Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமை மீது ஏறி நின்று படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
hyderabad-youth-on-tortoise-200-news.jpg

ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் இருந்த ஆமையின் மீது ஏறி நின்றவாறு உள்ள தனது புகைப்படங்களை ஃபே ஸ்புக்கில் பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஃபசல் ஷேக். இவர் கடந்த ஆண்டு மே மாதம் நேரு உயிரியல் பூங்காவுக்கு சென்றபோது, அங்குள்ள விலங்குகளைப் படம் எடுத்திருக்கிறார்.

   

அப்போது அங்கு காணப்பட்ட ஓர் ஆமை மீது ஏறி நின்று படம் எடுத்து வெளியிட்டால் ஃபேஸ்புக்கில் அதிக விருப்பங்கள்(லைக்ஸ்) கிடைக்கும் என்று அவர் நினைத்துள்ளார். அதனால் உடனே, விலங்குகளைப் பாதுகாக்க வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது தாவி குதித்துள்ளார். பின்னர் அங்கிருந்த ஆமையின் அருகே சென்று, அதன் மீது ஏறி நின்று படம் எடுத்து, அதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தப் படத்தை கண்ட உள்ளூர் பத்திரிகை ஒன்று ஃபேஸ்புக்கில் வெளியான வியப்பான பகிர்வு என்று தலைப்பிட்டு, ஃபசல் ஷேக்கின் படத்தை வெளியிட்டது. அந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள படத்தைப் பார்த்த வனத்துறை அதிகாரிகள், ஃபசல் ஷேக்கின் மீது புகார் அளித்தனர். இது குறித்து அதிகாரி கூறும்போது, "பத்திரிகை செய்தியைப் பார்த்து வனத்துறை அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு புகார் வந்தது. அதன்படி அந்த நபரின் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்து புதன்கிழமை இரவு அவரை கைது செய்தோம்.

விசாரணை நடத்தியதில் விளையாட்டு நோக்கத்தோடு படம் எடுத்து ஃபேஸ்புக்கில் லைக்குகளுக்காக பகிரவே அப்படி செய்ததாக ஃபசல் கூறினார்" என்றார் அந்த அதிகாரி. ஃபசல் ஷேக் மீது தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தைது மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://seithy.com/breifNews.php?newsID=126881&category=IndianNews&language=tamil

லூஸு கேசுக்களாக கிடக்கு .ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கின்றார்களே . :(

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இது தப்புத்தான்

ஆனால் ஆமைக்கு ஓடு ஒரு பாதுகாப்பு

அதற்கு இவ்வளவு கூக்குரல் போடுகிற அமைப்புக்கள்

ஒரு மனிதனை புலி அடித்து இழுத்துச்சென்றதை பார்த்துக்கொண்டு நின்ற கூட்டத்துக்கும்

அதன் நிர்வாகத்துக்கும் என்ன தண்டனை வாங்கிக்கொடுத்தது.....?? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தப்புத்தான்

ஆனால் ஆமைக்கு ஓடு ஒரு பாதுகாப்பு

அதற்கு இவ்வளவு கூக்குரல் போடுகிற அமைப்புக்கள்

ஒரு மனிதனை புலி அடித்து இழுத்துச்சென்றதை பார்த்துக்கொண்டு நின்ற கூட்டத்துக்கும்

அதன் நிர்வாகத்துக்கும் என்ன தண்டனை வாங்கிக்கொடுத்தது.....?? :(

மண்டையில் ஓங்கி அறைந்தால்போல நச்சென்று ஒரு கேள்வி 

இது தப்புத்தான்

ஆனால் ஆமைக்கு ஓடு ஒரு பாதுகாப்பு

அதற்கு இவ்வளவு கூக்குரல் போடுகிற அமைப்புக்கள்

ஒரு மனிதனை புலி அடித்து இழுத்துச்சென்றதை பார்த்துக்கொண்டு நின்ற கூட்டத்துக்கும்

அதன் நிர்வாகத்துக்கும் என்ன தண்டனை வாங்கிக்கொடுத்தது.....?? :(

 

சும்மா தேமே என்று இருந்த புலியின் கூண்டுக்குள் இறங்கியவரை காப்பாற்ற கூட்டமும் உள்ளே குதித்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா?

