Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நரேந்திர மோடிக்கு விக்னேஸ்வரன் எழுதிய கடிதம் – இந்திய அதிகாரிகள் அதிர்ச்சி

Featured Replies

நரேந்திர மோடிக்கு விக்னேஸ்வரன் எழுதிய கடிதம் – இந்திய அதிகாரிகள் அதிர்ச்சி APR 24, 2015 | 1:22by அ.எழிலரசன்in செய்திகள்

modi-cm-300x199.jpgபிரேமானந்தா ஆசிர வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளது இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.

இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந்த நான்கு இலங்கைத் தமிழர்களுக்குமான தண்டனையை 2005ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

கமலானந்தாவும், ஏனைய இருவரும், இந்த வழக்கில் போலியாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பி்ரேமானந்தா ஆசிரமத்தையும், அதன் சொத்துக்களையும் பராமரிக்க வேண்டியுள்ளதால், அதனைப் பொறுப்பெடுக்க வேறு யாரும் இல்லாத நிலையில், அப்பாவிகளான இவர்களை விடுதலை செய்யுமாறும், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரியிருக்கிறார்.

சிறிலங்காவின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசரான சி.வி.விக்னேஸ்வரன்,  இந்திய நீதியமைப்பை கேள்விக்குள்ளாக்கியிருப்பதும், குற்றவாளிகளை அப்பாவிகள் என்று சுட்டிக்காட்டியிருதுப்பதும், இந்தியாவின் மூத்த அதிகாரிகளை ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது.

பிரேமானந்தா 2011ம் ஆண்டு பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு, கூடலூர் சிறையில் இறந்து விட்டார்.

இவரது உதவியாளர்களான கமலானந்தா, பாலன், சதீஸ் ஆகிய மூவரும், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சியை அடுத்த பாத்திமா நகரில் உள்ள ஆசிரமத்தில் 13 பெண்களை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியது, மற்றும் ரவி என்பவரைக் கொலை செய்து ஆசிரமத்துக்குள் புதைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.

வன்புணர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கமலானந்தாவின் மனைவியான சந்திராதேவி, கருக்கலைப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 39 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.அவர் தண்டனைக்காலத்தை முடித்து விடுதலையாகி விட்டார்.

பிரேமானந்தா ஆசிரமத்தில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும், 13 பெண்களுமே இலங்கைத் தமிழர்களாவர்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் நடத்தப்பட்ட மரபணுப் பரிசோதனையில் பிரேமானந்தா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, அவருக்கும் ஏனைய மூவருக்கும் 1997ம் ஆண்டு புதுக்காட்டை நீதிமன்றத்தினால் இரட்டை ஆயுள் தண்டனையும், 66.4 இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.

http://www.puthinappalakai.net/2015/04/24/news/5513

இந்தியப்புலனாய்வு நகர்வு தற்போது மக்களை வேறு திசையில் அழைத்து செல்கின்றது.அண்மையில் தேசியத் தலைவரை பல முறை நெருங்கிய போதும் மேலிடத்து அழுத்தத்தால் கைது செய்ய முடியவில்லை என்ற செய்தி யாருக்கோ கூறப்பட்ட விடயம்.அதே போலத் தான் இந்த செய்தியும் உண்மையாகவிருக்கலாம்.சொல்லப்படும் நேரம் (இடம் பொருள் காரணம்) தான்???? 

 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலை தனிப்பட்ட வாழ்கையுடன் கலக்காதீர்கள் சீவி.

மக்கள் உங்களை முதல்வராக்கியது இதுக்கல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஊத்தை... வாழி,  அரசியல் வாதிகள்.
அதுகளுக்கு, வக்காலத்து வாங்கிய... ஆட்களும் வெட்கித் தலை குனிய வேண்டும்.
இன்னும்... சம்பந்தன், சுமந்திரன் மூலம்..... பேரதிர்ச்சி காத்திருக்கு.
 

அதுக்குப் பிறகு, புலிகள்... வந்தாலும், தமிழ் மக்களை காப்பாற்ற முடியாது.
அந்தளவுக்கு.... அரசியலை, சிக்கலாக வைத்து... தமிழ் மக்களை பழிவாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  :(

இந்த செய்தி எவ்வளவு துரத்திக்கு உண்மையானது . சீ வீ அவர்களை சிக்க வைக்க யாரோ செய்த வேலையாக இருக்கும் .....

