Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உனக்காகவும் அழத்தான் முடிகிறது இன்றில்...

Featured Replies

விதைகளை தின்னும் தேசத்தில் 
முகிழ்த்தவளே, 
கனவுகளை கருவறுக்கும் 
கொலைவாள்களிடையே எழுந்தவளே..

இழப்பின் வலிகளை 
மொழிகளால் இறக்க முனைந்தவளே 
இழிகாலதில் இறங்கிய 
ஊழியின் மகளே..

குருதி குடிக்கும் பேரினத்தின் 
குரல்வளையில் விலங்கு பூட்டவா 
நீ எழுந்தாய் ...
இல்லையே..
அண்ணன்களோடு ஆனந்தவாழ்வு கேட்டுதானே 
நீ அமர்ந்தாய் வீதியில்...

விபூசிகா...
வலி முடிவொன்றின் வழக்குரைத்தவளே

உன் 
குரலணுக்களின் தீண்டலால் 
தீப்பற்றியெரிந்த வெளிகளிலும் 
கருகி நைந்துபோன திடல்களிலும் 
ஆயிரமாயிரம் விழிகள் திறந்து கண்ணீர் வடிகின்றன..

வேரீரமிழந்து 
இலையுருத்திக் கிளைசிதைந்து போன பெருமரத்தில் 
கூடுகள் அழுகின்றன.

உடல்சுமந்த 
குற்றவுணர்வோடு குனித்து நிற்கின்றோம்..
எட்டப்பர்கள் நாங்கள்தான் தங்கையே.. 

காத்திரு 
என்றெப்படி உரைப்பது
பொறுத்திருக்கும் இக்காலம் வல்லமையில்லாதது...
அழுகைக்கும் கண்ணீருக்கும் தொழுகைக்கும்
அர்ப்பணிக்கப்பட்டவர்கள் நாங்கள் 
உனக்காகவும் அழத்தான் முடிகிறது இன்றில்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//குருதி குடிக்கும் பேரினத்தின் 
குரல்வளையில் விலங்கு பூட்டவா 
நீ எழுந்தாய் ...
இல்லையே..
அண்ணன்களோடு ஆனந்தவாழ்வு கேட்டுதானே 
நீ அமர்ந்தாய் வீதியில்...//

 

உண்மையில் இதயத்தைப் பிழிகின்றன இந்த வரிகள்...! விபூசிகாவை என் உடன் பிறந்த தங்கையாக நினைத்துப் பார்த்தேன்...நெஞ்சம் விம்மி வெடிக்கத் தொடங்கி விட்டது...!

 

விபூசிகா...
 

அவள் என் மகள்..
 

அவள் என் மருமகள்..
 

அவள் என் உயிரும் உதிரமுமாகிப் போனவள்...

 

அல்லாஹ்வே...உன்னிடம் இரு கரமேந்திப் பிரார்த்திக்கிறேன்...

 

விபூசிகாவும்  அவளது அன்னையும் இன்றே விடுதலை பெற அருள் புரிவாயாக....! ஆமீன்...!!

  • கருத்துக்கள உறவுகள்

காத்திரு 

என்றெப்படி உரைப்பது

பொறுத்திருக்கும் இக்காலம் வல்லமையில்லாதது...

அழுகைக்கும் கண்ணீருக்கும் தொழுகைக்கும்

அர்ப்பணிக்கப்பட்டவர்கள் நாங்கள் 

உனக்காகவும் அழத்தான் முடிகிறது இன்றில்...

 

இதுதான் எங்கள்மீது திணிக்கப்பட்ட விதியா? :(

 

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பின் வலிகளை 

மொழிகளால் இறக்க முனைந்தவளே 

இழிகாலதில் இறங்கிய 

ஊழியின் மகளே..

குருதி குடிக்கும் பேரினத்தின் 

குரல்வளையில் விலங்கு பூட்டவா 

நீ எழுந்தாய் ...

இல்லையே..

அண்ணன்களோடு ஆனந்தவாழ்வு கேட்டுதானே 

நீ அமர்ந்தாய் வீதியில்...

விபூசிகா...

வலி முடிவொன்றின் வழக்குரைத்தவளே

 

காணாமற்போன அல்லது காணாமற்போனோர் பட்டியலில் இணைக்கப்பட்ட அனைவரின் குரலாயும் எழுந்தவள் பேய்களின் வீதியில் தனித்து விடப்பட்ட ஏழை. அழத்தான் முடிகிறது ஆனாலும் உலகறியச் செய்வோம் எங்கள் விபூசிகாவின் நிலையை.

  • கருத்துக்கள உறவுகள்

எமது இயலாமையை, ஆற்றாமையை, அப்படியே வெளிப்படுத்து நிற்கிறது உங்கள் கவிதை!

 

விதைகளை தின்னும் தேசத்தில் 
முகிழ்த்தவளே, 
கனவுகளை கருவறுக்கும் 
கொலைவாள்களிடையே எழுந்தவளே..

 

விதைகளைத் தின்னும் தேசத்தில் முகிழ்த்தவளே.....

 

விதைகளைத் தின்பவர்கள் யார் என்று கேட்டால், வெளியே இருந்து வந்தவர்கள் அல்ல என்பது தான் உண்மை... விவசாயியின் இரத்த உறவுகளே, அதையும் செய்கிறார்கள்!

 

கனவுகளை கருவறுப்பவர்களும், எம்மிடையே தான் இருக்கிறார்கள்.

 

இப்படியே, உங்கள் ஒவ்வொரு வரிகளுக்கும், ஒரு 'உரையே; எழுதிக்கொண்டு போகலாம்!

 

 

 

விடியும் திசை நோக்கிப் பார்த்திருக்கிறோம்....

 

வெறும் வானம் மட்டுமே தெரிகின்றது...!

 

எப்போதாவது தெரியும் 'ஒளிக்கீற்றுக்களும்'

 

அடுத்த வினாடியே அணைந்து போகின்றன!

 

எச்சங்களில்லாத எரி நட்சத்திரங்களைப் போல..! :D

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கையே விபூசிக

தளிர் நீயென்று

உனக்கும் விடுதலை வேண்டியே

போராட நான் புறப்பட்டேன்

ஆயிரம் ஆயிரம் தோழர் தோழியரை

மண்தோண்டி வித்துடலாய்

விதைத்து விட்டு

உங்கள் வாழ்வுக்காய்

நானும் வீழத்துநிந்தேன்,

சாவு என்னை நெருங்கவில்லை

சத்தியமாய் உயிர் பயத்தால்

நான் ஊர் தாட்டவில்லை

அண்ணாவை காட்டுங்கோ

என்று -நீ

அழுத போதெல்லாம்

நெஞ்சமே வெடிக்கிறது

உனக்காக நாம்

போராடப்போனோம்-இன்று

எமக்காக நீ போராடி நின்றாய்

உன் கண்ணீருக்கும்

பதில் வந்துசேரும்.

பயந்து ஓடியவர் என்று

எம்மை சிலர் சொல்லட்டும்.

நாம் பழி தீர்க்குமட்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை பெற பிரார்த்திப்போம்

எல்லோர் கவிதைகளுக்கும் நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.