Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரு உயிர்களை தொலைத்து...

Featured Replies

சில வருடங்களுக்கு முன்னர் யாழில் தான் நான் முதன் முதலில் கதை எழுத ஆரம்பித்தேன்...இப்பொழுது என்னுடைய சிறுகதைகளில் ஒன்று தாயகபறவைகள் இதழில் வெளியாகி உள்ளது... இந்த கதையும் யாழுக்கே சமர்ப்பணம்...

thuya.JPG

தொடர்ந்து வாசிக்க....:

http://thayakaparavaikal.com/stories.php

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு யாபகத்துக்கு வருகிறது. தாயார் மேல் மாடியில் நித்திரையில் இருக்க, வீட்டின் கீழ்ப்பகுதியில் 4 வயதுப்பிள்ளையும் 7,8 மாதக்கைக்குழந்தையும் விளையாடிக்கொண்டிருக்க, அக்குழந்தையின் உடையில் விளையாடும் போது அழுக்கு ஏற்படுகிறது. இதனால் உடையில் ஏற்பட்ட அழுக்கினை நீக்க, 4 வயதுப்பிள்ளை, அந்தக்குழந்தையினை உடுப்புத்தோய்க்கும் இயந்திரத்தினுள் இட்டு இயந்திரத்தினை வேலை செய்ய அழுத்தியினை அழுத்தியது.

தாய் நித்திரை விட்டு எழும்பி குழந்தையினைத்தேட, 4 வயது பிள்ளை, உடுப்புத்தோய்க்கும் இயந்திரத்தில் குழந்தை இருப்பதாகச் சொல்ல, அங்கே சென்று திறந்து பார்க்க காயங்களுடன் உயிரற்ற நிலையில் குழந்தை.

  • தொடங்கியவர்

கொடுமை கொடுமை....பிள்ளைகள் மேல் கவனமில்லா

நான் முதலில் வாசிக்கவில்லை இப்போது தந்த இணைப்பில் வாசித்தேன் நன்ராக இருந்தது வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

மிக்க நன்றி ஈழவன் :)

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளினைக் கவனமாகப்பார்க்கவேண்டும் என்பதை உணர்த்தும் கதை

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாருக்கு பாராட்டுக்கள்

பெற்றோரின் கவனக்குறைவால் எவ்வளவு விபரீதங்கள். இது நிஜச்சம்பவம் என்று நினைக்கிறேன். இல்லையா தூயா? அதனை அழகாக கதையிலும் கூறி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

தூயா ... உங்கள் முதல் சிறுகதையா....கதையின் கரு தாக்கத்தை நன்றாக உணர்த்துகிறீர்கள். பாராட்டுக்கள்.......வருங்காலத்த

  • தொடங்கியவர்

மிக்க நன்றி அரவிந்தன், கறுப்பி, ரசிகை & சின்னகுட்டி :lol:

சின்னகுட்டி - இதற்கு முன்னரும் சில கதைகளை எழுதி உள்ளேன்...யாழில் இருக்கே..இல்லை எனில் என்னுடைய ப்ளொக்கிலும் பார்க்கலாம்.. உங்கள் கருத்திற்கு நன்றி..வடிவம் என்ன என்பதே எனக்கு தெரியாது..நீங்கள் சொல்லி தந்தால் கற்றுகொள்வேன் ..ஆவலுடன் பதிலை எதிர்பார்க்கின்றேன்..

வாழ்த்துக்கள் தூயா. தொடர்ந்து உங்களுடைய படைப்புக்களை தாருங்கள். இப்போது உங்களுடைய எழுத்துநடை மெருகேறி வருகின்றது. தொடர்ந்து எழுதி வந்தீர்களானால் காலப்போக்கில் சிறந்த எழுத்தாளரா ஆகலாம்.

புலம்பெயர்ந்த பல தமிழ் குடும்பங்களின் நிலையும் கதையில் வரும் வரதன் குடும்பத்தின் நிலையை போன்றது தான். :lol: தாயகத்தில் என்றால் அந்த குழந்தைகளை கொஞ்சவும் பராமரிக்கவும் எத்தனை உறவுகள் நம்மை சூழ இருக்கும். ஆனால் புலம்பெயர்ந்த தேசத்தில் யாரிருக்கின்றார்கள் ......

புலம் பெயர்ந்த அநேகமான தமிழ் குடும்பங்களில் இப்படியான பிரச்சனைகள் தான் அதிகம். 3 வயதுப்பிள்ளையையும் அந்த சிறு குழந்தையையும் தனியா விட்டு போக எப்படித்தான் அந்த தாய்க்கு மனம் வந்ததோ?

