Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னாரில் சிங்கள மக்களை அவர்களது பூர்வீக காணியில் குடியமர அழைப்பு விடுக்கிறார் அமைச்சர் றிசாத் -

Featured Replies

 சிங்கள் மக்களுக்கு நான் அழைப்பு விடுகிறேன் அவர்கள் அவர்களது பூர்வீக கிராமங்களில் தமது காணியில் வந்து குடியேறவேண்டும். தமிழ், சிங்களபேதங்கள் மறந்து ஒற்றுமையாக நாங்கள் வாழவேண்டும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிசாத் பதியுதீன். கடந்த திங்கட்கிழமை ஆடைகள் மற்றும் புடவைகள் நிறுவனத்தின் வட மாகாணத்திற்கான முதலாவது கிளையைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - சிங்கள மக்கள் இங்கு வியாபாரம் செய்யக்கூடாது என்று யாரும் தடைசெய்யமுடியாது அவ்வாறு தடைசெய்யப்பட்டதாக நான் இதுவரை அறியவில்லை இங்கு அரச அதிபர் மற்றும் நகரசபை முதல்வர் இருக்கின்றனர். எனவே அவ்வாறு பிரச்சினைகள் எதுவும் இருந்தால் அதனை தெரியப்படுத்தி சரிபடுத்திக் கொடுக்கவேண்டும் என நான் வேண்டடுகோள் விடுக்கின்றேன். அதேபோன்று சிங்கள் மக்களுக்கு நான் அழைப்பு விடுகிறேன். அவர்கள் அவர்களது பூர்வீக கிராமங்களில் தமது காணியில் வந்து குடியேறவேண்டும். தமிழர், சிங்களவர் பேதங்கள் மறந்து ஒற்றுமையாக நாங்கள் வாழவேண்டும். 30 வருடங்களாக நானும் அகதியாக வழ்ந்து வந்துள்ளேன். இங்கு நாம் வாழ்வதற்கு அப்போது வழி இருக்கவில்லை ஆனால் அப்படியான நிலைவரம் இப்போது இல்லை மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியிலே எல்லாரும் வாழ வழி ஏற்படுத்தி தந்துள்ளார். இராணுவத்தினர் தமது உயிரை தியாகம் செய்து இதை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். அதனை பாதுகாத்து கொள்வது மதத் தலைவர்களின் கடமை. அரசியல்வாதிகள், அதிகாரிகளின் மற்றும் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு பேதமின்றி ஒற்றுமையாக செயற்றபடமுன்வரவேண்டும். மீண்டும் ஒரு யுத்தம் வருவதை யாரும் விரும்பமாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஜனாதிபதி நாட்டினை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்வதில் முனைப்பாகச் செயற்பட்டுவருகிறார். எனவே எமது ஜனாதிபதியின் கரங்களை வலுப்படுத்தி எந்த ஒரு பேதமுமின்றி ஒற்றுமையாக வாழவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆடைகள் மற்றும் புடவைகள் நிறுவனம் முதன் முதல் வட மாகாணத்தில் மன்னாரில் திறந்து வைக்கப்படுகிறது. முன்பு அவ்வாறான பயிற்சியை பெறவேண்டுமானால் நாட்டில் கொழும்புக்கு சென்று ரத்மலானையில்தான் பெறவேண்டிய நிலைகாணப்பட்டது. எனினும் பல மாதங்களக்கு முன்பு பல ஆசிரியர்களுடன் இது தொடர்பாக பேசியிருந்தேன் கொழும்புக்கு சென்று பயிற்சியை பெற தயார் என்றார்கள். என்றாலும் இன்று உங்களின் காலடிக்கு வடமாகாணத்தின் மன்னாருக்கு இதை பெற்றுதந்துள்ளோன். இதன் முதற்கட்டமாக 20 பேருக்கு பயிற்சிகளை வழங்கி உங்களை ஆசிரியர்களாக உருவாக்கி பின் மாணவர்களுக்கான பயிற்சியை ஒருமாத காலம் வழங்குவதற்கு இப்பயிற்சியினை சரியாகப் பயன்படுத்திகொள்ள வேண்டும். ஒரு மாதம் பெறப்படும் பயிற்சியினுடாக ஆறு மாதங்களுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்க முடியும். எனவே பயிற்சிக் காலத்தில் ஒரு நாளைக் கூட தவறவிடாமல் பயிற்சியைப் பெற்று அதைப் பிரயோசனப் படுத்திக்கொள்ள வேண்டும். இதனூடாகப் பல கிராமங்களில் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளோம். இந்த அடிப்படையில் எதிர்காலத்தில் அக்கிராம மக்களுக்கு பயிற்சியை வழங்கி அவர்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்குத் தேவையான துணிகள் மற்றும் உபகரணங்களை வழங்கி அவர்களது உற்பத்திகளை கொள்வனவு செய்து வீட்டில் இருந்தவாறே அவர்கள் சிறந்த வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு ஆக்கபூர்வமான திட்டமாகத்தான் இது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்களாக தெரிவுசெய்யப்படும் நீங்கள் நேர்மையாக ஆக்கபூர்வமாக உங்கள் ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளவேண்டும். இன்று பௌத்த தேரர் கூறியிருந்தார் மன்னாரில் பௌத்த கோயிலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல தடவைகள் வேண்டுகோள் விடுத்திருந்தபோதிலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று. ஆனால் பௌத்த கோயில்களுக்கோ அல்லது வேறு மத ஸ்தலங்களுக்கோ அரசாங்கத்தினால் நிதிகள் வழங்கப்படவில்லை. ஆனால் வீதிகள் உட்பட பல அபிவிருத்திகள் இங்கு நடைபெற்று வந்தாலும் மத ஸ்தலங்களுக்கான அபிவிருத்தி நிதி அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. ஆனால் இது தொடர்பாக நாங்கள் கதைத்திருக்கிறோம் எவ்வாறாயினும் அவ்வாறான நிதி வந்தவுடன் குறித்த மத ஸ்தலங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்ககை எடுக்கப்படும். குறிப்பாக மத ஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதில் எங்களுக்கு எந்த பேதமும் இல்லை. - என்றார் அவர்.
 
