Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் விடுதலைப்புலிப் பெண்போராளியொருவர் கடத்தப்பட்டுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளது முன்னாள் பெண்போராளியொருவர் இன்று காலை புதுக்குடியிருப்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களே குறித்த யுவதியான முன்னாள் பெண்போராளியினை கடத்தி சென்றுள்ளனர்.அவ்வாறு கடத்தப்பட்டவர் கைவேலி பகுதியினை சேர்ந்தவரான விசுவலிங்கம் வினோதினி(வயது 26) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.


தற்போது சிவில் பாதுகாப்பு படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள அவர் படையினரின் கண்காணிப்பில் இயக்கப்படும் சிறார்களிற்கான முன்பள்ளியொன்றில் கல்வி கற்பித்து வந்துள்ளார்.

இன்று காலை வழமை போலவே முன்பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அவரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர்கள் தாக்கிய பின் தமது மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றுள்ளனர்.மயக்கமுற்ற நிலையில் காலை வேளை குறித்த முன்னாள் போராளி கடத்தி செல்லப்பட்டவேளை இலங்கை காவல்துறையும் அப்பகுதியில் பொதுமக்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப்புலிகளது போராளிகளில் சுமார்; பத்தாயிரம் பேர் வரையினில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் மீள செயற்படாதிருப்பதை உறுதிப்படுத்த படைத்தரப்பினால் உருவாக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு குழுவினில் இணைத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

இவரை விடுதலை செய்த பின்னர் விடுதலை செய்தவர்கள் யாராயினும் அவர்களுக்கு நன்றி சொல்வோம். அவர்களின் நல்ல மனதை பாராட்டுவோம்.

இவரை விடுதலை செய்த பின்னர் விடுதலை செய்தவர்கள் யாராயினும் அவர்களுக்கு நன்றி சொல்வோம். அவர்களின் நல்ல மனதை பாராட்டுவோம்.

 

இங்கு எவருமே கடத்தப்பட்டது அல்லது கைது செய்யப்பட்டது சரி என்று கருத்திடப்போவதில்லை. ஆனால் இப்போதுள்ள முக்கியமான விடயம் அவர் நலமாக வீடு திரும்ப வேண்டும் என்பதே. இதற்கு உதவும் ஒவ்வொரு மனிதனும் போற்றப்பட வேண்டியவர்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிடிக்கிறவையை பிடியுங்கோ உள்ளுக்கை வைச்சு அடியுங்கோ சித்திரவதை செய்யுங்கோ மூளைச்சலவை செய்யுங்கோ வெருட்டுங்கோ என்னவும் செய்யுங்கோ....... ஆனால் ஆக்களை வெளியிலை விட்டுடணும்.....

இவ்வாறான  செய்தியை பார்க்கும் போது நெஞ்சு  கனக்கிறது ,கண்ணீர் வருகிறது சகோதரி  நலமாக திரும்ப  வேணும் ..

கூட்டமைப்பு  என்ன  செய்துகொண்டு  இருக்கிறது என்றுதான் புரியவில்லை .. :(

Edited by அஞ்சரன்

கொஞ்ச காலமாய் சிறிதரன் என்ன செய்கின்றார் ? வன்னியில் நிறைய சம்பவங்கள் நடக்கின்றது ஒரு சத்தத்தையும் காணவில்லை . 
 
சுமந்திரனை போய் இணக்க அரசியல் செய்ய சொல்லுங்கோ , ---------

Edited by நிழலி
-நாகரீகமாக கருத்தாடப் பழகவும்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான  செய்தியை பார்க்கும் போது நெஞ்சு  கனக்கிறது ,கண்ணீர் வருகிறது சகோதரி  நலமாக திரும்ப  வேணும் ..

கூட்டமைப்பு  என்ன  செய்துகொண்டு  இருக்கிறது என்றுதான் புரியவில்லை .. :(

நீங்கள்தான் பாவம் 
உங்களுக்கு எல்லா பக்காத்தாலும் கவலை!

 

நீங்கள்தான் பாவம் 
உங்களுக்கு எல்லா பக்காத்தாலும் கவலை!

 

சில கவலைகளை நாங்களே முன்கூட்டி  சொல்லி  போடணும் அல்லது இவைக்கு  கவலை  இல்லை  என்று  வேற  சொல்லுவியள் என்ன  பண்ணுறது  நிலைமை  அப்படி போராட்டமே சினிமாத்தனமா  போயிட்டு .

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயக்குமாரி வெளியே வினோதினி உள்ளே
மொத்தத்தில் ஒப்பு விளையாட்டு மாதிரி ஒருவரைப் பிணையில் விட்டால்

அவரின் இடத்திற்கு இன்னொருவர் பிணை இருக்கின்றார்.

 

இனிமேல் சில சிங்களவர்கள் இவருக்காகப் போராடி உள்ளே செல்வார்கள்.
அப்படியே இன ஐக்கியத்தில் நாங்கள் எல்லோரும் சங்கமித்து விடுவோம்.

புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற இனந்தெரியாத நபர்கள் நால்வரினால் கடத்தப்பட்ட குடும்பப்பெண் வீடு திரும்பியுள்ளார். இலங்கையின் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழுள்ள முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த புதுக்குடியிருப்பை வதிவிடமாக கொண்ட 26 வயதுடைய விஸ்வலிங்கம் வினோதினி என்ற பெண் முன்பள்ளிக்கு செல்லும் போது நேற்று காலை கடத்தப்பட்டிருந்தார். இவர் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினராவார்.

தற்போது புதுக்குடியிருப்பு அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோதினி கடந்த அரசாங்கத்தின் புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழ் இயங்கும் முன்பள்ளி ஆசிரியராக செயற்பட்டு வந்துள்ளார். இதனிடையே கடத்தலுடன் தொடர்புபட்டவர்களும் இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்களென கண்டறியப்பட்டுள்ளது.

http://www.jvpnews.com/srilanka/100865.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.