Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிர்ச்சி: நிர்வாகிகளை உளவு பார்க்க லண்டன் நிறுவனத்துக்கு ரூ. 14 கோடி கொடுத்த சீனிவாசன்

Featured Replies

Srinivasan-300_91.jpg

 

புதுடில்லி: சீனிவாசன் இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர், பி.சி.சி.ஐ., நிர்வாகிகளை உளவு பார்க்க லண்டன் நிறுவனத்துக்கு ரூ. 14 கோடி கொடுத்தது அம்பலமாகியுள்ளது.            
 
ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் வெடித்த கிரிக்கெட் சூதாட்ட புயலில் சென்னை அணி சிக்கியது. இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் கெடுபிடி காரணமாக, தனது சென்னை அணியின் பங்குகளை, ‘சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட்’ என்ற துணை நிறுவனத்துக்கு சாமர்த்தியமாக மாற்றினார் முன்னாள் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன். 2008ல் ரூ. 355 கோடிக்கு வாங்கப்பட்ட சென்னை அணியின் மதிப்பை ரூ. 5 லட்சமாக  குறைத்தது சர்ச்சையை கிளப்பியது. இதனை ஏற்க புதிய ஐ.பி.எல்., நிர்வாக குழு மறுத்தது. 
 
சட்ட ஆலோசனை: இது குறித்து நேற்று கோல்கட்டாவில் நடந்த பி.சி.சி.ஐ., செயற்குழு கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. பின் பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘சென்னை அணியின் பங்குகள் மாற்றம் தொடர்பாக புதிதாக சட்ட ஆலோசனை கேட்கப்படும். அதற்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’என்றார்.
 
லண்டன் நிறுவனம்: இதற்கிடையே பி.சி.சி.ஐ., நிர்வாகிகளை உளவு பார்த்ததாக சீனிவாசன் மீது புதிய புகார் கூறப்பட்டுள்ளது. இதற்காக லண்டனை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றை பணிக்கு அமர்த்தியுள்ளார். இந்நிறுவனம், உறுப்பினர்களின் டெலிபோன் பேச்சை ஒட்டுகேட்பது, ‘இ–மெயில்’ விவரங்களை ரகசியமாக சேகரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதற்கு சம்பளமாக ரூ. 14 கோடியை பி.சி.சி.ஐ., நிதியில் இருந்து சீனிவாசன் கொடுத்ததாக கூறப்படுகிறது. கிரிக்கெட் போர்டு பணத்தை செலவு செய்ய இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ., செயலர் அனுராக் தாக்கூர் தலைமையிலான குழு விசாரிக்க உள்ளதாக தெரிகிறது.    
       
சூதாட்ட புள்ளியுடன் பி.சி.சி.ஐ., செயலர்          
 
கிரிக்கெட் சூதாட்ட புள்ளிகளில் முக்கியமானவராக கரண் கில்கோத்ராவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) அடையாளம் காட்டியுள்ளது. இவருடன் ஐ.பி.எல்., அணி நிர்வாகிகள், வீரர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என எச்சரித்துள்ளது.
 
இந்நிலையில் கில்கோத்ராவுடன் பி.சி.சி.ஐ., செயலர் அனுராக் தாக்கூர் நெருக்கமாக பழகிய விவரம் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் நடந்த ‘பார்ட்டி’ ஒன்றில் இருவரும் சேர்ந்து ‘போட்டோ’ எடுத்துக் கொண்டுள்ளனர். இது குறித்து பி.சி.சி.ஐ., தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு ஐ.சி.சி., சார்பில் கடிதம் அனுப்பபட்டுள்ளது. இதற்கு இன்னும் பதில் அளிக்காமல் பி.சி.சி.ஐ., இழுத்தடிக்கிறது.
 
"மும்மூர்த்திகளுக்கு' புதிய பொறுப்பு      
 
இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் கமிட்டியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின், கங்குலி, டிராவிட் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், தங்களது ஆலோசனைகளை பி.சி.சி.ஐ., தலைவர் ஜக்மோகன் டால்மியா, செயலர் அனுராக் தாக்கூருக்கு வழங்குவர். இது குறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,""டங்கன் பிளட்சரின் பதவிக் காலம் உலக கோப்பையுடன் முடிந்து விட்டது. புதிய பயிற்சியாளரை டால்மியா, அனுராக் தேர்வு செய்வர். இவர்களுக்கு சச்சின் உள்ளிட்டோர் உதவுவர். துணை பயிற்சியாளர் பதவியில் சஞ்சய் பங்கர், பரத் அருண், ஸ்ரீதர் நீடிக்க வாய்ப்பு உள்ளது. கமிட்டியில் கங்குலியின் பெயரும் இருப்பதால், அவர் பயிற்சியாளராக வாய்ப்பு இல்லை. 2015ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு ரோகித் சர்மா பெயரை பரிந்துரை செய்துள்ளோம்,''என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒழுங்கா போய்க்கொண்டிருந்த கிரிக்கட்டில் பிசிசிஐ, பணம், ஐபிஎல் எல்லாம் நுழைந்து ஒரேயடியா நாறிப்போச்சு.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒழுங்கா போய்க்கொண்டிருந்த கிரிக்கட்டில் பிசிசிஐ, பணம், ஐபிஎல் எல்லாம் நுழைந்து ஒரேயடியா நாறிப்போச்சு.. :o:D

உங்களுக்கு விளையாட்டை விளையாட்டாக பார்க்க தெரியாதா ?

விளையாடுக்குள் ஏன் பணத்தை செருகுகிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒழுங்கா போய்க்கொண்டிருந்த கிரிக்கட்டில் பிசிசிஐ, பணம், ஐபிஎல் எல்லாம் நுழைந்து ஒரேயடியா நாறிப்போச்சு.. :o:D

 

இந்த விசயத்தில் கிரிக்கெட்டில்  மட்டும் குறை சொல்லக்கூடாது.

உலகளாவிய ரீதியில் உதைபந்தாட்டம் சூதாட்டத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகி விட்டது. அதன் தலைவரும் சிக்கிக் கட்டார் பணத்தைக் கட்டுக்கட்டாக வாங்கியதாக கதை உலாவுகின்றது    :D

 

இந்த விசயத்தில் கிரிக்கெட்டில்  மட்டும் குறை சொல்லக்கூடாது.

உலகளாவிய ரீதியில் உதைபந்தாட்டம் சூதாட்டத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகி விட்டது. அதன் தலைவரும் சிக்கிக் கட்டார் பணத்தைக் கட்டுக்கட்டாக வாங்கியதாக கதை உலாவுகின்றது    :D

 

 

 உலக கிண்ண  உதைபந்தாட்ட போட்டிகளை 2006 இல் நடத்த ஜெர்மனி எப்படி தெரிவாகியது? எல்லாமே காசுதான் :o:D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.