Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் தன் சுதந்திரத்தை இழப்பதில் இன்பம் இருக்கிறதா..??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பெண்களை வருணிப்பதில் சாண்டில்யனுக்கு இணை சாண்டில்யன்தான்..! அவருடைய படைப்புக்களில் அனேகமாக பெண்ணின் அங்கங்கள். அதன் அசைவுகள், அழகுபற்றியே பக்கம் பக்கமாக எழுதியிருப்பதை அவதானிக்க முடியும். அதேநேரம் பெண்ணுடைய குணாதிசயங்களையும் அவர் குறிப்பிடும்போது அது அவருடைய அறிவைக் கொண்டதா? அனுபவத்தால் வந்ததா? கற்பனையின் ஓட்டமா? என்பதுபற்றி அவரும் எழுதவில்லை, அவர் படைப்புகளுக்கு முகவுரை எழுதியவர்களும் குறிப்பிட்டதில்லை. யாழ்கள உறவுகளின் சிந்தனையில் பெண்பற்றி ஓடும் எண்ணங்கள் சாண்டில்யனை இவ்விடயத்தில் எங்கு வைத்துப் பார்க்க விரும்புகிறது என்பதை அறியும் ஆவலில் இதனை இங்கு பதிகிறேன். முதலில் உன் அபிப்பிராயத்தைக் கூறடா தடியா என்று அவனோ! அவளோ! அதட்டுவது கேட்கிறது.! 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்.' நான் ஆறுவருடங்கள் தவமிருந்து பெற்றுவிட்டேன்.  
 
 
'பெண்ணைவிட்டு விலகிச்செல்' என்று சாத்திரங்கள் எச்சரிக்கின்றன. கருங்கல்லின் கடினத்தன்மையும், விசத்தின் கொல்லும் தன்மையையும் எடுத்து இணைத்துத்தான் பெண்ணைப் பிரமன் சிருட்டித்தான் என வடமொழியிலுள்ள சாடு சுலோகம் ஒன்றும் கூறுகிறது. விசய சுகம் யன்ம விடுதலைக்கு விரோதி என்ற தத்துவமும் உறுதியாக ஏடுகளில் விளக்கப்படுகிறது. இத்தனையும் இளையபல்லவன் படித்துத்தான் இருந்தான். ஆனால் அந்தப் போதனைகளில் எதையும் நம்பத்தகுந்த நிலையில் அவன் அன்று இல்லை. 
 
பக்கத்தில் அமர்ந்திருந்த பைங்கிளி எடுத்துக்காட்டிய ஆபத்தையும், அந்த ஆபத்தை விளைவிக்கவல்ல அசய முனைப் பிராந்திய பழக்கத்தையும், அப்படியொரு பழக்கமிருந்தும் தன்னைத் தப்புவிப்பதிலேயே எண்ணங்களை ஓடவிட்ட அந்தப் பைங்கிளியின் தியாக புத்தியையும் நினைக்க நினைக்க, பெண்ணைப்பற்றி எச்சரித்த சாத்திரங்களும் தத்துவங்களும் அவனுக்கு வேப்பங்காயாக மாறின. பெண்களின் மகத்தான தியாகத்தை வேடிக்கைக்கு இகழ்வது கூடப்பெரும் பாவம் என்று அந்த நேரத்தில் இளையபல்லவன் திடமாக நினைத்தான். அவள் விவரணத்தில், விவரணம் தந்த வார்த்தைகளில், வார்த்தைகளை உதிர்த்த குரலில் அத்தனை கருணையும் தியாகமும் மண்டிக்கிடந்தன.
 
இடையை முன்னைவிடப் பலமாக இழுத்தணைத்து அவள் முகவாய்க் கட்டையை வலது கையால் பிடித்துத் திருப்பிய இளையபல்லவன், “எதற்குச் சிரிக்கிறாய் மஞ்சளழகி?“ என்று கேட்டான் சற்றுக் கடுமையுடன். அந்தக் கடுமை, குரலில் தெரிந்த அதட்டல் இரண்டையும் மஞ்சளழகி பெரிதும் விரும்பினாள். “ஆண்கள் கடிந்து கொண்டால்தான் அழகாயிருக்கிறது. எதற்கெடுத்தாலும் குழைந்து கொடுப்பவன் ஆண்பிள்ளையேயல்ல. அதட்டல், கெடுபிடி, இத்துடன் அன்பு இத்தனையும் கலந்து பறிமாறும் ஆண்மகனைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். இதுவும் ஒரு வேடிக்கைதான். வேடிக்கையென்ன? சிருட்டியின் ரகசியம்தான். இது இல்லாவிட்டால்....?“ என்று சொல்லி மீண்டும் சிரித்தாள் அவள்.
“இப்பொழுது எதற்காகச் சிரிக்கிறாய்?“ என்று மறுபடியும் கடுமையுடன் கேட்டான் இளைய பல்லவன்.
 