 
rizad%20671w.jpg
 
http://malarum.com/article/tam/2014/08/07/4285/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D.html#sthash.mcQ8Gelg.dpuf
 
 
  • கருத்துக்கள உறவுகள்
மன்னாரில் சிங்கள மக்களை அவர்களது பூர்வீகக் காணியில் குடியமர அழைப்பு விடும் அமைச்சர் றிசாத்......! தமிழ் மக்களை அவர்களது பூர்வீகக் காணியில் குடியமர அழைப்பு விடுத்தால்!! அமைச்சர்பதவி அம்போ ஆகிவிடுமா? :(
 
பாரதிபுரம் கிராமத் தமிழ் மக்களை வெளியேறுமாறு றிச்சாத் உத்தர விட்டதால், அவர்மேல் நீதிமன்றைத்  தாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அம்போ ஆகிவிட்டதா??  :o
 
  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் பொதுபல சேனவிடம் எவ்வளவு தான் அடிவாங்கினாலும் திருந்தாதுகள். தமிழனுக்கு துரோகம் செய்யும்.. பிறவிக் குணம்.. அது போகாது. :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் புலன்பெயர்ந்தவர்களே, முசிலீம் சோதரருடன் சேர்ந்து போரிடுவோம் :) முட்டா பீசுங்க

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் புலன்பெயர்ந்தவர்களே, முசிலீம் சோதரருடன் சேர்ந்து போரிடுவோம் :) முட்டா பீசுங்க

 

நல்ல பகிடி விடுறியள்.....அவைக்கு கோவம் வரப்போகுது...

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் புலன்பெயர்ந்தவர்களே, முசிலீம் சோதரருடன் சேர்ந்து போரிடுவோம் :) முட்டா பீசுங்க

 

முஸ்லீம்களுடன் சேர்ந்து போராடப் புறப்பட்டவர்கள் கண்களில், இப்படியான திரிகள் மட்டும், தெரிய மாட்டுது. :)

வாருங்கள் புலன்பெயர்ந்தவர்களே, முசிலீம் சோதரருடன் சேர்ந்து போரிடுவோம் :) முட்டா பீசுங்க

ஜூட் இலங்கை அரசு என்பது government எனும் அர்தத்தில் சொன்னது. State எனும் அர்த்தத்தில் அல்ல. அரசாங்கம் என்று சொல்லியிருந்தால். பொருத்தமாயிருந்த்ஹிருக்க்கும்.

தற்போதய யாப்பினை மாற்றி, இனவாதமற்ற (!?) அல்லது இனவாத தாக்கம் குறைந்த ஒரு புதிய சமஸ்டி அலகை நாம் எமெக்கென உருவாக்க முயற்சிக்கலாம். கிட்டத்தட்ட நீலனும் பீரிசும் 1995இல் சமர்ப்பித்த முதல் தீர்வுபொதிபோல.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் சிங்கள மக்களை அவர்களது பூர்வீக காணியில் குடியமர அழைப்பு விடுக்கிறார் அமைச்சர் றிசாத் -

 

அண்ணைக்கு  தன் பூர்வீகம் தெரியுமோ??

அடுத்தவனுக்கு என்றால்

இப்படி சுடச்சுட  அடிப்பது தான்  தொப்பிக்கு அழகு...

தொடருங்கள் :(  :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.