Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சம் வாங்க பேசலாம் - 2 - மனித உரிமை மீறல் + போர்க்குற்றம் = இன அழிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை மீறல்

+ போர்க்குற்றம்

= இன  அழிப்பு

 

மனித உரிமை அமைப்புக்கள்

+நாடுகள்

+தீர்மானங்கள்

+ஐநா

+பாதுகாப்புச்சபை

-வீட்டோ அதிகாரம்...

.......................

....................

 

= இவை  எல்லாம் தாண்டி தமிழர்  அழிவிலிருந்து 

   பாதுகாக்கப்படக்கூடிய  வழிகள் தெரிகிறதா?

 

 

கொஞ்சம் பேசலாம் வாங்க..........

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்பு அருகே வந்து தவறிச் சென்றுவிட்டது.

 

இரு நாட்டு தமிழர்களும் வலுவுடன், ஒற்றுமையாக இல்லாததால் போக வேண்டிய தூரம் ரொம்ப தொலைவாக தெரிகிறது.

 

அடுத்த சந்ததியினர் விழித்திருந்தால் ஏதாவது அதிசயம் நடக்கலாம்.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை விளையாட்டுக்களால் இந்த தீர்மானத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டோம். இதற்கு மேல் ஏதாவது எழுதினால் என் மீது கொலைவெறித்தாக்குதல்கள் நடைபெறலாம் :wub: .

எனது கணிப்பு தவறாக இருக்க இறைவனை வேண்டுகின்றேன். 

 

 

வார்த்தை விளையாட்டுக்களால் இந்த தீர்மானத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டோம். இதற்கு மேல் ஏதாவது எழுதினால் என் மீது கொலைவெறித்தாக்குதல்கள் நடைபெறலாம் :wub: .

எனது கணிப்பு தவறாக இருக்க இறைவனை வேண்டுகின்றேன். 

நீங்கள் எழுதியிருப்பதை தெளிவாக உணர்ந்து கொள்கின்றவர்கள் உங்கள் மீது கோபம் கொள்ள மாட்டார்கள்.

இந்த முறை நேரடியாக இல்லாமல் கொஞ்சம் Intellectual ஆக ஏமாற்றப்பட்டு இருக்கின்றோம் என்பதில் நாங்கள் எங்கள் சட்டைக் கொலரை உயர்த்தி விட்டுவிடலாம்.

 

இந்த தீர்மானத்தின் உச்ச பயனாக அமையக்கூடியது என்னவென்றால் 'ஆட்சி மாற்றம்' தான். இன்னொரு சிங்கள ஆட்சி மாற்றம், கோத்தா போன்று நேரடியாக தமிழின அழிப்பு செய்யாமல் இனிப்பு தடவி கொல்லும் ஆட்சி மாற்றம் மட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

செங்கொடி, நிழலி ஆகியோரின் கருத்துக்களில் இருந்து மாறுபடுகிறேன்.

 

ஒரு ஊரில் ஒரு காவல் நிலையம் இருக்கிறது. அங்கு உள்ள தலைமை ஆய்வாளர் ஒரு நாள் துப்பாக்கியை எடுத்து தெருவில் போன மூன்று பொதுமக்களைச் சுட்டுவிடுகிறார்.

 

இந்தியாவில் இதற்கான நடவடிக்கைகள்: ஆய்வாளரை பணி நீக்கம் செய்வார்கள். வழக்கு நடத்துவார்கள். புதிய ஆய்வாளரை நியமிப்பார்கள். :D

 

மேற்குலகில் இதற்கான நடவடிக்கைகள்: ஆய்வாளரை பணி நீக்கம் செய்வார்கள். வழக்கு நடத்துவார்கள். புதிய ஆய்வாளரை நியமிப்பார்கள். இதுபோன்று மறுபடியும் நிகழாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க ஆணையம் ஒன்றை நிறுவுவார்கள்.  :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்பு அருகே வந்து தவறிச் சென்றுவிட்டது.

 

இரு நாட்டு தமிழர்களும் வலுவுடன், ஒற்றுமையாக இல்லாததால் போக வேண்டிய தூரம் ரொம்ப தொலைவாக தெரிகிறது.

 

அடுத்த சந்ததியினர் விழித்திருந்தால் ஏதாவது அதிசயம் நடக்கலாம்.

 

 

வணக்கம் ஐயா

நன்றி  வருகைக்கு....

 

இனங்களின்  ஒற்றுமையீனம் என்பது தமிழருக்கு மட்டும் சொந்தமானதா என்பது  நீண்ட  விவாதத்துக்குரியது.

அதற்குள் வேறு ஒரு முறை  பயணிக்கலாம்.