“முதலில் உங்கள் நிலை குறித்துச் சிரித்தேன். இப்போது என் நிலை குறித்துச் சிரித்தேன்“ என்றாள் மஞ்சளழகி புன்சிரிப்பு உதடுகளில் தவழ.
தனக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராயிருக்கும் அந்த ஏந்திழையின் ஏராந்த கண்களை நோக்கிக்கொண்டே கேட்டான் இளைய பல்லவன் “ஏன்? உன் நிலைக்கு என்ன மஞ்சளழகி?“ என்று. 
 
“சற்று முன் உங்கள் கேள்வியில் கடுமையிருந்தது. அதட்டிக் கேட்டீர்கள்.“
 
“ஆம்! சற்றுக் கடுமையாகத்தான் கேட்டுவிட்டேன்“ என்றான் இளைய பல்லவன் வருத்தத்துடன்.
 
மஞ்சளழகி சொன்னாள் “வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை?“ என்று. 
 
“ஏன்?“ ரகசியத்துடன் எழுந்தது இளைய பல்லவனின் கேள்வி.
 
“அந்தக்கடுமை எனக்கு வேண்டியிருந்தது“ 
 
“கடுமை வேண்டியிருந்ததா!“
 
“ஆம் வேண்டியிருந்தது!“
 
“ஏன் வேண்டியிருந்தது?“
 
“பெண்ணின் நிலை அது!“
 
“கடுமையை வேண்டும் நிலையா!“
 
“ஆம் காதலித்தவன் கடிந்துகொள்வதில்தான் பெண்களுக்கு இன்பம். ஆடவனிடம் அடங்கத்தான் பெண் விரும்புகிறாள். ஆளத்தெரியாதவனிடம் பூமி எப்படி நிலைப்பதில்லையோ அப்படியே அடக்கத் தெரியாதவனிடம் பெண்ணும் நிலைப்பதில்லை.“ 
 
“பெண்களுக்குச் சுதந்திரம்.....“
 
“வெறும் பேச்சு.“ 
 
“ஏனப்படிச் சொல்கிறாய் மஞ்சளழகி?“
 
“சுதந்திரம் அவள் அழகைக் கெடுக்கிறது அடக்கம் அவள் அழகைக் கூட்டுகிறது.“
 
“விசித்திரமாயிருக்கிறது உன் வாதம்“
 
“சிருட்டியைப் புரிந்து கொள்ளாதவர்களுக்குத்தான் விசித்திரம்.“
 
“நீ புரிந்துகொண்டுவிட்டாயா?“
 
“புரிந்து கொண்டுதான் சொல்கிறேன்.“
 
“இதோ பாருங்கள் இளைய பல்லவரே! என் வாதமல்ல இது. உண்மையைச் சொன்னேன். இயற்கையை நன்றாக உற்றுப் பாருங்கள். அடக்கமுள்ள பெண்களுக்கு இருக்கும் அழகு அடக்கமில்லாத பெண்களுக்கு இருப்பதில்லை. தலைகுனிந்த பெண்ணிடமிருக்கும் அழகு தலைகுனியாமல் நிமிர்ந்து நடக்கும் தருணிகளிடம் கிடையாது. அச்சப்பட்டும், வெட்கப்பட்டும் கூனிக்குறுகும் குமரிகளிடமுள்ள அழகு, உணர்ச்சிகளைக் கைவிட்டு உலாவும் காரிகைகளிடம் கிடையாது. சுதந்திரத்தை ஆடவனிடம் பறி கொடுத்து அடங்கி அவனிடம் வாழும் பெண்ணின் அழகு தெய்வீகமானது. அந்த அடக்கத்தில் சுதந்திரத்தை இழப்பதில் மகத்தான சக்தி பெண்களுக்கு ஏற்படுகிறது....“ 
 
“சுதந்திரத்தை இழப்பதில் சக்தி ஏற்படுகிறதா!“
 
“ஆம்!“
 
“சுதந்திரமே சக்தியல்லவா?“
 
“நாட்டுக்கு அது சக்தி. ஆடவர்களுக்கும் அதுதான் சக்தி.“
 
“பெண்களுக்கு?“
 
“சுதந்திரத்தில் சக்தியில்லை. சுதந்திரத்துடன் உலாவும் பெண்களை ஆடவர் வேடிக்கை பார்ப்பார்கள். அழகை ரசிப்பார்கள். அடையப் பிரியப்படவும் செய்வார்கள். ஆனால் மதிக்கமாட்டார்கள்.“
 
