Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்திரி பேசுகிறேன்

Featured Replies

முன்னம் எல்லாம் தமிழ் தேசிய ஊடங்கங்கள் புலிகள் பற்றி எழுதி காசு பார்த்து வந்தது இப்ப நிலைமை அப்படி இல்லை புலிகள பற்றி விமர்சனம் எழுதி அதில் பார்வையாளரை கூட்டி காசு பார்க்குது அதனால் உங்களை போல ஆக்களின் எழுத்துக்களுக்கு இப்ப நல்ல கிராக்கி இருக்கு ..

 

ஒரு தலைமுறைக்கு தெரியாத விசயங்களை எழுதாமல் இப்ப உள்ள தலைமுறைக்கு தெரிந்த விசயங்களை எழுதுங்கள் கே பி யாரை போட்டார் ..எவரை காட்டி கொடுத்தார் ...எங்கு எவளவு பணம் அவரிடம் இருக்கு ...என்கிற விபரம் எழுதினா கேபி  உயிருடன் உள்ளதால் உங்களுக்கு பதில் சொல்லக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கு .

 

அதை விடுத்து  தெரியாதவன் அறியாதவன் பற்றி எழுதி ஒரு எதிர்விளையும் இருக்காது உங்களிடம் இன்னும் எதிர் பார்க்கிறம் உண்மைகளை  ..

 

கஸ்ரோ எழுந்து இருக்க முடியாதவர் என்று தெரிந்த நீங்களாவது நாட்டுக்கு வந்து அந்த பொறுப்பை எடுத்து செய்து இருக்க வேணும் இல்லையா ..(சாகவா நாங்க இயக்கத்துக்கு போனனாங்க )அப்படிதானே அண்ணே .

 

 

  • Replies 143
  • Views 20.3k
  • Created
  • Last Reply

 
மிகவும் சாதாரணமாகவும்  அமைதியாகவும் பொட்டு அம்மான் சொன்ன பதில்:-
' உங்கள் எதிரி உங்கள் வாய்தான்''
 
அதற்கான காரணங்களை விளக்கிக் கொண்டு போனபோது ஒவ்வொரு போராளியும் பொட்டு அம்மானின் கருத்தை அவரது ஆழுமையை ஆற்றலை மட்டுமன்றி அ ஒரு சிறந்த புலனாய்வுத்தளபதியையும் கண்டு கொண்டார்கள்.
அம்மான் கூறிய ''' உங்கள் எதிரி உங்கள் வாய்தான்''இந்த வார்த்தைகளுக்குள் இருந்த உண்மை காலங்கடந்தும் நிலைத்தே வாழ்கிறது.

 

 

இது எல்லாருக்கும் எல்லா நேரத்திற்கும் பொருந்தும்.... ஒரு நல்ல அறிவுரை...(நோய் நொடியை கூட  வாயை கட்டுப்படுத்தினால் தூரத்தில் வைக்கலாம்..வள்ளுவரோ,வைத்தியரோ சொன்னது..) அதனால் தானோ என்னவோ.... அமெரிக்கா/கனடாவில் போலிஸ் காது செய்யும் போது சொல்லுவார்கள்

 you have the right to remain silent, what ever you say can be used against you in the court of law...

Edited by naanthaan

பேசாமல் இந்த திரியை நகைச்சுவை பகுதிக்கு மாறுங்க சிரிச்சு முடில :D

  • கருத்துக்கள உறவுகள்

எனது செவ்வியை உண்மையாக  படித்தும் சாத்திரியின் எழுத்துக்களை  நான் படிப்பதேயில்லை என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு  படிக்காமலேயே  கருத்து தெரிவித்தவர்களிற்கும். இரகசிய ஒப்பந்தங்களை  செய்து விட்டு இங்கு கருத்து வைப்பர்கள்  மற்றும் நான் அடிக்கிறது மாதிரி அடிப்பன்  நீ அழுகிற மாதிரி அழு என்று சொல்லி விட்டு எழுதுபவர்கள். யாழில் எதிர் கருத்து வைத்து விட்டு முக புத்தகத்தில் விரும்புகிறவர்கள் அனைவரும் தொடர்ந்தும் எனது பேட்டியோடு இணைந்திருங்கள். தனித்தனியாக பதில் தரமுடியாமைக்கு  வருந்துகிறேன்.அனைத்துமே வெளியில் வரும்.உங்கள் கேள்விகள்  அதற்கான  பதில்கள் . கருத்துக்களினூடாக ..   எனக்கு நானே எதிரி மற்றவர்கள் அல்ல.. :)

