Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தி சசிதரன் எழிலன் ஜெனிவாவில் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு உறுதிப்படுத்தினார்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ananthi_CI.jpg

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடர் தொடர்பான குழுநிலை கலந்துரையாடல்கள், விசேட கலந்துரையாடல்கள், சந்திப்புக்களில் கலந்துகொள்ள சத்தம் இன்றி நேற்றிரவு பயணமாகிய  அனந்தி சசிதரன் (எழிலன்) ஜெனிவாவைச் சென்றடைந்ததாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.

ஏற்கனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் அங்கு தரித்துள்ள நிலையில் அனந்தியும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக முக்கிய பங்காற்ற உள்ளார்.

குறிப்பாக படையினரிடம் தமது உறவுகளை நேரடியாக கையளித்த முக்கிய சாட்சியாகவும் அனந்தி விளங்குகிறார். அந்த வகையில் ஜெனிவாவில் இடம்பெறும் சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களின்  மனித உரிமை தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள் சந்திப்புக்களிலும் கலந்து கொள்ள உள்ளார்.

இதேவேளை ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள், முதலமைச்சரின் அனுமதி, மாகாண சபைத் தீர்மானம் என்பன யாவும் உறுதியாகி இருந்த போதும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளால் எனது பயணம் குறித்து முன்னதாகவே கருத்து கூறுவதனை நான் தவிர்த்து வந்தேன். ஏறத்தாள நான் போகவில்லை என்ற தொனியிலான கருத்துக்களை கூறிவந்தேன். ஆனால் சில ஊடகங்கள் நான் மகிந்தவுக்கு கூஜாதூக்கப் போகிறேன் என்றுகூட செய்திகளை வெளியிட்டு இருந்தார்கள். நானும் என்போன்ற பல செயற்பாட்டாளர்களும் எத்தகைய நெருக்குதல்களுக்கு மத்தியில் பணியாற்றுகிறோம் என்பதனை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

இதனிடையே ஜெனீவாவிற்கு தான் பயணமாகமாட்டேன் என வடமாகாண வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நோர்வே தூதுவருடனான சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஜெனீவாக் கூட்டத்தொடரில் வடக்கின் முதலமைச்சர் என்ற ரீதியில் கலந்துகொள்வீர்களா என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "ஐநா மனித உரிமைக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மாட்டேன் செல்வவேண்டிய அவசியமுமில்லை நான் வடக்கின் நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளை கவனித்து வருகின்றேன். அரசியல் நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்த்து வருகின்றார்கள் அவர்கள் செல்வார்கள் பெண்கள் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102977/language/ta-IN/article.aspx

இப்படித்தான் ஆனந்தி சசிதரன் திடிரென வரவேண்டும் என நினைத்தேன் அப்படியே நடந்துள்ளது.. முழுசக்தியையும் இனிப்பயன்படுத்த வேண்டும்... ஆனால் சுமந்திரன் இனப்படுகொலை நடக்கவில்லை என சொல்லவந்துள்ளாரா? அல்லது திருப்பம் காலம் கடந்து எதாவது மாற்றங்கள், அல்லது அனந்தி சொல்வதை மாற்றி மொழிபெயர்ப்பா?.. எதாவது நல்லதே நடக்கட்டும்...

தற்போது ஆனந்தியும் ,சுமந்திரனும் லண்டனில் சில நாடுகளின் துதுவர்களை சந்தித்து ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டுகின்றார்கள் .சுமந்திரன் தான் ஆனந்தியை லண்டன் கூப்பிட்டவர் .அதற்குரிய காரணம் ஆனந்தி வலுவான சாட்சி .ஆனந்தி போகும்முன்னம் இந்தியாவில் நிற்கும் சம்பந்தன் ஐயாவுடன் தொடர்பு கொண்டு கதைத்ததன் பின்பு தான் சென்றவர் .எங்கே என்ன கதைக்கவேண்டும் என்று புத்திமதியும் சொல்லி விட்டவர் .இதற்குப்பின்னால் பெரிய நாடுஉள்ளது .

