Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸினால் மட்டுமே முடியும் - கம்பவாரிதி இ. ஜெயராஜ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழருக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸினால் மட்டுமே முடியும் - கம்பவாரிதி இ. ஜெயராஜ்
08 ஜூன் 2014
கம்பன் கழக அம்மன் ஆலயத்திற்கு டக்ளஸ் ரூ. 5 இலட்சம் நன்கொடை
Ducki%20Jayarajah_CI.jpg

 

மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் உள்ளவராக மட்டுமல்லாமல் இனம் பற்றிய உண்மையான அன்பும், அக்கறையும் கொண்டவராகவும் சுயமாக முடிவெடுக்கக் கூடியவருமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே விளங்கி வருகின்றார் என கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ-ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கம்பன் கழக கேட்போர் கூடத்தில் கழகத்தைச் சார்ந்தோருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடிய போதே ஜெயராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கான சுயகெளரவம், பண்பாடு, வாழ்வியல் உள்ளிட்ட சகல உரிமைகளையும் அரசுடன் பேசிப் பெற்றுக்கொடுக்கும் முக்கிய பொறுப்பும், தமிழ் மக்கள் சுயமிழந்து வாழாமல் இருப்பதற்கு மட்டுமல்லாமல் கெளரவமான வாழ்வை வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுக்கவும் அமைச்சர் அவர்களால் மட்டுமே முடியும் எனவும் ஜெயராஜ் தெரிவித்தார். அத்துடன் 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஜனநாயக நீரோட்டத்திற்கு கொண்டு வந்தவர் அமைச்சர் என்றும் இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.

வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அங்கு உரையாற்றும் போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்தவொரு விடயத்தையும் தனித்துவமாகவும், தனித் தன்மையுடனும் ஆராய்ந்து தீர்க்கமாகவும் முடிவெடுக்கக் கூடியவர் என்பதுடன் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சராக இருந்த போது இந்து சமயத்திற்கு அளப்பரிய பணிகளையும் ஆற்றியுள்ளார்.

உள்ளத்தின் கிடக்கையை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்யக் கூடிய பண்புகள் நிறைந்த அரசியல் தலைமை இவரிடம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றியதைத் தொடர்ந்து கம்பன் கழக தாபகர் கம்பவாரிதி ஜெயராஜ் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். நிறைவில் கொழும்பில் அமையப்பெற வுள்ள ஐஸ்வர்யலக்ஸ்சுமி கோயில் புதிய கட்டடத் திருப்பணிக்காக ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான காசோலையை கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களிடம் அமைச்சர் கையளித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் பிரசாந்தன் உள்ளிட்ட கம்பன் கழகத்தை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

நன்றி - தினகரன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107923/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குடுமி வாரியின் சாயம் வெழுத்து மிக நீண்ட காலமாகிவிட்டது.

 

ஆமாம் டக்கிளஸ் தேவானந்தா புலிகளை 2004 இல் ஜனநாயக நீரோட்டத்துக்குள் இழுத்து வந்து 2009 இல் முள்ளிவாய்க்காலில் மூழ்கடித்தவர்.

 

போங்கையா.. உங்களுக்கு எவன் பிச்சை போட்டாலும்.. அவனைப் புகழ்ந்து தள்ளுவீங்க என்பது தெரியும்.

 

உங்களின் வயதை ஒத்த பொ.ஐங்கரநேசன் செய்யுற அளவுக்காவது.. சிறிய.. மக்கள் சேவையை செய்திட்டு வந்து.. வாருதி இதைச் சொல்லனும்.

 

அதை விடுத்து எதிரியோடு நின்று.. சொந்த மக்களைக் கொன்றொழித்தவனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தும் பாட கம்பவாருதிகளால் மட்டுமே முடியும்.

 

இவர்கள் கொழும்புக்கு வந்த போது.. 1995/96 இல் நிகழ்ந்தவற்றையும் வாருதி நினைவில் வைச்சு வாருதல் வேண்டும். :D:o:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தினகரனின் வருகின்ற செய்தி எல்லாம் நம்பக்கூடியவை அல்ல

புலிகள் யாழ்பாணத்தில் இருந்த காலத்தில் புலிகளை ஏளனமாக தனது கம்பராமாயண  சொற்பொழிவுகளோடு மறைமுகமாக நையாண்டி செய்தவர் கம்பவரிதி ஆனால் புலிகளால் இவர் மீது கைவைக்க முடியவில்லை. காரணம் ஒரு மேட்டுத்தட்டின் அடயாளம் இவர். புலிகள் இராவண நாடகத்தை முன் நகர்த்தினார்கள். டக்களசை கம்பவரிதி முன்வைப்பதானது ஒரு தட்டு மக்கள் சார்பாகவன்றி தனித்து அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலை கம்பவாருதி படம் காட்டுறார்.....

சுவிசிலை இருந்து இன்னொருதர் கவிதை காட்டுறார்...

யாழ்ப்பாணத்தில் பல்கலை பாதுகாப்பு சேவைக்கு போட்டு ஒருவர் பிலிம் காட்டுறார்...

என்னப்பா இப்ப குரு மாற்றமோ......அலையடிக்குது...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸினால் மட்டுமே முடியும் - கம்பவாரிதி இ. ஜெயராஜ்

சுண்டல்: ஆமா ஒரு சொம்பு பால அப்பிடியே உள்ள தள்ளிட்டு ..... அந்த நேரத்தில் யாரு அதிகாரத்தில் இருக்கின்றார்களோ அவர்களை காக்கா பிடிக்க உங்களால் மட்டும் தான் முடியும்....

கம்பவாரதி தமிழ் இலக்கியம் படித்தவர். தமிழ் புலவர்கள் மீது பாசம் கொண்டவர். ஆட்சியில் இருக்கும் மன்னனை  புகழ்ந்து பாடி அவர்களிடம் இருந்து பரிசில்கள் பெறுவது  தமிழ் புலவர்களின் வழமை.  தமிழ் புலவர்களின் அடியொற்றி அவர் அதை செவ்வனே செய்து வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

5 லட்சம் நன்கொடைக்கே இந்த வாரல் என்றால் இன்னும் அதிகம் கொடுத்தால் டக்ளஸையே ராமன் ஆக்கிவிட்டிருப்பார்.

முன்பு மாணிக்கதாசன் இப்ப டக்லஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.