Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இந்தியா கட்டளையிட முடியாது: இலங்கை அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு: இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இந்தியா கட்டளையிட முடியாது என அந்நாட்டு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''இலங்கையில் வாழும் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது குறித்து இந்தியாவோ அல்லது வேறு நாடுகளோ கட்டளையிட முடியாது. இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக்குழுதான், அதிகாரப் பகிர்வு குறித்து விவாதித்து இறுதி முடிவை எடுக்கும்.

இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை அறிவுரை கூறுவதில்லையோ, அதேபோல், இலங்கையிலுள்ள மாநிலங்களுக்கான அதிகார பகிர்விலும் இந்தியா தலையிடக் கூடாது.

1987ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் 13வது சட்டத்திருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும் அது, இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று. எனவே, அது சட்டப்படி செல்லுமா என்பது கேள்விக்குரியதாகும்'' என்றார்.

இந்திய பிரதமராக பதவி ஏற்ற நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்தபோது, இலங்கையில் 13வது சட்டத்திருத்தத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=28508

  • கருத்துக்கள உறவுகள்
முதுகு கண நாளா உளையுது.
 
இப்படி தான்... முன்னம் பருப்புப் பொதியலோட, உளைவு எடுக்க வந்தவையள். 
 
இப்ப, இயக்கங்களும் இல்லை, வந்தால் போக மாட்டினம்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு: இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இந்தியா கட்டளையிட முடியாது என அந்நாட்டு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''இலங்கையில் வாழும் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது குறித்து இந்தியாவோ அல்லது வேறு நாடுகளோ கட்டளையிட முடியாது. இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக்குழுதான், அதிகாரப் பகிர்வு குறித்து விவாதித்து இறுதி முடிவை எடுக்கும்.

இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை அறிவுரை கூறுவதில்லையோ, அதேபோல், இலங்கையிலுள்ள மாநிலங்களுக்கான அதிகார பகிர்விலும் இந்தியா தலையிடக் கூடாது.

1987ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் 13வது சட்டத்திருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும் அது, இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று. எனவே, அது சட்டப்படி செல்லுமா என்பது கேள்விக்குரியதாகும்'' என்றார்.

இந்திய பிரதமராக பதவி ஏற்ற நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்தபோது, இலங்கையில் 13வது சட்டத்திருத்தத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=28508

இவர் சொன்னது சரி.. மிரட்டல் அல்லது புறச்சூழ்நிலைகளை காரணமாகக் கொண்டு ஒப்பந்தங்களைத் திணித்தல் சட்டப்படி செல்லுபடியாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே??

கேள்வி கேட்க ஆளில்லை என்ற  நினைப்ப இந்தியாவுக்கு..

அப்படித்தான் பேசணும்

இது தான் மோடிக்கு பிடித்த விதம்

தொடரட்டும் தங்கள் பணி

என்றும் தமிழினம் தங்களுக்கு நன்றியுள்ளதாக இருக்கும்

இவர் சொன்னது சரி.. மிரட்டல் அல்லது புறச்சூழ்நிலைகளை காரணமாகக் கொண்டு ஒப்பந்தங்களைத் திணித்தல் சட்டப்படி செல்லுபடியாகாது.

 சூப்பர் இசை. அதுதான் எங்களுக்கு தேவை. சிங்களவன் சிங்க வம்ச வேலையை ஆரம்பிச்சுட்டான். இனி விரைவாக பாராளுமன்ற தேர்வு குழு மூலமோ உயர் நீதி மன்றம் மூலமோ 13 ம் திருத்தம் சட்ட விரோதமானது என தீர்ப்பு கொண்டு வருவான். மோடி அரசியல் சாணக்கியத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர். அவர் மஹிந்தவிடம் மிகவும் சாதுரியமாக சொன்ன விடயம். "நாங்கள் உங்களை ஒன்றும் செய்ய சொல்லி வற்புறுத்தவில்லை. நீங்கள் எங்களுக்கு தந்த உறுதி மொழியை தான் கால தாமதம் இன்றி நடைமுறை படுத்துமாறு கேட்கிறோம்" அங்குதான் சிங்களவனுக்கு ஆப்பு இறுகுகிறது.  :D 

அது தானே??

கேள்வி கேட்க ஆளில்லை என்ற  நினைப்ப இந்தியாவுக்கு..

அப்படித்தான் பேசணும்

இது தான் மோடிக்கு பிடித்த விதம்

தொடரட்டும் தங்கள் பணி

என்றும் தமிழினம் தங்களுக்கு நன்றியுள்ளதாக இருக்கும்

ஆமாம் விசுகு அண்ணை. சிங்களவன் தான் இம்முறை தமிழ் ஈழம் நோக்கி மோடியை நகர்த்த போகிறான். :D

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

 

முதுகு கண நாளா உளையுது.
 
