Jump to content

மூளைக்கு வேலை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணக்கு--9

தரவு:

உங்களிடம் ஒரு தராசும் 4 விதமான படிக்கற்களும் உண்டு

இதை வைத்துக்கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு

அவர்கள் கேட்கும் 1முதல் 40kg வரையான நிறையை படிக்கற்களை

இருபுறமும் மாற்றி,மாற்றி போட்டு சரியாக கொடுக்கவேண்டும்.

அந்த படிக்கற்களின் மொத்த எடை 40kg

ஆக இருக்கவேண்டும்.

இந்த படிக்கற்களை ஒருதடவை தான் பயன்படுத்த வேண்டும்

இதிலிருந்து அந்த 4 படிக்கற்களின் தனித்தனி நிறையை

கண்டுபிடியுங்கள்

(அளவை முளு பெறுமதியாக கொள்ளலாம்)

.

Link to comment
Share on other sites

  • Replies 694
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[b]கணக்கு 10

இந்த இரு நகரங்களின் மக்கள்தொகைகளும் எப்பொளுது சமனாகும்........

1வது நகரத்தில் ஆண்டுக்கு 1000 பேர் குறைந்து கொண்டு

வருகிறார்கள்

2வது நகரத்தில் ஆண்டுக்கு 1600 பேர் அதிகரித்துக்கொண்டு

வருகிறார்கள்

இந்த ஆண்டு

1வது நகரத்தில் 38000 பேரும்,

2வது நகரத்தில் 25000 பேரும வசிக்கிறார்கள்

,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு--9

தரவு:

உங்களிடம் ஒரு தராசும் 4 விதமான படிக்கற்களும் உண்டு

இதை வைத்துக்கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு

அவர்கள் கேட்கும் 1முதல் 40kg வரையான நிறையை படிக்கற்களை

இருபுறமும் மாற்றி,மாற்றி போட்டு சரியாக கொடுக்கவேண்டும்.

அந்த படிக்கற்களின் மொத்த எடை 40kg

ஆக இருக்கவேண்டும்.

இந்த படிக்கற்களை ஒருதடவை தான் பயன்படுத்த வேண்டும்

இதிலிருந்து அந்த 4 படிக்கற்களின் தனித்தனி நிறையை

கண்டுபிடியுங்கள்

(அளவை முளு பெறுமதியாக கொள்ளலாம்)

.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=asc&&start=495

Link to comment
Share on other sites

ஐந்து வருடத்தில் இரு நகரங்களினதும் மக்கள் தொகை சமனாக வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து வருடத்தில் இரு நகரங்களினதும் மக்கள் தொகை சமனாக வரும்.

2012 :!:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

38000 - ( X * 1000 ) = 25000 + ( X * 1600 )

X = 5

:roll: :roll: :roll:

சரியோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5 வருடங்கள் என்பது சரியான பதில் பாராட்டுக்கள்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்றி

தவறுக்கு வருந்துகிறேன்

,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித மணித்தியாலயம்

4 மனிதர்கள் 4 மணித்தியாலயம் வீதம்

4 நாட்கள் வேலை செய்து 4 ஏக்கர் நிலத்தை

உளவு செய்தார்கள் எண்டால்,

8 மனிதர்கள் 8 மணித்தியாலயம் வீதம

8 நாட்கள் வேலை செய்து எத்தனை ஏக்கர் நிலத்தை

உளவு செய்வார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித மணித்தியாலயம்

4 மனிதர்கள் 4 மணித்தியாலயம் வீதம்

4 நாட்கள் வேலை செய்து 4 ஏக்கர் நிலத்தை

உளவு செய்தார்கள் எண்டால்,

8 மனிதர்கள் 8 மணித்தியாலயம் வீதம

8 நாட்கள் வேலை செய்து எத்தனை ஏக்கர் நிலத்தை

உளவு செய்வார்கள்?

8ஏக்கரா?..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

32 ஏக்கர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

32 ஏக்கர்

சரியான பதில் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒரு வியாபாரி;:

நான் 1kg பழம் 50 ரூபா எண்று வாங்கி

kg க்கு 20% இலாபம் வைத்து பழங்பளை விற்றேன்.

