Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்ற அறிக்கையைத் தாமதப்படுத்த ஜெனீவா சென்றார் சுமந்திரன்!

Featured Replies

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனீவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அங்கு அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளையும், சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை நடத்தும் குழுவினரையும் சந்தித்து பேசியுள்ளார்.

அடுத்த மாதம் சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்பட்டாலும், அதனை தாமதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுமந்திரனின் தீடீர் ஜெனீவாப் பயணம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் அண்மைய நடவடிக்கைகளால் அவருக்கு எதிரான கருத்துக்கள் கூட்டமைப்பு வட்டாரங்களிலும், மக்கள் மத்தியிலும் வலுவடையத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் திட்டமிட்டவாறு அந்த அறிக்கையை தமதமின்றி சபையில் முன்னிலைப்படுத்துமாறு கோருவதற்காக தாம் இந்த விஜயத்தை மேற்கொண்டதாக சுமந்திரன் தகவலைக் கசிய விட்டுள்ளார்.

 

http://www.pathivu.com/news/37549/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எமக்கு போர் குற்ற விசாரணையே தேவயில்லை என்று சொல்லிவிட்டு வருவார்.......இந்த அரை சிங்க்களவரை யாருப்ப கூத்தமைப்பில் சேர்த்தது...

  • கருத்துக்கள உறவுகள்
 மகிந்தாவுக்கு ஒரு டக்கி, கருணா இன்ன பிற, மைத்திரிக்கு ஒரு சுமந்திரன். ஆட்சி மாறும்போது அமைச்சர் மாறுவது இயல்பு.
சுமந்திரன் ஒரு சிறப்பான ஆட்டக்காரன். கூட்டமைப்புடன்,  மகிந்தாவுடன், மைத்திரியுடன்  பலே ஆள்.

ஐ.நா விசாரணைக் குழுவுடன் கூட்டமைப்பு அவசர சந்திப்பு – அறிக்கையை பிற்போடக்கூடாது என்று கோரிக்கை FEB 07, 2015 | 13:07by கார்வண்ணன்in செய்திகள்

un-logo-300x197.jpgசிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை, திட்டமிட்டபடி அடுத்தமாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா விசாரணைக் குழுவின் தலைவர் சன்ட்ரா பெய்டாசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான குழுவை, ஜெனிவாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

அடுத்த மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள விசாரணை அறிக்கை தொடர்பாகவே இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சந்திப்பில், திட்டமிட்டபடி அடுத்தமாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஐ.நா குழுவின் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அறிக்கை சமர்ப்பிப்பதை பிற்போடக் கூடாது என்றும், ஐ.நா விசாரணைக் குழுவின் தலைவர் சன்ட்ரா பெய்டாசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,

“சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுப்பதற்காக விசாரணை அறிக்கையை தாமதிக்க மேற்கொள்ளப்படும் நகர்வுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிந்துள்ளது.

ஆனால், ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு புலம்பெயர் தமிழர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடுமையாக பாடுபட்டிருக்கின்றது.

அமெரிக்காவும் கடுமையாக உழைத்து பல நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தது.

விசாரணைகளுக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகளை நாம் பெற்றிருக்கிறோம்.

எனவே தமிழ் மக்களுக்கு இந்த விசாரணை முக்கியமானது.

இந்த அறிக்கை தாமதமாக வருகிறது என்றால், இறுதியில் எதுவும் நடக்காது என்று தான் அர்த்தமாகும்.

எனவே, திட்டமிட்டபடி, விசாரணை அறிக்கை, வரும் மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்கப்பட  வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை” என்று தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/02/07/news/3458

 

இந்த தலைப்பை வாசிக்கவே நினைச்சன் இது பதிவு தளத்தில வந்த செய்தியாகதான் இருக்கும் எண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

பிடிபட்ட ஆட்களின் தரவுகள் எங்கே எண்டு my3 கேட்க  முழிசிகொண்டு நிண்ட கூட்டம் வானம் ஏறி கொக்கா பிடிக்க போகுது ?

 

 

 யாழில் சுமத்திரனுக்கு வால் பிடித்த கூட்டம் எங்கை போய் ஒளித்து கொண்டுதுகலோ  தெரியலை.

தமிழ் வாக்காளர்களால் தெரிவு செய்யப்படாதவர் தான் சுமந்திரன் இருந்தாலும் இது ஆதாரம் இல்லாதே செய்தி.

 

பதிவு தளத்தின் திருகுதாள செய்திகளில் ஒண்று. 

 

இன்னும் எத்தினை நாளைக்குத்தான் உந்த மானங்கெட்ட புளைப்போ?

சுமந்திரன் சொல்லி அமெரிக்காவும் ஐ.நாவும் கேட்குமா? 

 

சுமந்திரன் போனால என்ன விட்டால் என்ன, புலத்தில் இருந்து போராடினாலும் விட்டாலும் இந்த முறை விசாரணை பிற்போடப்படும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா விசாரணைக்குழுவுடன் கூட்டமைப்பு ஜெனிவாவில் சந்திப்பு! - திட்டமிட்டபடி அறிக்கையை வெளியிடுமாறு கோரிக்கை. 

[saturday 2015-02-07 20:00]
Sandra-Beidas-350-news.jpg

ஜெனீவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை தொடர்பில் நடத்தப்பட்ட சர்வதேச விசாரணை அறிக்கை எதிர்வரும் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படாமல் பிற்போடப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. இந்த நிலையில் திட்டமிட்டபடி இந்த அறிக்கையை முன்வைக்க வேண்டும் என்று ஜெனிவாவில் அவர் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை கோரியுள்ளார்.

   

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான குழுவையும் சுமந்திரன் ஜெனிவாவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.அடுத்த மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள விசாரணை அறிக்கை தொடர்பாகவே இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சந்திப்பில், திட்டமிட்டபடி அடுத்தமாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஐ.நா குழுவின் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அறிக்கை சமர்ப்பிப்பதை பிற்போடக் கூடாது என்றும், ஐ.நா விசாரணைக் குழுவின் தலைவர் சன்ட்ரா பெய்டாசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னண்ணே கதை அநியாயத்துக்கு இப்படி திரும்பிட்டுது? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.