Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூடுவிழாவா???????

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று ஒரு தலைப்பின் கீழ் எழுதப்பட்ட விடயம் எந்தவொரு காரணமும் கூறப்படாது வேறிடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

எங்கே அத்தலைப்பு. அது பிறிதொரு இடத்தில் இடப்பட்டிருந்தால் அது பற்றி ஏன் தலைப்பிட்டவரிற்கு அறிவிக்கவில்லை.

களவுறுப்பினர்கள் கடைப்பிடிக்கவேண்டும் எனக்கூறப்படும் விதிகள்போன்று நிர்வாகம் கடைப்பிடிக்கவேண்டிய விதிகளிற்கு என்னாச்சு.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புூட்டீட்டாங்களா புூட்டீட்டாங்களா?

என்னப்பா இது முகமாலையில கூட இப்பிடி வேகமாய் புூட்ட மாட்டாங்க. ஏதாவது பதில் தாக்குதல் நடாத்த ஒரு அவகாசம் கொடுக்கிறாங்களாம் ஆனால் யாழில் என்னமோ, பெரிய ஐ.நா.சபை கூட்டம் நடக்கிறமாதிரி இழுத்து இழுத்து மூடுறாங்களே!? ஏன்ன தான் நடக்குதோ? மட்டுறுத்தினருக்கு நேரம் கிடைக்கும் போது மட்டும் இழுத்து புூட்டுவார் இல்லாட்டி புலிகளைப்பற்றி புளுகினாலும் கண்டுக்க மாட்டார். மொத்தத்தில் யாழ் எந்த நிலையில்?

ஒரு தலைப்பை புூட்டுவது அடி முட்டாள்தனம். முடிந்தால் அவற்றை திருத்துங்கள், அதற்கான அனுமதியை நிர்வாகம் மட்டுறுத்தினருக்க வழக்கலாமே,?ம் சொல்ல வருகின்றீர்கள் புரிகின்றது. எங்களுக்கு நேரமில்லை என்று. அப்படியானால் இன்னும் சில மட்டுறுத்தினர்களை இணைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நேர அட்டவனைக்குள், இருப்போரே அதிகம் மட்டுறுத்தினராக இருப்பதாய் உணருகின்றேன். ஆனால் மற்றைய நாடுகளையும் கவனத்தில் எடுத்து தெரிவு செய்யலாம் அப்படி செய்வது இரண்டு விடையங்களில் உதவும்.

தலைப்புக்களை புூட்டும் மான்புமிகு, மட்டுறுத்தினர்கள், அதற்கான உரிய காரணத்தை தங்கள் திருவாயால் அல்ல, திருக்கரத்தால் எழதினால் தான் என்னவோ? அதுக்கும் நேரமில்லையா? ஆப்படி என்றால் தயவு செய்து மட்டுறுத்தினர் பதிவிக்கு குட் பாய் சொல்லீட்டு நடையக்கட்டுங்க.

இப்ப பாருங்க உந்த அமெரிக்கன் மாதிரி நீங்கள் செயற்ப்படாம இருங்க என்று தான் சொல்ல வந்தன் வேற உங்களில எந்த தனிப்பட்ட வெறுப்புமில்ல.

ஒரு கருத்தை முன் வைக்கும் போது அதை கஸ்டப்பட்டு ரைப்பண்ணி போஸ்ட் பண்ணி, நாலு பேரின்ர கருத்து சொல்லுற நேரத்தில புூட்டினால் எப்பிடி இருக்கும். அரட்டைய நிப்பாட்ட களத்தின்ர விதிகளை மாற்றியமையுங்க. இது பற்றி சொல்லித்தான் யாரையோ திரத்தியடிச்ச நினைவு பறவாயில்ல. போனால் போகட்டும் யாழ் மட்டுமா? களம் என்றிட்டு போக மாட்டன் திரும்ப திரும்ப வந்து ஆக்கினை தருவன் சொல்லீட்டன்

பறவைகள் பறக்க எல்லைகள் எது? தடைகள் எது என்ன புரியுதோ?

பறவைகள் ஏன்ன டென்சன் ஆயிட்டியள்?