நவநீதம்பிள்ளை அம்மையார் தன்னைச் சந்தித்தவர்களிடம் தற்போது இனப்படுகொலை விசாரணையை முன்னெடுத்து வலியுறுத்த வேண்டாம் என்றும் ,போர்க்குற்ற விசாரணை ,மனித உரிமை மீறல் இரண்டையும் வலியுறுத்தி முன்னெடுக்கும் படி வலியுறுத்தி சொன்னவராம் .அதற்கான காரணத்தையும் சொன்னவர் ,அதை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை .

இங்கு சிலர் என்ன நடைபெறுகின்றது தெரியாமல் தங்களுக்கு எல்லாம் தெரிந்த மாதிரி புலம்புகிறது .

  • கருத்துக்கள உறவுகள்

இனக்கொலை விசாரணைக்கான கோரிக்கையை தணல் மாதிரி இருக்கவிட்டு போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கையை எரியவிட வேணும் என நினைக்கிறேன்..

  • 2 weeks later...

வாசித்து அறியுங்கள் இது உண்மையானால்? தமிழினத்தின் கதி அதே கதி தான்.. http://www.yarl.com/forum3/index.php?showtopic=136763

மொழிபெயர்க்கவே தேவை இல்லை . அனந்தியை ஒன்றும் பேசாமலே பண்ணியுள்ளார் சுமந்திரன்

Edited by வழிகாட்டி

தற்போது ஆனந்தியும் ,சுமந்திரனும் லண்டனில் சில நாடுகளின் துதுவர்களை சந்தித்து ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டுகின்றார்கள் .சுமந்திரன் தான் ஆனந்தியை லண்டன் கூப்பிட்டவர் .அதற்குரிய காரணம் ஆனந்தி வலுவான சாட்சி .ஆனந்தி போகும்முன்னம் இந்தியாவில் நிற்கும் சம்பந்தன் ஐயாவுடன் தொடர்பு கொண்டு கதைத்ததன் பின்பு தான் சென்றவர் .எங்கே என்ன கதைக்கவேண்டும் என்று புத்திமதியும் சொல்லி விட்டவர் .இதற்குப்பின்னால் பெரிய நாடுஉள்ளது .

நவநீதம்பிள்ளை அம்மையார் தன்னைச் சந்தித்தவர்களிடம் தற்போது இனப்படுகொலை விசாரணையை முன்னெடுத்து வலியுறுத்த வேண்டாம் என்றும் ,போர்க்குற்ற விசாரணை ,மனித உரிமை மீறல் இரண்டையும் வலியுறுத்தி முன்னெடுக்கும் படி வலியுறுத்தி சொன்னவராம் .அதற்கான காரணத்தையும் சொன்னவர் ,அதை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை .

இங்கு சிலர் என்ன நடைபெறுகின்றது தெரியாமல் தங்களுக்கு எல்லாம் தெரிந்த மாதிரி புலம்புகிறது .

சம்பந்தருக்கும் சுமந்திரனுக்கும் தெளிவாக தெரியும் என்ன அரசியல் செய்வது என்று ,பயங்கரவாதிகள் பட்டத்தை விட்டுவிட  பலருக்கு இன்னமும் விருப்பம் இல்லை போலகிடக்கு . :icon_mrgreen:

சம்பந்தருக்கும் சுமந்திரனுக்கும் தெளிவாக தெரியும் என்ன அரசியல் செய்வது என்று ,பயங்கரவாதிகள் பட்டத்தை விட்டுவிட பலருக்கு இன்னமும் விருப்பம் இல்லை போலகிடக்கு . :icon_mrgreen:

உங்களுக்கும் தான் ஐந்து வருடமா புலிவாந்தி எடுப்பதை விட்டுவிட விருப்பமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும்  புலி  தான் முன்னுக்கு  போகவேண்டியுள்ளது............

இதற்குள் தெளிவான  அரசியல் என்று சிலரின் பகிடி வேறு......... :(  :(

"முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக முக்கிய பங்காற்ற உள்ளார்."

