Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து ரூபா தின்பண்டங்களால் பிரபலமான வர்த்தகர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிலாபம் திண்ணனூரான்

 

''இலட்­சியம் என்­பது இருப்பு நிலைக் கணக்கு மாதிரி இருப்பைவைத்து நம்­மிடம் இருப்­பதைச் சொல்­லலாம் அல்­லவா? அது  போன்­ற தான் இலட்­சி­யத்தை வைத்து நமது கொள்­கையின் முன்­னேற்றம், வெற்றி ஆகி­ய­வற்றைச் சொல்­ல­மு­டியும் எனவே 'இருப்பை அதி­க­மாக வைத்­தி­ருங்கள் வியா­பரம் நன்­றாக இருக்கும்" என்­கிறார் எழு­பது வயதை கடந்த பின்னும் உற்­சா­க­மாக உழைக்கும் எம். நட­ராஜா. 

 

101Untitled-155.jpg

இவர் ஒரு வர்த்­தகர். தன் சுய முயற்­சியால் சுய­தொ­ழிலில் ஈடு­பட்டு இன்று வெற்­றியை தொட்­டு­ விட்டார். இவரின் சுய­தொழில் மூல­மாக எட்­டுக்கும் மேற்­பட்ட தின்­பண்­டங்­களை தயா­ரித்து விற்­பனை செய்து வரு­கின்றார். இவர் தயா­ரிக்கும் தின்­பண்­டங்­க­ளி­னது விலை என்ன தெரி­யுமா? ஐந்தே ஐந்து ரூபாய் தான்.

 

வாச­கர்கள் அசந்து போய் விடு­வீர்கள். ஆனால் இது உண்­மை­யான தகவல். 
இன்று ஐந்து ரூபா­விற்கு எதை வாங்க இயலும்? ஆனால் இவ்­வா­றான தயா­ரிப்­புக்கள் இவரின் பல தோல்­வி­க­ளுக்குப் பின்னர் கற்றுக் கொண்ட பாடங்­களின் மூல­மாக பெற்றுக் கொண்ட சிந்­த­னை­களில் உரு­வா­னதே. இவரின் இளமை காலம் பெரும் சிக்­க­லா­னது. அவ்­வா­றான இடி­யப்ப சிக்­கல்­க­ளையும் உடைத்­தெ­றிய பெரும் தியா­கங்­களை வாழ்க்­கையில் புரிந்­துள்ளார். 

 

இவர் ஹட்டன், டிக்­கோயா பிர­தே­சத்தில் மிகவும் பிரல்­ய­மா­னவர். அர­சியல் ரீதி­யாக  இவர் இட­து­சாரிக் கொள்­கையைக் கொண்­டவர். ஈ.வெ.ரா. பெரி­யாரின் தாசன். பேரன் பேத்­தி­களை கண்டு எழு­பது வய­திலும் நாவல்கள், சிறு­கதை புத்­த­கங்­களை கொள்­முதல் செய்து வாசிப்­பதில் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்றார். நூல்­களை நாள் தோறும் வாசிப்­ப­வர்­களே முழு­மை­யான மனி­தர்கள் என பல அறி­ஞர்கள் கூறி­யுள்­ளதை இங்கு தெரி­விக்க வேண்டும். 
டிக்­கோயா பெரிய வேர் கொல்லை தோட்­டத்தில் பிறந்த இவர் இதே தோட்டப் பாட­சா­லையில் ஐந்தாம் வகுப்பு வரையே கல்வி கற்றார். பின்னர், பெரிய வேர்­கொல்லை தோட்­டத்தில் தொழி­லா­ளி­யாக சிறிது காலம் தொழில் செய்தப் பின்னர் இடது சாரி கொள்­கையைக் கொண்ட இவர், ஆங்­கி­லே­யர்­களின் நிர்­வா­கத்­துடன்  முரண்­பட்டு அத்­தொ­ழிலை கைவிட்டார். பின்னர் புட­வை­களை கொள்­முதல், செய்தி பொதி­க­ளாக்கி, தோட்டம் தோட்­ட­மாக வியா­பரம் செய்துப் பார்த்தார். கைகொ­டுக்­க­வில்லை. 