யாழ்களத்தில் அரட்டை கூடிவிட்டது.

அதன் அர்த்தம் முற்றுமுழுக்க அரட்டை அற்று சிறப்பு விவாதங்களையும் அரசியலையும் கதையுங்கள் என்று அல்ல.

அதற்காக பக்கம் பக்கமாக அரட்டைகள் அளவிற்கு மிஞ்சி ஆதிக்கம் செலுத்த கூடாது.

அரட்டையில் அதிகம் நேரத்தை செலவிடும் ஏனையவர்களிற்கு,

ஜனநாயகம், கருத்துரிமை, கத்தரிக்கா என்று கதை விட்டு பயன் இல்லை.

நான் விருப்பத்துக்கு எழுதுறன் என்பாட்டில எழுதுறன் பொழுது போக்கிற்கு எழுதுறன் என்ற வியாக்கியானங்களும் சரிப்பட்டு வராது.

உந்த விதம் விதமான வியாக்கியானங்கள் அவிக்கிற கெட்டித்தனத்தையும் நேரத்தையும் நாலு பயனுள்ள விடையங்களை பகிர்வதில் செலவிட்டால் எல்லாருகும் பயனுள்ளதாக இருக்கு.

பணத்தையும் நேரத்தை செலவிட்டு களத்தை நடத்துபவரிற்கும் விரக்த்தி வராது தனது முயற்சி குப்பை கொட்டவும் கும்மாளம் அடிக்கவும் தான் பெருமளவில் பயன் படுகிறது என்று. நாலு நல்ல விடையங்களை பகிர்கிறார்கள் விவாதிக்கிறார்கள் விளக்கங்கள் தெளிவுகள் உருவாகுது என்ற ஒரு திருப்த்தி கிடைக்கும்.

கள உறுப்பினர்கள் பொறுப்புணர்வோடு அரட்டையை குறைக்க சுய முயற்சி எடுக்காவிட்டால் விதிகள் உருவாக்கி இறுக்கமாக அமுல்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அரட்டைக்கு என்று பல தலைப்புக்கள் உறுப்பினர் மட்டும் பகுதிக்குள் இருக்கின்றது. ஆனால் சில உறுப்பினர்கள் மற்றவர்கள் சுட்டிக்காட்டுவதையும் உதாசீனம் செய்வதோடு ஓரிருவரிகளுக்குள் ஏதோ எழுதிவிட்டுப் போக வேண்டும் என்று எழுதி சர்ச்சைகளையும் உருவாக்கி வருகின்றனர்.

இன்னும் சிலர் இவர்களை நேரடியாக ஊக்கிவிக்காவிட்டாலும் தங்கள் இருப்புக்கு பக்கவாத்தியம் போடுவதற்காக அரவணைப்பது போல அவர்களின் அநாவசிய செயற்பாடுகள் களமெங்கும் விரிவாக்க உதவிவிடுகின்றனர்.

பின்னர் தாங்களாகவே கண்டிப்பது போலவும் கண்டிக்கின்றனர்.

இந்த நிலைகளை எல்லாம் தாண்ட வேண்டின் கருத்தை எழுதுபவர்களாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் அது நடக்காது. சட்டம் போட்டு இவற்றை அமுல்படுத்துவது நட்புறவான சூழலை ஏற்படுத்தாது. இயன்றவரை சேதாரம் இல்லாமல் சேதங்கள் இல்லாமல் மாற்றங்கள் புரிந்துணர்ந்து எழ வேண்டும். தூண்டி விட்டுத் தூபம் போடும் கூட்டத்தினர் அடங்கினால் எல்லாம் அடங்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கா கா கா கா கா கா கா , கீ கீ கீ கீ கீ கீ

  • கருத்துக்கள உறவுகள்

கக்கக்க போ.....கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க ஆள் ஆள் க்கு அட்வைஸ் பண்ண........

