Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உலகத்திலேயே தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்ல எண்களையும் ரூபாய் தாள்களில் பயன் படுத்தப்படும் ஒரே நாடு மொரீசியஸ்
196177479_1057293584676642_2530401534602
 
 
189928980_1057293628009971_4127717297866
 
 
 
  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் அகராதியின் தந்தை ....😍😍
May be an image of 1 person and text
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

12 ஆழ்வார்கள

 
Tamil-Daily-News-Paper_4177776575089.jpg
 
 
  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசையாழ்வார்
  5. நம்மாழ்வார்
  6. மதுரகவி ஆழ்வார்
  7. குலசேகர ஆழ்வார்
  8. பெரியாழ்வார்
  9. ஆண்டாள்
  10. தொண்டரடிப்பொடியாழ்வார்
  11. திருப்பாணாழ்வார்
  12. திருமங்கையாழ்வார்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

..

  • கருத்துக்கள உறவுகள்

1. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு க
தாயுதம் பயிற்சி அளித்தவர்?
பலராமன்

2. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?
கிளி

3. ”தாய்மொழி” என்பது?
தாய் குழந்தையிடம் பேசுவது

4. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு 
முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-எனும் தொடர் 
உணர்த்துவது?
தமிழின் பழமை

5. இரண்டாம் வேற்றுமை உருபு?


6. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்?
அழகு

7. ”காலை மாலை”-இதில் பயின்று வருவது?
உம்மைத் தொகை

8. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் 
கொள்ளும் வகையில் அமைப்பது?
கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்

9. ”தளை” எத்தனை வகைப்படும்?
7

10. ”அஞ்சு”-இதில் உள்ள போலி?
முற்றுப் போலி

  • கருத்துக்கள உறவுகள்
 

தமிழ் ஆண்டுப்பெயர்கள்

நற்றோன்றல் 1 பிரபவ
உயர்தோன்றல் 2 விபவ
வெள்ளொளி 3 சுக்கில
பேருவகை 4 பிரமோதூத
மக்கட்செல்வம் 5 பிரசோற்பத்தி
அயல்முனி 6 ஆங்கிரச
திருமுகம் 7 ஸ்ரீமுக
தோற்றம் 8 பவ
இளமை 9 யுவ
மாழை 10 தாது

ஈச்சுரம் 11 ஈஸ்வர
கூலவளம் 12 வெகுதான்ய
முன்மை 13 பிரமோதி
நேர்நிரல் 14 விக்ரம
விளைபயன் 15 விஜூ
ஓவியக்கதிர் 16 சித்ரபானு
நற்கதிர் 17 சுபானு
தாங்கெழில் 18 தாரண
நிலவரையன் 19 பார்த்திப
விரிமாண்பு 20 விய

முற்றறிவு 21 சர்வசித்
முழுநிறைவு 22 சர்வதாரி
தீர்பகை 23 விரோதி
வளமாற்றம் 24 விக்ருதி
செய்நேர்த்தி 25 கர
நற்குழவி 26 நந்தன
உயர்வாகை 27 விசய
வாகை 28 சய
காதன்மை 29 மன்மத
வெம்முகம் 30 துன்முகி.wikipedia.org

 

  • கருத்துக்கள உறவுகள்
192668460_4004160513005286_5152044455323
 
விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய நுட்பங்கள்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கட்டை விரல்
➖➖➖➖➖
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
ஆள்காட்டி விரல்
➖➖➖➖➖➖
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.
நடுவிரல்
➖➖➖➖➖
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.
மோதிரவிரல்
➖➖➖➖
ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.
மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.
சிறுவிரல்
➖➖➖
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.
மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.
உள்ளங்கை
➖➖➖➖
மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.
மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Ontario அதன் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு வெள்ளிக்கிழமை திரும்பியது.
மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு திரும்பிய Ontario! - தேசியம்
 
 
தெசியம்.கொம்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கடும் பனி இரவில் தன் வீட்டின் முன் ஏழை மனிதன் இருப்பதை அவதானித்தார் ஒரு செல்வந்தர்.