 

 

சாஸ்திரியின் இந்தக் கருத்து உண்மை தான்.இப்படி இரட்டை வேசம் போடுபவர்கள் கணக்கப் பேர் யாழில் இருக்கினம்
 
அஞ்சரன் அவர்களில் ஒருவராக இருக்க மாட்டார் என நம்புவோம்

வடக்கு கிழக்கில் பல வருடங்கள் நின்றவர்கள். ஏன் எடுக்கவில்லை??

 

மூன்று வருடம் நின்றார்கள் கிட்டதட்ட முடிகிற நிலைமை தான்.... இல்லையா? :)

சாத்திரி எழுதும் பல விடயங்கள் எனக்கு புதியதல்ல,

தலைமைகளுடன் தொடர்பில்லாமல் ஆயுதமும் பயிற்சியும் சண்டையும் என்று இருந்தவர்கள் தான் முக்கால்வாசிப்பேர் இவர்களுக்கு வெளியில் நடந்த பல விடயங்கள் தெரிய வாய்பில்லை ,எதிரியை வெற்றி கொள்வதும் இயக்க விசுவாசமும் தான் அவர்களது நிலை ,அது சரியானதும் கூட .

தலைமைகள் செய்த தவறுகள் கூட எதிரியை வெல்ல பணமும் ஆயுதமும் தற்காப்பும் துரோகமும் என்ற அவர்கள் பார்வையில் சரி என்று பட்டத்தைதான் செய்தார்கள் .

எனது தலைமையுடன் ஒன்றாக திரிந்த எனக்கு அவர்கள் விட்ட பல தவறுகள் தெரியும் ,அவற்றை திருத்த வெளிக்கிட்டுதான் பலர் பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிட்டது .

புலி ,புளொட் தூள் விடயம் அப்பவே எங்களுக்கு தெரியும் (புதியதோர் உலகத்தில் இருக்கு )

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ரோ எழுந்து இருக்க முடியாதவர் என்று தெரிந்த நீங்களாவது நாட்டுக்கு வந்து அந்த பொறுப்பை எடுத்து செய்து இருக்க வேணும் இல்லையா ..(சாகவா நாங்க இயக்கத்துக்கு போனனாங்க )அப்படிதானே அண்ணே .

 

புலிகள் அமைப்பில் இருக்கும் ஒருவர் தனக்கு ஒரு பொறுப்பைத் தருமாறு கோரினால் உடனே தலைமை அந்தப் பொறுப்பை அவருக்குக் கொடுத்து விடுமா?

பேசாமல் இந்த திரியை நகைச்சுவை பகுதிக்கு மாறுங்க சிரிச்சு முடில :D

 

இந்தத் திரியில் நகைச்சுவை எதுவும் இல்லை. சாத்திரி அண்ணா எழுதும் பல சம்பவங்கள் உண்மையாக இருக்கும் என்பது எனது எண்ணம். ஆனால் அவற்றை இப்போது பேசுவது தேவையில்லாத ஒன்று, அதனால் எமது இனத்துக்கு ஆகப்போவது எதுவும் இல்லை.

