருக்கபட்டவன் ஒருவன் விவேகாந்தரிடம் வந்தாந். மிக ஆழ நீள மனம் படைத்த விவேகாந்தர் அவனைக் கண்டுகொண்டார். அவனின் விருப்பங்களை செய்து அவனை அனுப்பிவைத்தார். அவருடன் இருந்த மற்றைய துறவிகள் "இவர்களை இரட்சிக்கப் போய் நரேன் நீ உனது தவத்தை வீணே செலவிடுகிறாய்; குரு நமது வாழ்ககையில் இப்படியானவர்களை தவிர்க்க வேண்டும் என்றல்லவா சொன்னார் என்றார்கள்" அதற்கு அவர் "குரு அப்படி சொல்ல வில்லை எல்ல இடங்களாலும் ஒதுக்கப்பட்டு தரிக்க நிழல் இல்லாமல் அலையும் இந்த சிறு உயிர்களுக்கு நாம் கூட நிழல் தரக்கூடாது என்று குரு சொல்வாரா? நாமும் கழித்துவிட்டால் இவர்கள் ஆறுதல் அடைய இன்னொரு இடம் கிடைக்குமா என்று கேட்டார்" 

 

சிலுக்கு மீது எனக்கு பித்தும் இல்லை. சிலருக்கு இருப்பது போல கோபமும் இல்லை. மூன்றாம் பிறையில் நடிப்பு வராமல் சிலுக்கு கஸ்ட்டப் பட்டதுமட்டும்தான் ஞாபகம். அது அவரின் திறமையின் மட்டு. அது அவரின் பாபத்தின் எடுத்துக்காட்டு அல்லவே. எனவேதான் இந்த மனிதன் சிலுக்கு போன்ற பாவவாளிகள் என்று பொருள்பட கதைப்பது பிடிக்கவில்லை. இவரின் நடத்தை ஜேசுவும், விபசாரியும் கதைக்கு எதிராகவல்லவா இருக்கிறது. இவர் அந்தக்கதையை தன்னும் படித்திருந்தால் இப்படி பேச மாட்டார்.

Edited by மல்லையூரான்

அட நம்ம மல்லை அண்ணா சிலுக்கின் தீவிர விசிறி போல :D

 

 

 

மல்லையின் மனம் சாந்தி அடைய ஏதோ நம்மாள முடிஞ்சது.. .

 

 

 

http://www.youtube.com/watch?v=psfxD9s6MpI

  • கருத்துக்கள உறவுகள்

ஆதீனத்தின்  ஆசிக்கு அப்புறம் விருது வாங்கியவர்கள்தான் , அந்தர்யாமியாகி விட்டார்கள்...! :lol:

 

ஆ.. சில்க்கின் காலம் சிருங்காரமான காலம்...! :rolleyes:

. ஆனாலும் இளமையில் கான்சரால் இறந்ததை கேள்விப்பட்டபோது கவலையாக இருந்தது.

 

ஐயகோ... இதை எப்படி சகிப்பேன் நான்... ஒரு மாபெரும் வரலாற்று உண்மையை மறைத்து மல்லை எழுதுகின்றார்... :) :)

 

மல்லை, சிலுக்கு தற்கொலை செய்தே இறந்தார், கான்சரால் அல்ல.

 

மற்றது, சிலுக்கு ஒரு மிகச் சிறந்த நடிகை மற்றும் அழகி. மற்றவரை ஏமாற்றாமல் தன் அழகாலும் நடிப்பாலும் உழைத்து வாழ்ந்தவர்.  இவர் மதுரை ஆதினம் போன்ற சாமியார் வடிவில் இருக்கும் போலிகளிடம் ஆசிர்வாதம் வாங்கியமையால் தன்னையே தாழ்த்திக் கொண்டுள்ளார்.  இதன் மூலம் மதுரை ஆதினம் தான் அவரை நேரில் தரிசிச்சு பாக்கியம் பெற்றவராக மாறியுள்ளார்.

மல்லையின் மனம் சாந்தி அடைய ஏதோ நம்மாள முடிஞ்சது.. .

 

 

 

http://www.youtube.com/watch?v=psfxD9s6MpI

நன்றி ஈசன். சிலுக்குவின் கைகால்கள் ஆடும் போது அது வலது குறைந்தவர்களின் ஆட்டம் போலத்தான் இருக்கும். அதுதான் எனக்கு அவற்றை பார்க்கும் போது நகைசுவையாக இருப்பது.  :D

ஐயகோ... இதை எப்படி சகிப்பேன் நான்... ஒரு மாபெரும் வரலாற்று உண்மையை மறைத்து மல்லை எழுதுகின்றார்... :) :)

 

மல்லை, சிலுக்கு தற்கொலை செய்தே இறந்தார், கான்சரால் அல்ல.

 

மற்றது, சிலுக்கு ஒரு மிகச் சிறந்த நடிகை மற்றும் அழகி. மற்றவரை ஏமாற்றாமல் தன் அழகாலும் நடிப்பாலும் உழைத்து வாழ்ந்தவர்.  இவர் மதுரை ஆதினம் போன்ற சாமியார் வடிவில் இருக்கும் போலிகளிடம் ஆசிர்வாதம் வாங்கியமையால் தன்னையே தாழ்த்திக் கொண்டுள்ளார்.  இதன் மூலம் மதுரை ஆதினம் தான் அவரை நேரில் தரிசிச்சு பாக்கியம் பெற்றவராக மாறியுள்ளார்.

இருக்கலாம் நிழலி அவரின் மறைவு வருத்தமான முடிவு என்றது மட்டும்தான் ஞாபகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் அருளால்

மனிதக்கரங்கால் தயாரிக்கப்படும் பாலை தரவா என்று கேட்டது எதுக்கு விகடன் நிருபருக்கு அதிரிச்சியா இருந்தது என்றத எங்க இசை அண்ணா தான் வந்து புரிய வைக்கணும் :D

  • கருத்துக்கள உறவுகள்
சிலுக்கு இவரிடம் போய் திருநீறு வாங்கின படியால் தான் அநியாயமாய் இறந்து போனார் :(
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

428376_462044550472499_1483359238_n.jpg

 

 

நீயா நானா?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.