Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வல்லுறவின் விளைவாக பிறந்தவள் நான்' : அமெரிக்க அழகுராணி கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள வலேரி கெட்டோ,   தான் பாலியல் வல்லுறவின் காரணமாகப்  பிறந்த  ஒரு பெண் எனத் தெரிவித்துள்ளார்.

 

24 வயதான வலேரி பென்சில்வேனியா மாநில அழகுராணியாக அண்மையில்  முடிசூடப்பட்டார். இவ்வருடத்துக்கான அமெரிக்க அழகுராணி (மிஸ் யூ.எஸ்.ஏ.) போட்டியில் பென்சில்வேனியா மாநிலம் சார்பாக அவர் பங்குபற்றினார்.

இந்நிலையில், பேட்டியொன்றின்போது தனது துயர வரலாறு குறித்து வலேரி கூறியுள்ளார். தனது கதை பாலியல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என அவர் கருதுகிறார்.

'பாலியல் வல்லுறவினால் பிறந்த ஒருவளாக இருப்பதை, எனது தந்தை யார் என்று தெரியாத நிலையை, அவர் எப்போதாவது கண்டுபிடிக்கப்படுவாரா என்பதும் தெரியாத நிலையை  எதிர்மறையான ஒரு சூழ்நிலையாகவே பெரும்பலானோர் கருதுவர்.

 

நான் எனது தாயாருடனும் தாத்தா பாட்டியுடனும் வளர்ந்தேன். அவர்கள் என்னை எதிர்மறையான ஒன்றாக நோக்கவில்லை. எனக்கு எப்போதும் எனது குடும்பத்தினர் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தனர். நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாகவும்  முடியும் என எனக்கு நம்பிக்கையூட்டினர்' என்கிறார் வலேரி கெட்டோ.

 

5745miss-pennsylvenia6.jpgபிட்ஸ்பேரக் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற வலேரியா, சந்தைப்படுத்தல் ஆலோசகராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தனது தாயார் 19 வயது யுவதியாக இருந்தபோது கத்தி முனையில் வல்லுறவுக்குட் படுத்தப்பட்டதாகவும் பாடசாலையில் 3 ஆம் வகுப்பில் தான் கல்வி கற்றபோது தனது தாயார் எதிர்கொண்ட பாலியல் வன்முறை குறித்து முதல் தடவையாக ஓரளவு தெரிந்துகொண்டதாக வலேரி கூறுகிறார்.

 

'எனது தந்தை எங்கே என எனது தாயாரிடம் கேட்டேன். அப்போது, 'எனது வாழ்க்கையில் சில மோசமான விடயங்கள் நடந்தன. மிக மோசமான மனிதன் எனக்கு தீங்கிழைத்தான். ஆனால், கடவுள் உன்னை எனக்களித்தார்' என தாயார் தெரிவித்தார்' என்கிறார் வலேரி.

 

இளம் வயதில் என்னால் புரிந்துகொள்ளக்கூடிய அளவில் இது குறித்து எனது தாயார் தெரிவித்தார். வளரதான் அது குறித்து அறிந்துகொண்டேன்.

 

எனது தாயாரை பிட்ஸ்பேர்க் நகரிலுள்ள கட்டடங்களின் பின்னால் வைத்து ஒரு மனிதன் கத்திமுனையில் வல்லுறவுக் குள்ளாக்கினான். அவன் எனது தாயாரை கொலை செய்திருப்பான். ஆனால், அவ்வழியே சென்ற காரொன்றின் அதிக வெளிச்சம் காரணமாக அம்மனிதன் ஒளிந்துகொள்ள முயன்றபோது அவனிடமிருந்து எனது தாயார் உயிர்தப்பி வந்தார்.

 

5745miss-pennsylvenia.odt-1.jpgஆனால், அந்த வல்லுறவின் விளைவாக அவர் கர்ப்பமானார். அதனால் பிறந்த குழந்தைதான் நான்' எனக் கூறும் வலேரி, தனது தாயின் அனுபவத்தை மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதற்காக சுட்டிக்காட்டுகிறார்.

