Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை விட முடியாது TNA….

Featured Replies

கூட்டமைப்பு தங்கள் முடிவில் உறுதியாக நிக்கவேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் படிய வில்லை என்றால் மறுபடியும் தேர்தலை சந்திக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் காங்கிரஸ் சுதந்திர கட்சியின் ஆதரவை வெளியில் இருந்து தருமாறு கேக்கலாம்.....

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதை விட

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு விடக்கூடாது. முஸ்லிம் காங்கிரஸ் தமிழரின் நட்பு சக்தி அல்ல என்பதை உறுதிப்படுத்த இது நல்ல சந்தர்ப்பம். எனவே அவர்கள் மீண்டும் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும். மஜீத் நல்ல இவங்களுக்கு முதல்வர் பதவியைக் கொடுத்தார். எங்க போனாலும் முஸ்லிம் காங்கிரஸ் ஒட்டுண்ணிதான்!

  • தொடங்கியவர்
கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரே வேண்டும்': முஸ்லிம் காங்கிரஸ்
150115161241_eastern_provincial_council_
முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவர் ஏ. எம். ஜெமீல்
 
இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் முதலமைச்சராக தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தவர் ஒருவரே இருக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் கோரியுள்ளனர்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவரான ஏ. எம். ஜெமீல் கூறுகின்றார்.
வடக்கு மாகாண சபையில் முதலமைச்சராக தமிழர் ஒருவர் பதவி வகிப்பது போல் கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக தங்களால் நடந்துகொள்ள முடியாது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
 
கிழக்கு மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் (11 உறுப்பினர்கள்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (8 உறுப்பினர்கள்) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (4 உறுப்பினர்கள்) இடையில் ஆட்சி மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
 
ஜனநாயக மரபு
130410180242_najib_a_majid_304x171_gosl_
கிழக்கு மாகாணசபையின் தற்போதைய முதல்வர் நஜீப் மஜீத்
கூடுதலான உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்பதே ஜனநாயக மரபு என தமிழர் தரப்பு கருதுகின்றது.
இது ஜனநாய மரபாக இருந்தாலும், இந்த விடயத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டு தீர்மானம் எடுக்க முடியாது என்று ஏ. எம். ஜெமீல் கூறுகின்றார்.
தற்போதைய முதலமைச்சர் நஜீப் ஏ மஜித் உள்ளிட்ட மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட கூடுதல் உறுப்பினர்களின் ஆதரவை தங்களால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 
நம்பிக்கை
 
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ஆட்சி மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன.தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
120716123250_tna_candidates_304x171_bbc_
ததேகூவிடம் 11 உறுப்பினர்கள் உள்ளனர்
 
இந்த பேச்சுவார்தைகளின் முடிவில் நல்ல முடிவொன்று கிடைக்கும் என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ. எம். ஜெமீல் வெளியிட்டார்.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வமான கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை.
2012-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் படி, கிழக்கு மாகாணசபையின் 37 உறுப்பினர்களில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் 15 பேர் தெரிவாகியிருந்தனர்.
 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கியிருந்த அந்தக் கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெற்று 22 உறுப்பினர்களுடன் ஆட்சியை அமைத்துக் கொண்டது.
தற்போதைய நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் (8 உறுப்பினர்கள்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (இருவர்) உட்பட 11 பேர் ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாண சபையில் இந்த ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ளது.
 

பேசாம திரும்பவும் தேர்தலுக்கு போகலாமா? 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம திரும்பவும் தேர்தலுக்கு போகலாமா? 

 

 

ஐயா

வரலாற்றுப்பாடங்கள் எமக்கு முன் கனக்க இருக்கு...

 

இப்பொழுதைய  சூழ்நிலையில் வைத்துப்பார்த்தா

கூட்டமைப்புத்தான் வெல்லும் போலத்தெரியுது

 

ஆனால் புலிகள் பலமாக இருந்தபோது

இவ்வாறு ஒரு நினைவோடும் குறியோடும் தான் 

பேச்சவார்த்தைக்கள் தலையைக்கொடுத்தார்கள்

அதற்குப்பிறகு  எத்தனை பேர் இடம்  மாறினார்கள் என்பதும்

புலிகளது திட்டங்கள் என்னாச்சு என்பதும் நாம் எல்லோரும் அறிந்தது தான்..

