Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமக்கல் கோழிப் பண்ணைகளில் கொத்தடிமைகளாக வெளி மாநிலத்தவர்கள்

Featured Replies

141115172216_bonded_labours_india_tamiln
உள்ளூர் தொழிலாளர்கள் வரத் தயங்குவதால் வடமாநிலத் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கின்றனர்'
 
தமிழகம் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைகளாக இருந்துவந்த 28 பேர் மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
 
மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் அளிப்பது என்ற உறுதி மொழி அளிக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட இவர்களுக்கு, பேசியபடி சம்பளம் வழங்கப்படவில்லை என்பதோடு, இவர்கள் வெளியில் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்தத் தொழிலாளர்கள் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் இந்தத் தொழிலாளர்களைப் பார்க்க வந்த அவர்களது உறவினர்களுக்கு இந்தத் தகவல் தெரிந்ததும் அவர்கள் நாராயண்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
அதனையடுத்து, நேற்று மாலை சில கோழிப்பண்ணைகளில் சோதனை நடத்தி, இந்தத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இந்த 28 பேரில் 20 பேர் பெண்கள். 8 பேர் ஆண்கள் ஆவர்.
 
சம்பந்தப்பட்ட பண்ணைகளின் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வடமாநிலத் தொழிலாளர்கள்
தமிழகத்தில் கோழி மற்றும் முட்டை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாமக்கல், ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் பெரும்பாலான பண்ணைகளில் இம்மாதிரி வடமாநிலத் தொழிலாளர்களே பெருமளவில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
 
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வேலைகளுக்கு முன்வராத காரணத்தாலேயே வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்தப் பண்ணைகளில் பணியமர்த்தப்படுவதாக தமிழ்நாடு முட்டைகோழி பண்ணையாளர் சம்மேளனத்தின் உதவி தலைவரான வாங்லி சுப்பிரமணியம் கூறுகின்றார்.
தற்போது மீட்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள், கோழிப் பண்ணைகளில் மிக நன்றாகவே நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
வடமாநிலங்களுக்குச் சென்று தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் பேசி அழைத்துவரும் இடைத்தரகர்கள், தொழிலாளர்கள் தேவைப்படும் கோழிப் பண்ணைகளில் இவர்களைப் பணியமர்த்துகின்றனர்.
 
தரகர்களுக்கு லாபம்
 
இதற்கென ஒவ்வொரு தொழிலாளரின் மாதச் சம்பளத்திலிருந்தும் தங்களுக்கென ஒரு தொகையை அவர்கள் பெறுகின்றனர்.
இம்மாதிரி பண்ணைகளில் வடமாநிலத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கு தமிழகத்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமல்ல என்று சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் துணைப் பேராசிரியர் விஜயபாஸ்கர் கூறுகின்றார்.
 
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இங்குள்ள சம்பளம், வேலைச்சூழல் போன்றவை ஒத்துவருவதில்லை என்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்கள் சிறந்த பணிச்சூழலை எதிர்பார்ப்பதால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் அங்கு பணியமர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளிமாநிலத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் தமிழகத்தில் இருந்தாலும் இந்தத் தொழிலாளர்கள் முறைப்படிப் பதிவுசெய்யப்படுவதில்லை என்பதால், அவர்கள் அந்தப் பாதுகாப்பைப் பெறுவதில்லை என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.
 
தமிழகத்தில் மட்டும் சுமார் 1600 கோழிப்பண்ணைகள் இயங்கிவருகின்றன. இங்கு சுமார் நான்கு கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை நாளுக்குத்தான் தமிழன் கொத்தடிமை என படிப்பது நாமக்கல்லு தமிழன் வித்தியாசமாணவர்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை நாளுக்குத்தான் தமிழன் கொத்தடிமை என படிப்பது நாமக்கல்லு தமிழன் வித்தியாசமாணவர்கள்தான்.

இதைத்தான் நானும் நினைச்சன்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த்திரைப்படங்களிலையும் நாங்கள் கொத்தடிமையில்லை....எல்லாம் வெளி இறக்குமதியள் தான்......ஆக அலச வெளிக்கிட்டால் தமிழ்நாட்டுஅரசியலிலையும் நாங்கள் கொத்தடிமையில்லை..... :D

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்திரைப்படங்களிலையும் நாங்கள் கொத்தடிமையில்லை....எல்லாம் வெளி இறக்குமதியள் தான்......ஆக அலச வெளிக்கிட்டால் தமிழ்நாட்டுஅரசியலிலையும் நாங்கள் கொத்தடிமையில்லை..... :D

 

அருமையான மதிப்பீடு. மொத்தத்தில் ஒட்டு மொத்தத் தமிழினமே (தமிழகம் :D அடங்கலாகக்) கொத்தடிமை இல்லை!  ^_^ 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கருத்துக்களை வாசிச்சாலே தெரியுது தமிழனின் கேவலம் கெட்ட புத்தி.தான் என்ன வேண்டுமானாலும் மற்றவனுக்கு செய்யலாம்.ஆனால் மற்றவன் தனக்கு ஒன்றும் செய்யக் கூடாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.