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா குறுக்காலபோவான், நெடுக்காலபோவன், உங்களிருவரின் கருத்துப்படி பெரும்பான்மையான உறுப்பினர்கள் அரட்டை அடிகின்றனர், நானும் இல்லை என்று சொல்லவில்லை. மற்றவர்களை சுட்டிக்காட்டமுன் உங்களை ஒருநிமிடம் சுயவிமர்சனம் செய்யவும். உங்களில் ஒருவர் பதில் எழுதுவதற்கு மாற்றாக அழும் சிரிக்கும் முகங்களை போடுவதில் விண்ணர். மற்றவரோ படித்த பாடசாலையை பற்றி பக்கம்பக்கமாக தூற்றி எழுதி தமிழ் மக்களின் போராட்டத்திற்கு பக்கபலம் சேர்ப்பவர்.... நான் என்ன சொல்லவருகின்றேன் என்றால் நிர்வாகத்தை சேர்ந்தவர்களை முடிபு எடுக்க விடுங்கள், நீங்கள் முந்திரிகை கொட்டை வெளிக்கிட்டார்தீர்கள். நன்றி

அய்யா ரிஷி, நான் பம்பலபிட்டி இந்துக் கல்லூரி விவகாரத்தில் பங்குபற்றவில்லை.

பதில் எழுதுவதற்கு மாறாக சிரிக்கும் அழும் முகக்குறிகள் போடுவதில் விண்ணரா எத்தனை முறை நடந்திருக்கிறன் எண்டு காட்டும் நான் அவற்றை திருத்தி விளக்கமாக பதில் தரலாம்.

மேலும் உம்மை பற்றி தனிப்பட்ட ஒரு குறிப்பு, களத்தில் அதிக அளவில் அரட்டை அடிப்பதில் ஒரு விண்ணர் நீர். அதுதான் சுட்டுப்போட்டுது போல கிடக்கு. நிர்வாகமாக என்ன முடிவு எடுக்கலாம் என்று நினைக்கிறீர் உம்மை மாதிரி ஆக்கள் பற்றி?

இவற்றிற்கு பதில் சொல்லும் பிறகு முந்திரிகை கொட்டை விவகாரத்திற்கு வருவம்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவரோ படித்த பாடசாலையை பற்றி பக்கம்பக்கமாக தூற்றி எழுதி தமிழ் மக்களின் போராட்டத்திற்கு பக்கபலம் சேர்ப்பவர்....

பாடசாலையோ எழுதும் களமோ நிறைவுகளை மட்டும் காட்டிக் கொண்டு தவறுகளைத் தொடர்ந்து கொண்டிருக்க அனுமதிக்க முடியாது.

தவறுகளும் சுட்டிக்காட்டப்படுதலும் அவை தவறுகள் அல்ல என்றால் அதற்கான விளக்கங்கள் கொடுக்கப்படுவதும் தவறு என்றால் திருத்தப்படுவதும் அவசியம். அதைவிடுத்து அது தவறே அல்ல. நாங்கள் தவறே செய்யவில்லை என்று தவறுக்கு அதன் பெருக்கத்துக்கு எல்லோரும் துணை போக வேண்டும் என்பது அபந்தமான நிலைப்பாடு. அதை மற்றவர்கள் ஏற்க வேண்டும் என்பதும் தவறானது.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் உம்மை பற்றி தனிப்பட்ட ஒரு குறிப்பு, களத்தில் அதிக அளவில் அரட்டை அடிப்பதில் ஒரு விண்ணர் நீர். அதுதான் சுட்டுப்போட்டுது போல கிடக்கு. நிர்வாகமாக என்ன முடிவு எடுக்கலாம் என்று நினைக்கிறீர் உம்மை மாதிரி ஆக்கள் பற்றி?

ஐயா இதில் சுடுவதற்கு ஒன்றுமேயில்லை, நீங்கள் ஞானிகள் போல் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதைதான் பொறுக்கமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நீங்கள் உபதேசம் செய்வதாக நினைக்கின்றீர்கள். நீங்கள் தவறு செய்தால் உங்கள் நண்பன் அல்லது நண்பி சுட்டிக்காட்டினால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்? அப்படி ஒரு மனோநிலையில் ஏன் உங்களை வைத்திருக்க முடியவில்லை.

