Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரான்சுக்கான சிறிலங்கா தூதரகம் கடும் அதிர்ச்சி : நகரசபை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு கொடுத்த அங்கீகாரம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரான்சில் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையின் துணை அமர்வு, சிறிலங்கா அரசுக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவின் நியூ யோர்க்கில் மைய அமர்வினை மேற்கொண்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மையத்தோடு இணைந்ததாக துணை அமர்வினை சமாந்திரதாக பிரான்சில் மேற்கொண்டிருந்தது.
 
பாரிசின் புறநகர் பகுதியான LE BLANC MESNIL  நகரசபையில் துணை அமர்வு இடம்பெற்றிருந்ததோடு ,நகரபிதா மற்றும் நகரசபை உறுப்பினர்கள் என அரச உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
 
குறிப்பாக பிரான்சின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மரி ஜோர்ச் புவே அவர்களும் நேரடியாக கலந்து கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தனது தோழமையினைத் வெளிப்படுத்தியிருந்தார்.
 
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நகரசபை பீடத்தின் அங்கீகாரம், சிறிலங்கா அரசுக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரான்சுக்கான சிறிலங்காத் தூதரகம் தனது ஆட்சேபத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
 
நகரசபையில் செல்வி ஸ்ரெபனி சுரேந்திரன் மற்றும் திருமதி கோபிநாத் ஆகிய ஈழத்தினை பூர்வீகமாக கொண்ட இருபெண்கள், தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர்களாக உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

20141205_144539-1.jpg20141205_144539.jpg20141205_144851.jpg20141205_151949.jpg20141207_171637.jpg20141207_172009.jpg20141207_173407.jpg20141207_191535.jpg

http://tamil24news.com/news/?p=47811

அது சரி அதிர்ச்சியில் இருந்து மீண்டார்களா இல்லையா என்பதையும் பிறிதொரு திரியில் அறியத்தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சென்றிருந்தேன்

செல்வி ஸ்ரெபனி சுரேந்திரன்

நான் வருவதை தூர இருந்தே பார்த்து  வாசல்வரை ஓடிவந்து கதவைத்திறந்துவிட்டு

மண்டபவம் வரை அழைத்துச்சென்று அமரச்செய்தார்  (எனக்கு இவரை இதற்கு முதல் தெரியாது)

செல்வி ஸ்ரெபனி சுரேந்திரன் மற்றும் நகரசபை பிரெஞ்சு உறுப்பினர்களின் பேச்சை கேட்டேன்

 

மிகவும் ஆர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் ஆதரவாகவும் இருக்கிறார்கள்

சிறீலங்கா தோல்வி  காணும்...

இவர்களது பேச்சு முடிய

நாடுகடந்த அரசின் பிரதமர்  

இவர்கள் ஒவ்வொருவருடைய  பெயர்களையும் குறிப்பிட்டு நன்றி சொன்னார்

மிகவும் பாராட்டப்படவேண்டிய விடயம் மட்டுமல்ல

தொடரவேண்டும்..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

செல்வி ஸ்ரெபனி சுரேந்திரன்

நான் வருவதை தூர இருந்தே பார்த்து  வாசல்வரை ஓடிவந்து கதவைத்திறந்துவிட்டு

மண்டபவம் வரை அழைத்துச்சென்று அமரச்செய்தார்  (எனக்கு இவரை இதற்கு முதல் தெரியாது)

 

விசுகர் அவர்களுக்குக் கிடைத்த மரியாதை, யாழ்கள உறவுகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக இருக்கவேண்டும்!!. :rolleyes:  :)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் அவர்களுக்குக் கிடைத்த மரியாதை, யாழ்கள உறவுகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக இருக்கவேண்டும்!!. :rolleyes:  :)

 

 

நான் சொன்னது

அந்த நகரசபைக்கு தெரிவான ஒருவர் அவர்

ஆனால் சிறப்பான சேவகியாக

ஒரு தமிழர் விழாவுக்கு வருகின்றார் என்பதை கண்டு

வாசல்வரை வந்து அழைத்தச்சென்றது

அவரது நன்மதிப்பையும் எதிர்காலத்தையும் உயர்த்திக்காட்டியது

இந்த தலைமுறையிடம் இவை விதைக்கப்பட்டிருப்பது சந்தாசமாக இருந்தது

தனது பேச்சிலும் தனக்கு முன்மாதிரி இருந்தவர்களுக்கு நன்றி  சொன்னார்.