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே எழுதினாரா என்பது ஒருபுறம் இருக்க.. ஏதோ தவறான தீர்ப்பு என்று சொன்னாலே தமது புனிதம் கெட்டுவிட்டது என்பதுபோல நடிப்பதை தயவு செய்து நிறுத்தவும்..! :D

பேரறிவாளன் மின்கலம் வாங்கினார்.. பெட்டிக்கடையில் அதற்குண்டான ரசீதையும் பெற்றுக்கொண்டார்.. அதை சட்டைப்யைில் வைத்துக்கொண்டார்.. பிடிபட்டார்..

இந்த லட்சணத்தில்தான் இந்திய நீதி இருக்குது.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
 
photo.pngPhoto
முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செல்வாக்கை சரிக்க இந்திய ஊடகம் செய்த சதி அம்பலம்! (ஆதாரம் இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 09:58.14 AM GMT ]
mody_cv.jpg
வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்தை திரிவுபடுத்தி இந்திய ஊடகங்கள் செய்திகளை தவறாக  வெளியிட்டு வருகிறது.

நேர்மையான பேச்சும், எதையும் நேரடியாக துணிந்து சொல்லக்கூடியவருமான முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செல்வாக்கு இலங்கையில் மட்டுமன்றி உலகத்தமிழர்கள் மத்தியிலும் உயர்ந்து நிற்பதை தடுப்பதற்காகவே இந்த பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இச் செய்தி குறித்து ஆராய்ந்த போது தெரியவருவதாவது -

பிரேமானந்தா ஆசிரம வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியையிட்டு தாம் ஆச்சரியமடைவதாகத் தெரிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் செயலக வட்டாரங்கள், குறிப்பிட்ட செய்தி திரிவுபடுத்தப்பட்ட ஒன்று எனவும் சுட்டிக்காட்டியுள்ளன.

 பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 இருந்தபோதிலும், இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் மகள் அத்தண்டனையை ரத்துச் செய்யக்கோரி இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை முதலமைச்சரின் ஊடாக அனுப்பிவைத்துள்ளார். அந்தப் பெண்ணின் கடிதத்தை இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைத்த முதலமைச்சர், “சம்பந்தப் பட்டவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய கடிதத்தை உங்களுடைய கவனத்துக்கு அனுப்பிவைக்கிறேன்” என ஒரு குறிப்பை இணைத்துள்ளார்.

 இதனைவிட கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யுமாறு முதலமைச்சர் கோரவில்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதான் உண்மைநிலை.

பாதிக்கப்பட்ட மக்களின் கடிதத்துடன் விக்னேஸ்வரன் மோடிக்கு அனுப்பிய கடிதம் - (குறிப்பிட்ட இரு கடிதங்களும் இணைக்கப்பட்டுள்ளன.)

vikki_01.jpg

 

கனடாவில் பாஸ்போட் நிரப்பி விற்னஸ் வைக்கிறதுக்கும் எம்பியிட்டைப் போய் நிக்கலாம். அவரும் இந்தாள் என்ரை ஏறியாவிலை தான் இருக்கிறார் எண்டு ஒரு குறிப்பை எழுதி அனுப்பிவிடுவார். இஇதுகும் அதுமாதிரித் தான் இருக்குது...

கடிதம் எழுதிறதுக்கும் கடிதத்தை போவட் பண்ணிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது. எண்டாலும் எங்கடை முதலமைச்சர் இதுக்குள்ளை சம்பந்தப்படாமல் இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஊடகம் கதையை திரித்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

ஆனாலும் இந்த கடிதத்தை கூட முதல்வர் அனுப்பியிருக்கக் கூடாது. வடமாகாணத்தை சேர்ந்த இந்திய சிறையில் இருக்கும் முருகன் உட்பட அத்தனை பேருக்கும் இப்படிச் செய்வாரா இல்லையே.

தன் தனிப்பட்ட நம்பிக்கைகள் உத்தியோகத்தில் அழுத்தம் செலுத்த முதல்வர் அனுமதிக்கக் கூடாது. அது சனநாயகமாகாது.