 

இப்போ அதேநிலையில் கூட்டமைப்பு

 

 

 பலவீனமான நிலையில் தமிழர்கள்

 

வலைவிரிக்கவும்

வாங்கவும் சூழ்ச்சி  செய்யவும் வலிமையுடன் சிங்களம்......

Edited by விசுகு

ஐயா

வரலாற்றுப்பாடங்கள் எமக்கு முன் கனக்க இருக்கு...

 

இப்பொழுதைய  சூழ்நிலையில் வைத்துப்பார்த்தா

கூட்டமைப்புத்தான் வெல்லும் போலத்தெரியுது

 

ஆனால் புலிகள் பலமாக இருந்தபோது

இவ்வாறு ஒரு நினைவோடும் குறியோடும் தான் 

பேச்சவார்த்தைக்கள் தலையைக்கொடுத்தார்கள்

அதற்குப்பிறகு  எத்தனை பேர் இடம்  மாறினார்கள் என்பதும்

புலிகளது திட்டங்கள் என்னாச்சு என்பதும் நாம் எல்லோரும் அறிந்தது தான்..

 

இப்போ அதேநிலையில் கூட்டமைப்பு

 

 

 பலவீனமான நிலையில் தமிழர்கள்

 

வலைவிரிக்கவும்

வாங்கவும் சூழ்ச்சி  செய்யவும் வலிமையுடன் சிங்களம்......

 

அப்ப முதலமைச்சை அவிங்களுக்கு குடுக்கலாமா? 

 

இப்போது  இல்லை எப்போது தேர்தல் வைச்சாலும் கிழக்கில் இருக்கும் குடிபரம்பலை இலகுவில் மாற்றமுடியாது. கூட்டமைப்புக்கு கிட்டத்தட்ட இப்ப இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கையோ அல்லது ஒன்று இரண்டு கூடவும் வரலாம். நியமன உறுப்பினர் எண்ணிக்கை சரி கூடும்.

 

வடக்கு மக்களுக்கு புலத்தில் இருந்து வரும் அழுத்தங்கள் கிழக்கில் குறைவு அதனால தமிழ் மக்களின் குடிப்பரம்பலுக்கு ஏற்ப கூட்டமைப்பு அதிகமான இடங்களை பிடிக்கும்.

  • தொடங்கியவர்

கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் 

 

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என்பதில் தாம் உறுதியாகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்தார். ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடனும் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இன்று சனிக்கிழமை காலை முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணசபையின் ஆளும் தரப்பு பலம் இழந்துள்ள நிலையில் மாகாணசபையில் பெரும்பான்மையினை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கான பணிகளை முன்னெடுத்துவருகின்றது.

 

இதன்கீழ் நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம்.அதன் ஓர் அங்கமாக இன்றும் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். நாங்கள் அனைத்து உறுப்பினர்களும் கிழக்கு மாகாணசபையில் அதிகார பங்கீட்டுக்கு அமைவாக முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கு வழங்கவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம். ஆனால் இது தொடர்பில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடனான பேச்சுவார்த்தையில் எதுவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடனும் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார். -

 

http://www.tamilmirror.lk/137853#sthash.tNcCivUs.dpuf

  • கருத்துக்கள உறவுகள்
புலிகள் முஸ்லீம்களை யாழ்பாணத்தில் இருந்து விரட்டி அடித்ததை 
முஸ்லீம் கட்சி காரர்கள் மறக்க கூடாது. 
 
(இந்த திரியை வாசிக்க சிரிப்பு அடக்க முடியவில்லை. 
தென்னையின் பாளையில்  இருந்து தேங்காய் பிரிந்தவுடன் ..... அது பூமியில்தான் விழுந்தாகனும் என்று சிலர் ஏன் எழுதுகிறார்கள் என்று யாருக்காவது புரியுதா?? 
 
காரணம் புரிஞ்சா ..... நல்ல நகைசுவையாக இந்த திரி உங்களுக்கும் இருக்கும். )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.