Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண் சுட்டுக்கொலை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தம்பசிட்டியில் யுவதி சுட்டுக்கொலை

வடமராட்சி தம்பசிட்டி பண்டாரி அம்மன் கோயிலுக்குச் சமீபமாக நேற்று யுவதி ஒருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மின்சார நிலைய வீதி, ஓடக்கரை பருத் தித்துறை என்ற முகவரியைச் சேர்ந்த செல்வி நாராயணமூர்த்தி யசோதினி (வயது 22) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவராவார். இவர் சுகா தாரத் தொண்டராகக் கடமையாற்றியவர் என்று ஒரு தகவல் தெரிவித்தது.

-உதயன்

  • Replies 189
  • Views 18.1k
  • Created
  • Last Reply

எனது முன்னைய பதில் சபேசனின் கேள்விக்கு பதிலாக அமையாத போதும் களத்தில் சிலரது பதிலுக்குரிய எனது கருத்தாக அமைந்தது.

உளவாளிக்கு மரணதண்டனை என்பதில் பாலியலை சம்பந்தப்படுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு இல்லை என்பதே எனது பதிலாக அமையும்.

இனம் மானம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு நகர்த்திச் செல்லப்படும் எமது போராட்டத்தில் ஒரு தமிழ் பெண் எதிரிராணுவ வீரரோடு பாலியல் தொடர்பு கொண்டிருந்தார் எனச்சொல்லுவதன் மூலம் வழங்கப்பட்ட தண்டனையை மேலும் நியாயப்படுத்த முனைகிறார்கள்.

உண்மையில் இது அந்த உளவாளிக்கு ராணுவரீதியில் வழங்கப்பட்ட தண்டனையின் நியாய தன்மையை குறைக்கின்றது.

மேலும் மனிதவுரிமை ஆர்வலர்கள் எனப்படுவோர் இதில் தலையிடவும் கருத்துத் தெரிவிக்கவும் வாய்ப்பளிக்கின்றது.

தமிழ் சினிமா பாணியில் ஒரு ஆணும் பெண்ணும் அறை ஒன்றினுள் சென்று கதவை சாத்திக் கொண்டதும் பாலியல் நடவடிக்கை ஒன்று இடம்பெற்றதாக 90 வீதமான ரசிகர்களால் உள்வாங்கப்படும் செய்தி நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் வாதமில்லை.

மேலும் ஒரே இடத்தில் குடிசையொன்றில் தினசரி செலவுக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் எழை யுவதிக்கும் குடிசைக்கு முன்னால் காவலரண் ஒன்றில் தினசரி கடமையிலிருக்கும் இராணுவ வீரணுக்கும் காதல் மலர்வது ஒன்றும் நடக்காத விடயமல்ல.

ஆனால் அது உண்மையான காதலா அல்லது உளவுக்காக மட்டும் பயன்படுத்தப்படுகின்றதா என்றெல்லாம் தெரியாமல் தண்டிப்பது சிவில் நடைமுறையில் தவறானது.

இதனால் பல தண்டனைகள் தவறாக வழங்கப்படுவதோடு அவை மீண்டும் திருத்தப்பட முடியாதவையாகின்றன.

மேலும் இதன் முலம் அந்நபரின் ஏதுமறியா குழந்தைகள் குடும்ப உறுப்பினர்கள் போன்ற சம்பந்தப்படாதவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர்.

அந்த நபரின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் போதோ அல்லது சமுகத்தில் பல இடங்களில் மனக்கஷ்டங்களுக்கு ஆளாகுவார்கள்.

எனவே போர்சூழ்நிலையில் ஏற்படும் இந்த துரதிர்ஸ்டவசமான சம்பவங்களுக்கு அறிக்கைகள் தேவையில்லை என்பதோடு விரைந்து போரை முடிவுக்கு கொண்டுவருவதே மக்களுக்கு நல்லது.

Young woman shot dead in Point Pedro

[TamilNet, Thursday, 02 November 2006, 21:42 GMT]

A young woman from Oolai, Point Pedro, in Vadamarachchy region in Jaffna district was shot dead near Pandary Amman Temple in Thambachetty, 1 km west of Point Pedro town, at 3:30 pm Thursday.

Yasothiny Narayanamoorthy, 25, was riding a bicycle near the Amman Temple when two unidentified gunmen followed her in a motorbike, shot her in point blank range and escaped, eyewitnesses said.

The body was recovered late evening and handed over to the Manthikai Government hospital for post-mortem examinations, hospital sources said.

Meanwhile, "Ellalan Force" claimed responsibility to the killing in a press release issued Thursday to the media stating that she was punished because of her involvement in anti- social activities.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20123

சாணக்கியன் நீங்கள் எழுதுவதை பார்த்தால் நிலமையின் நிர்ப்பந்தத்தில் தப்பு தப்பாக எல்லாம் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது போல இருக்கு.

இங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது பற்றிய அல்ல அதை பற்றி ஊடகங்களில் வரும் செய்திகள் பற்றித்தான் கருத்தாடல் நடக்கிறது.

அந்த மிகவும் கடினமான முடிவை பல நெருக்கடிகளிற்கு மத்தியில் எடுத்து நிறைவேற்றுவது யாரோ. சொகுசாக இருந்து கொண்டு கற்பனையில் விளக்கவுரை எழுதுவது யாரோ.

நல்லது தொடருங்கோ.

புதினம்:

சிறிலங்கா இராணுவத்துடன் பாலியல் தொடர்பு மற்றும் உளவுப்பணியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தமிழ்நெட்:

Yasothiny Narayanamoorthy, 25, was riding a bicycle near the Amman Temple when two unidentified gunmen followed her in a motorbike, shot her in point blank range and escaped, eyewitnesses said

தமிழ்நெட்டில் எல்லாளன் படை தெரிவித்ததான செய்தியில்:

she was punished because of her involvement in anti- social activities

உதயன்:

யுவதி சுட்டுக்கொலை

எனது கேள்விகளாவன, இப் பெண்:

1) உள்ளூர் ஆண்களுடன் பலருடன் பாலியல் தொடர்பு கொண்டவரா?

2) சிங்கள ராணுவத்தினருடனும் பாலியல் தொடர்பு கொண்டவரா?

3) தேசத்திற்கெதிராக உளவு வேலையில் ஈடுபட்டவரா?

4) அப்பாவி யுவதியா?

எது உண்மை?

புதினம்:

தமிழ்நெட்:

தமிழ்நெட்டில் எல்லாளன் படை தெரிவித்ததான செய்தியில்:

உதயன்:

எனது கேள்விகளாவன, இப் பெண்:

1) உள்ளூர் ஆண்களுடன் பலருடன் பாலியல் தொடர்பு கொண்டவரா?

2) சிங்கள ராணுவத்தினருடனும் பாலியல் தொடர்பு கொண்டவரா?

3) தேசத்திற்கெதிராக உளவு வேலையில் ஈடுபட்டவரா?

4) அப்பாவி யுவதியா?

எது உண்மை?