இதுதான் இங்கு பலவீனம். சிலர் இந்த நட்புறவுச் சூழலைக் குலைத்து தங்களுக்கு என்று குழுக்கள் அமைப்பதும் தனித்து தனி ஒருவரின் சிந்தனை வெளிப்படுவதை தவிர்க்க நினைப்பதுமே நடக்கிறது.

சிந்தனைகள் வெளி வர வேண்டும் ஆரோக்கியமா. தவறுகள் திருத்தப்பட்டு வளமானவை உள்வாங்கப்படவும் விதைக்கப்படவும் வேண்டும்.

வெறும் அலட்டல்களால் சாதித்தது என்ன?? சாதித்து ஆகப்போவது என்ன??

எனவே உபதேசமாக நோக்காமல் உங்கள் நண்பர்களின் பார்வைகளாக கருத்துக்களாக நோக்குங்கள். முட்டி மோதி நீங்களே உங்களைப் பலவீனமாக்கி இன்னொருவரின் தயவில் தங்கி இருந்து கருத்தெழுதும் நிலை இங்கு வேண்டாம். உங்கள் உங்கள் சிந்தனைப்படி சிறப்பாக எழுதுங்கள். அதுதான் உங்களையும் சமூகத்தையும் கருத்தியலையும் பலப்படுத்தும்.

ரிஷி, மீண்டு; கேக்கிறன்

நான் "பதில் எழுதுவதற்கு மாற்றாக அழும் சிரிக்கும் முகங்களை போடுவதில் விண்ணர்" ஆக நடந்து கொண்டவற்றை சுட்டிக் காட்டவும் விளக்கம் தருவதற்கு.

மேலும் உம்மை போன்று அரட்டை அடிக்கும் விண்ணர்களிற்கு நிர்வாகம் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்?

இங்கு ஒருவரும் ஞானியும் இல்லை யோகியும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குறுக்ஸ் டென்ஷன் ஆகிட்டார்...

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா குறுக்காலபோவான், இணைய யுத்தம் - ஒரு விரிவான பார்வைக்கு என்ற பகுதியை பார்க்கவும்

ஓம் ரிஷி அந்த "இணைய யுத்தம்" என்ற பதிவிற்கு உங்கள் பதில் என்ன வென்று சொல்லுங்கள் அறிந்து கொள்ள ஆவலாக இருக்குறேன்.

அடுத்து அதில் குறிப்பிடப்பட்டவர்களின் ஆக்கம் பற்றி எனது பதில் ஏற்கனவே இங்கு இருக்கிறது.

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=230266#230266

அவர்களுடைய நோக்கம் தெளிவாக தெரிந்து விட்டது அதைவிட மேலதிகமா சொல்ல ஒன்றுமில்லை வாய்விட்டு சந்தோசமாக சிரிப்பதை தவிர.

ஒரு பதிவில் இருந்து முகக்குறி போடும் விண்ணர் என்று முடிவெடும் விண்ணர் நீங்கள் இல்லை என்ற நம்பிக்கையில் எனது அடுத்த பயனற்ற முகக்குறி பதிவுகளை தரவும் பதில் தரலாம்.

:mrgreen: :mrgreen: :smile2: :smile2: :mrgreen: :smile2:

  • கருத்துக்கள உறவுகள்

:mrgreen: :mrgreen: :smile2: :smile2: :mrgreen: :smile2:

ஓய்!

இப்படிப் போடுவதற்குத் தான் சண்டையே நடக்குது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைய்யா, அரட்டை அரட்டை எண்டுபோட்டு இதிலயும் அரட்டை அடிக்கிறீங்க. கேட்ட கேள்வி நிர்வாகத்த. அதுவும் காரணம் இல்லாம நடந்த விசயம். அதுக்குத்தான் விளக்கம். நீங்க என்னெண்டா அரட்டை கத்தரிக்காய் எண்டு கொண்டு. பூட்டுப் போடவும் அழிக்கவும் முடிஞ்சவைக்கு அதுக்க நாலு வரி எழுத முடியாதா. கேள்விகேட்டா நிர்வாகத்தில பழி சுமத்துறதா புலம்பிறாங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய்!

