Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமான கடத்தல்காரர்களுடன் மலேசிய அரசாங்கம் இரகசியப் பேச்சு? - உறவினர்கள் சந்தேகம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமான கடத்தல்காரர்களுடன் மலேசிய அரசாங்கம் இரகசியப் பேச்சு? - உறவினர்கள் சந்தேகம். 

[Friday, 2014-03-21 19:27:44]
mh370-relations-210314-150.jpg

மாயமாகியுள்ள மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணிகளை மீட்க, கடத்தல்காரர்களுடன் மலேசிய அரசு இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று பயணிகளின் உறவினர்கள் உட்பட பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 8ஆம் திகதி பீஜிங் சென்ற விமானம் மாயமான பிறகு பலரும் பலவித சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விமான கணினி தொடர்பில் நன்கு தொழில்நுட்பம் தெரிந்த யாரோ, விமான பாதையை மாற்றி பதிவு செய்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கேற்ப விமானி அகமது ஜகாரியின் வீட்டில் சோதனை செய்த போது, விமானம் ஓட்ட பயிற்சி பெறும் சிமுலேட்டர் கருவியில் சில தகவல்கள் அழிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

  

அழிக்கப்பட்ட அந்த தகவல்களை, அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ. உதவியுடன் மலேசிய அதிகாரிகள் இப்போது மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மர்மம் நீடிக்கும் நிலையில் உண்மையில் நடந்தது என்ன என்பதை தெரிவிக்கும்படி மலேசிய அரசை சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில், இந்திய பெருங்கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் போல் 2 பொருட்கள் மிதப்பது செய்மதி அனுப்பிய புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நேற்று கூறினார்.

அத்துடன் இந்திய கடல் பகுதியில் போர் விமானங்கள், கப்பல்கள் தொடர்ந்து தேடி வருகின்றன. எனினும், குறிப்பிட்ட அந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், விமானத்தை மர்ம நபர்கள் கடத்தி சென்றிருக்கலாம். பயணிகளை கவனமாக மீட்க கடத்தல்காரர்களுடன் மலேசிய அரசு இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று பயணிகளின் உறவினர்கள் உட்பட பலரும் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப பயணிகள் உயிருடன் உள்ளனர். அவர்கள் திரும்பி வருவார்கள் என்று அவர்களுடைய உறவினர்கள் பலர் பேட்டி அளித்துள்ளனர்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=106169&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

கடத்தப்பட்டதாக  அறிந்தவுடனேயே  சுட்டு வீழ்த்திவிட்டார்கள்

இப்போ

உறவினர்களுக்கு கதை  தேடுகிறார்கள்

அவ்வளவு தான்......

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் கடத்தப் பட்டிருந்தால்....
ஏன்... ஒரு பயணியும், தமது கைத்தொலை பேசியின் மூலம் உறவினர்களை தொடர்பு கொள்ளவோ... குறுஞ் செய்தி அனுப்பவோ.. முயற்சிக்கவில்லை.
வேறு... ஏதோ... பெரிய மர்மம் நிகழ்ந்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய ஐயாவுக்கு எல்லாம் தெரியுமெண்டு ஒருசில ஜேர்மன்காரங்கள் கதைக்கிறாங்கள்.

விமானம் கடத்தப் பட்டிருந்தால்....

ஏன்... ஒரு பயணியும், தமது கைத்தொலை பேசியின் மூலம் உறவினர்களை தொடர்பு கொள்ளவோ... குறுஞ் செய்தி அனுப்பவோ.. முயற்சிக்கவில்லை.

வேறு... ஏதோ... பெரிய மர்மம் நிகழ்ந்துள்ளது.

அனுப்பியிருக்கலாந்தான் ஆனாலும் சிக்கினலும் வேணுமே?

யாரோ எதோ இதென்ன யாழ் கொளும்பு பசுவண்டியா சிறி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.