இதுதான் செய்தி .பின்னோட்டம் எழுத முதல் என்ன எழுதியிருக்கின்றது என்று ஒருக்கா வாசியுங்கோ :icon_mrgreen:

ஆனந்தி இறுதி யுத்தத்தின் முக்கிய சாட்சி ,அதற்காகத்தான் அவரை ஜெனிவாவிற்கு சுமந்திரன் வரவழைத்தவர் .ஆனந்தி சொன்னவற்றை சுமந்திரந்தான் மொழிபெயர்த்தவர் .கனேடிய தமிழர் பேரவை ,பிரித்தானிய தமிழர் பேரவை ,USA இல் தமிழர் நிறுவனம் மூன்றும் இணைந்து ஜெனிவாவில் செயற்படுகின்றனர் .இந்தமுறை இவர்களுடன் TNA யும் இணைந்துள்ளது .தற்போது சுமந்திரனின் உதவியாளர் ஜெனிவாவில் கூட்டத்தொடர் முடியும் வரை தங்கியிருந்து செயற்படுகின்றார் .சுமந்திரன் 21 நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பிரச்சாரம் செய்துள்ளார் .இவை எல்லாம் பெரிய நாடுடைய வழிகாட்டுதலின் படித்தான் நடைபெறுகின்றது .

TNA யின் சகல செலவுகளையும் கனேடிய தமிழர் பேரவை தான் வழங்கியுள்ளது .ஜெனிவாவில் என்ன செய்கின்றோம் என்பதை விளக்குவதற்காக நேற்று காரைக்குடி உணவகத்தில் கனேடிய தமிழர் பேரவை பலருடனான சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தனர் .நானும் கலந்துகொண்டு சிறிய நிதிப் பங்களிப்பையும் செய்திருந்தோம் .

சங்கதி ,தமிழ்நெட் போன்றவை 2010இல் தொடங்கி சம்பந்தர் ஐயா ,சுமந்திரன் இருவரையும் எதிர்ப்பதுதான் தொழில் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தா் ஐயாவும் சுமத்திரனும் இந்தியாவின் விருப்பத்திற்குமாறாக எதுவுமே செய்யமாட்டார்கள். அதாவது சிறீலங்காவை காப்பாற்றவே தலைகீழாக நிற்பார்கள். இது இங்குள்ள சிலமேதாவிகளுக்கு விளங்குவதாகத்தொியவில்லை.

விவசாயி மாட்டை கால் நடையாக ஓட்டிச் செல்வான். இறைசிக்கடைகாரன் தான் வாங்கிய மாட்டை ரக்டறில் ஏற்றிச் செல்வான்.

 

இதை இறைசிக்கடைக்காரன் மாட்டை  நடக்கவைக்காமல்  ரக்டரில் ஏற்றி சென்று மாடு மீது அன்பாக இருக்கிறான் என்றா சொல்வது. மாட்டை கடைக்கு கொண்டுவந்ததும் ஒரே கழுத்துவெட்டு நடக்கப்போகிறது. சிங்களத்தை இந்தியா முடிந்திருந்திருக்கும், தலைவார் அதில் தானும் சேர்ந்து அடிமையாக முடியாது என்று சிங்களத்தையும் காப்பாற்றினார். 

 

இந்தியாவை தெரிந்த சம்பந்தர் ஒத்துளைக்கிறார். தெரியாதோர் தயக்கம் காட்டுகிறார்கள். 

எது எப்படியோ, இனி நடப்பவை தமிழின விமோசனத்திற்கு நல்லவையாக நடக்க வேண்டும்.. இனியாவது எம்மின நலன் கருதி எம்மக்கள் ஒன்றுபட்டு உலக நாடுகளின் உதவியோடு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். சிங்கள நலன் தீவிரவாத கட்சிகள் தங்கள் இனத்திற்கு எவ்வித இடையூரும் வராமல் ஒற்றுமையாக செயல்படும் போது. சிங்கள தீவிரவாதம், பயங்கரவாதத்தால் 1948 தொடக்கம் பாதிக்கப்பட்டு இலச்சக்கணக்கான மக்களை சிங்கள பயங்கரவாத்திற்கு இன்றுவரை பலிகொடுத்துக்கொண்டு வரும் தமிழ் மக்கள் எதற்காக சிங்கள அரசை தண்டணை வாங்கி கொடுத்து, எம்மினத்திற்கு நீதி கிடைக்க செய்வதில் பின் நிற்க வேண்டும். சிலரின் சுய நலனுக்காக முழு இனமும் இனி பலிக்கடாவாக ஆக இனியும் விட முடியாது கண்கொத்தி பாம்பாக எம்மக்கள் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க வேண்டிய காலத்தின் கடமை இது