முதியவருக்கு அருகில் வந்து கேட்டார்
“வெளியே குளிர் உங்களுக்கு சூடான உடைகள் இல்லயா? உங்களுக்கு குளிர் இல்லையா?

முதியவர் பதிலளித்தார்,

” எனக்கு சூடான உடைகள் இல்லை , ஆனால் நான் இப்போது அதற்கு பழக்கப்பட்டுள்ளேன் “

கோடீஸ்வரன் பதிலளிக்கிறார்

“நான் வரும் மட்டும் காத்திருங்கள் நான்
உங்களுக்கு ஆடை தருகிறேன்”

அந்த ஏழை மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான், அவன் காத்துக்கொண்டிருந்தான். அந்த
மனிதன் தன் வேலையால் ஏழை மனிதனை மறந்து விட்டான்.

காலையில் அவர் அந்த ஏழை மனிதனை நினைவு கொண்டார். அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அந்த முதியவர் குளிரால் இறந்துவிட்டார்.

அந்த மனிதன் கையில் எழுதப்பட்டுள்ளது ” எனக்கு சூடான உடைகள் இல்லாத போது, நான்
குளிருக்கு போராட முடிந்தது. ஆனால் நீங்கள் எனக்கு உதவ வாக்குறுதி அளிக்கும் போது, நான் உங்கள் வாக்குறுதிக்கு அடிமையாகி, நான்
குளிர்க்கு எதிராக போராடும் திறனை
இழந்துவிட்டேன்.”

