Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் பிடிக்குள் சிக்காமல் நழுவினார் மைத்திரி

Featured Replies

இந்தியாவின் பிடிக்குள் சிக்காமல் நழுவினார் மைத்திரி FEB 18, 2015 | 0:50by இந்தியச் செய்தியாளர்in செய்திகள்

modi-sirisena-300x200.jpgசீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், சீனாவையோ, இந்தியாவையோ சார்ந்திருக்கப் போவதில்லை என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக, கடந்த 15ம் நாள் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம், இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இந்தப் பேச்சுக்களின் போதே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து இந்தியாவிடம் திட்டவட்டமான சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

“இந்தியாவுடனும் சீனாவுடனும், எமது அரசாங்கம் நட்புறவுடன் இருக்கும்.  ஆனால் எந்தவொரு தரப்பையும் சார்ந்து செயற்படாது.

புதுடெல்லிக்கும் பீஜிங்கிற்கும் இடையில் அணிசேராமல் செயற்படும். சீனாவுடனும் கூட எமது அரசாங்கம் இயல்பான உறவை பேண விரும்புகிறது.” என்று மைத்திரிபால சிறிசேன தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்திலும், மைத்திரிபால சிறிசேனவின் தமது தெளிவான நிலைப்பாட்டை இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.

‘சீனாவின் 1.4 பில்லியன் டொலர் முதலீட்டில் முன்னெடுக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின், 25 வீதமான கட்டுமானப் பணிகள் முடிந்திருக்கின்றன.

இந்தக் கட்டத்தில் சீனாவை வெளியேறுமாறு கோருவது சாத்தியமற்றது, நடைமுறைக்கு ஏற்புடையதாகாது.

முன்னைய ஆட்சியாளர்களால் இறுக்கமான உடன்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை விட்டு சீனாவை வெளியேற்றினால், அதற்காக சிறிலங்கா கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.’ என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

எனினும், 500 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரத்தில், 80 ஏக்கர் நிலத்தை சீனாவுக்குச் சொந்தமாக கையளிக்க வகை செய்யும் உடன்பாட்டு விதி குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று மைத்திரிபால சிறிசேன இந்தியத் தலைவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

எனினும், இந்த நிலம் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு வரும் 27ம், 28ம் நாள்களில் பயணத்தை மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்த விவகாரம் குறித்து அந்த நாட்டின் தலைவர்களுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2015/02/18/news/3789

ரஜீவ் ஜே ஆர் காலத்தில் ஆரம்பித்த சித்து விளையாட்டு முடியுதேயில்லை

 

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை, இவ்வளவு தூரம் ஸ்ரீலங்காவில்... கால் ஊன்று மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது இந்தியாவின் குற்றம்.
விடுதலை புலிகளை அழிக்க, இந்தியா உதவி செய்யாமல் இருந்திருந்தால்..... இந்தப் பிரச்சினை எழுந்திருக்கவே மாட்டாது.
மைத்திரி, கூறியது சரியாகவே படுகின்றது.

  • தொடங்கியவர்

சீனாவை, இவ்வளவு தூரம் ஸ்ரீலங்காவில்... கால் ஊன்று மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது இந்தியாவின் குற்றம்.

விடுதலை புலிகளை அழிக்க, இந்தியா உதவி செய்யாமல் இருந்திருந்தால்..... இந்தப் பிரச்சினை எழுந்திருக்கவே மாட்டாது.

மைத்திரி, கூறியது சரியாகவே படுகின்றது.

 

சீனக்கயூனிசத்தின் தாராள கொள்கையைக் கொண்டது தான் சிறிலங்கா சுதந்திரக்கட்சி.அது தான் அந்தக்காலத்திலிருந்து வயிறு எரிய எரிய வெள்ளைப்பச்சை (கூப்பன் அரிசியும் மாங்காய் சொதியும்) அரிசி சாப்பிட்டது நினைவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டியாடும் சாகசம். :(

இராவண வாரிசுகளை கூட்டு சேர்ந்து அழித்தாக மனதிற்குள் இருவருக்கும் பூரிப்பு..! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை, இவ்வளவு தூரம் ஸ்ரீலங்காவில்... கால் ஊன்று மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது இந்தியாவின் குற்றம்.