 

அதை  மறுக்கும் ஆதாரங்கள் பல  உண்டு எம்மிடம்

அத்துடன் தனது இலக்கு என்று வரும் போது

தமிழன் ஒற்றுமைப்பட்டுள்ளான்

அது ஈழமாகிலும் சரி  

தமிழகமாகிலும் சரி

 

இறுதி  ஆதாரமாக ஈழத்தமிழரது  மாகாணசபைத்தேர்தல் வாக்களிப்பையும்

தமிழகத்தில் காங்கிரசுக்கு தேர்தலில் நிற்க ஆளில்லாத தன்மையையும்  இப்போதைக்கு தரலாம்.

 

இங்கு எனது ஆதங்கம் என்னவெனில்

தமிழினத்தின் அழிவை 

தியாகத்தை

எவராவது கவிழ்க்கப்பார்க்கின்றார்களா?

அல்லது

அதை  உணர்ந்து

சிங்களம் தொடர்ந்து திருந்தாவிடில்

தமிழருக்கான நீதியைக்கொடுக்கலாம் என  முயல்கிறார்களா??

 

அல்லது

இவர்களையும் தாண்டி

தமிழினத்தின்  தியாகம் வெற்றியடையுமா??

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை விளையாட்டுக்களால் இந்த தீர்மானத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டோம். இதற்கு மேல் ஏதாவது எழுதினால் என் மீது கொலைவெறித்தாக்குதல்கள் நடைபெறலாம் :wub: .

எனது கணிப்பு தவறாக இருக்க இறைவனை வேண்டுகின்றேன். 

 

நான் பலமுறை  இங்கு எழுதியது தான்

எமக்கான விடுதலையை  வழி  நடாத்துவதில் எம்மைவிட சிங்களமே அதிகம்  செய்கிறது

அது தொடரும்

அந்த வகையில்

சர்வதேசம்  ஏற்கனவே அதிர்ச்சியடைந்துள்ளது

தொடர்ந்து

இவர்களை  காப்பாற்ற  அவர்களாலும் முடியாத   போகலாம்

அந்தவகையில் நீங்கள் கறிப்பிடுவது உண்மையாக இருப்பினும்.............

எத்தனை  தடவைதான் புரட்டி புரட்டி போடமுடியும் வசனங்களை???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதியிருப்பதை தெளிவாக உணர்ந்து கொள்கின்றவர்கள் உங்கள் மீது கோபம் கொள்ள மாட்டார்கள்.

இந்த முறை நேரடியாக இல்லாமல் கொஞ்சம் Intellectual ஆக ஏமாற்றப்பட்டு இருக்கின்றோம் என்பதில் நாங்கள் எங்கள் சட்டைக் கொலரை உயர்த்தி விட்டுவிடலாம்.

 

இந்த தீர்மானத்தின் உச்ச பயனாக அமையக்கூடியது என்னவென்றால் 'ஆட்சி மாற்றம்' தான். இன்னொரு சிங்கள ஆட்சி மாற்றம், கோத்தா போன்று நேரடியாக தமிழின அழிப்பு செய்யாமல் இனிப்பு தடவி கொல்லும் ஆட்சி மாற்றம் மட்டும்தான்.

 

இது தமிழரின்  பயமா?

அல்லது சர்வதேசம் அப்படித்தான் இருக்கப்போகிறதா?

அல்லது

இனி  எவர் வந்தாலும் அவர் கைகள் கட்டப்படுமா???

செங்கொடி, நிழலி ஆகியோரின் கருத்துக்களில் இருந்து மாறுபடுகிறேன்.

 

ஒரு ஊரில் ஒரு காவல் நிலையம் இருக்கிறது. அங்கு உள்ள தலைமை ஆய்வாளர் ஒரு நாள் துப்பாக்கியை எடுத்து தெருவில் போன மூன்று பொதுமக்களைச் சுட்டுவிடுகிறார்.

 

இந்தியாவில் இதற்கான நடவடிக்கைகள்: ஆய்வாளரை பணி நீக்கம் செய்வார்கள். வழக்கு நடத்துவார்கள். புதிய ஆய்வாளரை நியமிப்பார்கள். :D

 

மேற்குலகில் இதற்கான நடவடிக்கைகள்: ஆய்வாளரை பணி நீக்கம் செய்வார்கள். வழக்கு நடத்துவார்கள். புதிய ஆய்வாளரை நியமிப்பார்கள். இதுபோன்று மறுபடியும் நிகழாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க ஆணையம் ஒன்றை நிறுவுவார்கள்.  :huh:

 

 

உண்மை இசை

உங்களுடைய  கருத்தோடு  ஒன்றிப்போகின்றேன்

 

சர்வதேசம் எமக்காக பேசுமா?