 

 

 

நியானி: மேற்கோள் ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

தவறான கணிப்பு.எல்லோரும் சேர்ந்து தான் கூட்டணிக்கு அண்மையில் அறிவுரை வழங்கியிருந்தார்கள்.அங்கிருக்கும் பொல்லு பிடிக்கும் கிழம் ஏற்றுகொள்ளவில்லை போல.அதன் பின் தான் மக்கள் கருத்தறியும் வாக்குகளாக தமிழர் வாக்குகளை பயன்படுத்தும் படி கேட்கப்பட்டது.அதற்கும் சேனாதி மாமா டிசம்பர் கடைசிவரை பொறுக்கும் படி கூறுகின்றார்.இவர்கள் எதை மறந்தாலும் இலங்கை நாடாளுமன்ற உணவுச்சாலையை மறக்க மாட்டார்கள் போல...(போனவர்களுக்கு தெரியும்)

Edited by நியானி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவறான கணிப்பு.எல்லோரும் சேர்ந்து தான் கூட்டணிக்கு அண்மையில் அறிவுரை வழங்கியிருந்தார்கள்.அங்கிருக்கும் பொல்லு பிடிக்கும்  கிழம் ஏற்றுகொள்ளவில்லை போல.அதன் பின் தான் மக்கள் கருத்தறியும் வாக்குகளாக தமிழர் வாக்குகளை பயன்படுத்தும் படி கேட்கப்பட்டது.அதற்கும் சேனாதி மாமா டிசம்பர் கடைசிவரை பொறுக்கும் படி கூறுகின்றார்.இவர்கள் எதை மறந்தாலும் இலங்கை நாடாளுமன்ற உணவுச்சாலையை மறக்க மாட்டார்கள் போல...(போனவர்களுக்கு தெரியும்) 

பொல்லு பிடிக்கும் கிழம், சேனாதி மாமா எல்லாம் இலங்கையில் இருந்து அரசியல் செய்து தொலைக்கிறார்கள்... அதுதான் சிக்கல்.  80-கள், 90-களில் ஆசாமிகள் வெளிநாட்டுக்கு வந்திருந்தால், வீரம், விவேகம் எல்லாம் கூடியிருக்கும்... 

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லு பிடிக்கும் கிழம், சேனாதி மாமா எல்லாம் இலங்கையில் இருந்து அரசியல் செய்து தொலைக்கிறார்கள்... அதுதான் சிக்கல்.  80-கள், 90-களில் ஆசாமிகள் வெளிநாட்டுக்கு வந்திருந்தால், வீரம், விவேகம் எல்லாம் கூடியிருக்கும்... 

 

பல்டி அடிக்க கிழம்களிடம் தான் பழக வேண்டுமுங்கோ. புலிகள் இருக்கும் போது தமிழீழம். இப்போ யார் கேட்டது தமிழீழம். கன்ரீன் சாப்பட்டே போதும். தேர்தல் நேரம் மட்டும் இனவாத மகிந்த தமிழ் மக்களை கொன்று விட்டார் என்று  பேசும் கிழம்கள் காசு சேர்க்க மட்டும் பிளேன் ஏறி விடுவினம். அறிவுரை கேட்க இந்தியா செல்லுவினம். இதேல்லாம் புலம் பெயர்ந்தால் செய்ய முடியுமோ பாருங்கோ.

பொல்லு பிடிக்கும் கிழம், சேனாதி மாமா எல்லாம் இலங்கையில் இருந்து அரசியல் செய்து தொலைக்கிறார்கள்... அதுதான் சிக்கல்.  80-கள், 90-களில் ஆசாமிகள் வெளிநாட்டுக்கு வந்திருந்தால், வீரம், விவேகம் எல்லாம் கூடியிருக்கும்... 

 

அது தான் நீங்கள் அப்பவே புறபட்டு வந்தீங்களாக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் நீங்கள் அப்பவே புறபட்டு வந்தீங்களாக்கும்.

 

றிங்கோ... உங்கள், பதில்கள்....

நாம்... எழுத, முயலும் கருத்துக்களை....  ஒரு சொல்லில் முடித்து விடும்.

நன்றாக... ரசிச்தேன்.JC_doubleup.gif:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.