வாக்குறுதி அளிக்கும் முன் சற்று யோசியுங்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா என்று. அது இன்னொருவரின் மரணத்திற்கு கூட வழிவகுக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
நட்பு..
" நள்ளுதல்"
" கூடுதல் "
" பழகுதல்"
சொல்லும் போதே
எத்தனை இன்பம்
எத்தனை இனிமை
எத்தனை மணம்
நட்பு..
"அகம்" சார்ந்த
உணர்வு.
இரு உள்ளமதைக்
கட்டும்
ஆதனின்
பந்தம்
நட்பு..
அருமையானது
அற்புதமானது
அரணானது
ஆழமானது
நட்பு..
மனங்களுள்
மணம் வீசும்
மலர்.
நட்பு..
உனக்கென நான்
என
உடன் வரும்
துணை.
நட்பு..
வலிகள் கடக்க
வலிமை தரும்
வலிய சக்தி
நட்பு ..
துன்பம் தாங்கி,
துயர் விலக்கி,
வாழ்விலும்
தாழ்விலும்
பிரியாத
பாதுகாப்பு .
நட்பு..
அகவை, அறிவு,
ஆற்றல்,செல்வம்,
பதவி, பலம்,
எல்லாம் கடந்து
உறவாய் நிற்கும்
உயரிய நிலை
நட்பு..
ஆணோடு ஆணா,
பெண்ணோடு பெண்ணா,
இதையும் கடந்து
ஆணும், பெண்ணுமா
நேற்றும், இன்றும்,
ஏன் நாளையும்
கூட இது
விடையிலா
வினாவே
நட்பு..
ஔவையோடு அதியமான்
கொண்ட அன்பு
தமிழ் வாழ
நெல்லிக்கனி உவந்த
பாலினம் சாராத
காலத்தால் அழியாத
தூய நிலை.
நட்பு..
"ஈருடல் ஓருயிர்"
என்னும்
மனம் ஒன்றுபடுதல்
நட்பு..
நீ வேறு,
நான் வேறு என
பிரித்தறியப்படாது
"இருவரும் ஒன்றே"
என்னும்
உணர்வுகளின்
சங்கமத்தில் வாழும்
தனி உலகம்.
நட்பு..
அறிவும்,
அனுபவமும்
நிறைந்த
நல்லோர்பால்
நாளும் வளரும்
"வளர் பிறை" .
நட்பு..
அறிவற்ற ,
அனுபவமற்ற
கீழானவர் பால்
தோன்றின்
"தேய் பிறை" என
தேய்ந்து விடும்.
நட்பு ..
கூடிக் கலந்து,
சிரித்து
மகிழ்வதன்று.
வரம்பு கடந்தால்,
வரையறை மீறினால்,
நெறி கடந்து
தவறு இழைத்தால்,
முன் நின்று ,
இடித்துக் கூறி
நல்வழிப்படுத்துவது
நட்பு..
தீயவை விலக்கி
மனமதைச்
செம்மைபடுத்தி
நேர்வழி செலுத்தி
துன்பமதை உடனிருந்து,
தோள் கொடுத்துத்
தாங்கி,
பகிர்ந்து,
துயர் துடைத்து
"உனக்கென நான்"
என
உணர்த்துவது.
நட்பு..
தோழன்/ தோழி யின்
துயர் துடைப்பதில்
"வினாடி" யும்
விரயமாக்காது
விரைந்தோடித்
தாங்கும் காப்பு.
நட்பு..
கிட்டுவது
"பெறுதற்கரியதோர் பேறு"
நட்பு..
கிட்டியவர்கள்
"பெரும்பேறு பெற்றோர்"
நட்பு..
கடித்தாலும்,
ஒடித்தாலும்,
நசுக்கினாலும்,
பிழிந்தாலும்
கரும்பு போல்
இனிப்பானது
கண்டவுடன்
கண்மலர்தல்
நட்பன்று.
முகமலர்தல்
நட்பன்று.
நட்பு.
அன்பினால்
"அகம்" மலரும்
நிலை
இரு உயிரும்
ஒன்றை ஒன்று
உணரும் நிலை
ஒத்த மனம்
அதில்
ஊற்றெடுக்கும்
உன்னத
உணர்வுகள்
கோடி தேடிக்
குவிப்பதிலும்
உற்ற நண்பன்
ஒருவனைத்
தேடிக் கொள்வது
கோடி நலம்
நட்பிற்குத்
தொலைபேசி
உரையாடல்
கட்சேவை
குறுஞ்செய்தி
பரிமாற்றம்
நேரடி சந்திப்பு
மிதமிஞ்சிய
பழக்கம்,
நெருக்கம்
தேவையன்று
நட்பு..
தாயாக,
மகளாக,
தமக்கையாக,
தாரமாக,
தோழியாக
பல நிலைகளில்
பரிணமிக்கும்
உன்னத நிலை
நட்பு..
தந்தையாக,
மகனாக,
சகோதரனாக
கணவனாக,
தோழனாக
பல நிலைகளில்
துணை நிற்கும்
தூய நிலை
"இவர் எனக்கு இத்தன்மையவர்"..
" நான் அவருக்கு இன்னம்"..
புனைந்துரைக்கும்
நட்பில்
இரு உள்ளங்கள் அல்ல
இரு உருவகங்கள்
நட்பு கொள்ளுகின்றன.
நல் நட்பு
சிறப்பிழக்கும்
தருணம்
"இது"
உள்ளூரக் கனிந்து,
உயிருறவாய்
நெருங்கி உள்ளோர்க்கு
"முகமனுரை"
தேவையன்று
முகமனுரை
பெருகப் பெருக
அந்தரங்க நட்பு
அகத்தை விட்டு
அகன்று விடும்.
பாசம், நேசம்,
வீடு, உறவு
நூறு சொந்தம்
வந்த பின்னும்
மனம் தேடுகின்ற
அமைதி
நட்பு!
இந்தப்
பண்பான,
அன்பான,
பழகிய,
அழகிய,
இனிய ,
பழைமையான
நட்பைத்
தோழமையோடு
உரிமையோடு
உணர்ந்து,போற்றி
வாழ்தல்
என்றும் வாழ்வில்
இனிமையே!
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல
வினைக்கரிய யாவுள காப்பு - 781
நவில் தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு - 783
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பாம் கிழமை தரும் - 785
முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகம் நக நட்பது நட்பு - 786
இனையர் இவர்எமக்கு இன்னம் யான் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு - 790
  • கருத்துக்கள உறவுகள்
மங்கையராய் பிறப்பதற்கே
நல்ல மாதவம் செய்திட
வேண்டுமம்மா..
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
பெண்ணே நீ..
அன்பில் அன்னை..
அழகில் தேவதை..
அறிவில் அமைச்சு..
பெண்மையின் மென்மை..
மென்மையில் மலர்..
மனிதம் காக்கும் புனிதம்..
பெண்ணே நீ..
இதயம் களவாடும்
இன்பக்காதலி..
இல்லம் காக்கும்
இனிய மனைவி..
தோள் தாங்கும்
தோழி..
உயிர் சுமக்கும்
தாய்மை...
உயிருக்கு உருவம்
தரும் பெண்மை..
ஆணின் ஆண்மைக்கு
வெற்றி ..
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
திருக்குறள் போற்றும்
பெண்ணே..
இனியவளே..
அன்பிற்குரியவளே..
தெய்வ மகளே...
கரையற்ற கல்வி..
கருணை உள்ளம்..
நிறைவான அறிவு..
பெற்றவளே...
அன்பான கண்கள்.
கனிவான பார்வை..
இனிக்கும் சொற்கள்.
கொண்டவளே..
எல்லாம் நிரம்பிய
தாயே...
சக்தியே...
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
பாரதி கண்ட
புதுமைப் பெண்ணே..
பெண்ணியத்திற்கு
குரலோசை எழுப்பி
புதியதோர் சமுதாயம்
படைத்திட
புயலென புறப்படு....
பெரியாரின் கனவு
நிறைவேற
பெண் அடிமைத்தனம்
ஒழித்து
பெண் இனம் மேம்பட
தீபங்கள் ஏற்றி..
சாதிக்கப் புறப்படு..
தரித்திரங்கள் துடைத்துச்
சரித்திரங்கள் படைக்கப்
புறப்படு பெண்ணே..
சிறகுகள் விரித்து
எட்டுத் திசையெங்கும்
புறப்படு...
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
உனக்கு நிகரேது பெண்ணே..
வானம் தொட்டு விடும் தூரம்..
வானம் உன் வசமாகும்
புறப்படு..
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
பெண்ணிற் பெருந்தக்க யாவுள ..
பெண்ணே பெருமை உடைத்து ..
பெண்ணிற் பெருந்தக்க தில் ..
பெண்ணினால் பெண்மை உடைத்து .. ..
பெண் நிறைந்த நீர்மை பெரிது ..
(சுபா சுப்ரமணியம்)

