Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 மாதத்தில் ஸ்டாலின் இறந்து விடுவார் என்று சொன்னார் அழகிரி- கருணாநிதி 'பரபரப்பான' புகார் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: மு.க. அழகிரி தம்மையும் மு.க. ஸ்டாலினையும் பற்றி விரும்பத்தகாத வார்த்தைகளை பேசினார் என்றும் மு.க. ஸ்டாலின் இன்னும் 3 மாதத்தில் இறந்துவிடுவார் என கூறியதை எப்படி பொறுப்பது என்று அவரது தந்தையும் திமுக தலைவருமான மு. கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

- See more at: http://m.oneindia.in/tamil/news/tamilnadu/azhagiri-used-harsh-words-against-stalin-dmk-chief-karunanidhi-192278.html#sthash.jv6hODMk.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

மு.க.அழகிரி நீக்கம் பற்றி கலைஞர் விளக்கம்.

 

kalaigar-11111.jpgசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

 

செய்தியாளர் :- மதுரையில் மு.க. அழகிரி அளித்துள்ள பேட்டி பற்றி?

கலைஞர் :- பொதுவாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் கழகத் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியோர் மூலமாகத் தான் செயற்குழு, பொதுக்குழுவில் எடுக்கப்படுகின்ற முடிவுகளைப் பற்றி அறிவிப்பது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக செயற்குழு, பொதுக்குழு முடிவுகளை அலட்சியம் செய்தோ அல்லது விமர்சித்தோ அல்லது கட்டுப்படாமலோ கழகத்திலே உள்ள யாரும்; முக்கியமாக பொறுப்பிலே உள்ளவர்கள் நடந்து கொள்வதில்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக மு.க. அழகிரி; தான் கழக உறுப்பினர் என்பதை மறந்து விட்டு, இன்னும் சொல்லப் போனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பிலே இருப்பவர் என்பதையும் மறந்து விட்டு - பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து, அது தவறான அரசியல் விளைவுகளுக்கு வழி காட்டுவதாக அமைந்து வருவதை நீங்களே உணர்வீர்கள்.

அண்மையில் அவர் அளித்த தொலைக்காட்சி பேட்டியைக் கண்டும், கேட்டும் இருக்கிறீர்கள்.

 

அவருக்கு தி.மு. கழகத்தின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதற்கெல்லாம் உச்ச கட்டமாக கடந்த 24ஆம் தேதியன்று விடியற் காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத் தகாத, வெறுக்கத் தக்க வார்த்தைகளையெல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன்.

 

நியாயம் கேட்டதாக இப்போது சொல்கிறார். விடியற்காலை ஆறு அல்லது ஏழு மணிக்கா கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்க வருவது என்பதை நீங்கள் தான் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் வெளியிலே வந்து சொல்கிற குற்றச்சாட்டு கட்சியிலே சில பேர் மீது, குறிப்பாக அவருக்கு வேண்டிய நண்பர்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறு என்ற குற்றச்சாட்டாகும். கட்சியிலே உள்ள மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மூர்த்தி அவர்கள் மீது பி.சி.ஆர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீசாருக்கு எழுதிக் கொடுத்தவரை, கட்சித் தலைவர் என்ற முறையில் நான் விசாரிப்பதும், கண்டிப்பதும் எப்படி குற்றமாகும் என்பதையும் உங்கள் யோசனைக்கே விட்டு விடுகிறேன். அவர் மீது கட்சியின் சட்டதிட்டபடி பொதுச் செயலாளர் அவர்கள் கண்டனமும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். அது கழகத்தின் சட்டதிட்டப்படி செய்யப்பட்ட ஒன்றாகும்.

அதற்கு நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ விளக்கமளித்து பிரச்சினையை அணுக வேண்டுமே தவிர தனக்கு வேண்டிய பழைய நண்பர் கூட்டத்தை வைத்துக் கொண்டு சுவரொட்டிகளை ஒட்டுவதும், பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுப்பதும் எப்படி முறையாகும்?

