Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது! – சர்வதேச சமூகத்தைக் கோருகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது! – சர்வதேச சமூகத்தைக் கோருகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித். 
[Thursday, 2014-03-06 07:55:13]
cardinal-ranjith-060314-150.jpg

நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் சர்வதேச சமூகம் செயற்படக் கூடாது என கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கையில் மனிதஉரிமை மீறல் இடம்பெற்றதாகத் தெரிவித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோருவது நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதாகவே கருதப்பட வேண்டும்.போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றே வழங்கப்பட வேண்டும். உள்நாட்டு பிரச்சினைகளை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதும், வெளிநாட்டுப் பிரச்சினைகளை உள்நாட்டுக்கு எடுத்துச் செல்வதும் ஆரோக்கியமானதல்ல.

  

இதனால் எவரும் வெற்றியடையப் போவதில்லை. இவ்வாறான நடவடிக்கைகளினால் இறைமையுடைய நாடுகளில் புறச் சக்திகள் தலையீடு செய்ய நேரிடும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=105037&category=TamilNews&language=tamil

"இதனால் எவரும் வெற்றியடையப் போவதில்லை."

பொய் சொல்லாதைங்கோ. இதனால் ஜெனோசைட் காரருக்கும், உங்களுக்கும் வெற்றி.

தலையில் மணி தொப்பி. வீட்டுக்கு பின்னால் நிற்கும் கார்டினல் குருவி போலவே தெரிகிறார்.

இயேசு,இன்று இருந்தால் இந்த கோமாளியை பார்த்து சிரித்திருப்பார்.

போர்க்குற்றங்களுக்கு சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோருவது நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதாகவே கருதப்பட வேண்டும் என்று சொல்லும் இவர் அதே தீர்மானத்தில் மதத் தலங்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா கேட்பதும் நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதாகவே கருதப்பட வேண்டும் என்று சொல்லுவாரோ ??
 
ஆக..தங்க‌ளுக்கு வாய்ப்பானத எடுக்கிறது............ மிச்சத்துக்கு நல்ல பிள்ளைக்கு நடிக்கிறது.............
  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் - சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் நூலிலிருந்து பின்வரும் பந்தியை இணைக்கின்றேன். இந்த கார்டினலின் கருத்திற்கு நன்றாக பொருந்தும்.

 

 

கன்னியாஸ்திரியாக பணியாற்றியவர் இக்நோசியஸ். 

 

ஏனையவற்றிலிருந்து இவரிற்கு வேறொரு முக்கியமான சம்பவம் நடந்தது. திருச்சபையில் இருந்த சிங்களப் பாதிரியார்கள் அரசாங்கத்தை ஆதரித்த வேளை தமிழ் பாதிரியார்கள் போரை நிறுத்தும் படி கேட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த தமிழ் பாதிரியார்கள் சிங்கள பாதிரியார்களால் "பயங்கரவாத ஆயர்கள்" என்றும் அழைக்கப்பட்டார்கள். 

 

தலைநகரில் அவர்கள் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் இங்கே இவர்கள் யுத்த வலையத்திற்குள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். 

 

யுத்த வலயத்திற்குள் பாதிரியார்கள் காயம்பட்ட வேளையில் ஒரு சிங்கள பாதிரியார் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கத்தோலிக்க திருச்சபை அதை நிறுவிய இயேசுவினதும் புனித பேதுருவினதும் வழி நடத்தலில் தற்போது இல்லை என்பதற்கு மால்கம் ரஞ்சித் போன்றவர்களே தகுந்த ஆதாரங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்குள் சிங்களப் பேரினவாதச் சாத்தான் பூந்து கன காலம் ஆச்சுது. !!!

  • கருத்துக்கள உறவுகள்

 

போர்க்குற்றங்களுக்கு சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோருவது நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதாகவே கருதப்பட வேண்டும் என்று சொல்லும் இவர் அதே தீர்மானத்தில் மதத் தலங்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா கேட்பதும் நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதாகவே கருதப்பட வேண்டும் என்று சொல்லுவாரோ ??
 
ஆக..தங்க‌ளுக்கு வாய்ப்பானத எடுக்கிறது............ மிச்சத்துக்கு நல்ல பிள்ளைக்கு நடிக்கிறது.............

 

 

 

நாட்டைப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க நடக்கும் யுத்தம் எந்தவிதத்திலும் நிறுத்தப்படக்கூடாது என்று 2009 இல் கூக்குரலிட்டவர் இவர். வன்னியில் கொல்லப்பட்டவர்கள் எல்லோருமே பயங்கரவாதிகள் என்று சத்தியம் செய்தவர் இவர். அண்மையில் யாழ் மன்னார் ஆயர்கள் போர்க்குற்றம் தொடர்பாகவும், சர்வதேச விசாரணை தொடர்பாகவும் வெளியிட்ட கருத்துக்களுக்கும் இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபைக்கு எந்தத் தொடர்புமில்லை என்று இனக்கொலையாலிகளுக்கு தனது விசுவாசத்தைக் காட்டியவர். ஆகவே இவர் இப்போது இப்படிக் கூறுவதொன்றும் ஆச்சரியமில்லை.

 

இவர் முதலில் சிங்களவன், பின்னரே கிறீஸ்த்தவன், அந்த உண்மைய நாம் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.