 

அதன்­பின்னர் பல­ச­ரக்கு வியா­பாரம், மிட்டாய் வியா­பாரம், வளையல், கோழிப்­பண்ணை, ஆட்­டுப்­பண்னை, மரக்­கறி தோட்டம் என தொழில் செய்துப் பார்த்தார். அத்­த­னையும் நட­ரா­ஜா­வுக்கு தோல்­வி­யையே தொட்டுப் பார்க்க வைத்­தன.  இத்­தோல்­விகள் பல உணர்­வு­களை கொடுத்­தது. 
இவரின் முயற்­சிகள், தோல்­விகள், பின்னர் கடு­மை­யான உழைப்பு என்­பன இன்­றைய இளை­ஞர்­க­ளுக்கு இவரின் வாழ்க்கை பாட­மா­கவும் அமை­யலாம். "தோல்­வி­களை தொடு­வதை ஏதோ ஒரு பெரிய இழி­வாக நாம் எண்ணிக் கொண்­டி­ருக்­கிறோம். தோல்­விக்குப் பயந்து சும்­மா­யி­ருப்­பது தான் இழிவே தவிர, முயற்­சி­களில் ஈடு­பட்டுத் தோல்­வி­ய­டை­வது ஒரு நாளும் இழி­வா­காது" என்­கிறார் நட­ராஜா. 

 

101Untitled-16.jpg

எந்த அள­வுக்கு நாம் தோல்­விக்கு அஞ்சி ஒதுங்­கு­கி­றோமோ அந்த அள­வுக்கு வாழ்க்­கையின் இன்­பங்­களும் பெரு­மை­களும் நம்மை விட்டு தொலைந்து விடும் என அவர் கூறு­கிறார். 

 

இந்­நி­லையில் இவரின் குடும்ப அங்­க­த்­த­வர்­களின் தொகையும் பொரு­ளா­தார ரீதியில் பெரும் பின்­ன­டைவை தொட்டு வந்தார். பொரு­ளா­தார பாதிப்­புடன் இணைந்த நிலையில் இவரின் பிள்­ளை­க­ளையும் கல்வி கற்க வைத்தார். இந்­நி­லையில் தான் இவரின் புதிய முயற்­சி­யொன்று குறித்த சிந்­தனை ஏற்­பட்­டது.

 

பலரின் ஏள­னங்­க­ளுக்கு மத்­தியில் உழுந்து, பருப்பு தானி­யங்­களை மிகக் குறைந்த எடையில் கொள்­முதல் செய்து,  உழுந்து பருப்பு வடை­களை  தயா­ரித்து டிக்­கோயா நகரில் விற்­பனை செய்ய ஆரம்­பித்தார். அப்­போது இவரின் உழுந்து, பருப்பு வடையின் விலை வெறும் இரண்டே இரண்டு ரூபா­வாகும். 
"இரண்டு ரூபா­வுக்­கும் வடை என்­றதும் பெரும் விமர்­ச­னத்தை பலர் மேற்­கொண்­டனர். அந்த விமர்­ச­னங்கள் எனது முயற்­சிக்கு பெரும் உர­மா­கி­யது. இன்றும் ஒரு சோம்­பே­றியை நான் சந்­திக்­காமல் இருக்க வேண்­டு­மென்­பதே என்­னு­டைய பிரார்த்­த­னை­யாகும். இதற்கு முக்­கிய காரணம் சோம்­பேறிகள் தானும் முன்­னேற்றம் பெறாமல் இருப்­ப­தோடு மட்­டுமல்லாமல், தன்னை சந்­திப்­ப­வர்­க­ளையும் முன்­னேற விடாது செய்து விடு­வார்கள் இது எனது அனு­ப­வத்தில் கற்றுக் கொண்ட பாட­மாகும்" என  நட­ராஜா கூறு­கிறார். 
இவ்­வா­றா­ன­வர்­களே உண்­மைக்கு முத­லிடம் வழங்­காமல், எனது வியா­பா­ரத்தின் மீது அன்று சேற்றை வாரி விமர்­சனம் மூல­மாக வீசி­னார்கள். ஆனால் மக்கள் என்னை நம்­பி­னார்கள். எனது கடு­மை­யான உழைப்பு மீது நம்­பிக்கை கொண்­டார்கள். எனது தின்­பண்ட தயா­ரிப்­புக்­களின் தரத்தை உணர்ந்­தார்கள். சுத்­த­மான வகையில் உட­லுக்கு கேடு விளை­விக்­காத வகையில் இன்றும் தின்­பண்­டங்­களை தயா­ரிக்­கின்றேன்" என்றார் நட­ராஜா.