Edited by அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8h  · 
 
The way home
ஒரு அழகான கிராமத்து படம். சில விசயங்களை நாம் வாழ்நாள்ல மிஸ் பண்ணிட கூடாதுனு நினைப்போம் இல்லை. அப்படியான தருணங்களில் ஒன்றாக இந்த திரைப்படத்தை பார்க்க செலவு செய்யும் நேரம் இருக்கும். நாம காணக்கூடிய அன்றாட வாழ்க்கை முறைகளில் தாத்தா, பாட்டி பேரனுக்கிடையிலான அனுபவங்கள் தொலைந்து போன வாழ்க்கை முறைகளில் பழக்கப்பட்டு கொண்டிருக்கிறோமில்லயா அப்படியான வாழ் முறையை காணக்கிடைக்காதா என்று ஏங்கிக் கிடப்பவருக்கான படம் இது.
காது மந்தமா கேட்காத, சரியா பேச்சுவராத கிரமாத்து பாட்டி அவரை கொஞ்சமும் பிடிக்காத நகரத்து பழக்கவழக்கங்களுக்குட்பட்ட பேரன். இவர்களுக்கு இடையிலான கதைதான் The way home. இந்த கதையில் திரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிக்கக்கூடிய மாதிரி சினிமா தனமே இல்லாத, இதோ நாம கண்முன் காணும் ஒன்றை போல அனுபவத்தை தரும் கிராமத்து பசளையோடிய காட்சிப்படுத்தல். மொழியே இல்லாமல் புரிந்து கொள்ளக்கூடிய திரைப்படம். கட்டாயம் பாருங்கனு சொல்லல பார்த்தா சந்தோஷமா இருப்பிங்கனு சொல்லுறன்.
May be an image of 2 people, people standing, outdoors and text