வயிறு வளர்க்க முன் புலிகள்

இப்ப ரோ 

எப்பிடியோ புழைப்பு நடந்தா சரி :lol:

 

சாஸ்திரியின் இந்தக் கருத்து உண்மை தான்.இப்படி இரட்டை வேசம் போடுபவர்கள் கணக்கப் பேர் யாழில் இருக்கினம்
 
அஞ்சரன் அவர்களில் ஒருவராக இருக்க மாட்டார் என நம்புவோம்

 

ரதி அக்கா இன்னும் போகவில்லையா யாழை விட்டு :D :D

 

நான் சரியா உள்ளவரை எதைபற்றியும் எனக்கு கவலை இல்லை விடுதலை போராட்டம் பார்க்காத துரோக வரலாறா பெரியா ஜாம்பவான்களே எழுதி களைச்சவ பாருங்கோ ..

 

சாத்திரி அண்ணையின் எழுத்து ஒரு மாற்றத்தையும் கொண்டுவர போவது இல்லை உங்களை மாதிரி பொழுது போகாத ஆக்களுக்கு பொழுது போகும் அவ்வளவுதான் ரதி .

ரதி அக்கா இன்னும் போகவில்லையா யாழை விட்டு :D :D

 

நான் சரியா உள்ளவரை எதைபற்றியும் எனக்கு கவலை இல்லை விடுதலை போராட்டம் பார்க்காத துரோக வரலாறா பெரியா ஜாம்பவான்களே எழுதி களைச்சவ பாருங்கோ ..

 

சாத்திரி அண்ணையின் எழுத்து ஒரு மாற்றத்தையும் கொண்டுவர போவது இல்லை உங்களை மாதிரி பொழுது போகாத ஆக்களுக்கு பொழுது போகும் அவ்வளவுதான் ரதி .

 

சாத்திரி அன்னையின் எழுத்து ..முதல் எல்லோரும் சந்தேகபட்டதை...உண்மையா இல்லையா என்று உறுதிபடுத்துகிறது...இது நல்லதே...

 

மிகுதி எப்போ வரும்?

 

இயலுமென்றால்...வெளிநாடில் போர் நேரம் கொள்ளை அடித்தவர்களை பற்றியும் சொன்னால் நல்லம்.....

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா இன்னும் போகவில்லையா யாழை விட்டு :D :D

 

நான் சரியா உள்ளவரை எதைபற்றியும் எனக்கு கவலை இல்லை விடுதலை போராட்டம் பார்க்காத துரோக வரலாறா பெரியா ஜாம்பவான்களே எழுதி களைச்சவ பாருங்கோ ..

 

சாத்திரி அண்ணையின் எழுத்து ஒரு மாற்றத்தையும் கொண்டுவர போவது இல்லை உங்களை மாதிரி பொழுது போகாத ஆக்களுக்கு பொழுது போகும் அவ்வளவுதான் ரதி .

 

நானா,நீங்களா இந்தத் திரியில் நின்று அதிகம் குத்தி முறிகிறது?...உங்களுக்கு கள்ளம் இல்லாட்டில் சாஸ்திரி எழுதுகிறது நகைச்சுவையாக இருந்தால் பார்த்திட்டு பேசாமல் இருக்கிறது தானே! ஏன் குத்தி முறிகின்றீங்கள் :icon_mrgreen:
 
இயக்கத்தில் இருந்திட்டு இடையில் ஓடி வந்த உங்கள மாதிரி பல பேரைப் பார்த்திருக்கன்.என்னைப் பொறுத்த வரை சாஸ்திரியும்,நீங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.என்ன சாஸ்திரி வெளிப்படையாய் செய்கிறார்.நீங்கள் அமசடக்காய் அடக்கி வாசிக்கிறீங்கள் <_<
 
நீங்கள் என்று உங்கள மட்டும் சொல்லேல்ல அஞ்சரன் தொப்பி அளாவானவர்கள் போட்டுக் கொள்ளுங்கள்  :rolleyes:

புலிகளின் ஆயுதத் தேவைகளிற்காக போதைப் பொருள் வியாபாரத்திலும் ஆயுதக் கடத்தல்களிலும் ஈடுபடும்போது கடலில் இறந்து போனவர்களிற்காக அவர்களோடு சேர்ந்து இயங்கிய நண்பர்கள் சிலர் நிக்கோபர் தீவுக்கூட்டத்தில் மனிதர்களற்ற ஒரு சிறு தீவில் அவர்களிற்கு ஒ...ரு நினைவிடம் எழுப்பி அதில் அவர்களது பெயர்களை பதிவு செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். Gowripal Sathiri Sri அருளினியன் பதிவுகள் மூன்றில்.... 20/02 இல் ....