ஏதாவது தருமா  என்பதற்கு அப்பால்

அவர்களுக்கு வேறு வழி  எதையும் சிறீலங்கா விட்டு வைக்காது என எடுத்துக்கொள்ளலாமா??

தொடர்ந்து   பேசலாம்.......

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்பு அருகே வந்து தவறிச் சென்றுவிட்டது.

 

இரு நாட்டு தமிழர்களும் வலுவுடன், ஒற்றுமையாக இல்லாததால் போக வேண்டிய தூரம் ரொம்ப தொலைவாக தெரிகிறது.

 

அடுத்த சந்ததியினர் விழித்திருந்தால் ஏதாவது அதிசயம் நடக்கலாம்.

 

வன்னியன்.

தமிழகத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும்... ஒற்றுமையாக இருக்கவே... விரும்புகின்றார்கள்.

ஆனால், அதனை நிறைவேற்றாமல்... தடுப்பது இரண்டு பகுதியினரின், பெரும்பான்பை அரசியல் தலைமைகள்... என்பது, கசப்பான... உண்மை.

 

அடுத்த தலைமுறை, தமிழினம் அழியுது... என்று, சுதாகரிப்பதற்கிடையில்...

முழுத் தமிழினத்தையும் அழிக்க... சிங்களமும், இந்தியாவும் முன்னிற்பாக நிற்கிறது.

அதனைப் புரியாமல்.... கோடரிக் காம்புகளாக, தமிழர்களே... இருப்பது, வேதனையிலும்... வேதனை.

ஆட்சி மாறி இனி மேல் இனஅழிப்பு இடம்பெறாது மட்டுமே எமக்கான தீர்வு அல்ல . எமது இனத்திட்க்கான அரசியல் உரிமை அதிகாரம் .தமிழனுக்கு என்று நாடு இதுவே இலக்கு

ராஜபக்ச அரசு முள்ளிவாய்காலுக்கு பின்னர் தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை வைத்திருந்தால் இந்த அமெரிக்க பிரேரணை இன்று வந்திருக்காது .

சர்வதேசத்தின் ஆசியுடன் போரையும் முடித்து போர் குற்றங்களையும் புரிந்துவிட்டு இன்று சர்வதேசத்திற்கு தண்ணி காட்ட வெளிக்கிட்டத்துதான் சர்வதேசத்திற்கு பிரச்சனை.

போரை வென்ற ஆணவமும் திமிரும் சீனா இந்திய ஆதரவும் சர்வதேசம் குரைக்கும் கடிக்காது என்ற துணிவும் தான் சிங்கள அரசை இந்த ஆட்டு ஆட்டுது .

நவி தொடங்கி ஒபாமா வரை உருவபொம்மை எரிக்கும் துணிவு அவர்களுக்கு இருக்கு ,ஜெனிவாவில பிரேரணை முன்னெடுக்கும் நேரம் என்று தெரிந்தும் வேண்டுமென்றே கைதுகளும் கடத்தல்களும் செய்கின்றது .

சிறிலங்கா என்ற சுதந்திர நாட்டில் ஜனநாயக முறையில் தெரிவு செய்யபட்ட எங்களை உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்பதை நிரூபிக்க தமது உயிர்  கொடுக்கவும் தயார் என்பது மாதிரித்தான் அவர்கள் செய்கைகள் .

 

இதில் இன்னொரு விடயமும் இருக்கு -சர்வதேசத்தின் சொல்லுக்கு தலையாட்ட வெளிக்கிட்டால் தொடர்ந்து ஆட்டிக்கொண்டிருக்க வேண்டிய நிலை வரும் பின்னர் நாட்டை தாம் விரும்பிய வழிக்கு ஆளமுடியாது எனவே ஆரம்பத்திலேயே அதை துணிர்ந்து எதிர்க்க முடிவெடுத்துவிட்டார்கள் .

தமிழர்களாகிய நாம் என்ன செய்யலாம் என்றால் -இணைய புரட்சி என்ற ஆயுதம் இருக்கவே இருக்கு எழுதி போட்டு போய் அவனவன் தன்ரை அலுவலை பார்க்கலாம் .. :icon_mrgreen: .

சர்வதேசத்தை பற்றி நான் எழுதவில்லை - சிங்களவன் கணக்கை சரியாகத்தான் போடுகின்றான் .,ஆக மிஞ்சி ஒரு சிலருக்கு சில நாடுகளுக்கு விசா மறுக்கலாம் ,

சர்வதேசம் ஒரு நாட்டில் போய் விசாரணை வைக்கும் நிகழ்வு போர் முடிந்த, ஆட்சி மாறாத எந்த  நாட்டிலும் நடக்கவே இல்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.