 

'துரதிஷ்டவசமாக இந்த குற்றங்கள் குறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியுள்ளது. எவ்வாறு தம்மை பாதுகாத்துக்கொள்வது என்பதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் நம்பிக்கையுடன் நான் உள்ளேன். மிகத் தீவிரமான ஒரு விடயம் குறித்து பெண்களுக்கு நான் கற்பிக்கிறேன். அவர்களிடமிருந்து கிடைக்கும் பிரதிபலிப்புகள் மகிழ்ச்சியடையச் செய்கின்றன. இது தமது வாழ்க்கையை மாற்றியுள்ளதாக அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்' என வலேரி தெரிவித்துள்ளார்.

 

கல்லூரிக்குச் செல்லும் வயதிலுள்ள யுவதிகள் மத்தியில் அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வற்கான வழிகள் குறித்து உரையாற்றுவதை வலேரி வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பாலியல் வல்லுறவு, பாலியல் தாக்குதல்கள் மற்றும் பாலின வன்முறைகளை நிறுத்துவதற்கான சர்வதேச ஆண்களின் பேரணியிலும் வலேரியா கெட்டோ பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

மிஸ் யூ.எஸ்;.ஏ. போட்டியில் வென்றால் மேலும் அதிகமான மக்களை அடைவதற்கு தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறும் வலேரியா கெட்டோ, தான் பிரபலமாகுவதற்காக இச்செய்தியைக் கூறவில்லை. என்கிறார்.

 

'எந்த சுயநல நோக்குடனும் நான் இதைச் சயெ;யவிலலை. உண்மையிலேயே உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன்தான் இக்கருத்துக்களை கூறுகிறேன்' எனவும் வலேரி கெட்டோ தெரிவித்துள்ளார். ஆனால், நேற்றுமுன்தினம் நடைபெற்ற மிஸ் யூ.எஸ்.ஏ. அழகுராணி போட்டியில் அவர் கடைசி 20 பேர் குழுவில் ஒருவராகவே தெரவானமை குறிப்பிடத்தக்கது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=5745#sthash.mY6cuhL6.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு கொடுமை.. 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு கொடுமை..

உங்கள் மனிதாபிமானம் என்னை நெகிழ வைத்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு கொடுமை.. 

எதை பற்றி பேசுறீங்க ?
 
அழகிக்கு நடந்த கொடுமையா ?
 
எமக்கு நடக்கும் கொடுமையா ?  இப்படி ஒரு படத்தை போட்டா இதை எழுத வேண்டும் ?
கொடுமை !
  • கருத்துக்கள உறவுகள்

நடந்தது  கொடுமை என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை  

வயதைக்கணித்தபடியால்

இது 1990 இல் அமெரிக்காவில் நடந்துள்ளது

இந்த பிள்ளையை  தவிர்க்கவிரும்பின் தவிர்த்திருக்கலாம்

ஆனாலும் பெற்று

அதையும் ஒரு விருட்சமாக வளர்த்திருக்கும் தாயை  பாராட்டாமல் இருக்கமுடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தது  கொடுமை என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை  

வயதைக்கணித்தபடியால்

இது 1990 இல் அமெரிக்காவில் நடந்துள்ளது

இந்த பிள்ளையை  தவிர்க்கவிரும்பின் தவிர்த்திருக்கலாம்

ஆனாலும் பெற்று

அதையும் ஒரு விருட்சமாக வளர்த்திருக்கும் தாயை  பாராட்டாமல் இருக்கமுடியவில்லை

 

தவிர்த்திருக்கலாம் என்பதை நானும் யோசித்தேன். ஆனால் பழமைவாத சிந்தனையில் இருப்பவர்கள் கருக்கலைப்பை விரும்புவதில்லை. அதனால் இது நிகழ்ந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம இசை அண்ணாவை யாரும் புரிஞ்ச்சுகல்ல இசை அண்ணா கொடுமை எண்டு சொன்னது இந்த பொண்ணெல்லாம் அமெரிக்காவின் அழகு ராணி ஆகிட்டாவே என்ற வருத்தத்தில் அப்பிடி ஒரு அழகு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.