Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்ச்சைக்குரிய சிங்கக்கொடிக்கு மன்னிப்புக் கோரினார் டலஸ் அழகப்பெரும

Featured Replies

சர்ச்சைக்குரிய சிங்கக்கொடிக்கு மன்னிப்புக் கோரினார் டலஸ் அழகப்பெரும APR 24, 2015 | 16:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

flag-3-300x200.jpgகோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாக நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், சர்ச்சைக்குரிய சிங்கக்கொடியை ஏந்தியதற்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப் பெரும மன்னிப்புக் கோரியுள்ளார்.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற டலஸ் அழகப்பெரும உள்ளிட்டவர்கள் ஏந்தியிருந்த கொடிகள், சிறிலங்காவின் தேசியக் கொடியில் உள்ள சிறுபான்மையினங்களைக் குறிக்கும் அடையாளங்கள் நீக்கப்பட்ட- தனியே சிங்கள இனத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.

இதுகுறித்து கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “இது ஒரு தீவிரமான விவகாரம். இரண்டு பகுதிகள் நீக்கப்பட்ட கொடிகளைப் பயன்படுத்தியதற்காக நான் மன்னிப்புக் கோருவதுடன் கவலையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்தக் கொடி எவருக்கேனும், அல்லது குழுவினருக்கேனும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருகிறோம்” என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, நீதிமன்றத் தடையை மீறி நேற்றைய போராட்டத்தில் பங்கெடுத்த, நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக, வரும் மே 8ம் நாள் நீதிமன்றில் முன்னிலையாக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப் பெரும, பந்துல குணவர்த்தன, காமினி லொக்குகே,  ஜயந்த கேத்தாகொட, சரத் வீரசேகர, மற்றும் உதய கம்மன்பில, பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கும் ஏனைய 26 பேருக்குமே நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/04/24/news/5539

 

 

 
கொடியை அச்சிடும் போதும் உபயோகப் படுத்தும் போதும் புத்த சமயமும் சிங்களவரும் தான் பிரதிபலித்தது.ஆகவே சிங்களவருக்கு மட்டும் தான் சிறிலங்கா. செய்ய முதல் சரிபார்க்காது செய்தபின் மன்னிப்பு கேட்பது மகா கேவலம்
 
  • கருத்துக்கள உறவுகள்

இது 1915ம் ஆண்டு முஸ்லிம் விரோத இனக்கலவரம் நடந்த 100வது ஆண்டு.

அதவாது 2015 குறுகிஅ சிங்கள தேசியவாதத்தின் - சிங்கள இனவாத எழுச்சியின் நூற்றாண்டு.

 

2013 நவம்பரில் கோத்தபாயாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நான் கைது செய்து தடுத்து வைக்கப் பட்டிருந்தபோது சில அதிகாரிகள் "இனி முஸ்லிம்கள்" என்பதுபோல பேசினார்கள்.அவர்கள் கோத்த பாய சக பொதுபல சேன அணியினர் , அவர்கள் 2015ஐ வகாபி முஸ்லிம்களின் இரத்ததில் கொண்டாடும் முனைப்பில் இருப்பதை இனம்கண்ட்டேன். விடுதலையானதும் இதுபற்றி எழுதினேன். 

 

ஆட்ச்சி மாற்றம் ஏற்பட்டது. நிலமையில் தற்காலிகமாகவேனும் சில மாற்றங்கள் ஏற்ப்பட்டது. இதுவரைக்கும் 2015ம் ஆண்டு பிரச்சினை இல்லாமல் நகர்கிறது.

 

சர்ச்சைக்குரிய இலங்கை தேசியகொடி படத்தைக் கூர்ந்து கவனியுங்கள். தமிழர் இனி நிமிர முடியாது. தமிழர்களுக்கு செய்தததுபோல முஸ்லிம்களுக்கும் செய்வோம் என்கிற இனவாத அச்சுறுத்தல்தான் அந்த படம். சம்பந்த பட்ட நிறுவனங்களை தடை செய் சகலரையும் கைது செய் என்பதே கோசமாக வேணும். இலங்கை தீவிலும் சர்வதேச நாடுகளிலும் உள JDS போன்ற சிங்கள ஜனநாயக சக்திகளும் ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம் அரசியல் சமூக சக்திகளும் இதனை எதிர்த்து போராட வேணும்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
2013 நவம்பரில் கோத்தபாயாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நான் கைது செய்து தடுத்து வைக்கப் பட்டிருந்தபோது சில அதிகாரிகள் "இனி முஸ்லிம்கள்" என்பதுபோல பேசினார்கள்
நான் மத்திய கிழக்கில் பணிபுரியும் பொழுது சில சகசிங்கள தொழிலாளிகள் கொட்டியை(தமிழனை)அழிச்ச பின்பு" தம்பியா"தமாய்....(முஸ்லிம்களை சிங்களவர்கள் தம்பியா என்று அழைப்பார்கள்....)முஸ்லிம்கள் தான்,,,, என சர்வசாதாரணமாக சொல்வார்கள்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் மன்னிப்பு கோருகிறார்.

ஆனால் இந்த திரியில் அந்த கொடிக்கு வக்காலத்து

http://www.yarl.com/forum3/index.php?/topic/156641-மெதமுலன-ராஜபக்ஸக்களும்-பரிவார/

அவங்க தேசிய கொடியைதான் கொண்டு வந்தார்கள் என்று எப்படி சொல்ல முடியும்?

அதுதான் பொடு பல சேனா வின் கொடி.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஐயா சொன்னதுபோல முஸ்லிம்களும் போராட வேண்டும்.. அதற்கு ஆட்சியில் தீவிரமாக பங்குபற்றுவது ஒரு வழி. :icon_idea:

இவர் மன்னிப்பு கோருகிறார்.

ஆனால் இந்த திரியில் அந்த கொடிக்கு வக்காலத்து

http://www.yarl.com/forum3/index.php?/topic/156641-மெதமுலன-ராஜபக்ஸக்களும்-பரிவார/

 

இது உங்களுக்கு வக்காலமா தெரியுதா? 

 

கொஞ்சமாவது நாட்டு நடப்பையும் தெரிஞ்சு வைக்கிறது. 

 

 

இந்த கொடியைத்தான் போடு பல சேனா தமது கொடியாக கொண்டு திரிந்தது. 

 

உங்கட அறிவுக்கு போடுபல சேனாவின் கொடிதான் இலங்கையின் கொடியா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.