வந்த செய்திகளின் படி இவை இரண்டும் உண்மை.

2) சிங்கள ராணுவத்தினருடனும் பாலியல் தொடர்பு கொண்டவரா?

3) தேசத்திற்கெதிராக உளவு வேலையில் ஈடுபட்டவரா?

ஐயா குறுக்காலைபோனவரே

(மன்னிக்கவும் இது நீங்களே உங்களுக்கு இட்டுக்கொண்ட பெயர் என்பதால் அப்படி அழைக்க வேண்டியதாயிற்று, அது போலவே சாணக்கியன் என்பதுவும் நான் எனக்கு இட்டுக் கொண்டது மட்டுமே :wink: )

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. முதலாவது,

ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளேன் எந்த ஒரு குற்றத்திற்கும் மரணதண்டனை ஒரு சிறந்த தீர்வாக அமையாது. (இது பற்றி பிறிதோரு தலைப்பில் பேசுவோம்.)

அதிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இருக்கும் சிலரால் விரைந்து எடுக்கப்படும் தீர்வுகளில் தவறு ஏற்படுவதற்கு சாத்தியங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

இரண்டாவது,

சபேசனால் தலைப்பிடப்பட்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான என் கருத்துகளையே தெரிவித்துள்ளேன், ஊடகங்களின் கருத்துப்பற்றி கருத்து தெரிவிக்க என்னிடம் கருத்து எதுவுமில்லை.

முன்றாவது,

கருத்துகளை பகிர்வதற்கானதே இந்த கருத்துக்களம் என்றே நான் விளங்கி வைத்துள்ளேன். அதற்கான வசதிகள் மட்டுமே எனக்கு இங்கு தரப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

எனது முன்னைய பதில் சபேசனின் கேள்விக்கு பதிலாக அமையாத போதும் களத்தில் சிலரது பதிலுக்குரிய எனது கருத்தாக அமைந்தது.

உளவாளிக்கு மரணதண்டனை என்பதில் பாலியலை சம்பந்தப்படுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு இல்லை என்பதே எனது பதிலாக அமையும்.

தமிழ்நெற் கூட சமூக விரோதச் செயல் என்று குறிப்பிட்டுள்ளது. அந்தச் சமூக விரோதச் செயல் எவை என்பதை அவர்கள் விரிவு படுத்தவில்லை. புதினம் விரிவாக எல்லாளன் படையின் கடந்த கால நடவடிகைகளுக்கான அறிக்கைகளின் பிரகாரம் செய்து வெளியிட்டுள்ளது.

உலகெங்கும் சமூக விரோதிகள் சட்டத்தால் தண்டிக்கப்படுகின்றனர். பாலியல் குற்றம் செய்வோரும் இதில் அடங்குகின்றனர். தேசநலன்களை எதிரிக்கு காட்டிக் கொடுப்போரும் தண்டிக்கப்படுகின்றனர்.

இனம் மானம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு நகர்த்திச் செல்லப்படும் எமது போராட்டத்தில் ஒரு தமிழ் பெண் எதிரிராணுவ வீரரோடு பாலியல் தொடர்பு கொண்டிருந்தார் எனச்சொல்லுவதன் மூலம் வழங்கப்பட்ட தண்டனையை மேலும் நியாயப்படுத்த முனைகிறார்கள்.

உண்மையில் இது அந்த உளவாளிக்கு ராணுவரீதியில் வழங்கப்பட்ட தண்டனையின் நியாய தன்மையை குறைக்கின்றது.

இது இராணுவ ரீதியான தண்டனை அல்ல. இது சமூக விரோதச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவது அல்லது குறைப்பதற்கான செயற்பாடு. பல முறை எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட பின்னரே மரண தண்டனைகள் வழங்கப்படுகின்றன. யாழ் குடாநாடு விடுதலைப்புலிகளின் கையில் இருந்த போதும் கூட பகிரங்க மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான காரணங்களும் விளக்கப்பட்டுள்ளன. சமூக விரோத பண்பாட்டை மீறிய பாலியல் துர்நடத்தைகள் போதைவஸ்துப் பாவனையைத் தூண்டுதல் கொலைகள் கொள்ளைகள் ஆட்கடத்தல் காட்டிக்கொடுத்தல் என்று குற்றச்செயல்கள் இனங்காணப்பட்டு தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

நிச்சயமான ஒரு இனத்தின் இனமானம் என்பது அதன் சமூக நடத்தையில் இருந்து வெளிப்படுகிறது. சமூக நடத்தையில் ஒவ்வொரு குடும்பத்தின் நடவடிக்கைகளும் அதன் தனி மனித நடவடிக்கையில் தங்கியுள்ளது. அந்த வகையில் கல்வி அறிவூட்டப்பட்ட சமூகத்தில் அதுவும் போர்ச் சூழல் நிலவும் சந்தர்ப்பத்தில் இவை குறித்து பகிரங்கமாகவும் தனிப்படவும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டும் அவை கவனத்தில் கொள்ளப்படாததற்கு தண்டனையாளர்களை குற்றம் சொல்ல முடியாது. தண்டனை அனுபவிப்பவர்களே அதற்குப் பொறுப்பு.

மேலும் மனிதவுரிமை ஆர்வலர்கள் எனப்படுவோர் இதில் தலையிடவும் கருத்துத் தெரிவிக்கவும் வாய்ப்பளிக்கின்றது.

தெரிவிக்கலாம். உலகெங்கும் மரண தண்டனைக்கு எதிராக குரல் எடுப்பப்படுகின்றனதான். அதற்காக அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இன்னும் மரண தண்டனை அமுலில் உள்ளதுதான். கடந்த ஆண்டு ஒரு அப்பாவி இளைஞனை பிரித்தானிய பொலிஸ் சுட்டுக் கொன்றது. அந்த விடயத்தில் மனித உரிமையார்வலர்களால் என்ன செய்ய முடிந்தது. அதன் பின்னர் அப்பாவி இளைஞர்களை சுட்டுக்காயப்படுத்திக் கைது செய்தனர். அதன் போதும் மனித உரிமைகள் உச்சரிக்கப்பட்டது. தேசிய நலன் கருதி அவர்கள் செய்ததாக பொலிஸ் தனது அறிக்கையில் சொல்லிக் கொண்டதோடு வருத்தம் தெரிவித்தது. அவ்வளவும் தான். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் அப்பாவிகள்.

ஆனால் இங்கு அந்தப் பெண் சிறீலங்கா சட்டப்படியும் சரி தமிழீழச் சட்டப்படியும் சரி சட்டவிரோத பாலியல் தொடர்புகளைப் பேணி வந்தது அவதானிக்கப்பட்டுத்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாலியல் தொடர்புகளை பேணி வந்த பல பெண்கள் இந்திய அமைதிப்படை காலத்திலும் உளவாளிகளாகச் செயற்பட்டுள்ளனர். அப்போதும் இவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. எல்லாளன் படையின் செயற்பாட்டை தாந்தோன்றித்தனமான செயற்பாடாக பார்க்க முடியாது. அவர்கள் இதுவரை காலமும் அப்பாவிகள் என்று எவருக்கும் தண்டனை வழங்கியதில்லை. அதுவும் அதியுயர் தண்டனையான மரண தண்டனையை எழுந்தமானத்துக்கு வழங்குவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தமிழ் சினிமா பாணியில் ஒரு ஆணும் பெண்ணும் அறை ஒன்றினுள் சென்று கதவை சாத்திக் கொண்டதும் பாலியல் நடவடிக்கை ஒன்று இடம்பெற்றதாக 90 வீதமான ரசிகர்களால் உள்வாங்கப்படும் செய்தி நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் வாதமில்லை.