பி.கு
ஆங்கிலத்திலும் மொழி பெயர்ப்பு வந்துள்ளதாக அறியதக் கூடியதாக இருக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தைப் பார்க்கவே புரியுது நல்ல படமாகத்தான் இருக்கும்.......பகிர்வுக்கு நன்றி சகோதரி.....!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
CANADA
 

Record $128M in Lotto Max prizes up for grabs Tuesday

 

யாராவது ஸ்கார்பிறோ விட்டு தள்ளி இருப்பவர்கள் எடுத்து பாருங்கள்..லொற்றோ மேக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
ஜீவன் முக்தி!!
-------------------------
பலரையும் எதோ பிரம்மிப்பிலும், பயத்திலும், தேடலிலும் ஆழ்த்தும் ஒரு சொல்."ஜீவன் முக்தி".
ஜீவன் முக்தி என்றால் என்னவென்றே தெரியாமல் திரிபவர் பலர். ஜீவன் முக்தி என்றால், ஜீவித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது உயிருடன் இருக்கும்போதே முக்தி அடைவது என்பது தான் பொருள்.
என்னது உயிருடன் இருக்கும்போதே முக்தியா?
அது எப்படி?
முக்தி என்றால் செத்தபிறகு வைணவரானால் வைகுண்டதிற்கும், சைவர்கலானால் கயிலாயதிர்க்கும் சென்றால்தானே முக்தி. அதெப்படி வாழும்போதே முக்தி? என்கிறீகளா!!
வைகுண்டம், கயிலாயம் என்று இருந்தால்தானே ஜி செத்தபிறகு அங்கே போவதற்கு!!
முதலில் முக்தி என்றால் என்னவென்று தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்தி என்பது ஒரு வடமொழிச் சொல்.
அதற்கு தமிழில் "விடுதலை" என்று பொருள்.
எதில் இருந்து விடுதலை?
நம் மனதில் இருந்துதான்!!!
இப்பிரபஞ்சத்தில் நாம் நம் மனதைத் தவிர வேறு எதற்குமே அடிமையாக இருக்கவில்லை.
நம்மை, நாம் நம் இன்வாழ்கையை சுகித்து வாழமுடியாத வண்ணம் செய்வது நம் மனம்தான்.
இறைவன் புரியும் அணைத்து செயல்களிலும் மூக்கை நுழைத்து இது சரி தவறு என்று அதிகப்பிரசங்கித்தனம் செய்வது நம் மனம் தான்.
மனதின் பிடியில் இருந்து விடுபடுவதே உண்மையில் விடுதலையாகும்,
மனோ நாசமே முக்தியாகும்,
அவ்வாறு உயிருடன் இருக்கும்போதே நாம் நம் மனதை ஜெயித்து, கற்பனைகளை கடந்து, சிந்தையை நினைப்பர வைத்தோமேயானால், அதேவே ஜீவன் முக்தி.
"முக்தி என்பது ஒருவன் வாழ்நாளில் அடையப்பட வேண்டுமே தவிர, செத்தபிறகு எங்கோ சென்று அடைவது அல்ல" என்று மகரிஷி வசிஷ்டர் தன் யோக வாசிஷ்டம் என்னும் நூலில் தீர்கமாக மொழிகிறார்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உலக காற்று தினம்.
May be an image of text that says 'ஜூன்-15 இன்று உலக @likenshare காறறு GLOBAL WIND DAY 15 JUNE தினம் Kushi Edits நீரும் உணவும் இல்லையென்றாலும் சில நாட்கள் உயிர் வாழ முடிகின்ற நம்மால், காற்று இல்லாமல் சில நொடிகள் கூட உயிர் வாழ முடி வதில்லை..! நம் மூச்சு காற்று உள்ளவரையே @likenshare நம் வாழ்க்கை...! Kushi Edits இயற்கை வளத்தை காப்போம். மரம் நட்டு வளர்த்து பாதுகாப்போம். இயற்கைக்கு நாம் செய்யும் கைமாறு!'
 
