Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றவாளி ராஜீவ் காந்திக்கு தலைமைச் செயலகத்தில் அஞ்சலி ரத்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி: தமிழக தலைமைச் செயலகத்தில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி (உறுதிமொழி) ரத்து.

இது போதுமா..????!

800 குர்திஸ் மக்களைக் கொன்ற சதாம் குசைனுக்கு மரண தண்டனை. 10,000 ஈழத்தமிழர்களைக் கொன்ற ராஜீவ் காந்திக்கு.. காங்கிரஸ் தலைவர்களுக்கு.. இந்திய படை தளபதிகளுக்கு தண்டனை என்ன..??! அதேபோல்.. 1,20,000 தமிழ் மக்களைக் கொன்ற மகிந்தவுக்கும் பரிவாரங்களுக்கும்.. தண்டனை என்ன..?!

 

------------------------------------------------------------------

 

பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தி: தமிழக அரசுக்கு ஞானதேசிகன் கண்டனம்.

 

இந்த ஆண்டு தலைமை செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தியாக இருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியிருக்கிறார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் 'பாரத ரத்னா" ராஜீவ்காந்தி பயங்கரவாதத்தால் ஸ்ரீபெரும்புதூர் தமிழ் மண்ணில் மனித வெடிகுண்டால் சாய்க்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரஸ் - அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு சிரித்த முகத்தோடு தமிழகம் வந்திறங்கிய அந்த ரோஜா மலரை பாவிகள் இந்த மண்ணில் குற்றுயிரும், குலை உயிருமாக ஆக்கிவிட்டார்கள்.

 

பயங்கரவாதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் ஜாதி, இன, மத என்று எந்த போர்வையிலும் அதனை எதிர்க்க வேண்டும் என்கிற உறுதிமொழியை ஏற்கிற நாளாக அமரர் ராஜீவ்காந்தி மறைந்த நாளில் உறுதிமொழி ஏற்கப்படுகிறது. இந்த உறுதிமொழி ஏற்பு என்பது அரசியலைத் தாண்டி, யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் தாண்டி இந்த தேசத்தில் பயங்கரவாதத்தை வேறோடும், வேரடி மண்ணோடும் சாய்ப்பதற்கான உறுதிமொழியை ஏற்கிற நாள். இதற்கு கட்சி வண்ணம் கிடையாது. அரசியல் கிடையாது.

 

தமிழகத்தில் ஆண்டுதோறும் இந்த உறுதிமொழி ஏற்பு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரால் ஏற்கப்பட்டு அமரர் ராஜிவ்காந்தி திருவுருவப் படதத்திற்கு மரியாதை செலுத்தப்படுகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் இது நடைபெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு தலைமை செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தியாக இருக்கிறது.ஒரு பொதுவான உறுதிமொழியை, பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எடுக்கிறோம் என்பதை காட்டிற நிகழச்சியாயாய் எடுக்கப்படுகிற இந்த உறுதிமொழி இன்று ஏன் ஏற்கப்படவிலை எனபதை தமிழக அரசு விளக்க வேண்டும். இது மிகவும் கண்டனத்திற்குரியது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=122165

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு. ஏன் தமிழகத்தில் மட்டும் அதைச் செய்ய வேண்டும். ராஜிவ் அங்சலி என்பது தமிழகத்தில் செய்வதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால் பயங்கரவாத எதிர்ப்பு ஏன் தமிழகத்தில் மட்டுமே செய்ய வேண்டும். செய்திகளில் தேடியபோது மற்றய மாநிலங்களில் அப்படிச் செய்வதாகத் தெரியவில்லை. ஏன் மற்றய மாநிலங்களில் பயங்கரவாத எதிர்ப்பு இல்லையா? ஆக இதன் நோக்கம் இதுவாகத் தான் உள்ளது. இப்படி ராஜிவ்வை நினைவுகூர்வதன் மூலம், தமிழ்மக்களின் மனங்களில் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்படும் குற்ற உணர்வின் மூலம் அரசியல் இலாபம் சம்பதிப்பது... ராஜிவ்வை மக்கள் மறந்து போனால் எதிர்காலத்தில் இருக்கின்ற 5 வீத வாக்களர்களை எப்படிப் பேண முடியும்??

  • கருத்துக்கள உறவுகள்

ராசீவ் காந்தின்னா யாருன்னு கேள்வி கேக்குற நிலையில் தமிழ்நாடு போயிட்டு இருக்கு, அதனால் ஞானதேசிகனுக்கு அரசியல் வியாபாரம் தமிழ்நாட்டில் படுத்துவிடுமோன்னு கவலையில் உளறுவது இயற்கை. அதைப்பற்றி தமிழர்கள் கவலைப்பட தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் கெட்ட கேட்டுக்கு..... இது ஒன்று தான் குறைச்சல்.
முதல் மஹா பயங்கரவாதியளே, உந்தக் கட்சிக்குள் தான் இருக்கிறார்கள்.

நான்  நினைக்கவில்லை....மோடியும் வித்தியாசமாக ஈழ பிரச்சனைக்கு செய்வார் என்று....

 

இந்தியா இலங்கையை பொறுத்த அளவில் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று முடிவு எடுத்து விட்டு அதன் படி செய்யும் போலுள்ளது..வாடஇந்தியர்கள் ராஜீவை அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள் போலுள்ளது..

 

Poll heat and dust behind, Modi pays respect to ex-PM Rajiv Gandhi

Edited by naanthaan

நான் நினைக்கவில்லை....மோடியும் வித்தியாசமாக ஈழ பிரச்சனைக்கு செய்வார் என்று....

இந்தியா இலங்கையை பொறுத்த அளவில் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று முடிவு எடுத்து விட்டு அதன் படி செய்யும் போலுள்ளது..வாடஇந்தியர்கள் ராஜீவை அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள் போலுள்ளது..

Poll heat and dust behind, Modi pays respect to ex-PM Rajiv Gandhi

இந்திரா காந்தியை எப்படி மறந்தார்கள்? சீக்கியரை பிரதமராக்கி ரசிக்கவில்லையா?

கொள்கைகள் ஒன்றும் கல்லில் எழுதுவதில்லை.

Edited by விவசாயி விக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.