Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியச் சமர்

Featured Replies

இலக்கியச் சமர்
 
இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் ஓர் அறிவுச்சமர்.
 
இலக்கியப் பக்கம் ஓர் கேள்வியும் ஆன்மீகப் பக்கம் ஒரு கேள்வியும் கொடுக்கப்படும். இக்கேள்விகளுக்கான பதில்களை
 
எழுதி உங்களை நீங்களே எங்களை நாங்களே புடம் போட்டுக் கொள்வோமே?
 
இலக்கியச் சமரை முன் நகர்த்திச் செல்ல முடிந்த வரை கரம் கொடுங்களேன்
 
வாழ்க வளமுடன்
  • Replies 1.1k
  • Views 44.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
சமர் 01.
 
குதிரை முகம் நீங்க வேண்டி மாவிட்டபுரத்தில் தவம் இருந்த இளவரசியின் பெயர் என்ன? 
 
 
தமிழும் வடமொழியும் கலந்த நிலை வழங்கப்படும் பெயர் என்ன?
 
  • கருத்துக்கள உறவுகள்

 

சமர் 01.
 
குதிரை முகம் நீங்க வேண்டி மாவிட்டபுரத்தில் தவம் இருந்த இளவரசியின் பெயர் என்ன? 
 
 
தமிழும் வடமொழியும் கலந்த நிலை வழங்கப்படும் பெயர் என்ன?

 

 

சோழ அரசன் திஸ்ஸ உக்கிரசிங்கனின் மகள் மாருதப்புரவீகவல்லி

 

சமர் 01.

 
 
தமிழும் வடமொழியும் கலந்த நிலை வழங்கப்படும் பெயர் என்ன?

 

 

கிரந்தம்

  • கருத்துக்கள உறவுகள்

மாருதப்புரவீக வல்லி!

 

மணிப்பவள நடை ! 

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
மாருதப்புரவீகவல்லி
 
மணிப்பிரவாளநடை
 
அம்மாவிற்கும் புங்கையூரானுக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய சமர் எனும் தொடரை தொடங்கி  நடத்தி செல்லும்  புயல் அவர்களுக்கு என் பாராட்டுக்களும்  தொடர வேண்டும் என   வாழ்த்துக்களும்.

  • தொடங்கியவர்
சமர் 02.
 
உற்சவ காலங்களில் ஐந்து தேர்கள் இழுக்கப்படும் ஈழத்தின் பிரபல ஆலயம் எது?
 
வேளாண் வேதம். என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நீதிநூல் எது?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சமர் 02.
 
உற்சவ காலங்களில் ஐந்து தேர்கள் இழுக்கப்படும் ஈழத்தின் பிரபல ஆலயம் எது?
 
வேளாண் வேதம். என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நீதிநூல் எது?

 

 

1.ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படும் காரை நகர் சிவன் கோயில்

முதலாவது தேரில் பிள்ளளையாரும், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியப்பெருமனும், இரண்டாம் தேரில்  ஐயனாரும், மூன்றாந்தேரில் நடராசப்பெருமானும், நான்காம்தேரில் சிவகாமசுந்தரி அம்பாளும், ஐந்தாம் தேரில் மாணிக்கவாசகப்பெருமானும் எழுந்தருளி வலம் வருவர

2. நாலடியார்

 

  • கருத்துக்கள உறவுகள்

(1)   நயினா தீவு நாக பூசணி அம்பாள் ஆலயம்.

 

(2) நாலடியார்

  • தொடங்கியவர்
பரியாரி, அம்மா ஆகியோரின் பதில்கள் சரி
 
இருவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 03.
 
திருக்கோணேஸ்வரத்தில் வீற்றிருக்கும் இறைவன் இறைவியின் பெயர் என்ன?
 
திராவிட சிசு எனப் போற்றப்பட்ட நாயனார் யார்?
 
  • கருத்துக்கள உறவுகள்

(1)இறைவன்...........வயிரத்தூன்   நாதர் .
.இறைவி. அழகம்மை 

 

(2)திருஞானசம்பந்தர்

  • கருத்துக்கள உறவுகள்

1.கோணேஸ்வரர்,மாதுமையாள் 

2.சம்பந்தர்

  • தொடங்கியவர்

1.கோணேஸ்வரர்,மாதுமையாள் 

2.சம்பந்தர்

 

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 04.
 
ஈழத்தில் 63 நாயன்மார்களின் விக்கிரகங்கள் உள்ள ஆலயம் எது?
 
சுந்தரமூர்த்தி நாயனார் பொற்காசு இட்ட நதியின் பெயர் என்ன?

 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

(1) முன்னேஸ்வரம்

(2)   கங்கா நதி

  • கருத்துக்கள உறவுகள்

1.முன்னேச்சரம் 

2.மணிமுத்தா நதி

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்கள்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
  • தொடங்கியவர்
சமர் 05.
 
திருக்கேதீஸ்வரத்தில் வீற்றிருக்கும் இறைவன் மற்றும் இறைவியார் ஆகியோரின் பெயர் என்ன?
 
சுந்தரமூர்த்தி நாயனார் முக்தா நதியில் இட்ட பொற்காசுகளை எடுத்த குளத்தின் பெயர் என்ன?
 
  • கருத்துக்கள உறவுகள்

இறைவர் : திருக்கோணேஸ்வரர் 
இறைவியார் : மாதுமையாள்

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

(1)

திருக்கேதீச்சரம் இறைவன் பெயர்- திருகேத்தீச்சர நாதர் இறைவி பெயர்- கெளரிஅம்மை,

 

(2)திருவாரூர்க் குளம்

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

 

சமர் 05.
 
திருக்கேதீஸ்வரத்தில் வீற்றிருக்கும் இறைவன் மற்றும் இறைவியார் ஆகியோரின் பெயர் என்ன?
 
சுந்தரமூர்த்தி நாயனார் முக்தா நதியில் இட்ட பொற்காசுகளை எடுத்த குளத்தின் பெயர் என்ன?

 

 

 

அம்மா மற்றும் நிலாமதி புதிய கேள்வியைக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என நினைக்கின்றேன். மீண்டும்

 

முயற்சிக்கவும்.

 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

(1)

திருக்கேதீச்சரம் இறைவன் பெயர்- திருகேத்தீச்சர நாதர் இறைவி பெயர்- கெளரிஅம்மை,

 

(2)திருவாரூர்க் குளம்

:)

  • தொடங்கியவர்

:)

 

 

இரண்டாவது கேள்விக்கு மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.