Jump to content

உனக்காக...


Recommended Posts

Page%2BPoem%2BUnakkaaga.jpg

 

சுடும் மழைக் காலம்...  குளிர் வெயிலாய் நீ வந்தாய் !
இலையுதிர்கால.... வெளிர்ப் பூவை நீ தந்தாய் !!
மனதிழை ஓடும்.... மெல்லிசையாய் உன் பெயரை,
இதழிடை  பாடும்....  இன்னிசையாய் நீ அமைந்தாய் !!!

கனதரம் நினைத்திடும்... கணங்களும் இனித்திடும்...!
நிரந்தர வதிவிடம்...  மனங்களும் கொடுத்திடும்...!!
சிலதரம் பார்த்திடும்...    நால்-விழிகளும்  கலந்திடும்...!
வெண்ணிலா வெட்கத்தில்... மெல்லமாய்ச் சிவந்திடும்...!!

எங்கே நீ சென்றாலும்...

என் நினைவும் பின்னால் அலையுமடி..!
அங்கே  வானவில் வீடு கட்டி... 

உனக்காய் வாசல் வரையுமடி... !!

உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள்  பூக்காதா... ?
பூமொட்டு விரியும்  தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ??
என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்....  கொஞ்சம் நிக்காதா..?
உன் புன்னகை சொட்டும் தேநீர்க் கிண்ணம்.... எனக்காய் இனிக்காதா...??

எனக்கே எனக்கென எனக்காக...  உனையே தந்தாய் எனக்காக!
உயிரென உணர்வென உனக்காக.... என் காதலை தந்தேன் உனக்காக!!
வருவாய் தருவாய் வரமாக   .... உனதாய் எனதாய்... எமதாக !
உனக்கே உனக்கென  உனக்காக...  எனையே தருவேன் எமக்காக...!!

 

************              ************             ***********            ************            ************

 

© ஒருவன்









 

Link to comment
Share on other sites

பாட்டெல்லாம் எழுத தொடங்கிட்டுது நம்ம கவிதையண்ணே,

 

நல்லாயிருக்கு பாடல்  வரிகள் ..  

அது சரி உங்க கிட்ட ரொம்பநாளா கேக்க நினைச்சன்,

© இந்த ஸ்மைலி ஏன் எல்லா கவிதையிலும் கடைக்குட்டியாய் வருது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசையோடு பாட இசைவான காதல் கவிதை. வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

எங்கே நீ சென்றாலும்...

என் நினைவும் பின்னால் அலையுமடி..!

அங்கே வானவில் வீடு கட்டி...

உனக்காய் வாசல் வரையுமடி... !!

உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள் பூக்காதா... ?

பூமொட்டு விரியும் தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ??

என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்.... கொஞ்சம் நிக்காதா..?

உன் புன்னகை சொட்டும் தேநீர்க் கிண்ணம்.... எனக்காய் இனிக்காதா...??

அருமையானவரிகள் . வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

பாட்டெல்லாம் எழுத தொடங்கிட்டுது நம்ம கவிதையண்ணே,

 

நல்லாயிருக்கு பாடல்  வரிகள் ..  

அது சரி உங்க கிட்ட ரொம்பநாளா கேக்க நினைச்சன்,

© இந்த ஸ்மைலி ஏன் எல்லா கவிதையிலும் கடைக்குட்டியாய் வருது

தம்பி இரா.விஷ்வா...! ரொம்ப நன்றி :)

 

ரொம்பப்பேர் பல வ(டை)ரிகளை சுட்டு....தாங்களே சுட்ட வடைபோல பேஸ்புக் அங்க இங்க எண்டு  சுடச்சுட வித்திடுறாங்கள்! :o

எதுக்கும் © இதப் போட்டு வைப்பம் எண்டுதான்.

© ஒருவன் :rolleyes::lol::icon_idea:

Link to comment
Share on other sites

இசையோடு பாட இசைவான காதல் கவிதை. வாழ்த்துகள்

மிக்க நன்றி செயோன் யாழ்வேந்தன்! :)

Link to comment
Share on other sites

எங்கே நீ சென்றாலும்...

என் நினைவும் பின்னால் அலையுமடி..!

அங்கே வானவில் வீடு கட்டி...

உனக்காய் வாசல் வரையுமடி... !!

உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள் பூக்காதா... ?

பூமொட்டு விரியும் தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ??

என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்.... கொஞ்சம் நிக்காதா..?

உன் புன்னகை சொட்டும் தேநீர்க் கிண்ணம்.... எனக்காய் இனிக்காதா...??

அருமையானவரிகள் . வாழ்த்துக்கள்

 

மிக்க நன்றி செந்தமிழாளன்...! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.