Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணகி பிரார்த்தனையில் அ.தி.மு.க.,வினர்: ஜெயலலிதாவுக்காக வேண்டுதல்

Featured Replies

கண்ணகி பிரார்த்தனையில் அ.தி.மு.க.,வினர்: ஜெயலலிதாவுக்காக வேண்டுதல்

 

'கண்ணகி சிலையை அகற்றியதால்தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழக்கு ரீதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது; அதனால், கண்ணகி கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு' என, ஜோதிடர்கள் சிலர் சொல்ல, வரும் மே 4ம் தேதி, சித்ரா பவுர்ணமி நாளில், அ.தி.மு.க.,வினர், கண்ணகி கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு கள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

 

இதனால், முதல்வராக இருந்த அவர், உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுபடுவதற்காக, கட்சியினர் அனைவரும் கோவில் கோவிலாக சென்று தீச்சட்டி ஏந்துவது, கோ - தானம் செய்வது, பால் குடம் எடுப்பது, அன்னதானம் செய்வது, யாகம் வளர்ப்பது என, ஆன்மிகப் பணிகளில் தீவிரம் காட்டி பரிகாரங்களை செய்தனர். பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், ஜாமின் மனு மறுக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு, ஜெ.,வுக்கு ஜாமின் கிடைத்தது. இருந்தாலும், அவர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்.

 

பதற்றம்:

காரணம், வழக்கில் இருந்து அவர் முழுமையாக விடுபடாததுதான். பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடக்கும் மேல் முறையீட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வராததால், கட்சியினர் பதற்றம் அடைந்து உள்ளனர். தங்கள் தலைவி, வழக்கில் இருந்து முழுமையாக விடுபட்டு, மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, அமைச்சர்கள் முதற் கொண்டு கட்சியினர் அனைவரும் அங்கப்பிரதட்சணம், காவடி எடுத்து கடவுள்களிடம் வேண்டி வருகின்றனர். இந்நிலையில் தான், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கேரள எல்லையில் மலைப் பகுதியில் இருக்கும் கண்ணகி கோவிலுக்குச் சென்று இந்தாண்டு, சித்ரா பவுர்ணமி நாளில் வழிபட அ.தி.மு.க.,வினர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து, அ.தி.மு.க., வினர் சிலர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஜோதிடர்கள் சிலர் சொன்ன அறிவுரையின் படி, சென்னை கடற்கரை சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலையை அரசு தரப்பில் இரவோடு இரவாக அகற்றினர். உக்ர தெய்வமாக கண்ணகியை வழிபட்டு வருகின்றனர், கேரள எல்லையில் உள்ள மலை கிராம மக்கள். கண்ணகி சிலை அகற்றப்பட்டதற்கு, அந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அந்த குரல் அப்போது எடுபடவில்லை. சமீப காலமாக, கண்ணகியை தெய்வமாக வழிபடுவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்க, ஜோதிடர்களும் கண்ணகி தெய்வத்தை வைத்து பரிகாரமும் சொல்ல ஆரம்பித்து உள்ளனர்.

விரைந்து நடவடிக்கை:

இப்படித்தான், சமீபத்தில் ஜெ., குறித்து ஜோதிட ஆலோசனை கேட்டபோது, சிலர், 'கண்ணகியின் கோபத்தை குறைக்க வேண்டும்; அதற்கு பரிகாரமாக, கண்ணகி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்' என, வலியுறுத்தினர். அதனால் இந்தாண்டு, ஜெ.,வின் நலனுக்காக, வரும் மே 4ம் தேதி, சித்ரா பவுர்ணமி நாளில், கண்ணகி கோவிலுக்கு சென்று வழிபடவிருக்கிறோம். கண்ணகி கோவில் கேரள அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால், கண்ணகி கோவிலை ஆண்டு முழுக்க திறக்காமல், சித்ரா பவுர்ணமி நாளில் மட்டும் திறக்கின்றனர். இந்த நடைமுறைகளை மாற்றவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1238832

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: 

  • தொடங்கியவர்

அய்.. அயயே.. இது என்ன கலாட்டா????!!!

 

சென்னை: "அம்மா" ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. என்பதற்கு இது ஒரு தம்மாத்தூண்டு உதாரணம். திருமணமான, சுமங்கலிப் பெண்கள் மட்டுமே நடத்தக் கூடிய விளக்கு பூஜையை ஆண்களை வைத்து நடத்தி புதிய வரலாறே படைத்துள்ளனர் அதிமுகவினர். எல்லாம் கோவையில் நடந்த கூத்துதான்.

