Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலருக்கும் தெரியாத, "இஞ்சியில்" நிறைந்துள்ள நன்மை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

265990-ginger.jpg

பலருக்கும் தெரியாத, "இஞ்சியில்" நிறைந்துள்ள நன்மைகள்!!!

 

உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க எப்படி ஏலக்காய், பட்டை, கிராம்பு, பூண்டு போன்ற பொருட்கள் பயன்படுகிறதோ, இதேப்போல தான் இஞ்சியும் பயன்படுகிறது. பலருக்கும் இஞ்சியைக் கடித்தால், அதன் காரத்தன்மையால் முகம் பலவாறு செல்லும். ஆனால் அந்த இஞ்சியில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இதில் நிறைந்துள்ள மருத்துவ குணத்தால், எண்ணற்ற நோய்களை குணப்படுத்த முடியும்.

 

மேலும் ஆயுர்வேதத்தில் இஞ்சியும் நோய்களை குணமாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய இஞ்சியின் சில ஆரோக்கிய நன்மைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 

பசியைத் தூண்டும்.

உங்களுக்கு பசி எடுக்காவிட்டால், உணவை சாப்பிடும் முன் சிறு துண்டு இஞ்சியை சாப்பிட்டால், அவை பசியை நன்கு தூண்டும்.

 

செரிமானத்தை அதிகரிக்கும்.

இஞ்சியில் நிறைந்துள்ள சத்துக்கள், உணவை செரிக்க உதவும் அமிலத்தை அதிகரித்து, உணவை சீராக செரிக்க உதவும்.

 

சத்துக்களை உறிஞ்ச உதவும்.

இஞ்சியை உணவில் சேர்த்து வருவதன் மூலம், ஊட்டச்சத்துக்களை உடலானது உறிஞ்ச உதவி புரியும்.

 

குமட்டல்.

குமட்டல் வரும் போது, சிறிது இஞ்சியை தேன் தொட்டு வாயில் போட்டு மென்றால், குமட்டல் நின்றுவிடும்.

வயிற்று பிடிப்பு.

உங்களுக்கு வயிறு அடிக்கடி ஒரு பக்கமா பிடிக்குதா? அப்படியெனில் அப்போது சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்றால், வயிற்றுப் பிடிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

 

மூட்டு வலி.

மூட்டு வலியால் அவஸ்தைப்படுபவர்களா நீங்கள்? அப்படியெனில் சிறுதுண்டு இஞ்சியை அவ்வப்போது வாயில் போட்டு மெல்லுங்கள்.

 

மூக்கடைப்பு.

மூக்கடைப்பு இருக்கும் போது, இஞ்சியைக் கொண்டு டீ போட்டு குடித்தால், மூக்கடைப்பு உடனே நீங்கும்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

 

ஆனால்.... இஞ்சி உண்ணும் நாளில், மரவள்ளி கிழங்கு  சாப்பிட்டால்.... உணவு நஞ்சாகி விடும் என்று   கூறுவார்கள்.

இது எவ்வளவு தூரம், உண்மை என்று தெரியவில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சியில் சயனோ ஜெனிற்றிக் குளுக்கோசேட் என்று ஒரு நொதியமிருப்பதாகவும், அது மரவள்ளிக் கிழங்கிலுள்ள சயனோ ஜெனற்றிக் குளுக்கோசைட் என்னும் காபோவைதரேற்றான மாப்பொருளுடன் தாக்கத்திலீடுபட்டு ஐதரசன் சயனைட்டை வெளிவிடுகிறது என்றும் ஓர் ஆய்வு முடிவு கூறுகிறது.  இதனை நான் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றபோது அறிந்த ஞாபகம்.  தொடர்ந்து தாய்லாந்து கசட்சாட் பல்கலைக்கழகத்தில் பயில்கையில் இதுபற்றிக் கேட்டபோது  அதில் உண்மையுண்டு என்று கூறியதாக நினைவிருக்கிறது.  இது எந்த அளவுக்குச் சமீபகாலங்களில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரியாது.  ஆனால் நான் இஞ்சியை மரவள்ளி உண்ட நாட்களில் உண்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளி உணவுடன் இஞ்சி சேர்ந்தால் நஞ்சாக மாறும் சந்தர்ப்பங்களே அதிகம். நானும் அவற்றைக் கலந்து உண்பதில்லை...!

 

ஆடுகளுக்கும் மரவள்ளிக் குழை போடக் கூடாது....! பிறகு மண்சட்டிக்குள் குழம்பாக மாறிவிடும்...!!

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடைக்குப்போனால் எப்பவும் இஞ்சி வாங்காமல் வருவதில்லை.
இணைப்பிற்கு நன்றி தமிழ் சிறி அண்ணை


இஞ்சி என்றதும் ஞாபகம் வருவது
இஞ்சி திண்ட குரங்கைப் போல என்று சிலரைப் பேசும் வழக்கம் இருப்பதே.
இஞ்சி பயன் தரும் சொல் அதை ஏன் ஏசும் பொருளாக்கினார்கள்  
அது ஏன் என்று யாருக்காவது தெரியுமா :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.