இப்படி தான்... முன்னம் பருப்புப் பொதியலோட, உளைவு எடுக்க வந்தவையள். 
 
இப்ப, இயக்கங்களும் இல்லை, வந்தால் போக மாட்டினம்...

 

இது நடக்க நிறைய வாய்ப்பு இருக்குது.இப்ப நாங்கள் செய்ய வேண்டியது வாயை மூடிக்கொன்டிருப்பது மட்டும்தான்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

 

1987ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் 13வது சட்டத்திருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும் அது, இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று. எனவே, அது சட்டப்படி செல்லுமா என்பது கேள்விக்குரியதாகும்'' என்றார்.

 

 

 

13-வது சட்டத் திருத்தம்

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த குறைகளைத் தீர்க்க 1987-இல் இந்திய பிரதமர் இராஜீவ் காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஜெயவர்தனே இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழர்களுக்கென ஒரு மாகாணமும், மற்றப்பகுதிகளை உள்ளடக்கியவற்றை சிங்களவர்களுக்கென ஒரு மாகாணம் என்று பிரித்து, இரண்டு மாகாணங்களுக்குத் தேவையானவற்றை தனித்தனியே மற்றொரு மாகாணம் பாதிக்காத வகையில், தனி மாகாண சட்டமன்றம் மூலம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதனை சட்டமாக்க 1988-இல் இலங்கை அரசியல் சட்டத்தின் 13 வது பிரிவில் திருத்தம் மேற்கொண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தில் எந்த ஒரு மாற்றம் தேவையென்றாலும், 1988 உடன்படிக்கையின்படி இலங்கை இந்தியாவுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இச்சட்டத்திருத்தத்தின்படி தமிழர்களுக்கு ஆட்சி, நிலம் மற்றும் காவல்துறை போன்ற முக்கிய உரிமைகள் வழங்கப்படும்.

தமிழர்களுக்கு தனி மாகாணம் அமைத்து அரசியல் உரிமையை கொடுப்பது தான் இச்சட்டதிருத்ததின் சாராம்சம். ஆனால் சிங்களவர்கள் யாரும் கேட்காத நிலையில் சிங்களவர் பகுதிகளை ஏழாகப் பிரித்து மொத்தம் எட்டு மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் தமிழர்களை விட சிங்களவர்கள் ஏழு மடங்கு அதிக அரசியல் உரிமைகளைப் பெற முடியும். தமிழர்கள் சிங்களவர்களுக்கென தனித்தனி மாகாணம் உருவாக்கப்பட்டால், அரசியல் உரிமைகள் சரிசமமாகப் பிரிக்கப்படும். இதனை தமிழர்களுக்கு வழங்க சிங்கள அரசு விரும்பவில்லை. 13-வது சட்டத்திருத்தத்தின் படி ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணத்தில் 1988-இல் தேர்தல் நடைபெற்றது. விடுதலைப் புலிகள் புறக்கணித்த இத்தேர்தலில் 1990 வரை வரதராசப்பெருமாள் தலைமையில் ஆட்சியமைந்தது. பின்னர் சிங்களவர்கள் கைகளுக்கு மாறியது. 2006-இல் வடக்கு-கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டது செல்லாது என்று ஒரு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன் கிழக்கு மாகாணத்தில் மட்டும் தேர்தல் நடத்தி கிழக்குப் பகுதியை சிங்களம் கைக்குள் கொண்டுவந்தது. இலங்கையின் இது போன்ற அராஜக செயல்களை இந்தியா கண்டுக்கொள்ளவே இல்லை.

வடக்கு மாகாணத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், சில தமிழ் அமைப்புகளும், இந்தியாவும் மீண்டும் 13-வது சட்டத்திருத்தத்தை நடைமுறைபடுத்த கோரியது. பொதுநலவாய மாநாடு நடக்கவிருக்கும் நிலையில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்க மனமற்ற நிலையில், தற்போது 13-வது சட்டத்திருத்தத்தை இலங்கை நீர்த்துபோக செய்யும் செயல்களில் ஈடுபட்டுள்ளது. ஆனால் 1987 இராஜீவ்-ஜெயவர்தனே உடன்படிக்கையை சட்டப்பூர்வ வடிவம் கொண்டுவரப்பட்ட சில சட்டங்கள், இந்த 13-வது திருத்தத்தை ஏற்கனவே நீர்த்துப்போக செய்துவிட்டது உண்மை. தற்போதுள்ள நிலையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டாலும், தமிழ் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் முழுவதும் இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு உண்டு. சிங்களவர்களை 75% மேல் கொண்டுள்ள நாடாளுமன்றத்தில், தமிழர்களுக்கு நன்மைபயக்கும் எந்த ஒரு சட்டமும் நிறைவேற்ற முடியாது. இந்தியா இதைத்தான தற்போது நடைமுறைப்படுத்த வேண்டும் இலங்கையை கெஞ்சிக் கொண்டிருக்கிறது.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.