 
 

 

 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அன்புத்தம்பி said:
ஜீவன் முக்தி!!
-------------------------
பலரையும் எதோ பிரம்மிப்பிலும், பயத்திலும், தேடலிலும் ஆழ்த்தும் ஒரு சொல்."ஜீவன் முக்தி".
ஜீவன் முக்தி என்றால் என்னவென்றே தெரியாமல் திரிபவர் பலர். ஜீவன் முக்தி என்றால், ஜீவித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது உயிருடன் இருக்கும்போதே முக்தி அடைவது என்பது தான் பொருள்.
என்னது உயிருடன் இருக்கும்போதே முக்தியா?
அது எப்படி?
முக்தி என்றால் செத்தபிறகு வைணவரானால் வைகுண்டதிற்கும், சைவர்கலானால் கயிலாயதிர்க்கும் சென்றால்தானே முக்தி. அதெப்படி வாழும்போதே முக்தி? என்கிறீகளா!!
வைகுண்டம், கயிலாயம் என்று இருந்தால்தானே ஜி செத்தபிறகு அங்கே போவதற்கு!!
முதலில் முக்தி என்றால் என்னவென்று தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்தி என்பது ஒரு வடமொழிச் சொல்.
அதற்கு தமிழில் "விடுதலை" என்று பொருள்.
எதில் இருந்து விடுதலை?
நம் மனதில் இருந்துதான்!!!
இப்பிரபஞ்சத்தில் நாம் நம் மனதைத் தவிர வேறு எதற்குமே அடிமையாக இருக்கவில்லை.
நம்மை, நாம் நம் இன்வாழ்கையை சுகித்து வாழமுடியாத வண்ணம் செய்வது நம் மனம்தான்.
இறைவன் புரியும் அணைத்து செயல்களிலும் மூக்கை நுழைத்து இது சரி தவறு என்று அதிகப்பிரசங்கித்தனம் செய்வது நம் மனம் தான்.
மனதின் பிடியில் இருந்து விடுபடுவதே உண்மையில் விடுதலையாகும்,
மனோ நாசமே முக்தியாகும்,
அவ்வாறு உயிருடன் இருக்கும்போதே நாம் நம் மனதை ஜெயித்து, கற்பனைகளை கடந்து, சிந்தையை நினைப்பர வைத்தோமேயானால், அதேவே ஜீவன் முக்தி.
"முக்தி என்பது ஒருவன் வாழ்நாளில் அடையப்பட வேண்டுமே தவிர, செத்தபிறகு எங்கோ சென்று அடைவது அல்ல" என்று மகரிஷி வசிஷ்டர் தன் யோக வாசிஷ்டம் என்னும் நூலில் தீர்கமாக மொழிகிறார்.

அப்படி ஒரு ஜீவன்முக்தராக "ஜனக மகாராஜா" சீதாப்பிராட்டியாரின் தந்தை வாழ்ந்திருந்தார்......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

1.”மலைப் பிஞ்சி” என்பது?
குறுமணல்

2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?
நாஞ்சில் நாடு

3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?
ஒடிஷா

4.”தமிழ் மொழி” என்பது?
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

5.”இரவும் பகலும்” என்பது?
எண்ணும்மை

6.”கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை

7. ”நல்ல மாணவன்” என்பது?
குறிப்புப் பெயரெச்சம்

8. “கடி விடுது”-இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள்?
விரைவு

9. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு?
2008, மே 19

10. உயிர் அளபெடையின் மாத்திரை?
3 மாத்திரை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சைவ சமய புராணங்களில் இரண்டு தவங்கள் முக்கியமானவை.
 