மேலும் ஒரே இடத்தில் குடிசையொன்றில் தினசரி செலவுக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் எழை யுவதிக்கும் குடிசைக்கு முன்னால் காவலரண் ஒன்றில் தினசரி கடமையிலிருக்கும் இராணுவ வீரணுக்கும் காதல் மலர்வது ஒன்றும் நடக்காத விடயமல்ல.

ஆனால் அது உண்மையான காதலா அல்லது உளவுக்காக மட்டும் பயன்படுத்தப்படுகின்றதா என்றெல்லாம் தெரியாமல் தண்டிப்பது சிவில் நடைமுறையில் தவறானது.

காதல் மலர்வது சாதாரணமானது. அப்படிக் காதல் மலர்பவர்கள் மேலே சிலர் குறிப்பிட்டது போல திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டியதுதான் சிறீலங்கா மற்றும் தமிழீழச் சட்டப்படி ஊக்கிவிக்கப்படுகிறது. காதல் மலர்கிறது என்பதற்காக காவலரணுக்கு ஒரு காதல் மலர்கிறது என்றால் அது சந்தேகிக்கும் படியான நடவடிக்கை. அந்த வகையில் அது காதல் என்பதற்கு மாறாக துர்பாலியல் நடத்தை என்ற வகைக்குள் வந்துவிடுகிறது. இதன் போதே தங்கள் சுய நலத்துக்காக அறிந்தோ அறியாமலோ உளவுத் தகவல்களை வழங்கிவிடுகின்றனர். அதனாலேயே அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பல தடவைகள் எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

எதிரி வீரனைத் திருமணம் செய்யும் பெண் எதிரியாகத்தான் பார்க்கப்படுவாள். அவள் எப்படியோ அவனுக்கு விசுவாசமான செயற்பாடுகளைச் செய்யவே முயல்வாள். அந்த வகையில் அது தேச நலனுக்கு பாதிப்பாக அமையும் போது அவளும் எதிரியாகிறாள் என்பதையும் கணக்கில் கொள்ளுங்கள். இராணுவத்தினரோடு வந்திருக்கும் சிங்களப் பெண் வீரர்களை பெண்கள் என்பதற்காக எதிரி என்று பார்க்காமல் விடுவதில்லை. அதே போன்றுதான் இவளும் நோக்கப்படுவாள். அப்படி அவள் தன்னைப் பாதுகாக்க விரும்பின் எதிரியின் சொந்த இடத்துக்கு போய் விடுவதே அவளுக்கும் தேசத்துக்கும் நன்மை.

இதனால் பல தண்டனைகள் தவறாக வழங்கப்படுவதோடு அவை மீண்டும் திருத்தப்பட முடியாதவையாகின்றன.

மேலும் இதன் முலம் அந்நபரின் ஏதுமறியா குழந்தைகள் குடும்ப உறுப்பினர்கள் போன்ற சம்பந்தப்படாதவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர்.

அந்த ஒரு குடும்பத்தில் உள்ள குறைந்தது 5 பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் இவள் செய்யும் தொழில் மற்றும் காட்டிக் கொடுப்புகளால் பாதிக்கப்படப் போகும் குடும்பத்தவர்களின் எண்ணிகையோடு பார்க்கையில் எதற்கு முக்கியம் அளிக்க வேண்டும். போர்களத்தில் போராடி வீழும் வீரனுக்கும் குடும்பம் உண்டு. அந்த வகையில் காட்டிக் கொடுக்கப்பட்டு ஒரு போராளி உயிர்நீத்தால் அது அவன் குடும்பத்துக்கு மட்டுமல்ல அவனை நம்பி இருக்கும் மொத்த தேசத்துக்கும் பாதிப்பு. இப்படியான பாலியல் தொடர்புகளைப் பேணி வருபவர்களால் பிற பெண்களும் இவ்வாறான நடத்தைக்கு இராணுவத்தால் அணுகப்பட கட்டாயப்படுத்தப்பட வாய்ப்பிருக்கும். அப்படி மறுப்பவர்களைக் கொலை செய்யவும் பின்னர் புங்குடுதீவில் நடந்தது போல கொலை செய்துவிட்டு விசாரணை என்று வரும் போது இராணுவமே அவள் ஒரு பாலியல் தொழிலாளி என்று கூறி கொலைக்கு நியாயம் சொன்னதையும் மறந்திவிட முடியாது. இப்படியானவர்களின் செயற்பாடுகளே இராணுவத்துக்கு இச்செயல்களைச் செய்ய துணிவை வழங்குகிறது. இராணுவத்தோடு இயங்கும் துணை இராணுவக் குழுக்கள் கூட இப்படியான பெண்களை அறிமுகப்படுத்தி தங்கள் பிழைப்பையும் பார்த்துக் கொள்கின்றனர். இப்படியான அவர்களின் இருப்பு வழங்கும் ஒரு சிலருக்கான நன்மையைவிட பலருக்குப் பாதிப்பு என்பதையும் கவனத்தில் நோக்குதல் வேண்டும்.

உண்மையில் அவர்களுக்கு தங்களின் பிள்ளைகள் மீது குடும்பத்தின் மீது அக்கறையிருந்தால் வழங்கப்படும் எச்சரிக்கைகளை அடுத்து அவர்கள் தங்களைத் திருத்தி வாழப் பழகிக் கொள்வர். கிராம அலுவலர்கள் மூலமாக தொடர்பு கொண்டு விடயங்களை சம்பந்தப்பட்ட தரப்புக்கு அறிவித்தால் அவர்களே இவர்களுக்கு உதவி செய்வர் மறு வாழ்வுக்கு. அப்படி விடுதலைப் புலிகளால் சுய தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு மறுவாழ்வளிக்கப்பட்ட பலர் இருக்கிறார்கள். அதை இப்போ எல்லாளன் படை செய்ய மறுக்காது என்றே கூறலாம்.

அந்த நபரின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் போதோ அல்லது சமுகத்தில் பல இடங்களில் மனக்கஷ்டங்களுக்கு ஆளாகுவார்கள்.