 

இந்த ஆமையின் முதுகில் உப்பு மூட்டை ஏறி விளையாடியவரை தண்டிக்காமல் விட்டால் நாளைக்கு புலியின் முதுகிலும் ஏறப் பார்த்து இருப்பார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லூஸு கேசுக்களாக கிடக்கு .ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கின்றார்களே . :(

 

எடுத்ததிற்கெல்லாம் பன்னாடைக்கதைகள் கதைக்கப்படாது.
 
அடிப்படை அறிவுபற்றி நீங்கள் கதைப்பது மகா கொடுமையிலும் கொடுமை.
சொந்த நாட்டின் பிரச்சனைகளுக்கே அதட்டு காரணம் கூறும் நீங்கள் மிருகவதையில் வரும் கருத்திலும் உங்கள் லூசுத்தனம் தெரிகின்றது. :icon_mrgreen:
 
வல்லமை மிக்க அரசுகளே கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிற விடயங்கள் உங்களைப்போன்ற தம்பிரான்களுக்கு தெரிய வாய்ப்பில்லைத்தான். :)
 
விடிஞ்சால் பொழுதுபட்டால் படம் சீரியல் கிரிக்கட் கருத்தரங்கம் பார்ட்டி தண்ணியடி பாட்டுப்புரோக்கிராம் எண்டு சதா மங்கல் நினைப்பிலையே இருக்கிற உங்களுக்கு ஆமை பெரிய பாவமாய்த்தான் தெரியும். :D  :lol:
 
நீங்கள் எங்கை வாறியள் எண்டும் எனக்குத்தெரியும். :icon_idea:
 
ஆமைக்கு கவலைப்பட்டது போதும்...
இதையும் ஒருக்கால் பாருங்கோ..... எங்கை நடக்குது....எதுக்கு நடக்குது...... எந்த அடிப்படை அறிவுமிக்க நாட்டிலை நடக்குது எண்டதையும் ஒருக்கால் பாருங்கோ....
 
395747.jpg
 
 
 
 
 
 
எல்லாத்தையும் விட ஜப்பான் மிருகவதை விசயத்திலை மிதிச்சாலும் புல்லு சாகாதாம். :lol:  :D
  • கருத்துக்கள உறவுகள்

1 - சும்மா தேமே என்று இருந்த புலியின் கூண்டுக்குள் இறங்கியவரை காப்பாற்ற கூட்டமும் உள்ளே குதித்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா?

 

இந்த ஆமையின் முதுகில் உப்பு மூட்டை ஏறி விளையாடியவரை தண்டிக்காமல் விட்டால் நாளைக்கு புலியின் முதுகிலும் ஏறப் பார்த்து இருப்பார்

 

1- முதலில் அந்த நபர் தவறித்தான் விழுந்திருந்தார்.   கூட்டுக்குள் இறங்கவில்லை.

  அடுத்து எத்தனையோ பேர்  பார்த்து நின்றார்கள்.  படம் எடுத்தார்கள். அத்துடன் அதில் நிர்வாகம் வேலையாட்கள்  பாதுகாப்புபிரிவு எல்லாமே உண்டு.  இருந்திருக்கணும். அவர்கள் எவரும் தண்டிக்கப்பட்டதாக தகவல் இல்லை. அதைத்தான் குறிப்பிட்டேன்.  மற்றும்படி ஆமையின் ஓடு மிக வலுவானது.  ஆமைக்கு வலித்திருக்கும் என நினைக்கவில்லை.  இது ஒருவித அரசியல் மட்டுமே என்பதே எனது கருத்து.

 

2-  இங்கு ஆமைக்கு வலித்திருக்கும் என்பது தான்  எனது கேள்வியாக இருந்தது. மற்றும்படி அவர் புலியிடமும  போவார் என்பதற்காக  எச்சரிக்கைப்பட்டதாக தெரியவில்லை.. அப்படிப்போனால் அது ஆமையல்ல என்பதை தெரிந்து கொண்டு தான் போகணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.