Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்த்திரேலியா சிட்னியில் ஐஸிஸ் பயங்கரவாதிகளால் பணயக் கைதிகள் சிறைப்பிடிப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

art.mahinda.rajapaksa.afp.gi.jpg

 

சிட்னி முற்றுகை கவலை அளிக்கிறது : தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் டிவிட் போட்ட ராஜபக்ச!

 

 

உங்களுடைய அலரிமாளிகை முற்றுகையால் 
நாட்டு மக்களே கவலைபடுகிறார்கள் .... அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை?
  • is_flag_2244855g.jpg
    ஆஸ்திரேலியாவின் சேனல் 7 வெளியிட்ட வீடியோவில், ஓட்டலில் சிறைபிடிக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் சிலர் கருப்புக் கொடியுடன் நிற்க வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது| படம்: ஏபி.
    • aus1_2244832g.jpg
      ஆஸ்திரேலியாவில் ஓட்டலில் பிணைக்கைதிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அருகில் உள்ள கட்டடத்திலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்படுகின்றனர். | படம்: ராய்டர்ஸ்.
 
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லிண்ட் கபே என்ற பிரபல ஓட்டலில் இருந்த பொதுமக்கள், ஊழியர்களை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்திருப்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
இது குறித்த தகவல் வெளியானதும் போலீஸாரும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் அங்கு விரைந்தனர். தொலைக்காட்சி சேனலில் காட்டப்பட்ட காட்சி ஒன்றில், ஓட்டலுக்குள் பிடிபட்டிருக்கும் பொதுமக்கள் சிலர் ஜன்னலோரம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதும், அவர்கள் கைகளில் கருப்புக்கொடி கொடுக்கப்பட்டுள்ளதும் பதிவாகியுள்ளது.
 
அந்தக் கொடியில், வெள்ளை நிறத்தில் அரபு மொழியில் ஏதோ எழுதப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். எனவே, இது இஸ்லாமிய போராளிகள் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் செயலாக இருக்கலாமோ என சந்தேகிப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், அமைச்சரவை கூட்டத்தை அவசரமாகக் கூட்டியுள்ளார். ஓட்டலில் பிணைக்கைதிகள் பிடித்துவைக்கப்பட்டுள்ளது குறித்து ஆலோசித்து வருகிறார்.
 
ஆஸ்திரேலியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக அபாட் ஏற்கெனவே எச்சரித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
 
சிரியா, இராக்கில் போராடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியாவும் கூட்டுச் சேர்ந்துள்ளது. இதற்கு பதிலடியாக ஐ.எஸ். அமைப்பு இத்தகைய தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 
மர்ம நபருடன் போலீஸ் தொடர்பு:
 
ஓட்டலில் ஊழியர்கள், பொதுமக்களை சிறைபிடித்து வைத்துள்ள மர்ம நபரை போலீஸார் தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பிணைக்கைதிகளை பிடித்துவைக்க காரணம் என்ன? அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார் என விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
 
3 பேர் தப்பினர்:
 
இந்நிலையில், ஓட்டலில் இருந்து 3 பேர் தப்பிவந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகவலை, மெல்போர்ன் போலீஸ் துணை ஆணையர் கேத்தரின் பர்ன் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
பிரதமர் மோடி கண்டனம்:
 
ஆஸ்திரேலியாவில் பொதுமக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில், "சிட்னியில் நடைபெறும் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. மனிதாபிமானமற்ற, துரதிர்ஷ்டவசமான சம்பவம். பிணைக்கைதிகளாக இருக்கும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
 
ஆஸி., பிரதமர் ஆறுதல்:
 
சிட்னி நகரின் மார்டின் பிளேஸில் பிணைக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் வருத்தமளிக்கிறது. இருப்பினும், ஆஸ்திரேலியர்கள் பீதியடைய வேண்டாம். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு நிறுவனங்கள் நிலைமையை திறம்பட கையாண்டு வருகிறது என ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.
 
இந்தியத் தூதரகம் மூடல்?
 
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தொலைக்காட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஆஸ்திரேலிய சம்பவத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸி யாழ் கள உறவுகள் எப்படி இருக்கிறார்கள்..??! இதில் சிக்கல்லையே..??!

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது அவர்களின் பிடியில் இருப்பவர்களில் இரண்டு இந்தியர் உட்பட Westpacல் வேலை பார்க்கும் 3வர் அகப்பட்டிருக்கிறார்கள். சென்ற வெள்ளிக்கிழமை இவ்விடத்துக்கு அருகில் இருக்கும் உணவகமொன்றில் உணவருந்தியிருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
பயங்கரவாதிகள் யார் என்பது இப்போதாவது இந்த உலகம் புரிந்து கொள்ளுமா ??????
 
பயங்கரவாதத்திற்க்கும் விடுதலை போராட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாத புலன்கள் அற்ற உலகம்.  :(
  • கருத்துக்கள உறவுகள்

 

பயங்கரவாதிகள் யார் என்பது இப்போதாவது இந்த உலகம் புரிந்து கொள்ளுமா ??????
 
பயங்கரவாதத்திற்க்கும் விடுதலை போராட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாத புலன்கள் அற்ற உலகம்.  :(

 

மக்களுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை.
எல்லாம் அவன் செயல்தான்!
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸி யாழ் கள உறவுகள் எப்படி இருக்கிறார்கள்..??! இதில் சிக்கல்லையே..??!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி: சிட்னி ஹோட்டல் தீவிரவாதி ஒருவரால் முற்றுகையிடப்பட்டுள்ள பயங்கர நிகழ்வில் இந்தியர் ஒருவரும் பிணையக் கைதியாய் சிக்கியுள்ளார் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு. கடந்த பல மணி நேரமாக நீடித்து வரும் சிட்னி, காபி ஹோட்டல் முற்றுகையில் இதுவரை 5 பேர் தப்பி வந்துள்ளனர். ஆனால் பலர் உள்ளே சிக்கியுள்ளனர். உள்ளே இருப்பவர்கள் யார் யார் என்ற விவரம் முழுமையாகத் தெரியவில்லை. இந்த நிலையில் பிணையாளிகளில் இந்தியர் ஒருவரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் சாப்ட்வேர் என்ஜீனியர் என்றஉம் கூறப்படுகிறது.

15-1418633008-venkaiah-naidu43-600.jpg

 

இதுகுறித்து இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில் "இந்தியாவைச் சேர்ந்த மென் பொருள் நிறுவன ஊழியரான இளைஞர் ஒருவரும் பிணையக்கைதிகளில் உள்ளார் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்த உறுதிப்பூர்வமான தகவல்கள் தெரியாவிட்டாலும், இச்செய்தி இந்தியர்களிடம் பதட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த மேலும் தகவல்கள் அறிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.oneindia.com/news/international/sydney-cafe-siege-indian-it-professional-likely-among-hostages-217028.html

  • கருத்துக்கள உறவுகள்

நாளை மார்டின் பிளேஸ் பகுதியில் அலுவலகங்கள் இருப்பவர்கள் , வேலைகள் இருப்பவர்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்ற வேண்டுகோளை NSW மாநில பிரீமியர் திரு Mike Baird விடுத்திருக்கின்றார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.