விடுதலை புலிகளை அழிக்க, இந்தியா உதவி செய்யாமல் இருந்திருந்தால்..... இந்தப் பிரச்சினை எழுந்திருக்கவே மாட்டாது.

மைத்திரி, கூறியது சரியாகவே படுகின்றது.

 

 

எனக்குப்புரியாத ஒன்று

இலங்கை எதுக்காக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிரச்சினையில் நசுக்கப்படணும்

இலங்கை ஒரு தனி அரசு

அங்குள்ள மக்களே தமது பிரச்சினைகளைப்பார்க்கவேண்டும்

இவர் சொல்கிறார்

அவர் சொல்கிறார் என்று எதற்கு ஆடணும்....

 

இதுவரை ஆடியதால் வந்தவைகளை கணுக்குப்போட்டாவது

சிங்களத்தலைமைகள் 

தமது உள்வீட்டுச்சிக்கல்களுக்க நியாயமான தீர்வகளை தமக்குள் காணமுன்வரணும்

இது ஒன்றே இந்த இரு சக்திகளுக்குமிடையிலிருந்து விலகி

இலங்கையை இவர்களைவிட பெறுமதியான பூமியாக மாற்ற உதவும்..

 

அல்லது

இந்தியா மீண்டும் தமிழர்களை தானே தத்தெடுக்க முயலும்...

முடிவு மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்...

இதை இலங்கையிலுள்ள இரு இனமும் தாங்காது இனி.......

எனக்குப்புரியாத ஒன்று

இலங்கை எதுக்காக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிரச்சினையில் நசுக்கப்படணும்

இலங்கை ஒரு தனி அரசு

அங்குள்ள மக்களே தமது பிரச்சினைகளைப்பார்க்கவேண்டும்

இவர் சொல்கிறார்

அவர் சொல்கிறார் என்று எதற்கு ஆடணும்....

 

இதுவரை ஆடியதால் வந்தவைகளை கணுக்குப்போட்டாவது

சிங்களத்தலைமைகள் 

தமது உள்வீட்டுச்சிக்கல்களுக்க நியாயமான தீர்வகளை தமக்குள் காணமுன்வரணும்

இது ஒன்றே இந்த இரு சக்திகளுக்குமிடையிலிருந்து விலகி

இலங்கையை இவர்களைவிட பெறுமதியான பூமியாக மாற்ற உதவும்..

 

அல்லது

இந்தியா மீண்டும் தமிழர்களை தானே தத்தெடுக்க முயலும்...

முடிவு மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்...

இதை இலங்கையிலுள்ள இரு இனமும் தாங்காது இனி.......

இதற்கு தானே திருப்பி திருப்பி சொல்லுகின்றோம் கொஞ்ச அரசியலை படிக்க சொல்லி . :o

அரசியல் விஞ்ஞானத்தில் சர்வதேச உறவுகள் என்று ஒரு பாடம் இருக்கு அதை வாசித்தாலே விளங்கும் அண்ணை .

 

உதாரணத்திற்கு கனடாவில் நான் ஒரு வீட்டையோ அல்லது வியாபார நிலையத்தையோ சொந்தமாக வாங்கிவிட்டு நான் விரும்பியபடி கட்டிடத்தில் மாற்றங்களையோ விரும்பிய வியாபாரத்தையோ செய்ய முடியாது .பல விடயங்களுக்கு நகரசபையிடம் அனுமதி பெறவேண்டும் . எனது வீடு அல்லது வியாபாரம் நான் என்னவும் செய்வன் என்று சொல்ல முடியாது .

அதுபோலத்தான் நாடுகளின் சுதந்திரமும் அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்யமுடியாது அதற்கு வல்லரசுகள் ,பிராந்திய வல்லரசுகள் ஒரு வரையறை வைத்திருக்கின்றார்கள் அதை தாண்டி செயற்படுவது மிக கஷ்டம் .

 

சுதந்திரநாடுகள் என்றால் அணுக்குண்டு தயாரிக்க எவரையும் அனுமதிக்கலாம் தானே இல்லை அதற்க்கு இந்த வல்லரசுகள் விடாது .

