Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிகாவிற்கு பாவமன்னிப்பு வழங்கிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகாவிற்கு பாவமன்னிப்பு வழங்கிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு

முத்துக்குமார்

aa6a5b7b-f4f3-4a54-a410-163e5e2aeb091.jp

தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவுப் பேருரையினை நிகழ்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தடவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவினை அழைத்திருக்கின்றது. அவர் 'யுத்ததத்தின் முடிவு சமாதானமாகாது' என்ற தலைப்பில் தனது நினைவுப் பேருரையை ஆற்றியிருக்கின்றார்.

தந்தை செல்வா தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு காலகட்டத்தை நகர்த்திய பெருமைக்குரியவர். 1949 ஆம் ஆண்டு அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியை தோற்றுவித்ததன் மூலம் தமிழ் இன அரசியலை தமிழ்த் தேசிய அரசியல் என்ற கட்டத்திற்கு வளர்த்துச் சென்றார். மக்களை இணைத்த வெகுஜனப் போராட்டம் என்ற அரசியல் அணுகுமுறையினை ஆரம்பித்து வைத்தார்.

தந்தை செல்வாவினது இந்தப் பண்புகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டபோது அவரது அரசியல் வாரிசாக பிரபாகரன் எழுச்சியடைந்தார். கொள்கை, நேர்மை, விலைபோகாமை என்ற பண்புகளை கொண்ட பிரபாகரன் அதற்கு மேலாகச் சென்று தியாகம் நிறைந்த போராட்டத்தை வளர்த்தெடுத்தார். இதனூடாக தமிழ்த் தேசிய அரசியலை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றார். பிரபாகரன் தந்தை செல்வாவின் நிழலில் நின்று அரசியல் செய்தார். இன்று அரசியல் செய்பவர்கள் அனைவரும் பிரபாகரன் வழங்கிய அடித்தளத்தில் நின்றே அரசியல் செய்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான விமர்சனங்கள் அனைத்தும் பிரபாகரன் தந்த அடித்தளத்தில் நின்று கொண்டு தமிழ்த் தேசியத்திற்கு எதிரான அரசியல் செய்வது தொடர்பாகவே தோற்றம் பெற்றது.

இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலூன்றி நிற்பது பிரபாகரன் உருவாக்கிய அடித்தளத்தில். ஆனால் 2009ற்கு முன்னர் புலிகள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வை வலியுறுத்த சம்பந்தனோ அதிகாரப் பகிர்வை வலியுறுத்தியதன் மூலம் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு துணை நின்றனர். புலிகளை அழித்த பின்னர் பிரபாகரன் உருவாக்கிய அடித்தளத்தில் நின்று இன்று செய்வதோ தமிழ்த் தேசியத்திற்கு எதிரான அரசியல்.

இந்த தமிழ்த் தேசிய நீக்க அரசியலின் ஒரு வேலைத்திட்டம்தான் இன அழிப்புக் குற்றவாளிகளுக்கு பாவமன்னிப்பு வழங்குவது. கூட்டமைப்பினர் முதலில் இன அழிப்புக் குற்றவாளியான சரத் பொன்சோவிற்கு பாவமன்னிப்பு வழங்கினர். 2010 ஜனாதிபதி தேர்தலில் கொத்துக் கொத்தாக தமிழ் மக்களைக் கொலை செய்த சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக கூட்டமைப்பு பிரச்சாரம் செய்தது.

இரண்டாவது நிலையில் இன்னோர் இனப்படுகொலையாளியான ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாவமன்னிப்பு வழங்கியது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டமைப்பு மேதினத்தை நடத்தியதுமல்லாமல் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து சம்பந்தன் யாழ் மண்ணிலேயே சிங்கக் கொடியேற்றினார்.