இதை சம்பந்தப்பட்ட செயலில் ஈடுபடுபவர்கள் சிந்திக்க வேண்டும். நாம் முதலே சுட்டிக்காட்டியது போல பாலியல் தொழில் செய்வோர் தங்களை மட்டுமன்றி தாங்கள் சார்தோரையும் சீரழிக்கின்றனர் என்று. இது அவர்களா சிந்தித்து திருந்தாதவரை அவர்கள் சார்ந்தோருக்கு வரப்போகும் கெடுதிக்கு முடிவு கிடைக்காது. இதில் எல்லாளன் படையில் குறை சொல்ல முடியாது. அவர்கள் எச்சரிக்கைகளின் பின்னர்தான் தகுந்த கால அவகாசத்தின் பின்னர் தான் தண்டனைகள் வழங்குகின்றனர்.

எனவே போர்சூழ்நிலையில் ஏற்படும் இந்த துரதிர்ஸ்டவசமான சம்பவங்களுக்கு அறிக்கைகள் தேவையில்லை என்பதோடு விரைந்து போரை முடிவுக்கு கொண்டுவருவதே மக்களுக்கு நல்லது.

போரை முடிவுக்குக் கொண்டு வரினும் தமிழீழச் சட்டத்தின் பிரகாரம் குடும்பத்துக்கு அப்பாலான அனைத்துவித பாலியல் துர்நடத்தைகளும் கடும் தண்டனைக்குரிய குற்றமாகவே இருக்கும். எனவே பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டு கீழ்தரமான சமூக ஒழுங்கை வளர்க்கலாம் என்ற கனவில் வாழ்பவர்கள் அதைக் கலைத்துக் கொண்டு உயர்ந்த மனித சமூகத்துக்குப் பாதுகாப்பான தனி மனித ஒழுக்கங்களைப் பின்பற்ற கற்றுக்கொள்வதோடு மனித உரிமைகள் என்பது தனக்கு மட்டுமானதன்றி தான் சார்ந்த சமூகத்துக்கும் பாதிப்பு உண்டாக்காததாக இருப்பது என்பதை உணர்ந்து அனைவரும் செயற்படுவது கட்டாயமாகிறது. அதே போல் தான் தேசத்தை சுயநலத்துக்காக எதிரிக்கு காட்டிக் கொடுப்பதும் விலை பேசுவதும் கடும் குற்றமாகக் கருதப்படுகிறது. அதை தனி மனித சுதந்திரம் என்று கூறி நியாயப்படுத்த முடியாது. :idea:

வந்த செய்திகளின் படி இவை இரண்டும் உண்மை.

2) சிங்கள ராணுவத்தினருடனும் பாலியல் தொடர்பு கொண்டவரா?

3) தேசத்திற்கெதிராக உளவு வேலையில் ஈடுபட்டவரா?

அப்படியென்றால் தமிழ்நெட், உதயன் போன்றவை மக்களுக்கு உண்மையான செய்திகளை தருவதில்லையா?

நடுநிலை ஊடகம் என்று பலராலும் கருதப்படும் தமிழ்நெட்டில் தேச விரோத செயல் ஏன் தவிர்க்கப்பட்டுள்ளது அல்லது மறைக்கப்பட்டுள்ளது?

தமிழ்நெற் செய்தியின்படி அப் பெண் சமூக விரோத செயல்களுக்காக தண்டிக்கப்பட்டிருக்கிறாள்.

உளவு பார்த்தலை சமூக விரோத செயல் என்று கூறுவதில்லை. தேச விரோத செயல் என்று கூறுவார்கள்.

பண்பாட்டு முறைகளுக்கு எதிரான செயல்களையே சமூக விரோத செயல்கள் என்று கூறுவார்கள்.

ஆகவே தமிழ்நெற் செய்தியின்படி குறிப்பிட்ட பெண் பாலியல் தொடர்பு வைத்திருந்ததற்காகவே தண்டிக்கப்பட்டிருக்கிறாள்.

இப்படியான செய்திகள் எமது ஊடகங்களில் வெளிவருவது மற்றைய சமூகங்கள் எங்களை ஒரு பிற்போக்கு மிக்க சமூகமாகவோ, தலிபான் போன்றவர்கள் என்றோ நினைக்கத் து}ண்டாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நெற் செய்தியின்படி அப் பெண் சமூக விரோத செயல்களுக்காக தண்டிக்கப்பட்டிருக்கிறாள்.

உளவு பார்த்தலை சமூக விரோத செயல் என்று கூறுவதில்லை. தேச விரோத செயல் என்று கூறுவார்கள்.

பண்பாட்டு முறைகளுக்கு எதிரான செயல்களையே சமூக விரோத செயல்கள் என்று கூறுவார்கள்.

ஆகவே தமிழ்நெற் செய்தியின்படி குறிப்பிட்ட பெண் பாலியல் தொடர்பு வைத்திருந்ததற்காகவே தண்டிக்கப்பட்டிருக்கிறாள்.

இப்படியான செய்திகள் எமது ஊடகங்களில் வெளிவருவது மற்றைய சமூகங்கள் எங்களை ஒரு பிற்போக்கு மிக்க சமூகமாகவோ, தலிபான் போன்றவர்கள் என்றோ நினைக்கத் து}ண்டாதா?

[[b]color=red]சபேசன் றொம்ப யோக்கியமாத்தான் இருக்குது உங்கள் சிந்தனை

இப்ப என்ன சொல்ல வருகிறீர்கள்

துரோகிகள் என்ற பெயரில் அப்பாவிகள் கொல்லப்படுகிறார்களா?

இல்லை துரோகங்கள் தண்டிக்கப்படும் போது சமுகக் குற்றங்களால் அவர் பெயர்களை மாசுபடுத்தக்கூடாது, அவர்கள் இந்த தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றா?

இல்லை வெறும் சமூகக் குற்றங்களுக்காகத்தான் கொல்லப்படுகிறார்கள் என்றா?

ஊடகங்களில் முரண்பாடான தகவல் வருவதால் தண்டனை தவறானதாகும் என்றா?

ஊடகங்கள் சம்பவங்களின் கர்த்தாக்கள் அல்ல, தங்களுக்கு கிடைத்த தகவல்களை தங்கள் பாணியில் போடுபவர்கள் மட்டுமே,

தவிர

அப்படி அவைகளுடன் முரண்பாடு ஏதும் இருந்தால் தனிப்பட்ட முறையில் தொடர்புகளைக் ஏற்ப்படுத்தி நிவர்தி செய்யவேண்டுமே தவிர அம்பலத்தில் வைத்து பல்லைப் புடுங்கிப்பார்க்கிற பொறுப்பில்லாத்தனமும் நல்லதில்லையே!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ சட்டக்கோவையில் இவ்வாறு உள்ளது. 18 வயதிற்கு குறைந்த பெண்ணின் சம்மதத்துடனோ சம்மதமின்றியோ 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணின் சம்மதமின்றியோ பாலியல் உறவு கொள்வது சட்டப்படி தண்டனை்னு உரிய குற்றமாகும். எனக்கு ஒன்று விளங்கவில்லை.. இதனை ஏன் எல்லாளன் படை செய்ய வேணும்.. சட்டத்தின் படி குற்றத்திற்கான தண்டனை அதுதான் எனில் இதனை காவல்துறையின் பெயரிலேயே செய்யலாம் தானே.. குற்றத்தினையும் அதன் சான்றுகளையும்.. அதற்கான தண்டனையையும் பகிரங்கமாக அறிவித்து உரிமை கோரலாம் தானே

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெற் செய்தியின்படி அப் பெண் சமூக விரோத செயல்களுக்காக தண்டிக்கப்பட்டிருக்கிறாள்.