அப்படி என்னதான்ய தப்பு பண்ணின்னார் என்கட்சிகாரர்? 

அந்த பெண்ணை கையை பிடிச்சு இழுத்திட்டார் அவ்வளவுதானே, இது ஊர் உலகத்தில நடக்காததா? 

 

அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அப்பாவி சாமி மார்களை விடுதலை செய்யவும். 

ஊரை ஏமாற்றி பிழைக்கும் சுப்பிரமணி சாமியை சிறையில் அடைக்கவும்.

 

 

இததான் எங்க முதல்வர் சொல்லவந்தவர் அதை திரிவு படுத்திட்டாங்கையா திரிவு படுத்திட்டாங்க.

  • தொடங்கியவர்

cm-letter-2.jpg    cm-letter-3.jpg


முதலமைச்சருக்கு மக்களின் குறைகளைப்போக்க தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.
 
(இன்னும் வரும்; முதல்வர் றோவின் கட்டுக்குள் கிடக்கும் கூட்டணியை விட்டு ஆயருடன் கூடி மேற்குலகின் பக்கம் சாய்வதால் இன்னும் வரும்)
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய ஊடகம் கதையை திரித்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

ஆனாலும் இந்த கடிதத்தை கூட முதல்வர் அனுப்பியிருக்கக் கூடாது. வடமாகாணத்தை சேர்ந்த இந்திய சிறையில் இருக்கும் முருகன் உட்பட அத்தனை பேருக்கும் இப்படிச் செய்வாரா இல்லையே.

தன் தனிப்பட்ட நம்பிக்கைகள் உத்தியோகத்தில் அழுத்தம் செலுத்த முதல்வர் அனுமதிக்கக் கூடாது. அது சனநாயகமாகாது.

நீங்கள் நல்லா இருப்பீர்கள்.

இந்திய நீதிமன்ற நடைமுறைகள் பற்றி, அவர்களின் ஊடக தர்மம் பற்றி அறிந்து இவ்வளவுதான்.

இதுக்கே இப்படி என்றால் ..முருகா ...

இந்திய ஊடகம் கதையை திரித்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

ஆனாலும் இந்த கடிதத்தை கூட முதல்வர் அனுப்பியிருக்கக் கூடாது. வடமாகாணத்தை சேர்ந்த இந்திய சிறையில் இருக்கும் முருகன் உட்பட அத்தனை பேருக்கும் இப்படிச் செய்வாரா இல்லையே.

தன் தனிப்பட்ட நம்பிக்கைகள் உத்தியோகத்தில் அழுத்தம் செலுத்த முதல்வர் அனுமதிக்கக் கூடாது. அது சனநாயகமாகாது.

நீங்கள் நல்லா இருப்பீர்கள்.

இந்திய நீதிமன்ற நடைமுறைகள் பற்றி, அவர்களின் ஊடக தர்மம் பற்றி அறிந்து இவ்வளவுதான்.

இதுக்கே இப்படி என்றால் ..முருகா ...

  • தொடங்கியவர்

இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதம் – நெறிமுறையை மீறினாரா விக்னேஸ்வரன்? APR 25, 2015 | 1:31by கார்வண்ணன்in செய்திகள்

CM-NPC-300x200.jpgபிரேமானந்தா வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நான்கு இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக கவனம் செலுத்தக் கோரி, வட மாகாண முதலமைச்சர் , இந்தியப் பிரதமருக்கு அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பியிருந்தால், அது நெறிமுறை மீறலாக இருக்கும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே, அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர்,

“முதலமைச்சர் முதலில் கடிதத்தை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்ப வேண்டும்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தான் அதனை, குறிப்பிட்ட நாட்டின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அனுப்ப முடியும்.

எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில், அண்மைய நாட்களாக, இத்தகைய இராஜதந்திர நெறிமுறையை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்படவில்லை.

ஏனென்றால், இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில்  நெருக்கமான உறவு இருந்து வருகிறது.நெறிமுறைகள் சீராகப் பயன்படுத்தப்படுவதில்லை.

மேலும், கடந்த காலத்தில் இந்தியப் பிரதமர் மோடிக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர்  கடிதங்களை எழுதிய போதிலும், அதற்கு கொழும்பு எந்த விதமான எதிர்ப்பையும் வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.