Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் உளவாளியான இலங்கைத் தமிழர் சென்னையில் கைது?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாகிஸ்தான் உளவாளியான இலங்கைத் தமிழர் சென்னையில் கைது?!

 

arrest-300x225.jpgபாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இலங்கையைச் சேர்ந்த அருள் செல்வராஜன் என்பரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) சென்னையில் புதன்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தூண்டுதலின் பேரில் இலங்கையைச் சேர்ந்த சிலர் உளவு பார்ப்பதற்காக தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதாகவும் அவர்கள் பாகிஸ்தானுக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தேசியப் புலனாய்வு அமைப்புக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தமிழக போலீஸôர் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த மே மாதம் இலங்கையில் இருந்து வந்த முகமது ஜாஹீர் உசேன் என்பவரை தமிழக க்யூ பிரிவு போலீஸôர் சென்னையில் கைது செய்தனர். அவர் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களைப் புகைப்படம் எடுத்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் சக்தி வாய்ந்த சேட்டிலைட் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் விசாரணைக்காக ஜாஹீர் உசேன் தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், உளவு பார்ப்பதற்காக மேலும் பலர் தென்னிந்தியாவில் ஊடுருவ இருப்பதாகத் தெரியவந்தது.

இந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த அருள் செல்வராஜன் என்பரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் சென்னையில் புதன்கிழமை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதற்காக தமிழகத்துக்குள் நுழைந்திருப்பது தெரியவந்தது. அவர் இலங்கை, இந்திய பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.

சென்னையில் முக்கிய இடங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் உளவு பார்த்திருப்பதும், பல முக்கிய இடங்களைப் புகைப்படம் எடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர், உளவுத் தகவல்களை இணையதளம் வழியாக ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுக்கு அனுப்பி வந்துள்ளார். அவரிடமிருந்து பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இலங்கையில் அவர் மீது பல குற்ற வழக்குகள் இருப்பதும் இலங்கை போலீஸôரால் அவர் தேடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கடந்த 2012-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரிக்கும் அருள் செல்வராஜனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

http://tamilleader.com/?p=40934

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் உளவாளியான இலங்கைத் தமிழர் சென்னையில் கைது?!

 

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இலங்கையைச் சேர்ந்த அருள் செல்வராஜன் என்பரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) சென்னையில் புதன்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

------

 

ஒரு தமிழர்... பாகிஸ்தானுக்கு, உளவு வேலை பார்த்திருப்பார் என்பது பொய்.

இந்திய உளவுத்துறை, தவறான ஆளை கைது செய்திருக்கின்றார்கள் என்றெ எண்ணுகின்றேன்.

ஒரு தமிழர்... பாகிஸ்தானுக்கு, உளவு வேலை பார்த்திருப்பார் என்பது பொய்.

இந்திய உளவுத்துறை, தவறான ஆளை கைது செய்திருக்கின்றார்கள் என்றெ எண்ணுகின்றேன்.

 

 

 

இலங்கையில் அவர் மீது பல குற்ற வழக்குகள் இருப்பதும் இலங்கை போலீஸரால் அவர் தேடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கடந்த 2012-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரிக்கும் அருள் செல்வராஜனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

 

 

 

டக்ளஸ் கூட்டம் கொலை செய்த அப்பாவிகளின் தொகை தெரியுமோ ?

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் கூட்டம் கொலை செய்த அப்பாவிகளின் தொகை தெரியுமோ ?

 

தமிழர் என்பதில், ஒட்டுக்குழுக்களும் அடங்குகின்றார்கள் என்பதை...  

நான்தான், அடிக்கடி மறந்து விடுகின்றேன். :D  :lol:

இலங்கையின் உளவுத்துறைக்கும், இலங்கை ராணுவத்தோடு இயங்கும் தமிழ் எட்டப்பர்களுக்கும் நெருக்கமான உறவு உள்ளது.
 
அதுபோல் இலங்கை உளவுத்துறைக்கும் பாக்கி உளவுத்துறைக்கும் நெருங்கிய உறவுள்ளது. 
 
பின் என்ன பாக்கிகளுக்கு வேலை செய்ய எட்டப்பர்கள் தயார்.
 
 
தமிழ் இனத்தை எல்லா வழியிலும் சீரழிக்காமல் இந்த எட்டப்பர்கள் விடமாட்டார்கள்.

Thameem%20Ansari%20546545145.jpg

 

இந்தியாவில் குண்டுத்தாக்குதல் நடத்தவதற்கு திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை இந்திய தேசியப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றுப் புதன்கிழமை கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் இலங்கை பிரஜையான அருண் செல்ராஜன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், இவரைக் கைது செய்யும் போது அவரிடம் இரண்டு கடவுச்சீட்டுக்கள் இருந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்ராஜன் தென்னிந்திய பாதுகாப்பு கட்டுமானங்களை பற்றி முக்கிய தகவல்களை சேகரித்தார் என்றும், அண்டை நாட்டின் உளவு அமைபுக்காக தரவு சேகரிக்கும் பணியில் ஈடுபடுகிறார் என்பதற்கான சான்றுகளையும் தாம் அவரிடமிருந்து கைப்பற்றியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்ராஜன் இலங்கையில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு தேடப்படும் நபர் என்பதும் தமக்கு தெரியவந்துள்ளது என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். -
 