என்னிடம் மூண்று விதமான வாடிக்கையாளர்கள் வந்து

ஆளுக்கு ஒவ்வரு kg எண்டு முறையே 60,54,51.

எண்ற விலைகளுக்குவாங்கி சென்றார்கள்.

ஆனால் நான் எனது இலாப விகிதத்தை மாற்றவில்லை

எனில் இது எப்படி சாத்தியமாகும்?

Link to comment
Share on other sites

நீங்கள் முதலாவது ஆளுக்கு 1 கிலோவும் இரண்டாவது ஆளுக்கு 900 கிராமும் மூன்றாவது ஆளுக்கு 850 கிராமும் ஆக விற்றிருந்தாலேயே இது சாத்தியம். ஆனால் ஒவ்வொருவருக்கும் தலா 1 கிலோ வீதம் விற்றதாக எழுதியிருப்பது தான் புரியவில்லை. :roll: :roll:

Link to comment
Share on other sites

மீண்டும் மூளைக்கு வேலை பகுதியை தூசு தட்டிய rock boy க்கு நன்றிகள். தொடருங்கள் கள நண்பர்களே :P

Link to comment
Share on other sites

றொக் போய் நீங்கள் கடைசியாக தந்துள்ள கணக்கு நன்றாக விளங்கவில்லை, மேலதிக விளக்கம் தர முடியுமா?

Link to comment
Share on other sites

ஒருவர் தான் (இறந்தவர்) மீதிப்போர் இருக்கிற இடம் தெரியாது

Link to comment
Share on other sites

1000 சிங்கள படை வரும் பொழுது ஒருவரை சுட்டால் எத்தனை பேர் மிச்சம் ?

999 பேர். சரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்த ஆமியும், ஆயுதங்களும் தான் மிஞ்சி இருக்கும். மற்றவர்கள் தப்பினால் பெரும் காரியம் என்று ஒடத்தொடங்கிவினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rock boy எங்கே?? கேள்விக்கு பதிலை காணவில்லை. ஆளையும் காணவில்லை. :roll: நான் ஒரு கேள்வி போடுறேன்.

2 வாகனங்கள் ஒன்றை ஒன்றை சந்திக்கும் நோக்கில், ஒன்றை ஒன்றை நோக்கி ஒரு நேர்பாதையில் புறப்படுகின்றன. 2 வாகனங்களின் இடையேயான தூரம் 385 கீ. மீ. வாகனங்கள் 2மே ஆரம்பத்தில் இருந்து ஒன்றை ஒன்று சந்திக்கும்வரை ஒரே வேகத்தில் பயணித்ததாக எடுத்து கொள்ளவும். வாகனம் 1 இன் வேகம் - 100கீ.மீ/மணி, வாகனம் 2இன் வேகம் - 120கீ.மீ/மணி

கேள்வி - வாகனங்கள் ஒன்றை ஒன்று எத்தனை நிமிடங்களில் சந்தித்துக்கொள்ளும்??

Link to comment
Share on other sites

விஷ்ணுவின் கேள்விக்கு என்பதில். இரண்டு வாகனங்களும் X நிமிடங்களுக்கு

சந்திப்பது என்று வைப்போம். வாகனம் 1 சென்றதூரம் = (100/60)*X =5/3X. ( மணித்தியாலத்தினை நிமிடங்களுக்கு மாற்ற 60னால் பெருக்கியுள்ளேன். தூரத்தினைக் காண வேகத்தினயும், நேரத்தினயும் பெருக்கவேண்டும்). வாகனம் 2 சென்றதூரம் = 120/60 * X = 2X.

5/3X + 2X = 385

11/3X =385

X = 105 நிமிடங்கள்

Link to comment
Share on other sites

விஷ்ணு அரவிந்தனின் பதில் சரியாக இருக்கின்றபடியால் வேறொரு கணக்கை இணைத்து விடலாம் தானே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.