இப்படிப் போடுவதற்குத் தான் சண்டையே நடக்குது!

ராசா இது போடுறத்துக்கு யாரப்பு சண்டை பிடிச்சது.

ஒண்ட நீக்கிறதே நகர்த்துறதோ அதுக்கான விளக்கத்தத் தாங்களன்.

நான் வாசிச்சு அறிஞ்ச மட்டில யாழ்கருத்துக்களத்தில களவிதியளில எதிலயும் கருத்துக்களில் மாற்றம் (http://yarl.com/forum3/viewtopic.php?p=231984#231984) பகுதில யாரும் எழுதக்கூடாதெண்டில்ல. அப்பிடியிருக்க அதில எழுதினா எச்சரிக்கை வேற குடுக்கிறாங்க. அத பாய்ஞ்சு விழுந்து அழிக்கிறாங்க. ஆனா பாக்கவேண்டிய பல இடங்களில பாக்கமாட்டாங்க.

அட அதெல்லாத்தயும் விடுங்க. தலைப்பு ஆரம்பிக்கிறாங்க ஆரம்பிக்கிறாங்க எண்டு புலம்பிறாங்க. ஆனா இந்த நிர்வாகத்துக்களே புடுங்குப்பிடி போல.

ஏனெண்டு என்னெண்ட கேக்காதீங்க. இதப்போய் பாருங்க http://yarl.com/forum3/viewforum.php?f=28.

கருத்துக்களில் மாற்றங்கள் எண்டதுக்கே ரெண்டு தலைப்பு வைச்சிருக்கிறாங்க. இந்த லட்சணத்தில மற்றவைக்கு பூட்டு. இத எங்க போய்ச் சொல்லுறது.

ஓய்!

இப்படிப் போடுவதற்குத் தான் சண்டையே நடக்குது!

:mrgreen: :smile2: :mrgreen: :smile2: :mrgreen:

ராசா இது போடுறத்துக்கு யாரப்பு சண்டை பிடிச்சது.

ஒண்ட நீக்கிறதே நகர்த்துறதோ அதுக்கான விளக்கத்தத் தாங்களன்.

நான் வாசிச்சு அறிஞ்ச மட்டில யாழ்கருத்துக்களத்தில களவிதியளில எதிலயும் கருத்துக்களில் மாற்றம் (http://yarl.com/forum3/viewtopic.php?p=231984#231984) பகுதில யாரும் எழுதக்கூடாதெண்டில்ல. அப்பிடியிருக்க அதில எழுதினா எச்சரிக்கை வேற குடுக்கிறாங்க. அத பாய்ஞ்சு விழுந்து அழிக்கிறாங்க. ஆனா பாக்கவேண்டிய பல இடங்களில பாக்கமாட்டாங்க.

அட அதெல்லாத்தயும் விடுங்க. தலைப்பு ஆரம்பிக்கிறாங்க ஆரம்பிக்கிறாங்க எண்டு புலம்பிறாங்க. ஆனா இந்த நிர்வாகத்துக்களே புடுங்குப்பிடி போல.

ஏனெண்டு என்னெண்ட கேக்காதீங்க. இதப்போய் பாருங்க http://yarl.com/forum3/viewforum.php?f=28.

கருத்துக்களில் மாற்றங்கள் எண்டதுக்கே ரெண்டு தலைப்பு வைச்சிருக்கிறாங்க. இந்த லட்சணத்தில மற்றவைக்கு பூட்டு. இத எங்க போய்ச் சொல்லுறது.

:P :P :P :P :P

கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ கூ

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பிரியான்ட கத்திக்கு வேலை வந்திட்டிது...

  • கருத்துக்கள உறவுகள்

நான்பல தடவை அந்த முகநயங்களை போடுவதற்கு

முயற்சி செய்தேன் முடியவில்லை.

நான் இதைபற்றி கேட்கும் இடம் பிழையானதுதான்.

ஆங்காங்கே எறியும் வார்த்தை குண்டுகளை என்மீதும் வீசிவிடாதீர்கள்.

நான் ஒரு அப்பாவி.

அவற்றை எவ்வாறு போடுகிறீர்கள்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.