Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி ஈழம் அமைந்திட பொதுவாக்கெடுப்பு : ஜெயலலிதா அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா இன்று வெளி யிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக, ’’இலங்கை உள்நாட்டுப் போரின் போது, இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும்; இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும்; தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அனைத்திந்திய அதிமுக உறுதி பூண்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=117106

வரவேற்கிறோம்.
அறிவிப்புடன் அம்மா நின்றுவிடாது உண்மையில் இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடவே தில் வேணும்.

கொங்கிரஸ் கொழுந்துகளுக்கு அம்மா இப்படி அதிரடி அரசியல் வைத்தியம் கொடுப்பது நல்லது.

சென்ற தேர்தலில் சோனியா, அம்மாவிற்கு வாய்ப்பு குடுக்காமல் மேலும் அரசியல் இடைஞ்சல் கொடுத்தற்கு பரிசு.

  • கருத்துக்கள உறவுகள்

Jayalalithaa-6-60.jpg
இலங்கையில் தனி ஈழம் அமைக்க இலங்கை வாழ் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனம், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவினால் இன்று (25) வெளியிடப்பட்டது. 

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க்குற்றங்கள் நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. சபையில் வலியுறுத்தவும், தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் மற்ற பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அ.தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என்று அந்த விஞ்ஞாபனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
 
  • கருத்துக்கள உறவுகள்

துணிச்சல்மிக்க பெண்மணி. செய்தாலும் செய்வா

2009 முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்பு, தனது கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் சிறந்த அரசியல் செய்கிறார். எங்கே கருணாநிதி, காங்கிரஸ், திருமா போன்றவர்கள் பெரிய வெற்றிடத்தை விட்டார்களோ அது நிரப்ப பட்டு விட்டது. எது எமக்கு நன்மையோ அது எமக்கு தேவை " சிக்கென பிடிப்போம் பரமேஸ்வரா". எமது குறிக்கோள் தமிழ் ஈழம். அது யார் வாயில் இருந்தும் ஆதரவாக உச்சரிக்க பட்டால் வரவேற்போம்.

செல்வியின் நாமம் வாழ்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லிக்கொண்டிருக்காமல்  செயலில் காட்டும் அம்மா வாழ்க!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா வாழ்க! 

சும்மா போங்கப்பா. அம்மா எதை எந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என்று நன்றாகவே தெரிந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

cartoon-27-02-2014.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துணிச்சல்மிக்க பெண்மணி. செய்தாலும் செய்வா

2009 முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்பு, தனது கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் சிறந்த அரசியல் செய்கிறார். எங்கே கருணாநிதி, காங்கிரஸ், திருமா போன்றவர்கள் பெரிய வெற்றிடத்தை விட்டார்களோ அது நிரப்ப பட்டு விட்டது. எது எமக்கு நன்மையோ அது எமக்கு தேவை " சிக்கென பிடிப்போம் பரமேஸ்வரா". எமது குறிக்கோள் தமிழ் ஈழம். அது யார் வாயில் இருந்தும் ஆதரவாக உச்சரிக்க பட்டால் வரவேற்போம்.

செல்வியின் நாமம் வாழ்க.

 

Am6nT.jpg

இந்திய வெளி விவகார கொள்கையாகா இது மாற்றபடவேண்டும்.

அதுக்கு இன்னும் காலம் வரவில்லை என்பதே எனது கணிப்பு.

இந்திய வெளி விவகார கொள்கையாகா இது மாற்றபடவேண்டும்.

அதுக்கு இன்னும் காலம் வரவில்லை என்பதே எனது கணிப்பு.

 

இந்திய வெளிவிவகாரக் கொள்கைதான் மாறாதாமே. இந்தி ராம் சொல்லுறாரு.

தமிழக அரசியல்வாதிகளை வெத்துவேட்டுகள் என பொதுவாகவும், கோமாளிகள் என விஷயம் தெரிந்தவர்கள் அழைப்பர்கள்.

தமிழக அரசியல்வாதிகளை வெத்துவேட்டுகள் என பொதுவாகவும், கோமாளிகள் என விஷயம் தெரிந்தவர்கள் அழைப்பர்கள்.

அதை சொன்ன விடயம் தெரிந்த சிறி லங்கா தளபதி பொன்சேகா கோவணத்துடன் சிறைச்சாலைக்குள் கோமாளியா நின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.