இன்று (23/02)
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103408/language/ta-IN/article.aspx

அப்படி இருக்குமோ... இப்படி இருக்குமோ ......எதோ நம்மால முடிஞ்சது


 

நானா,நீங்களா இந்தத் திரியில் நின்று அதிகம் குத்தி முறிகிறது?...உங்களுக்கு கள்ளம் இல்லாட்டில் சாஸ்திரி எழுதுகிறது நகைச்சுவையாக இருந்தால் பார்த்திட்டு பேசாமல் இருக்கிறது தானே! ஏன் குத்தி முறிகின்றீங்கள் :icon_mrgreen:
 
இயக்கத்தில் இருந்திட்டு இடையில் ஓடி வந்த உங்கள மாதிரி பல பேரைப் பார்த்திருக்கன்.என்னைப் பொறுத்த வரை சாஸ்திரியும்,நீங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.என்ன சாஸ்திரி வெளிப்படையாய் செய்கிறார்.நீங்கள் அமசடக்காய் அடக்கி வாசிக்கிறீங்கள் <_<
 
நீங்கள் என்று உங்கள மட்டும் சொல்லேல்ல அஞ்சரன் தொப்பி அளாவானவர்கள் போட்டுக் கொள்ளுங்கள்  :rolleyes:

 

செம காமடி இடையில் எதுக்கு ஓடி வரணும் எல்லாம் முடிச்சபிறகு நடந்தே வரலாம் உங்களை போல போட்டு கொடுத்தா இல்லையா ..

 

நிங்களும் இங்கினதான் நிக்கிறியள் எதாவது பங்கு இருக்கே சாத்திரி அண்ணையை விட உங்களுக்கு  கோவம் அதிகம் வருது :( காசு ..பணம் ..துட்டு ..மணி மணி :icon_idea:
 

இலவச விளம்பரத்துக்காக அம்மணமாக ஓடும் ஐரோப்பியர்கள் வளி வந்த ஒருவரின் பேட்டி... !! 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இலவச விளம்பரத்துக்காக அம்மணமாக ஓடும் ஐரோப்பியர்கள் வளி வந்த ஒருவரின் பேட்டி... !!

 

இதுவரை காலமும் தன் சொந்தப் பெயரிலேயே பேஸ்புக்கில் இருந்து இயங்கிய இந்த நபர்(கள்) இடையில் தன் யாழ் பெயரையும் இணைத்துப் போட்டிருப்பதில் இருந்து விளங்குகின்றது. எப்படிப்பட்ட விளம்பர பிரியர்... ________________...

அந்தமானில் உண்மையில் அப்படிப் புலிகள் இருந்தார்கள் என்றாலோ, அங்கிருக்கின்ற அப்பாவித் தமிழர்கள் இதனால் பாதிக்கப்பட்டார்கள் என்றாலோ, _______________.

---------------------------

நியானியிடம் ஒரு கேள்வி.. நபர் என்று விளிக்கலாமா? இல்லை. நபர்கள் என்று சொல்லவேண்டுமா? ஒருமை, எருமை என்று ஏதாவது யாழ்ச் சட்டச்சிக்கல் வந்துவிடக்கூடாது பாருங்கள்....