உளவு பார்த்தலை சமூக விரோத செயல் என்று கூறுவதில்லை. தேச விரோத செயல் என்று கூறுவார்கள்.

பண்பாட்டு முறைகளுக்கு எதிரான செயல்களையே சமூக விரோத செயல்கள் என்று கூறுவார்கள்.

ஆகவே தமிழ்நெற் செய்தியின்படி குறிப்பிட்ட பெண் பாலியல் தொடர்பு வைத்திருந்ததற்காகவே தண்டிக்கப்பட்டிருக்கிறாள்.

இப்படியான செய்திகள் எமது ஊடகங்களில் வெளிவருவது மற்றைய சமூகங்கள் எங்களை ஒரு பிற்போக்கு மிக்க சமூகமாகவோ, தலிபான் போன்றவர்கள் என்றோ நினைக்கத் து}ண்டாதா?

நாம் எமது இன அடையாளத்தை முன் வைத்தே போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். எமக்கென்று தனித்துவமான வாழ்வியல் குடும்பவியல் பாங்குகள் விழுமியங்கள் உண்டு. அவற்றை நாம் பிற சமூகங்களோடு ஒப்பிட்டு எது மேன்மையானது எது முற்போக்கானது என்று திட்டவட்டமாக தீர்மானிக்க முடியாது.

கட்டுப்பாடற்ற பாலியல் நடத்தைகள்.. ஆண் பெண் கட்டுப்பாடற்ற பாலியல் தேர்வுகள் மனித சுதந்திரமாக தனித்துப் பார்க்கப்பட முடியாது. அதன் சமூகத்தாக்கங்கள் சமூகத்தி பொருளாதார அரசியல் ஸ்ரத்தன்மைகள் என்று பல காரணிகள் அதில் பங்கு வகிக்கின்றன.

மனிதன் உயிரிரியலின் அடிப்படையில் மனிதன் மொனோகமி (Monogamy) விலங்கு. ஆனால் சில சமூகத்தில் அது நாய் எலி போன்று பொலிகமி (Polygamy) என்ற நிலையில் இருக்கிறது. மொனோகொமியில் மனிதப் பெண்ணின் முட்டை தேர்ந்தெடுத்த விந்துக்கலத்துடன் கருக்கட்டுவதில்லை. அது தான் சந்திக்கும் முதல் விந்துடனேயே கருக்கட்ட ஆரம்பித்துவிடும்.

பொலிகொமியில், முட்டை பலரக விந்துக்கலங்கள் பல ஆண் இணைகளிடமிருந்து வரும் வேளையில் சேமித்து வைத்து தேர்வு முறையில் கருக்கட்ட அனுமதிக்கும் (நாய்களின் நடப்பது) எனவே தான் மனிதன் உயிரியல் அடிப்படையில் மொனோகொமிக்குரியவன் என்று அழைக்கப்படுகின்றான்.

அதாவது ஒருவன் ஒருத்தி என்ற அடிப்படை குறை வளர்த்தியுடன் குட்டிகளை ( பிள்ளை) ஈனும் விலங்குகளில் மனித அடங்குவதால் அவனுக்கு வலுவான குடும்பத்துணை அவசியமாகிறது என்ற வகையில் அமைகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற அந்த வகையில் வலுவான குடும்பம் என்ற கட்டமைப்பினூடு சந்ததிகள் வலுவான சிறப்பான கவனிப்போடு வளர இந்த மொனோகமி மனிதனில் கூர்ப்பின் வழி தெரிவாகிறது. பொலிகமி ஆதியான விலங்களின் பண்பியல்.

எனவே பிந்தங்கிய பொலிகமி நடத்தையைக் காண்பிக்கும் சமூகமா ( இதில் ஆண் பலதார மணம் புரிதலே ஆதிக்கமானது - polygynous, பெண் பல கணவங்களை தேர்வு -polyandrous செய்தல் மிகக் குறைவானது) அல்லது வலுவான சமூகக் கட்டமைப்பு அவசியமான மொனோகமி சமூகமா முன்னேற்றகரமனாது.

அதுபோக பொலிகமி பாலியல் நடத்தைக் கோலம் உளவியல் சமூக நடத்தையியல் உடலியல் பிரச்சனைகள் என்று பலவற்றிற்கு வித்திடும் நிலையில் வலுவான குடும்பத்தை அமைக்க மனிதர்களுக்கு வேறு உதவிகள் தேவைப்படுகின்றன. மேற்கில் பார்த்தால் சிங்கிள் மதர் இருப்பார். ஆனால் அவர் தனது உடல் தேவைகளுக்கு பல ஆண்களை அணுகுவார். அவர்களும் தங்கள் இனவிருத்திக்குரிய செயற்பாட்டை செய்துவிட்டு.. அது இப்போ நாகரிகமாக காட்டப்படுகிறது.. போய் விடுவார். இவரோ ஒவ்வொரு தடவையும் சந்ததி உருவாகாமல் இருக்க செயற்கை வழிகளில் இரசாயனங்களையும் உலோக, பிளாஸ்ரிக் பொருட்களையும் இனப்பெருக்க உறுப்பில் வைத்துக் கொள்வார்கள். அதுமட்டுமன்றி தப்பித் தவறி கருக்கட்டல் நிகழக்கூடாது என்பதற்காக கருத்தடை மாத்திரிகைகள் எடுப்பார்கள். அதையும் மீறி கருக்கட்டி விட்டால் கருக்கலைப்பு செய்வார்கள். இவற்றின் பக்க விளைவுகள் பற்றி தனியே ஆராய்ச்சி செய்து எழுதலாம். இங்கு அதுக்கு அவசியமில்லை. இவற்றின் பல பக்க விளைவுகள் பெண்களுக்கு உளவியல் தாக்கங்கள் அதிகரிகக் வகை செய்கின்றன என்பதைச் சுருங்கக் கூறலாம்.

இந்த நவீன முறைகள் எப்போ அறிமுகமாயினவோ..அதன் பின்னரே மனிதரில் ஆதியில்-- பண்பாடு நாகரிகம் தோன்ற முதல்-- இருந்த பாலியல் நடத்தைகள் மீண்டும் இன்று பல்கிப் பெருகி உள்ளன. இது மனிதப் பாலியலின் அடிப்படைகளையே உயிரின பாலியலின் அடிப்படையே தகர்த்து மனிதன் உடலாற்றுகைக்கு சோர்வு நீக்கியாக பாலியலை துஷ்பிரயோகம் செய்யவும் வக்கிரத்தனமான சிந்தனையின் வழி எழும் தனது பாலியல் உணர்வுகளை இயற்கைக்கு மாறாகச் செய்யவும் வழி வகுத்துள்ளது.

