Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி சென்றும் மோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த விஜயகாந்த்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை:  விஜயகாந்த்  டெல்லி சென்ற போதிலும்,  நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததற்கு, மைத்துனர் சுதீஷுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததுதான் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் வீசிய நரேந்திர மோடி அலையில் தமிழ்நாட்டிலும் அரசியல் மாற்றம் நிகழும் என்று எதிர்பார்த்து,  பா.ஜனதா தலைமையில் ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணியும் கணிசமான இடங்களை கைப்பற்றும் என்ற கனவுடன் இருந்தது. ஆனால் அது கனவாக வந்து கனவாகவே போய்விட்டது.

கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜனதா), தர்மபுரியில் அன்புமணி (பா.ம.க) ஆகிய இருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். பெரிய மாநிலமான தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு ஒரே ஒரு எம்.பி இருப்பதால் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி உறுதி என்று தேர்தல் முடிவு வெளியானதுமே எதிர்பார்க்கப்பட்டது.

அதே நேரத்தில் எதிர்பாராத தோல்வியை தழுவினாலும் அமைச்சர் பதவி கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு கூட்டணி கட்சிகளிடம் இருந்தது. அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் நேற்று முன்தினமே டெல்லி சென்று விட்டனர். பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதால் பா.ம.க.வுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். ஆனால் பதவி கிடைக்காததால் அன்புமணி ஏமாற்றம் அடைந்தார்.

கேபினட் அந்தஸ்து கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இணை அமைச்சர் பதவியாவது கிடைத்தால் போதும் என்று பா.ஜனதா தலைமையை அணுகி இருக்கிறார்கள். ஆனால் அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த போது நடந்த முறைகேடுகள் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால் இப்போது அமைச்சர் பதவி தர இயலாது. வழக்கு முடியட்டும் பின்னர் பரிசீலிக்கலாம் என்று பா.ஜனதா மேலிடம் கையை விரித்து விட்டதாக கூறப்படுகிறது. இது அன்புமணிக்கு ஏமாற்றத்தையும், ராமதாசுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

anbumani%20200%2820%29.jpgramadass%20200aa%2879%29.jpgஏற்கனவே பா.ஜனதா கூட்டணிக்கு எள்ளளவு கூட விருப்பமில்லாத ராமதாசை சமாதானப்படுத்தி கூட்டணி கொடி பிடித்தவர் அன்புமணி. எவ்வளவு சிரமப்பட்டு கூட்டணிக்கு முயற்சி எடுத்தேன் என்பது தெரிந்தும் பா.ஜனதா நம்மை கை விட்டு விட்டதே என்ற விரக்தியில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரதான கூட்டணி கட்சியான தே.மு.தி.க. , தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவில் இருந்து மீளவும், வருங்காலத்தில் நெருக்கடி இல்லாமல் கட்சியை கட்டிக்காக்கவும் டெல்லியில் பிரதிநிதி வேண்டும் என்று அதன் தலைவர் விஜயகாந்த் நினைக்கிறார்.

எனவே மைத்துனர் சுதீஷுக்கு அமைச்சர் பதவி அல்லது ராஜ்யசபா எம்.பி.பதவி வேண்டும் என்று பா.ஜனதா தலைமையை வலியுறுத்தி இருக்கிறார். கண்டிப்பாக ஏதாவது பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விஜயகாந்த் இருந்தார். எனவே பதவி ஏற்பு விழாவுக்கு மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீசுடன் நேற்று காலையில் டெல்லி புறப்பட்டு சென்றார். பிற்பகல் வரை பதவி பற்றி அறிவிப்பு வராததால் பதவி ஏற்பு விழாவுக்கு செல்லாமல் ஓட்டலிலேயே இருந்து விட்டார். பதவி வழங்காததால் விஜயகாந்த் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

மனைவி பிரேமலதாவுக்காவது மத்திய அமைச்சருக்கு இணையான ஏதாவது ஒரு பதவி வேண்டும் என்று விஜயகாந்த் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. டெல்லியிலேயே முகாமிட்டுள்ள விஜயகாந்த் மோடியை சந்தித்து தனது விருப்பத்தை தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=28360

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு.... வெளிநாட்டு தூதுவர் பதவியும்.....
மச்சான் சுதீஷுக்கு, ஏதாவது... ஒரு மாநில ஆளுநர் பதவியும் கொடுக்க மோடி முன் வரவேண்டும்.

ஏன் அவர்  தான் ஒன்னும் வெல்ல வில்லையே  பிறகென்ன?

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவர்  தான் ஒன்னும் வெல்ல வில்லையே  பிறகென்ன?

 

இப்ப கொடுத்தால்.... அடுத்த தேர்தலில், வென்று காட்டுவார்கள் தானே....

பாவங்கள், டெல்லிக்கும்.... சென்னைக்கும் என்று, அலைஞ்சு திரியுறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு.... வெளிநாட்டு தூதுவர் பதவியும்.....

மச்சான் சுதீஷுக்கு, ஏதாவது... ஒரு மாநில ஆளுநர் பதவியும் கொடுக்க மோடி முன் வரவேண்டும்.

பிரமேலதாவை சந்திச்சு உள்நாட்டு அரசியல் பற்றி அலசி ஆராய  தங்களுக்கு வசதியாய் இருக்குமோ ??

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லிக்குப் போய்ட்டு குடிச்சுப்போட்டு கும்மெண்டு படுத்திருப்பார். வெறிமுறிய ரொம்ப நேரமாயிருக்கும் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு.... வெளிநாட்டு தூதுவர் பதவியும்.....

மச்சான் சுதீஷுக்கு, ஏதாவது... ஒரு மாநில ஆளுநர் பதவியும் கொடுக்க மோடி முன் வரவேண்டும்.

 

பிரேமலதா ஜேர்மன் நாட்டு தூதுவராக வர வேண்டும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பிரமேலதாவை சந்திச்சு உள்நாட்டு அரசியல் பற்றி அலசி ஆராய  தங்களுக்கு வசதியாய் இருக்குமோ ??

 

மருது, டபிள் மீனிங்கிலை.... கேக்கிற மாதிரி இருக்கு. :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமலதா ஜேர்மன் நாட்டு தூதுவராக வர வேண்டும். :wub:

 

சரியாய்ச் சொன்னீங்க.... அண்ணை.

பிரேமலதா ஜெர்மன் தூதுவராக வந்தால்... வாழ்த்தி வரவேற்போம். :rolleyes:

 

அவருக்கு ஜெர்மன்  தூதுவர் பதவி கிடைக்காவிடில்..... பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா தூதுவராக நியமித்தாலும்... ஆட்சேபனை இல்லை. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாய்ச் சொன்னீங்க.... அண்ணை.

பிரேமலதா ஜெர்மன் தூதுவராக வந்தால்... வாழ்த்தி வரவேற்போம். :rolleyes:

 

அவருக்கு ஜெர்மன்  தூதுவர் பதவி கிடைக்காவிடில்..... பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா தூதுவராக நியமித்தாலும்... ஆட்சேபனை இல்லை. :)

 

பிரான்ஸுக்கு வேண்டாம்...அங்கை எங்கடை நீலவண்ணன் நீல எழுத்துக்காரர் இருக்கிறார்....பிறகு விஜய்காந்த் நாக்கை மடிச்சு கோபப்படவேண்டி வரும்.  :lol:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.