அதுதான் ஜே ஆர் இந்தியா தனக்கு தந்த அலுப்பிற்கு புலிகளுடன் கொழுவிவிட்டார் .

 

புலிகளுக்கு இவை இன்னமும் விளங்காமல் மகாபாரத காலத்தில் இருப்பதுதான் வேடிக்கை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு தானே திருப்பி திருப்பி சொல்லுகின்றோம் கொஞ்ச அரசியலை படிக்க சொல்லி . :o

அரசியல் விஞ்ஞானத்தில் சர்வதேச உறவுகள் என்று ஒரு பாடம் இருக்கு அதை வாசித்தாலே விளங்கும் அண்ணை .

 

உதாரணத்திற்கு கனடாவில் நான் ஒரு வீட்டையோ அல்லது வியாபார நிலையத்தையோ சொந்தமாக வாங்கிவிட்டு நான் விரும்பியபடி கட்டிடத்தில் மாற்றங்களையோ விரும்பிய வியாபாரத்தையோ செய்ய முடியாது .பல விடயங்களுக்கு நகரசபையிடம் அனுமதி பெறவேண்டும் . எனது வீடு அல்லது வியாபாரம் நான் என்னவும் செய்வன் என்று சொல்ல முடியாது .

அதுபோலத்தான் நாடுகளின் சுதந்திரமும் அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்யமுடியாது அதற்கு வல்லரசுகள் ,பிராந்திய வல்லரசுகள் ஒரு வரையறை வைத்திருக்கின்றார்கள் அதை தாண்டி செயற்படுவது மிக கஷ்டம் .

 

சுதந்திரநாடுகள் என்றால் அணுக்குண்டு தயாரிக்க எவரையும் அனுமதிக்கலாம் தானே இல்லை அதற்க்கு இந்த வல்லரசுகள் விடாது .

அதுதான் ஜே ஆர் இந்தியா தனக்கு தந்த அலுப்பிற்கு புலிகளுடன் கொழுவிவிட்டார் .

 

புலிகளுக்கு இவை இன்னமும் விளங்காமல் மகாபாரத காலத்தில் இருப்பதுதான் வேடிக்கை .

“புலிகளுக்கு இவை இன்னமும் விளங்காமல் மகாபாரத காலத்தில் இருப்பதுதான் வேடிக்கை...”

 

புலி போய் 5 வருஷமாச்சு. இப்போது சம்பந்தன்-சுமந்திரன் ஆட்சிக்காலம்.  Double 'S' Era.

Edited by sabesan36

உதாரணத்திற்கு கனடாவில் நான் ஒரு வீட்டையோ அல்லது வியாபார நிலையத்தையோ சொந்தமாக வாங்கிவிட்டு நான் விரும்பியபடி கட்டிடத்தில் மாற்றங்களையோ விரும்பிய வியாபாரத்தையோ செய்ய முடியாது .பல விடயங்களுக்கு நகரசபையிடம் அனுமதி பெறவேண்டும் . எனது வீடு அல்லது வியாபாரம் நான் என்னவும் செய்வன் என்று சொல்ல முடியாது .

அதுபோலத்தான் நாடுகளின் சுதந்திரமும் அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்யமுடியாது அதற்கு வல்லரசுகள் ,பிராந்திய வல்லரசுகள் ஒரு வரையறை வைத்திருக்கின்றார்கள் அதை தாண்டி செயற்படுவது மிக கஷ்டம் .

 

சுதந்திரநாடுகள் என்றால் அணுக்குண்டு தயாரிக்க எவரையும் அனுமதிக்கலாம் தானே இல்லை அதற்க்கு இந்த வல்லரசுகள் விடாது .

 

 

இதற்குமட்டும்தான் பச்சைபுள்ளி.
 
ஆனாலும் விசுகரின் கருத்துடன் ஒத்துப்போவதற்கு காரணம் உள்ளது.
 
யாராவது 70களில் நினைத்திருப்பார்களா பாக்கிஸ்தான் இந்தியா அணு ஆயுதம் தயாரிக்குமென்று. வல்லரசுகளை நெளிவு சுழிவுகளுடன் கையாள வேண்டும். இதுவே விசுகரின் கருத்து என நினைக்கின்றேன்.

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.