 

அம்மா மீண்டும் முதல்வராக வேண்டும், அவர் வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டும், மீண்டும் அரியணை ஏற வேண்டும் (இந்த மூன்றுமே அதிமுகவினரின் வழிபாடுகளில் Default கோரி்க்கைகள் ஆகும்). ஆகியவற்றை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கோவில்களில் பூஜைகள், யாகங்கள் களை கட்டியுள்ளன.

 

கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களே பயந்து போகும் அளவுக்கு அதிமுகவினரின் பக்தி முத்திப் போயுள்ளது. இந்த முத்தலில் அவர்கள் சில "குண்டாங்குறை குழப்பங்களையும்" அரங்கேற்றத் தவறுவதில்லை. இப்படித்தான் கரூரில், முருகனுக்கு எடுக்க வேண்டிய காவடியை, மாரியம்மனுக்கு எடுத்து அசத்தினர் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலான அதிமுகவினர். இந்த நிலையில் கோவையில் ஒரு காமெடி கலாட்டா நடந்தேறியது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, கோவை கோனியம்மன் கோயிலில் 16ம் தேதியன்று மாலை 6.30க்கு 670 பெண்கள் கலந்துகொள்ளும் விளக்கு பூஜை நடைபெறும் என்று விளம்பரம் செய்திருந்தார் கோவை மாநகர் மாவட்டச் செயலாளரும், மேயருமான கணபதி ராஜ்குமார்.

 

 

ஆனால் கோவிலில் கூட்டத்தையே காணோம். விரல் விட்டு எண்ணி விடும் அளவிலேயே பெண்களைக் காண முடிந்தது. இதனால் மேயர் டென்ஷனாகி விட்டார். தனது ஆதரவாளர்களிடம் வருத்தப்பட்டார். ஆள் பிடிக்கப் போயிருக்காங்கண்ணே, வந்துருவாங்க என்று அவர்கள் மேயரை அமைதிப்படுத்தினர். ஆனாலும் பெண்கள் வந்தபாடில்லை. நல்ல நேரம் வேறு கடந்து கொண்டிருந்தது. பார்த்தார் மேயர்.. ஆன்மீக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு புதிய வரலாற்றை எழுதினார். அதன்படி, தனது கட்சி ஆண்களையே, இருக்கும் பெண்களுக்குப் பின்னால் குத்து விளக்குகளோடு அமர வையுங்கள் என்று உத்தரவிட்டார

 

அதன்படி வந்திருந்த பெண்களுக்குப் பின்னால் ஆண்களும் குத்து விளக்கைப் பிடித்துக் கொண்டு மறைவாக உட்கார்ந்தனர். புரோகிதர் பூஜைகளை நடத்தியபடி, எல்லாரும் அவங்க அவங்க திருமாங்கல்யத்தில் சந்தனமும் குங்குமமும் வச்சுக்கோங்க என்று கூறவே, பெண்கள் பயபக்தியுடன் குங்குமத்தையும், சந்தனத்தையும் எடுத்து தாலியில் வைத்துக் கொண்டனர். ஆனால் ஆண்களின் நிலைதான் ரொம்பக் கொடூரம்...எங்கு வைப்பது என்பது தெரியாமல் குத்து விளக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனராம்...! அனேகமாக, இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற காமெடி களேபரம் இதுவாகத்தான் இருக்கும்!

 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-s-vilakku-poojai-creates-laughter-coimbatore-225826.html

  • கருத்துக்கள உறவுகள்

அய்.. அயயே.. இது என்ன கலாட்டா????!!!

 

:icon_mrgreen:  :icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாடு விளங்கின மாதிரிதான் .........

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியால்... செய்ய முடியாத, சட்டமன்றத் தீர்மானங்களை,

ஜெயலலிதா தமிழக சட்ட மன்றத்தில் கொண்டுவந்தவர் என்ற முறையிலும்,
துணிந்து... தனது கருத்தை சொல்லத் தயங்காதவர் என்பதிலும்... ஜெயலலிதாவை, எனக்குப் பிடிக்கும்.
அவரின்... தொண்டர்கள், ஆர்வத்தால் செய்யும்.... இப்படியான வேலைகள்,

ஜெயா அம்மையாரின் புகழை.. களங்கப் படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.