நியானி: நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

விடுதலைப் புலிகள் இயக்கம் விடுதலை இயக்கமே! இத்தாலி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

ltte_logo.jpgகடந்த 2008 யூன் மாதம் (18.06.2008) சர்வதேச பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்து வழங்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின் 2010 ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டு 2011 இல் நாப்போலி நீதிமன்றத்தால் இவர்கள் குற்றமற்றவர்கள் எனவும் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமது போராட்டத்தின் மூலம மருத்துவம் நீதிமன்றம், கல்வி, பொருண்மியம், சீரான இராணுவக் கட்டமைப்பு ஆகியவை உள்ளடங்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது என்பது தமது ஆய்வில் தெரிய வந்துள்ளமையால் இவ் இயக்கம் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியதெனவும் இவ்விக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாதெனவும் , அந்த வகையில் இத்தாலி தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் அற்தமற்றது எனவும் மேலும் விடுதலைப் புலிகள் இயக்கம் போர்க்குற்றங்கள் புரிந்திரிப்பின் அவற்றிக்கான விசாரணையை சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான நீதி மன்றமே விசாரிக்க தகுதியானதென குறிப்பிட்டு 23-06-2011 நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அந்தவகையில் அவரது தீர்ப்பு தவறானது எனக்கூறி அரச தரப்பினர் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதற்கான வழக்கு விசாரணை     27-02-2014 மேல் முறையீட்டு நீதிமன்றில் ஒன்பது நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சில மணி நேர இரு தரப்பு விவாதங்களின் பின்னர் முதல் கட்ட நீதிபதியின் தீர்ப்பை தாமும் உறுதிப்படுத்துவதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்தனர்.    :)  :D  :lol:

 
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியைவிடப் பெரிய நீஸ் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பே இங்கு செல்லுபடியாகும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளது சர்வதேச செயற்பாடுகளில் ஈடுபட்டபோது ஒதுக்கிவைத்த காசை எல்லாம் இப்போது இப்படியான பேட்டிகள் கொடுத்து வெள்ளையாக்கி எங்கேயோ முதலீடு செய்யவோ அன்றேல் சந்தோசமாக அனுபவிக்கவோ முயலுகிறார். அதுக்கு சிவமகாலிங்கத்தாருடைய பொடியனும் டக்ளச் தேவானந்தாவினது உறவினருமாகிய அருள் இனியனைத் துணைக்கு இழுக்கிறார்.

 

சாத்திரியார் உங்கட பிரச்சனையது தார்ப்பர்யம் தெரியாது கண்டபடி யாழ் உறவுகள் கதைக்குதுகள். (இப்படியெல்லம் கதைக்கவேணும் எண்டுதானே நீங்கள் எதிர்பார்த்தியள் "பத்தவைச்சிட்டியே பறட்டை" என்பதுபோல் பத்தி எரியுது களம். இன்னும் உங்களது பேட்டி முடிவுறும்கட்டம் வந்ததும் கொத்தா குளிர்ந்துவிடுவார், அதுக்குப்பின்பு உங்கட காட்டில நிலாவெளிச்சம்தான். கறுப்பை வெள்ளையாக்குங்கோ அது உங்கட பிரச்சனை அதுக்கு யாழ்களம்தான் கிடைச்சதா.

 

உறவுகள் அனைவர்க்கும் அன்பான வேண்டுகோள், அவரது பேட்டியை படிக்கிறீர்களோ இல்லையோ அது உங்கட பிரச்சனை, அதுக்கும் பின்பு கருத்து எழுதுறன் பேர்வள் என அவரது எதிர்பார்ப்புகளுக்கு நீங்கள் வழிகோலாதீர்கள் . இவரது இடுகைக்கு கருத்தெதுவும் எழுதாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திாியார் ஏதோ முக்கிய அலுவலாக தமிழ்நாடு சென்றுள்ளார்.அங்கும் யாருக்காவது பேட்டிகீ்ட்டியென்று புலிகளை பிச்சுப்பிடுங்கப்போறார்.இவா் அங்குசென்றுள்ளதால் சுப்பிரமணியசாமி ,சோ போன்றோாின் செல்வாக்குக்குறைந்துவிடுமென நினைக்கிறேன்.

  • 2 weeks later...

மிச்சம்?.....முடிஞ்சுட்டுதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.