என் மகன்கள் ஸ்டாலின் ஆனாலும், அழகிரி ஆனாலும் மகன்கள் என்ற உறவு நிலையிலே அல்ல; கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலே கூட அவர்களில் ஒருவர் நான்கு மாதங்களில் செத்து விடுவார் என்று கட்சித் தலைவனாகிய எனக்கு முன்னாலேயே உரத்த குரலில், ஆரூடம் கணிப்பது யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

 

இந்த இயக்கம் அண்ணா காலத்திலிருந்து இதுவரையில் எத்தனையோ இது போன்ற சோதனைகளையெல்லாம் சந்தித்து விட்டு, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இயக்கமாகும். தமிழ் மக்கள் வளத்தோடும், வலிமையோடும் வாழ வேண்டுமென்பதற்காக என்னுடைய 14வது வயது முதல் இந்த 91வது வயது வரையில் பல தியாகங்களைச் செய்து அடக்கு முறைகளை ஏற்று, பெரியாரும், அண்ணாவும் உருவாக்கித் தந்த இந்த இயக்கத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறவன் என்ற முறையில் இந்த உண்மை நிலவரத்தை தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதற்காகவே பத்திரிகையாளர்களாகிய

உங்கள் மூலமாக இந்தச் செய்திகளையெல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

செய்தியாளர் :- அவர் மன்னிப்பு கோரினால் தற்காலிக நடவடிக்கை ரத்து செய்யப்படுமா?

கலைஞர் :- இந்தக் கேள்வியை நீங்கள் அவரைப் பார்த்துக் கேட்க வேண்டும்.

 

செய்தியாளர் :- அவர் ஏதோ முறைகேடுகள் நடந்ததைப் பற்றி குறிப்பிட்டு அதைக் கேட்பதற்காகத் தான் உங்களைச் சந்தித்ததாகச் சொல்கிறாரே?

கலைஞர் :- எந்த முறைகேடு பற்றியும் எனக்குத் தெரியாது.

 

இவ்வாறு கலைஞர் கூறினார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=115500

சகோதரப் படுகொலை ????

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எங்க வீட்டுப் பிள்ளையா.. எங்க நிம்மதியா.. எங்க சுதந்திரமா.. உரிமையா... நினைச்ச எங்க தலைவர்.. பற்றி பதறி நின்ற போது.. இந்தப் பெரிய மனிசன் எங்களைப் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா... "பிரபாகரன் போரில் இறந்துடுவார் என்று எனக்கு முன்னமே தெரியும் என்று". அப்ப எல்லாம் எங்களுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும். இப்ப உங்க மகனே உங்களுக்கு அந்த வலியை சாவுறத்துக்கு முன்னாடி தந்திடுறான்.

 

முந்தித்தான் அரசன் அன்று கொல்வான்.. தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். இப்ப தெய்வமும்.. பொலிசியை சேஞ் பண்ணிட்டுது போல. :):lol:

Edited by nedukkalapoovan

நாகம் தேர்தலுக்கு முன்னர் என்பதால், தேர்தல் காலம் சலசலப்பு அடங்கிவிட போகிறது. அதை தடுக்க ஒரே வ்ழி அழ்கிரி ஒரு புதுக்கட்சி அமைத்து தேர்தலில் தி.மு.வை எதிர்ப்பது, அல்லது அ.தி.மு.க வுடன் இணைவது.

1795777_714947241857161_1501516441_n.jpg
நான் ஒருத்தன் இங்கு இருக்கிறது தெரியாமல், ஆட்டமாய் ஆடுரிங்களாடா டேய்! வரேன்.. மூணு பேரையும் மொத்தமாய் போட்டு தள்ளி, கட்சியை கைப்பற்றி அதையும் போட்டு தள்றேன்!(மு.க.முத்து )

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழடு மண்டையை போட்டாப்பிறகு வரவேண்டின நல்லவிசயமெல்லாம் இப்பவே பருத்திப்பூ வெடிச்சமாதிரி வெடிக்க வெளிக்கிட்டுது....இல்லாட்டி ரயல் பாக்கிறாங்களோ தெரியேல்லை.....உவங்களை நம்பேலாது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.