ஆனந்தி இறுதி யுத்தத்தின் முக்கிய சாட்சி ,அதற்காகத்தான் அவரை ஜெனிவாவிற்கு சுமந்திரன் வரவழைத்தவர் .ஆனந்தி சொன்னவற்றை சுமந்திரந்தான் மொழிபெயர்த்தவர் .கனேடிய தமிழர் பேரவை ,பிரித்தானிய தமிழர் பேரவை ,USA இல் தமிழர் நிறுவனம் மூன்றும் இணைந்து ஜெனிவாவில் செயற்படுகின்றனர் .இந்தமுறை இவர்களுடன் TNA யும் இணைந்துள்ளது .தற்போது சுமந்திரனின் உதவியாளர் ஜெனிவாவில் கூட்டத்தொடர் முடியும் வரை தங்கியிருந்து செயற்படுகின்றார் .சுமந்திரன் 21 நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பிரச்சாரம் செய்துள்ளார் .இவை எல்லாம் பெரிய நாடுடைய வழிகாட்டுதலின் படித்தான் நடைபெறுகின்றது .

TNA யின் சகல செலவுகளையும் கனேடிய தமிழர் பேரவை தான் வழங்கியுள்ளது .ஜெனிவாவில் என்ன செய்கின்றோம் என்பதை விளக்குவதற்காக நேற்று காரைக்குடி உணவகத்தில் கனேடிய தமிழர் பேரவை பலருடனான சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தனர் .நானும் கலந்துகொண்டு சிறிய நிதிப் பங்களிப்பையும் செய்திருந்தோம் .

சங்கதி ,தமிழ்நெட் போன்றவை 2010இல் தொடங்கி சம்பந்தர் ஐயா ,சுமந்திரன் இருவரையும் எதிர்ப்பதுதான் தொழில் .

அண்ணா

விளக்கத்திற்கு நன்றி. அனந்தி அக்காவை குழந்தை பிள்ளை போலும் சுமந்திரன் அண்ணாவை சர்வதிகாரி போலவும் செய்தி சித்தரிக்கிறது. நீங்கள் முன்பு ஒரு முறை கூறியது போல் சுமந்திரன் தன்பாட்டில் கோடி கோடியாக உழைக்கலாம். தனது குடும்பத்தையும் ஆபத்தில் தள்ள தேவையில்லை.

ஒரு விடயம் உறுத்துகிறது, முன்பும் இந்த "பெரிய" நாட்டை குறிப்பிட்டீர்கள்.

இந்த பெரிய நாடு கனடாவிற்கு பக்கத்திலா அல்லது தமிழீழத்திற்கு பக்கத்திலா? :)

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கு பக்கத்திலாத்தான் இருக்கும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயி மாட்டை கால் நடையாக ஓட்டிச் செல்வான். இறைசிக்கடைகாரன் தான் வாங்கிய மாட்டை ரக்டறில் ஏற்றிச் செல்வான்.

 

இதை இறைசிக்கடைக்காரன் மாட்டை  நடக்கவைக்காமல்  ரக்டரில் ஏற்றி சென்று மாடு மீது அன்பாக இருக்கிறான் என்றா சொல்வது. மாட்டை கடைக்கு கொண்டுவந்ததும் ஒரே கழுத்துவெட்டு நடக்கப்

போகிறது.

 

 

நல்ல உவமானம்.

எத்தனயோ பழைய உவமானங்கள் இருந்தாலும் இப்படி இலகுவாக சமகால அறிவுக்கு உகந்த உவமானங்கள் மனதில் பதிவது போல பழையன பதிவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.