இது ஆதிகால மனிதன் சிந்தனையற்று விலங்குகள் போல உடல் இரசாயனத்தின் வழி உணர்வின் வழி கண்டதும் உறவு கொள்ளுதல் என்ற நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதோடு அதுவே உரிமை என்று காட்டப்பட வகை செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் அது இயற்கைக்கு மாறான மனித தனது வக்கிர சிந்தனைக்கு தேடிக் கொண்ட, மனிதன் தனது உடல் மன அழுத்தங்களில் இருந்து விடுபட புகுத்திக் கொண்ட வக்கிர பாலியல் நடவடிக்கைகள்.

பாலியல் சிந்தனை உணர்வு ஏன் மனிதனுக்கு வந்தது. தனது உடல் தேவைகளை வக்கிரங்களூடு தீர்ப்பதற்கல்ல. தனது சந்ததியைப் பெருக்குவதற்கு. அங்கு இயற்கை கூட எல்லை இடுகிறது. பிற முன்னேற்றமடையாத விலங்குகளில் இல்லாத பண்பு மனிதப் பெண்களிடம் வருகிறது. தகுந்த விருத்திக்குப் பின்னான முட்டை உற்பத்தி தகுந்த உடல்நிலை இழக்கப்பட்டதன் பின்னான முட்டை உற்பத்தியை நிறுத்தல் என்று வளமான சந்ததிக்கு என்று வலுவான சந்தர்ப்பங்களை இயற்கை மனிதனுக்கு கூர்ப்பின் வழி சேர்த்து வைத்திருக்கிறது. பெற்றோர் பராமரிப்பை வேண்டும் முழு விருத்தியற்ற குழந்தைப் பிறப்பு என்று மனிதன் தனது சந்ததியின் தப்பிப்பிழைப்புக்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்க இயற்கை வழி செய்துள்ளது. மனிதன் இன்று சிந்தனை விருத்தி கண்டு விட்ட நிலையிலும் இவற்றை சரியாகச் சிந்திக்காமல் வக்கிரத்தனமாக சிந்திக்க நினைக்கின்றான்.

எமது சமூக நடத்தை என்பது மிகவும் நுண்ணிய சிந்தனையியலோடு நகர்ந்து செல்கிறது. உண்மையில் விஞ்ஞான ரீதியில் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது எப்படி எங்கள் மூதாதையர்கள் இதை விளங்கிக் கொண்டு சமூக நடத்தைகளை ஒழுங்குகளை ஒழுக்கங்களைப் போதித்தனர் என்று. பொலிகமியாக வாழும் இடத்தில் பல ஆண் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைப்பான் அல்லது ஒரு பெண் பல ஆண்களுடன் தொடர்பு வைப்பாள் அந்த இடத்தில் அவளின் மீதானதும் அவளின் சந்ததி மீதானதும் பிணைப்பு உறுதியாக இருக்காது. கவனிப்பு இருக்காது. ஆண் - பெண் உறவின் அடிப்படையே சந்ததி உருவாக்கம் தான். இனப்பெருக்கத் தொகுதிகள் மனிதனில் படைக்கப்பட்டதே இனப்பெருக்குவதற்குத்தான். அந்த வகையில் மனிதன் மொனகமி விலங்காக உயிரியல் அடிப்படையில் இருப்பதால் ( மேற்குலக சமூகத்தில் கூட உயர்ந்த பண்பாடுக் கோலங்களைக் காண்பிக்கும் மக்கள் அதிகம் மொனோகமியாகத்தான் வாழ்கின்றனர். ஊத்தை வெள்ளைகள் என்று அழைக்கப்படுபவர்களே அதிகம் மட்டமான பொலிகமியாக வாழ விளைகின்றனர். அது அடிப்படை மனிதத் தன்மை அற்ற வாழ்க்கை என்று குறிப்பிட்டால் கூட சரியாகும். எலி நாய் போன்ற வாழ்க்கை.). ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு இந்த மொனோகமியை வலியுறுத்துகிறது.

அந்த வகையில் எமது சமூகம் மிகவும் கட்டுக்கோப்போடு சிந்தித்து பெண்ணுக்கு உடல் உள ரீதியில் பாதிப்பை உண்டு பண்ணாத வகையிலும் இயற்கைக்கு மாறாக நடந்து கொள்ளாத வகையிலும் மனிதன் தனது பாலியல் தேவைகளை கட்டுப்படுத்தி தீர்த்துக் கொள்ள குடும்பம் என்ற அலகுக்குள் ஒருவன் ஒருத்தி என்ற நடைமுறையைப் புகுத்தி இருக்கிறது. அது இயற்கையைச் சார்ந்து இருக்கிறது. அதுவே வளமான சந்ததிகளை அமைதியான சமூகத்தை மனிதன் இயற்கையாக உருவாக்க வழி செய்கிறது.

மேற்குலக வசதி வாய்ப்புக்கள் மறைத்து வைத்துள்ள மனித அவலங்கள் ஆங்காக்கே எட்டிப்பார்ப்பதால் தான் என்னவோ விவாகரத்துக்களும் கருக்கலைப்புக்களும் கருத்தடை மாத்திரைகள் கொண்டுள்ள சில கூறுகள் பங்களித்து உருவாக்கும் மார்பகப் புற்றுநோய் உள்ளடங்கலான பல நோய்களும் பெரிகிக் கிடக்கின்றன.

தறிகெட்ட பாலியல் நடத்தைகளால் உருவாகும் பெற்றோர் பராமரிப்பற்ற பிள்ளைகளால் சமூகச் சீர்கேடுகளில் சிக்கி சட்டங்கள் மூலம் மனிதர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்கள். எமது நாட்டுச் சட்டத்தில் உள்ள நெகிழ்வுத் தன்மைகள் மேற்கில் இல்லை. எமது சமூக நடத்தைகள் அங்கு தனி மனித ஒழுக்கங்களைப் போதிப்பதால் அநாவசியச் சட்டங்கள் இயற்றி மனிதனைக் கட்டுப்படுத்துவது எமது சமூகத்தில் கிடையாது.

எனவே மேற்குலகோடு ஒப்பிடும் போது எமது சமூக ஒழுங்கு என்பது மிகவும் முற்றேற்றகரமானது. அது குடும்பம் சந்ததி என்று மனிதப் பாசப்பிணைப்புகளோடு சுதந்திரத்தோடு செல்கிறது. ஆனால் மேற்கில் பிறந்த பிள்ளையையே தொட்டிலில் விட்டு விட்டு ஓடுவிடிகின்றனர் தாய்மார். இது குறைந்தது மனிதனை ஒரு உயிரினமாகக் கூடக் கருதமுடியாத அளவுக்கு அவனின் சிந்தனையில் வக்கிரத்தன்மை உதித்துள்ளதைத்தான் காட்டுகிறது. இது முற்போக்கல்ல. இது மிகவும் பிற்போக்கான நிலை உயிரியலின் அடிப்படையில்.