“சுதந்திரமிழந்தால்?“
 
“சக்தி அதிகம்.“
 
“எப்படி?“
 
“சீனத்துக்குப் போயிருக்கிறீர்களா?“
 
“போயிருக்கிறேன்.“
 
“அங்கு வாணம்விட மருந்து தயார் செய்கிறார்கள்.“
 
“தெரியும் எனக்கு.“
 
“அந்த மருந்து சுதந்திரமாக உதிர்க்கப்படும்போது தீப்பட்டால் பரவலாகத்தான் எரியும்.“
 
“ஆமாம்.“
 
“அதைச் சீனத்துக் களிமண் செப்பில் அடைத்து வைக்கிறார்கள். அந்தச் செப்பில் தீயை வைத்துப் பாருங்கள், சீறி வெளிவந்து பெரும் தீப்பொறிகளைப் பயங்கரமாகக் கக்கும். வீட்டிலடைக்கப்படும் பெண்ணும் அப்படித்தான். அடைத்தவுடன் அவள் சக்தி அபரிமிதமாகிறது. சுதந்திரமிழந்த மருந்துபோலத்தான் அவள் சக்தி. அந்தச் சக்திக்கு ஆடவன் அஞ்சுகிறான். அதனால்தான் உங்கள் கடுமையை நான் ரசித்தேன். உங்கள் அதட்டலை நான் விரும்பினேன். ஒரு ஆடவன் ஒரு பெண்ணை அதட்டுவதில் அர்த்தமிருக்கிறது.“
 
“என்ன அர்த்தம்?“
 
“யார் அதட்ட முடியும்?“
 
“நீதான் சொல்.“
 
“சொந்தக்காரன்தான் அதட்ட முடியும்.“ ஆம், சொந்தமிருப்பவன்தான் அதட்டுகிறான். தான் அவனுக்குச் சொந்தம் என்பதை உணர்த்தும் சொற்களின் கடுமை பெண்களுக்குத் தரும் இன்பம் சொல்லிமுடியாதது. சுதந்திரத்தை இழப்பதில் எத்தனை இன்பமிருக்கிறது இளைய பல்லவரே! இப்பொழுது புரிகிறதா என் நிலை உங்களுக்கு?“
 
  • கருத்துக்கள உறவுகள்

கடலில், புறாவை தேட ஆரம்பித்துவிட்டீர்கள்.. நல்ல நாவல்தான். :)

படித்த நினைவுகளை இரைமீட்டு பின்னர் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
இடையை முன்னைவிடப் பலமாக இழுத்தணைத்து அவள் முகவாய்க் கட்டையை வலது கையால் பிடித்துத் திருப்பிய இளையபல்லவன், “எதற்குச் சிரிக்கிறாய் மஞ்சளழகி?“ என்று கேட்டான் சற்றுக் கடுமையுடன். அந்தக் கடுமை, குரலில் தெரிந்த அதட்டல் இரண்டையும் மஞ்சளழகி பெரிதும் விரும்பினாள். “ஆண்கள் கடிந்து கொண்டால்தான் அழகாயிருக்கிறது. எதற்கெடுத்தாலும் குழைந்து கொடுப்பவன் ஆண்பிள்ளையேயல்ல. அதட்டல், கெடுபிடி, இத்துடன் அன்பு இத்தனையும் கலந்து பறிமாறும் ஆண்மகனைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். இதுவும் ஒரு வேடிக்கைதான். வேடிக்கையென்ன? சிருட்டியின் ரகசியம்தான். இது இல்லாவிட்டால்....?“ என்று சொல்லி மீண்டும் சிரித்தாள் அவள்.

 

 

இப்படியும் எழுதிறாங்க.. அப்புறம்.. ஆண்களால் கர்ப்பம் அடைவதே பெண்களுக்கு பெரிய பிரச்சனையா இருக்கு என்றும் எழுதிறாங்க. முடியல்ல... எதையாவது ஒன்றை தெளிவாச் சொல்லி எப்ப இந்த மாட்டரை முடிக்கப் போறாய்ங்களோ. :D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பெண் தன் சுதந்திரத்தை இழப்பதில் இன்பம் இருக்கிறதா..??

ஓம்! :D
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் ஆண்களிடம் தாங்கள் விரும்பும், நேரம்/வகைகளில் சுதந்திரத்தை இழந்து, மீண்டும் அவர்களாலேயே அதை எடுத்துக்கொள்ளபடும் 'சுதந்திரத்தையே' அவர்கள் விரும்புகின்றனர். சல்லாபத்தில் ஆணின் கை ஓங்கியிருப்பதை பெண்கள் விரும்புவதாகவே சாண்டில்யனின் வர்ணனை பெரும்பாலும் அமைந்திருக்கும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.