1. பகீரத தவம் - கங்கை நதியை பூமிக்கு கொண்டு வர சிவபெருமானை நோக்கி தவமிருப்பது.
2. அர்ஜூன தவம் - பாசுபதம் எனும் ஆயுதம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருப்பது.
பகீரத தவம் - பகீரதனின் முன்னோரான சகரரின் மனைவியான சுமதிக்கு 60 ஆயிரம் மகன்கள், மற்றொரு மனைவியான கேசனிக்கு ஒரு மகன். அசுவமேத யாகத்தை மன்னர் சகரர் செய்கிறார். அதன்படி குதிரையை விடுவிக்கின்றனர். குதிரையானது கபிலர் எனும் முனிவரின் குகை வாயிலில் இருக்கிறது. குதிரையை காணாது தேடிவந்த 60 ஆயிரம் பேரும் கபில முனிவரிடம் சண்டைக்கு செல்கின்றனர். கபிலரால் சபிக்கப்பட்டு சாம்பலானார்கள்.
கேசியின் மகனுக்கு பிறக்கும் பகீரதன் அரசரானதும் தன்னுடைய முன்னோர்கள் 60 ஆயிரம் பேர் முக்தி அடையாமல் இருக்கிறார்கள் என அறிந்து வருந்துகிறான். அவர்களை முக்தி பெற வைக்க தேவலோகத்தில் இருக்கும் கங்கை நதியை பூமிக்கு வர வைக்க சிவபெருமானை நோக்கி தவமிருக்கிறான். பெருந்தவம் கங்கையை பூமிக்கு வர வைக்கிறது. 60 ஆயிரம் முன்னோர்களும் முக்தி அடைகிறார்கள்.
 
அர்ஜூன தவம் - பாண்டவர்கள் சூதாடி தோற்ற பிறகு வனவாசம் மேற்கொள்கின்றனர். அந்தக்காலத்தில் 'பாசுபதம்' எனும் ஆயுதத்தை பெற சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் அர்ஜூனன். மூகாசுரன் என்ற அசுரன் அர்ஜூனன் தவம் கலைக்க பன்றியாக உருவெடுத்து மோதி தொல்லை செய்தான். பன்றியை கொல்ல அர்ஜூனன் அம்பு எய்த.. மற்றொரு அம்பும் அந்த பன்றியை துளைக்கிறது. அந்த அம்புக்கு உரிமையாளர் வேடனாக வந்த சிவபெருமான்.
பன்றி யாருக்கு சொந்தம் என வேடனுக்கும், அர்ஜூனனுக்கும் ஒரு சண்டை நடந்து இறுதியில் சிவபெருமான் அர்ஜூனனுக்கு பாசுபத அஸ்திரத்தை தந்தார்.
சிவாலயங்களில் ஒரு தவக்காட்சி சிற்பமாக இருக்கிறது. ஒரு ஆண் ஒற்றைக்காலை மட்டும் தரையில் ஊன்றி கடுமையாக தவமிருக்கிறார். அந்த தவம் செய்யும் மனிதர் அர்ஜூனனா? பகீரதனா என நமக்கு குழப்பம் நேரிடும். அதை எளிதாக வேறுபடுத்தி காட்டிட சிற்பி ஒரு உத்தியை கடைபிடிக்கிறார். அது பன்றி.
தவம் செய்யும் சிற்பம் அர்ஜூனன் என்றால் அவர் பின்புறமாக பன்றி சிற்பமும் சேர்த்து வடிக்கப்படும். பகீரதன் என்றால் அவர் மட்டுமே தவமிருப்பார்.
May be an image of 1 person and text that says 'பேரூர் சிற்பம் அர்ஜுன தவம், போரூர் பகீரத தவம், மாமல்லபுரம்'
 
 
வாசித்ததிலிருந்து............
 