எனவே முதலில் எது முற்போக்கு எது பிற்போக்கு என்று ஆழமாகச் சிந்தித்துவிட்டு கருத்துக்களை எழுதுங்கள்.

எல்லாளன் படையினர் இந்த பொலிகமி கூட்டத்தின் பாலியல் வக்கிரத்துக்கு சமூகத்தில் இடமளிக்கக்கூடாது. என்பது சரியான பார்வையே. அது பல சமூக தனி மனிதப் பிறழ்வுகளுக்கும் சீரழிவுகளுக்கும் இட்டுச் செல்லும். இந்தப் பொலிகமிகள் எதிரிக்கு தீனிபோட்டு தேசத்தை விலைபேச அனுமதிக்க முடியாது. தகுந்த தண்டனைகளை எச்சரிகைகள் வழங்கி திருந்த சிந்திக்க சந்தர்ப்பம் அளித்து வழங்குவதில் தவறே இல்லை. அது தலிபான் செய்தால் என்ன அமெரிக்கா நஞ்சூட்டிக் கொன்றால் என்ன எல்லாளன் படை மண்டையில் போட்டால் என்ன எல்லாம் ஒன்றுதான். எதிர்பார்க்கப்படுவது மனித மனக்கட்டுப்பாடும் சமூக தனிமனித ஒழுக்கங்களும். :idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ சட்டக்கோவையில் இவ்வாறு உள்ளது. 18 வயதிற்கு குறைந்த பெண்ணின் சம்மதத்துடனோ சம்மதமின்றியோ 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணின் சம்மதமின்றியோ பாலியல் உறவு கொள்வது சட்டப்படி தண்டனை்னு உரிய குற்றமாகும். எனக்கு ஒன்று விளங்கவில்லை.. இதனை ஏன் எல்லாளன் படை செய்ய வேணும்.. சட்டத்தின் படி குற்றத்திற்கான தண்டனை அதுதான் எனில் இதனை காவல்துறையின் பெயரிலேயே செய்யலாம் தானே.. குற்றத்தினையும் அதன் சான்றுகளையும்.. அதற்கான தண்டனையையும் பகிரங்கமாக அறிவித்து உரிமை கோரலாம் தானே

யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவல்துறையின் செயற்பாடு இல்லை. புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போது சில பெண்களுக்கும் சில ஆண்களுக்கும் தமிழீழ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய மேற்படி பாலியல் குற்றங்களுக்காக மரண தண்டனைகள் அளிக்கப்பட்டுள்ளன. பகிரங்கமாகவே. பத்திரிகையாளர்கள் முன்னிலையில். :idea:

குறிப்பிட்ட ஒரு ஊடகம் என்று இல்லாமல், அனைத்து ஊடகங்களும் "பெண் உளவாளிகள்" விடயத்தில் ஒரே பாணியையே கடைப்பிடிக்கின்றன.

அதனால் இது குறித்து அம்பலத்தில் விவாதிப்பது தவிர்க்க முடியாதது ஆகிறிது.

இந்தச் செய்திகள் எங்கள் இனத்தை எந்த வகையில் வெளிப்படுத்துகிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஊடகங்களைக் கேள்வி கேட்கின்ற அதே நேரம், என்னுடைய கேள்வி முக்கியமாக சமூகத்தை நோக்கியே இருக்கிறது.

தண்டிக்கப்பட்டவர் குற்றவாளியா, இல்லையா என்ற கேள்விக்குள் நான் போகவில்லை. இங்கு இருந்து கொண்டு அதை சரியாக ஆராயவும் முடியாது.

என்னுடைய கேள்விகள் அதற்குள் அடங்கவில்லை

நெடுக்காலபோவான்! மிகவும் நாகரீகமான முறையில் "பாலியல் தொடர்பு வைப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்" என்பதை நியாயப்படுத்தி உள்ளீர்கள். என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், உங்களுடைய சில தரவுகள் பயனுள்ளவையாக இருக்கின்றன. அதற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசனுக்கு!

நீங்கள் உங்களை ஒரு முற்போக்குவாதியாகக் காட்டுவத்ற்க்காக இல்லாததெல்லாத்தயும் கற்பனை பண்ணுகின்றீர்கள். ஒரு நாலைந்து பேருடன் கதைத்து விட்டு சமுகம் இப்படித்தான் எண்ணுகின்ரது என்பது மடமைத்தனமும் அறிவற்ற செயலுமாகும்

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவான்! மிகவும் நாகரீகமான முறையில் "பாலியல் தொடர்பு வைப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்" என்பதை நியாயப்படுத்தி உள்ளீர்கள். என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், உங்களுடைய சில தரவுகள் பயனுள்ளவையாக இருக்கின்றன. அதற்கு நன்றிகள்.

பாலியல் செய்பவர்கள் கொலை செய்ய பட வேண்டும் என்பதில் எனக்கு உடன் பாடு இல்லாவிட்டாலும் ஆனாலும் தண்டனை கொடுக்க்கும் காலம் என்பது தான் முக்கியம்

போராட்ட காலத்தில் அதுவும் ஆக்கிரமிப்பு பகுதியில் இபப்டியான தண்டனைகள் தவிர்க்கவும் முடியாது அதுக்காக தண்டனையை கொடுக்காமல் இருக்கவும் முடியாது

ஒரு போராட்டத்தில் சிக்கி இருக்கும் மக்கள் இப்ப்படியான நேரத்தில் தேசத்துரோகத்துடன் சமுக சிரளைவுகளையும் அப்போ களை எடுக்க வேண்டும் இல்லையேல் விளைவு நாம் அதிகமாக் கொடுக்கவேண்டி வரும்.........

மீண்டும் சொல்கிறேன் ஆக்கிரமிப்பு இராணுவம் அந்த பெண்னை பாலியளுக்கு மட்டும் தான் பாவித்தான் என்பதை நம்பிக் கொண்டு இருக்கும் மனித உரிமை அமைப்புபாளர்கள் இல்லை நாங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறிப்பிட்ட ஒரு ஊடகம் என்று இல்லாமல், அனைத்து ஊடகங்களும் "பெண் உளவாளிகள்" விடயத்தில் ஒரே பாணியையே கடைப்பிடிக்கின்றன.

அதனால் இது குறித்து அம்பலத்தில் விவாதிப்பது தவிர்க்க முடியாதது ஆகிறிது.

இந்தச் செய்திகள் எங்கள் இனத்தை எந்த வகையில் வெளிப்படுத்துகிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஊடகங்களைக் கேள்வி கேட்கின்ற அதே நேரம், என்னுடைய கேள்வி முக்கியமாக சமூகத்தை நோக்கியே இருக்கிறது.

தண்டிக்கப்பட்டவர் குற்றவாளியா, இல்லையா என்ற கேள்விக்குள் நான் போகவில்லை. இங்கு இருந்து கொண்டு அதை சரியாக ஆராயவும் முடியாது.

என்னுடைய கேள்விகள் அதற்குள் அடங்கவில்லை

இராணுவத்தகவலுக்கு உபயோகப் படுத்தும் ஒரு முகவரை பெண்ணாக இருக்கும் போது பருவத்துக்கும் உபயோகப்படுத்த முடியாததா அந்தப்பெண்மை?