 

எனது கடு­மை­யாக உழைப்பும் நம்­பிக்­கை­யான ஊழி­யர்­களின் உழைப்பும் இணைந்து பல­ருக்கு தொழில் வாய்ப்பை வழங்­கி­யுள்­ளது. இன்று எட்­டுக்கும் மேற்­பட்ட தின்­பண்­டங்­களை தயா­ரிக்­கிறேன் என்­கிறார் அடக்­க­மாக நட­ராஜா. பருப்பு வடை, உழுந்து வடை, சுசியம், சமோசா, அதி­ரசம், லட்டு, முறுக்கு,  கட்லட், ரோல்ஸ் என இவரின் தயா­ரிப்­புக்கள் பட்­டியில் நீள்­கி­றது.
இத்­த­யா­ரிப்­புக்­கள் லட்டு தவிர ஏனைய அனைத்தும் ஐந்து ரூபா­விற்கே விற்­கப்­ப­டு­கின்­றன. லட்டு இரு­பது ரூபா­விற்கு விற்­கப்­ப­டு­கி­றது.

 

தரம் பார்த்தே இவரின் கொள்­முதல் இடம்­பெ­று­கி­றதாம். பணம் சம்­பா­திப்­பதை விட நாலு­பே­ருக்கு தொழில் கிடைக்­க­வேண்டும் என்­ப­துமட் இவரின் நோக்­க­மாகும். 

 

101Untitled-122.jpg

இவை­க­ளுக்கு அப்பால் இன்று விவ­சா­யத்­திலும் ஈடு­பட்­டுள்ளார். தனக்கு உரித்­தான காணியில் ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட வாழைக்­கன்­று­களை நாட்டி விவ­சா­யத்­து­றை­யிலும் கால்­ப­தித்­துள்ளார். விவ­சாயம் என்­பது இவ­ருடன் சிறு பராயம் முதல் வளர்ந்து வந்ததாகும். இவரின் வாழைத்­தோட்­டத்தை பார்­வை­யி­டு­கையில் அந்த பசு­மையில் கிடைக்கும் சுகம் வேறு எங்­குமே கிடைக்­காது. 

 

நீங்கள் நல்ல அனு­ப­வ­சாலி. இந்­நி­லையில் இன்­றைய இளை­ஞர்­க­ளுக்கு என்ன செய்­தியை வழங்க விரும்­பு­கி­றீர்கள்? எனக் கேட்டோம். 
"இளமை என்­பது வயதால் குறிக்­கப்­பட வேண்­டிய ஒன்­றல்ல உள்­ளத்தில் துடிப்பும். அவ­னு­டைய முயற்­சிகள் கணிப்­பீடு செய்­வதன் மூலமே இளமை தெரியவரும். இரக்க உணர்வு இருக்கும் வரை இளமையும் வாழும். 
தோல்விகளைக் கண்டு அசந்து விடக்கூடாது. உழைக்க வேண்டும்.

 

உழைப்பு என்பது உயிர்துடிப்பின் அடையாளம். ஒருவன் தனது முயற்சியை கைவிடாது உழைக்க உழைக்க, அவனுடைய உடம்பிலும் உள்ளத்திலும் புதியதோர் சக்தி வளருகின்றது.

 

இதன் காரணமாக இவனது ஆயுளும் பெருகுகிறது. எல்லோரிடமும் அடக்கமும் பணிவும் அவசியம். ஆடம்பரமும் படாடோபமும் என்றும் நிலைக்கும் இலட்சணங்கள் அல்ல" என பதிலளித்தார் நடராஜா. 

 

(படங்கள் கே.பி.பி. புஷ்பராஜா)

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=101&display=0#sthash.EcwKnDli.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
இணைப்புக்கு நன்றி.
 
எழுபது வயதிலும் சிகரங்களைத் தொட உழைக்கும் பெரியவருக்கு  வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
  • கருத்துக்கள உறவுகள்

சிகரங்களைத் தொட உழைக்கும் பெரியவருக்கு  வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவருக்கு  வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.