 
 
சென்னையில் மேலும் ஒரு பாக்., உளவாளி கைது : தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை
 
Tamil_News_large_106747420140911075424.j
 
சென்னை: சென்னையில் மேலும் ஒரு பாகிஸ்தான் உளவாளியை,தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று இரவு கைது செய்தனர். அவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
 
சென்னை மண்ணடியில், மருந்து வியாபாரி போல் நடித்து, அமெரிக்க துணை துாதரம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் துாதரகத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டிய, இலங்கையை சேர்ந்த, ஜாகீர் உசேன் சமீபத்தில், போலீசில் பிடிபட்டான்.அவனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ராமாபுரத்தை சேர்ந்த சிவபாலன் உள்ளிட்ட, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், இலங்கை துாதரக அதிகாரிகள், சுபேந்தர் சித்திக் உட்பட இருவரும் சேர்க்கப்பட்டனர்.முதலில், இந்த வழக்கை, கியூ பிரிவு போலீசார்விசாரித்த நிலையில், இதில், வெளிநாடுகளை சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இந்நிலையில், ஜாகிர் உசேனின் கூட்டாளி ஒருவன் சென்னையில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய தேடுதல் வேட்டையில், நேற்று இரவு, 11:00 மணிக்கு அருண் செல்வராஜ் என்ற நபரை கைது செய்தனர். பிடிபட்ட அருண், இலங்கையை சேர்ந்தவன் என்றும், அவனிடமிருந்து, இரு போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவன் பாக்., உளவாளியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நாட்டின் பல இடங்களிலும், பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், இதில்பலருக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும், அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். இதுகுறித்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில் பணம் என்றால் கட்டப்பனும் எட்டப்பனாகிவிடுவான்

இவர்கள் "தமிழ்தேசியவாதிகளாகவும்" இருக்க வாய்ப்புள்ளது...ஏனென்றால் இந்தியா தான் அவர்களின் முதல் எதிரி......

இந்தியாவை உடைக்க பாகிஸ்தானிகளுடன் சேராமல் வேறு யாருடன் சேரமுடியும்?

இங்கே யாழிலேயே இந்தியா உடைய வேண்டும் என்று எத்தனை எத்தனை பதிவுகளில் பதிந்தார்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் "தமிழ்தேசியவாதிகளாகவும்" இருக்க வாய்ப்புள்ளது...ஏனென்றால் இந்தியா தான் அவர்களின் முதல் எதிரி......

இந்தியாவை உடைக்க பாகிஸ்தானிகளுடன் சேராமல் வேறு யாருடன் சேரமுடியும்?

இங்கே யாழிலேயே இந்தியா உடைய வேண்டும் என்று எத்தனை எத்தனை பதிவுகளில் பதிந்தார்கள்.....

 

ஏன் அப்போ தமிழ் தேசியவாதிகள் மாவோவிஸ்டுகளுடன் சேரவில்லை என காசுக்காக கூவுவோர் சங்கத்திடம் விசாரித்து சொல்வீர்களா??

ஏன் அப்போ தமிழ் தேசியவாதிகள் மாவோவிஸ்டுகளுடன் சேரவில்லை என காசுக்காக கூவுவோர் சங்கத்திடம் விசாரித்து சொல்வீர்களா??

 

ஏன் சேரவில்லை...இந்தியா முற்றுமுழுதாக ஆப்பு வைத்ததே இப்படி இந்திய"தேசியத்துக்கு" எதிரானவர்களுடன் "கூட்டு" வைத்த படியால் தானே...... இல்லை என்றால் ஏன் இந்தியா அழிக்கவேண்டும்? :)

Edited by naanthaan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அழித்தது புலிகள் ராஜீவை அழித்ததற்கான பழிவாங்கல்.,இந்தியாவின் சொல் கேளாமை போன்ற காரணங்கள் தான் பிரதானமானவை. சீக்கிய தீவிரதிகள்..வீரப்பன்..மாவோயிஸ்டுகள் போன்ற உங்களின் காரணங்கள் எங்கேயோ தட்ட பல்லு கொட்டிய கதையாக உள்ளது. :icon_mrgreen:

ராஜீவை தான் புலிகள் போடவேயில்லையே... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவை தான் புலிகள் போடவேயில்லையே... :)

 

 

நீங்கள் இந்திய அரசுக்கு முன் சாட்சியமளிக்க தயாரா?? :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சேரவில்லை...இந்தியா முற்றுமுழுதாக ஆப்பு வைத்ததே இப்படி இந்திய"தேசியத்துக்கு" எதிரானவர்களுடன் "கூட்டு" வைத்த படியால் தானே.... சீக்கிய தீவிரதிகள்..வீரப்பன்..மாவோயிஸ்டுகள்... இல்லை என்றால் ஏன் இந்தியா அழிக்கவேண்டும்? :)

 

 

மீண்டும் சொல்கின்றேன்

எம்மில் சிலரை வெறுப்பேற்ற

இந்தளவுக்கெல்லாம் கீழிறங்கி நீங்கள் எழுதவேண்டாமே... :(  :(  :(

 

இந்தியாவின் நட்பை கடைசிவரை  கோரியவர்கள் புலிகள்..

அது ராஜீவுக்கு முதலும்

பின்னரும்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.