ஒழுக்கசீலரா அந்தப் பாதகரின் பருவவியாதி அல்ல துரோகவியாபாரம் படிதாண்டும் சூழ்நினக்குள் அவளை சிக்கவைக்காது பாதுகாக்குமா அதன் புண்ணியம்.

என்கருத்தில் எந்தக்குற்றமுமே மரணதண்டனைக்குரிய தகுதியாகாது.

இந்த சூழல் ஒரு இனத்தையே மரணத்துக்குள் தள்ளி விழுத்தக்குடிய

பொறுப்பில் இருக்கின்றது அவசியமான கடுந்தண்டனைகள் மருந்தாகாவிட்டால்.

நைனா! நான் இல்லாததை கற்பனை செய்யவில்லை.

எமது ஊடகங்கள் பெரும்பாலும் வாசிப்பவர்களை திருப்திப்படுத்தும் நொக்கிலேயே செய்திகளை தருகின்றன.

5 இராணுவத்தினர் பலி" என்று செய்தி தருகின்ற ஊடகத்தை விட "50 இராணுவத்தினர் பலி" என்று செய்தி போடுகின்ற ஊடகங்களை வாசிப்பதையே நாம் விரும்புகின்றோம்.

ஒரு சமூகம் எதை விரும்புகிறதோ அதை தருகின்ற ஊடகங்களே வரவேற்பை பெறுகின்றன.

இந்த நிலையில் என்னுடைய கேள்வியை சரியாக விளங்கிக் கொள்ளுங்கள்.

ஒரு பெண் உளவாளி தண்டிக்கப்படுகின்ற பொழுது அவருடைய "பாலியல் தொடர்பு" பற்றிய குற்றமும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய நிலை ஏன் இருக்கிறது?

இக் குற்றம் சுட்டிக்காட்டப்படுகின்ற பொழுது சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு கொடுக்கப்பட்ட தண்டனை குறித்து எமது சமூகம் சமாதானம் அடைகிறதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் எழுதியது

ஒரு பெண் உளவாளி தண்டிக்கப்படுகின்ற பொழுது அவருடைய "பாலியல் தொடர்பு" பற்றிய குற்றமும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய நிலை ஏன் இருக்கிறது?

சில காலத்துக்கு முன் ஒரு ஆன் உளவாளிக்கும் தண்டனை வழங்கப்பட்டது. அப்போதும் அவரது பாலியல் சேட்டைகள் சுட்டிக்காட்டப்பட்டது, நினைவுள்ளதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நைனா! நான் இல்லாததை கற்பனை செய்யவில்லை.

எமது ஊடகங்கள் பெரும்பாலும் வாசிப்பவர்களை திருப்திப்படுத்தும் நொக்கிலேயே செய்திகளை தருகின்றன.

5 இராணுவத்தினர் பலி" என்று செய்தி தருகின்ற ஊடகத்தை விட "50 இராணுவத்தினர் பலி" என்று செய்தி போடுகின்ற ஊடகங்களை வாசிப்பதையே நாம் விரும்புகின்றோம்.

ஒரு சமூகம் எதை விரும்புகிறதோ அதை தருகின்ற ஊடகங்களே வரவேற்பை பெறுகின்றன.

இந்த நிலையில் என்னுடைய கேள்வியை சரியாக விளங்கிக் கொள்ளுங்கள்.

ஒரு பெண் உளவாளி தண்டிக்கப்படுகின்ற பொழுது அவருடைய "பாலியல் தொடர்பு" பற்றிய குற்றமும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய நிலை ஏன் இருக்கிறது?

இக் குற்றம் சுட்டிக்காட்டப்படுகின்ற பொழுது சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு கொடுக்கப்பட்ட தண்டனை குறித்து எமது சமூகம் சமாதானம் அடைகிறதா?

அப்படி என்றால் நீங்கள் அவள் துரோகத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள் உங்கள் கருத்தில் அல்லவா?

அந்த துரோகத்தங்கத்தின் தரத்தைக்குறைப்பது தான் உங்கள் மனவாட்டத்தின் காரணமோ?

பல்கலைக் களகாத்தில் கல்வி கற்ப்பவளோடுகூட கூடவே ஒரு குழந்தைத் துணையாவது கூடித்திரிய அனுப்புகிற அந்த சமுதாயத்தின் கண்களுக்கு; 'பெண்ணியத்துக்கு மகுடமாக்கப்பட வேண்டிய' இந்த தங்கத்தை அந்த கடுவன்களோடு இரவு, பகல் சகவாசத்தை இப்படியா பார்க்கப்பட வேண்டும் என்று மனம் பொங்குகின்றதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகவே இது ஆண் பெண் வேற்றுமை இன்றி உளவு பார்ப்பத்ற்காக வழங்கப்பட்ட தண்டனை, இவர்கள் கசிப்பு காச்சியிருந்தால் இதுவும் ஒரு கொசுறு செய்தியாக வந்திருக்கும். ஆகவே பாலியல் விபச்சாரம் இங்கு ஒரு கொசுறுச்செய்தியாகும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமராட்சியில் ஈ.பி.டி.பி ஆதரவாளரான பெண் சுகாதாரத் தொண்டர் சுட்டுக்கொலை வடமராட்சியில் பெண் சுகாதாரத் தொண்டர் ஒருவர் புலிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர் ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சி (ஈ.பி.டி.பி) ஆதரவாளரான பருத்தித்துறை, ஒடக்கரையைச் சேர்ந்த இளம் யுவதியான நாராயணமூர்த்தி யசோதினி (வயது 25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில் தொண்டராகக் கடமை புரிந்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த புலிகள் இவ்யுவதியைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இவரது படுகொலைக்கு புலிகள், எல்லாளன் படை எனும் பெயரில் உரிமை கோரியுள்ளனர். இவரது சடலம் பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பாக பருத்தித்துறைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை டெனிஷ் கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றிய இவரது சகோதரர் ஒருவரும் மைத்துனரும் கடந்த மே மாதம் ஹைஸ் வானில் வந்த புலிகளால் கடத்தப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.epdpnews.com

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் தமிழ்நெட், உதயன் போன்றவை மக்களுக்கு உண்மையான செய்திகளை தருவதில்லையா?

நடுநிலை ஊடகம் என்று பலராலும் கருதப்படும் தமிழ்நெட்டில் தேச விரோத செயல் ஏன் தவிர்க்கப்பட்டுள்ளது அல்லது மறைக்கப்பட்டுள்ளது?

எல்லாச் செய்திகளும் ஒரே மாதிரி வர வேண்டும் என்று தேவையில்லையே! ஒவ்வொருவரும் தமக்கு கிடைக்கின்ற செய்திகளைத் தான் போடுகின்றார்களே தவிர, விபரமான செய்தி, விபரம் இல்லாத செய்தி என்பது ஒவ்வொரு செய்தி நிறுவனங்களையும் பொறுத்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.