அழகாக நிஐக்கதையை அப்படியே எழுதுகின்றீர்கள் தூயா. பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி அரவிந்தன், கறுப்பி, ரசிகை & சின்னகுட்டி :(

சின்னகுட்டி - இதற்கு முன்னரும் சில கதைகளை எழுதி உள்ளேன்...யாழில் இருக்கே..இல்லை எனில் என்னுடைய ப்ளொக்கிலும் பார்க்கலாம்.. உங்கள் கருத்திற்கு நன்றி..வடிவம் என்ன என்பதே எனக்கு தெரியாது..நீங்கள் சொல்லி தந்தால் கற்றுகொள்வேன் ..ஆவலுடன் பதிலை எதிர்பார்க்கின்றேன்..

:(:lol::)

நல்ல ஆளை கேட்டீங்கள்.. இந்த.சின்னக்குட்டி உந்த புளக்கிலை அநுப பகிர்வு தலைப்பு கீழை தான் எழுதிறனான்... இன்னும் ஒரு சிறு கதையே வாழ் நாளில் நான்... எழுதினதே இல்லை... நான் எப்படி உங்களுக்கு சொல்லி தாறது... அதுவும் ஒரு கதை தான்...

உங்களுக்கு தெரியாததே... தூயா...சிறுகதை என்றால் சின்னக்கதை இல்லையாம்... அதற்கு வடிவம்,சமன்பாடு தேற்றம்... எல்லாம் இருக்காம் எண்டு உந்த இலக்கிய பெரிசுகள் விமர்ச்சிக்கிறாகள் சொல்லிக்கொண்டு நிக்கிறவை....

நீங்களும் பார்த்தால் நல்லாய் எழுதிறீங்கள்... இந்த இலக்கிய சமுத்திரத்திலை இறங்கக்கை உங்கட சிறுகதை நல்லாயிருக்கட்டும் என்று சொல்லிப்போட்டன்...குறை நினைக்க வேண்டாம்...

சொல்லப்போனால் இவையின்ரை கலை வடிவம் இலக்கணம் , இலக்கிய வடிவம் அதுகள் இதுகள் என்ற கோட்டுக்குள்ளை நிற்க நான் விரும்பிறேல்லை... ஏதோ டைரி மாதிரி எழுதிட்டு போறனான்,, எனக்கு பிரச்சனை இல்லை...

நீங்கள் வாழும் பிள்ளை வளரும் பிள்ளை அதனால் சொன்னான்..... :):(

:cry: :cry: :cry: :cry: :cry:

தூயா பபா இது உண்மைச் சம்பவம் தானே. லண்டனில் நடந்ததாகவும் ஒரு ஆசிய நாட்டு தம்பதியினர்க்கு தான் இக்கதி நேர்ந்ததாக முன்பு யாழில் வாசித்த நினைவாக இருக்குது.

பாவம்

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ighlight=#32198

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் தூயா. தொடர்ந்து உங்களுடைய படைப்புக்களை தாருங்கள். இப்போது உங்களுடைய எழுத்துநடை மெருகேறி வருகின்றது. தொடர்ந்து எழுதி வந்தீர்களானால் காலப்போக்கில் சிறந்த எழுத்தாளரா ஆகலாம்.

புலம்பெயர்ந்த பல தமிழ் குடும்பங்களின் நிலையும் கதையில் வரும் வரதன் குடும்பத்தின் நிலையை போன்றது தான்.  :lol:  தாயகத்தில் என்றால் அந்த குழந்தைகளை கொஞ்சவும் பராமரிக்கவும் எத்தனை உறவுகள் நம்மை சூழ இருக்கும். ஆனால் புலம்பெயர்ந்த தேசத்தில் யாரிருக்கின்றார்கள் ......

மதன் அண்ணா, மிக்க நன்றி...முன்னேற தான் முயற்சி எடுத்துள்ளேன்....உங்கள் கருத்துக்களால் நிறைய படிக்கிறேன்..நன்றி

  • தொடங்கியவர்

புலம் பெயர்ந்த அநேகமான தமிழ் குடும்பங்களில் இப்படியான பிரச்சனைகள் தான் அதிகம்.  3 வயதுப்பிள்ளையையும் அந்த சிறு குழந்தையையும் தனியா விட்டு போக எப்படித்தான் அந்த தாய்க்கு மனம் வந்ததோ?

அழகாக நிஐக்கதையை அப்படியே எழுதுகின்றீர்கள் தூயா. பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்.

உண்மை தான்...:lol: நினைத்தாலே மனதை ஏதோ செய்யும்...புலத்தில் இப்படி எத்தனை அவலங்கள்...

நன்றி ரமா

வாழ்த்துக்கள் தூயா

  • தொடங்கியவர்

மிக்க நன்றி நிலா, சின்னகுட்டி, & இலக்கியன்..

நெடுக்கால போவான் என்ன சொல்ல வாறிங்க...பார்க்க தெரியலையே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.