  • கருத்துக்கள உறவுகள்

201152451_10158635218643780_214110033055

 

எப்படியெல்லாம் சிந்திக்குறாங்க பாருங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
* வெகு காலங்களுக்கு முன் அதாவது சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு (EOCENE AGE) முன், இந்தப் பகுதியில் வெப்பத்தால் எரிமலைகள் வெடித்துச் சிதறின. இதனால் மலைகளில் பெரும் நில வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. எரிமலைச் சாம்பல், நிலச்சரிவில் வந்த மண், பாறைகள் இவைகளெல்லாம் பெரு வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இன்று கல் மரங்கள் நின்று கொண்டிருக்கும் பகுதியில் படிந்தன. நின்று கொண்டிருந்த பெரிய மரங்கள் தம் நிலை மாறாமலேயே அப்படியே புதையுண்டன. சில மரங்கள் பெருவெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டுக் கிடைநிலைக் கல்மரங்களாயின.
* மரங்கள் அழுகும் நிலை, உளுத்துப் போகும் நிலைக்கு வரும் முன்னரே, எரிமலை சாம்பல், மண் இவையெல்லாம் நீரில் கலந்து மரத்தில் இறங்கி செல்லுலோசை உருகச் செய்து திடமான படிமங்களாக இறுகின. இந்த 'கல்லாய் மாறுதல்' (PETRIFICATION) நிகழ்வில் மரங்கள், கல்மரங்களாக மாறி இன்றைக்கும் நமக்கு ஏதாவது இடங்களில் அகப்படுகின்றன.
* கிடை நிலைக் கல்மரங்கள்: சாத்தனூர், திருவக்கரை, இராஜஸ்தானில் உள்ள பொக்ரேன் பகுதி போன்ற இடங்களில் காணப்படும் கல்மரங்கள் அனைத்துமே ‘கிடை நிலையிலேயே (Horizontal type) கண்டறியப்பட்டுள்ளன. அரிசோனா கல்மரங்களும் கிடை நிலை வகையாகும்.
* அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில் எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க் (YELLOW STONE NATIONAL PARK) கில் உள்ள கல் மரங்கள் நிற்கும் கல் மரங்கள்( Vertical Type) ஆகும்.இவைகள் நிற்கும் மரங்களாகவும் கல்லாக மாறிய நிகழ்வின் எச்சங்களாகவும் உள்ளன.
* உதகை, பொட்டானிக்கல் கார்டனில் உள்ள கல்மரத்தைப் பாருங்கள். கீழே விளக்கம் தந்துள்ளனர்.இது இந்திய புவியியல் ஆராய்ச்சியமைப்பு ( G S I)நிறுவியுள்ள கல் மரச் சின்னமாகும்.திருவக்கரைப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புவிசார் தொல்லியல் சின்னமாகும். இவையே புதுவை அருங்காட்சியகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Agnisiragu Mudiarasu
194685764_1448789182139521_5189877947480
 
 
194192939_1448789248806181_9120689274634
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கொஞ்சம் இவற்றையும் ரசிக்கலாமே.....
May be an image of bird and outdoors
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஜூன் 16 – உலக கடல் ஆமை தினம்
100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக, கடல் ஆமைகள் உலக சமுத்திர பகுதிகளில் வாழ்ந்துவருகின்றன. இவை கடல் சூழலின் சமநிலையினைப் பேணுவதில் இவை பிரதான வகிபாகம் வகிக்கின்றன.
மனித செயற்பாடுகளின் காரணமாக அதாவது முட்டை, இறைச்சி, தோல், மற்றும் பிற தேவைப்பாடுகளுக்காக மனிதனால் கடல் ஆமைகள் அளவுக்கதிகமாக வேட்டையாடப்படுகின்றன. அத்துடன் அவற்றின் வாழிடங்கள் சிதைக்கப்படுவதும், எதிர்பாராதவிதமாக மீன்பிடி வலைகளினால் அவை பிடிக்கப்படுவதும், மேலும் காலநிலை மாற்றங்கள் க…
See More
See Translation
No photo description available.
 
 

Loganathan Kanapathipillai

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.