Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச மக்கள் விருதை வெல்வாரா மெத்தியூஸ் ?

Featured Replies

சர்வதேச மக்கள் விருதை வெல்வாரா மெத்தியூஸ் ?

இவ் ஆண்டுக்கான எல்.ஜி. சர்வதேச மக்கள் விருதுப் பட்டியலில் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

angelo_2_zps65039eb5.jpg
இந்த ஆண்டுக்கான எல்.ஜி சர்வதேச மக்கள் விருதுப் பட்டியலில் 5 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், இங்கிலாந்து மகளிர் அணியின் அணித்தலைவர் சார்லோட் எட்வர்ட்ஸ், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜோண்சன், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இவர்களில் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும். இதற்கான வாக்களிப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. இது இம்மாதம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

வெற்றி பெற்ற வீரரின் பெயரானது டுபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமையிடத்தில் ஐ.சி.சி. தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் மற்றும் ஐ.சி.சி. கிரிக்கெட் குழு தலைவர் அனில் கும்ளே ஆகியோர் முன்னிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி அறிவிக்கப்படும்.

இந்த விருதானது அணியில் புதுமை, அழுத்தத்தின் போது செயல்படும் தன்மை, முடிவெடுக்கும் திறமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது.

ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் (2010), சங்கக்காரா (2011, 2012) மற்றும் டோனி (2013) ஆகியோர் சர்வதேச மக்கள் விருதை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/10/09/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

அழுத்தத்தின்போது சச்சின் செயற்படவே மாட்டாரே.. :icon_idea: எப்பிடி குடுத்தவை?! :o:D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மெத்தியூஸ் ஒரு இனப்படுகொலையாளி. சிறீலங்கா இராணுவத்தில் இருந்து.. தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட ஒருவரை அணியில் கொண்டவர்..! :icon_idea::rolleyes:

 

அவர் இவர் தான்.. அஜெந்த மெண்டிஸ்.

163096_485668713858_153429993858_5916268

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெய்ன் அல்லது சார்லட் இருவரில் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெய்ன் அல்லது சார்லட் இருவரில் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.

 

அப்படியே ஆக வேண்டும்.

 

ஒரு இனக்கொலை இராணுவத்தை ஆதரிக்கும் சிறீலங்கா சிங்கள மேலாதிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்தவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது.. அந்த இனக்கொலை நாட்டுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் போன்றது..!! :icon_idea:

  • தொடங்கியவர்

ஐ.சி.சி. மக்கள் விருப்பு விருதுக்கான பட்டியலில் ஏஞ்சலோ மெத்யூஸ் உட்பட ஐவர்: 30 ஆம் திகதிவரை ரசிகர்கள் வாக்களிக்கலாம்
2014-10-10 13:34:37

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வருடாந்தம் நடத்தப்படும் சர்வசேத கிரிக்கெட் பேரவை விருது விழாவில் வழங்கப்படும் எல். ஜீ. மக்கள் விருப்பு விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள குறும்பட்டியலில் இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸும் இடம்பெறுகின்றார்.


சர்வதேச கிரிக்கெட் பேரவை விருது விழா 2004முதல் நடத்தப்பட்டு வருகின்றபோதிலும் மக்கள் விருப்பு விருது ஐந்தாவது தடவையாகவே இம் முறை வழங்கப்படவுள்ளது.

இவ் விருதுக்காக குறும்பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐவரில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் ஒரே ஒரு கிரிக்கெட் வீராங்கனையும் இடம்பிடித்துள்ளனர்.


இவ் வருடம் மாத்திரம் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஏஞ்சலோ மெத்யூஸ் 1201 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அவரது சராசரி 92.38 ஆகும். இதில் 4 சதங்களும் 9 அரைச் சதங்களும் அடங்குகின்றன.
20 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 723 ஓட்டங்களைப் பெற்றுள்ள அவரது சராசரி 60.25 ஆகும்.

எல். ஜீ. மக்கள் விருப்பு விருதுக்கான வாக்களிப்பு அக்டோபர் மாதம் 30ஆம் திகதி வரை நடைபெறும்.


கிரிக்கெட் இரசிகர்கள் தங்களது வாக்குகளை http://lgiccawards.com அல்லது Twitter #lgiccawards ஊடாக செலுத்த முடியும்.

ஏஞ்சலோ மெத்யூஸுடன் மக்கள் விருப்பு விருதுக்கு இந்திய  வேகப்பந்துவீச்சாளர் புவணேஷ்வர் குமார், தென் ஆபிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிச்செல் ஜோன்சன், இங்கிலாந்து மகளிர் கிரிக்கட் அணித் தலைவி சார்ளட் எட்வேர்ட்ஸ் ஆகியோரும் குறும்பட்டியலில் இடம்பெறுகின்றனர்.


இவ் வருட சர்வதேச கிரிக்கெட் பேரவை விருதுகளுக்கான வெற்றியாளர்கள், துபாயிலுள்ள பேரவையின் தலைமையத்தில் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறும் செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவ் றிச்சர்ட்சன், கிரிக்கெட்  குழுத் தலைவர் அனில் கும்ப்ளே ஆகியோர் செய்தியாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொள்வர்.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7237#sthash.WwHIlCvJ.dpuf

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

இவ் ஆண்டுக்கான எல்.ஜி. சர்வதேச மக்கள் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வென்றுள்ளார். :)

62886_zps830908bf.jpg

http://www.icc-cricket.com/lg-icc-awards/news/2014/media-releases/82827/bhuvneshwar-kumar-wins-lg-peoples-choice-award

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.சி.சி.யின் மக்கள் விரும்பும் வீரராக புவனேஷ்வர்குமார்

 
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இவ்வாண்டுக்கான மக்கள் விரும்பும் வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Bhuvaneshwar-kumar.jpg

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2010 ஆம் ஆண்டு 'மக்கள் விரும்பும் வீரர்" என்ற புதிய விருது பிரிவை அறிமுகப்படுத்தியது. 

இதில் விஷேட அம்சம் என்னவெனில், மக்கள் தங்களை கவர்ந்த வீரரை இணையத்தளம், டுவிட்டர் மூலம் வாக்களித்து தெரிவு செய்ய வேண்டும். 

இந்த ஆண்டு மக்கள் விரும்பும் வீரருக்கான விருதின் இறுதிப்பட்டியலில் இலங்கை அணித் தலைவர் மெத்தியூஸ், இந்தியாவின் புவனேஷ்வர்குமார், அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஜோன்சன், தென்னாபிரிக்காவின் ஸ்டெயின், இங்கிலாந்து பெண்கள் அணியின் தலைவி சார்லோட் எட்வர்ட்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 

இவர்களில் ஒருவரை தெரிவுசெய்ய மூன்று வார காலம் ரசிகர்கள் வாக்களித்தனர். இதன் முடிவில் மக்கள் விரும்பும் வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் மக்கள் விரும்பும் வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் (2010), சங்கக்கர (2011, 2012), டோனி (2013) ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த விருதை புவனேஷ்வர்குமார் பெறுகிறார்.

தனக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள 24 வயதான புவனேஷ்வர்குமார், அணியின் சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/articles/2014/11/06/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.