தற்போது மூன்றாவது பாவமன்னிப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிற்கு வழங்கியுள்ளது. அதுவும் தமிழ்த் தேசியத்தின் பிதாமகன் எனக் கருதப்படுகின்ற தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் வழங்கியிருக்கின்றது. இதன் மூலம் தனது துரோகத்தனங்களுக்கு தந்தை செல்வாவையும் பங்காளியாக்கியிருக்கின்றது. வாரிசுகள் தமது தலைவரின் பெயரை பாதுகாக்க வேண்டுமே தவிர, அவர் மீது மண் அள்ளிக் கொட்டக் கூடாது. கூட்டமைப்பு மண் அள்ளிக் கொட்டும் வேலையைச் செய்திருக்கின்றது. இன்னும் சிறிது காலத்தில் பாவமன்னிப்பு வழங்குதல் தொடர்பாக கூட்டமைப்பு கின்னஸ் சாதனை நிகழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மைத்திரியை ஆட்சிக்கு கொண்டு வந்தது போல, சந்திரிகாவும் தமிழ் மக்களுக்கு சமஸ்டித்தீர்வு தருவேன் என்று கூறிய காரணத்தால், 1994 தேர்தலில் தமிழ் மக்கள் அபரிமிதமாக வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வந்தனர். சந்திரிகா எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் பெறாத 62.5 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். அவருக்கு அதிக வாக்கு வீதத்தில் வாக்களித்தவர்கள் தமிழ் மக்களே!

ஆனால் சந்திரிகா வெற்றி பெற்றதும் முதன் முதலில் வெளியிட்ட அறிக்கையில் பெரும்பான்மை மக்கள் விரும்பாத அரசியல் தீர்வை தான் முன்வைக்கப் போவதில்லை எனக் கூறியிருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் சர்வதேச நிர்ப்பந்தங்கள் காரணமாகவும் ஆயுதப் போரின் உக்கிரம் காரணமாகவும் அரசியல் தீர்வுப் பொதி ஒன்றினை முன்வைத்தார்.

ஆனால் அந்தத் தீர்வுப் பொதி மூன்று தடவைகள் வெட்டப்பட்டு வெறும் சக்கைதான் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முயற்சிக்கப்பட்டது. அந்தச் சக்கையினையும் நிறைவேற்றவிடாமல் ஐக்கிய தேசியக் கட்சியினர் பொதி நகலை கிழித்தெறிந்ததுதும், சந்திரிகா 1957 இல் அவரது தந்தையார் பேரினவாதிகளிடம் சரணடைந்தது போல சரணடைந்தார். தொடர்ந்து அதனைக் கொண்டு செல்லும் துணிவோ, விருப்பமோ அவரிடம் இருக்கவில்லை.

ரணிலுக்கும், புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனையை முன்வைத்தனர். இலங்கை என்ற அரச அதிகாரக் கட்டமைப்புக்குள் தமிழ் மக்கள் ஒரு தேசமாக இணைவதற்கான யோசனைகள்தான் அது. சர்வதேச சமூகமும் அதனை வரவேற்றிருந்தது.

ஒரு நாட்டிற்குள் தீர்வைக் காணக்கூடிய இடைக்காலத் தீர்வு யோசனையை முன்வைப்பார்கள் என்பதனை சற்றும் எதிர்பாராத ரணில் அரசாங்கம் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் சந்திரிகாவிடம் இருந்த பேரினவாத உணர்வு கிளர்ந்தெழுந்தது. அதுவரை காலமும் தாராள முகத்தை காட்டிய சந்திரிகா பேரினவாதத்தின் கோரமுகத்தைக் காட்டினார். விளைவு ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து முக்கிய அமைச்சுப் பதவிகள் பறிப்பும் தொடர்ந்து பாராளுமன்றக் கலைப்பும் இடம்பெற்றது. புலிகளின் இடைக்கால யோசனைகள் தானாகவே கிடப்புக்குள் சென்றன.

எனவே சந்திரிகா அரசியல் தீர்வு தொடர்பாக தாராளமாக நடந்து கொண்டார், தமிழ்த் தரப்பு அதனை ஒழுங்காக பயன்படுத்தவில்லை என சம்பந்தன் கதையளப்பதெல்லாம் சுத்தப் பொய். தயான் ஜயதிலக, குமார் ரூபசிங்கா போன்ற சிங்கள புத்திஜீவிகளைப் போல சந்திரிகா, சமாதானம், சமஸ்டி என நிறைய கதையளந்தாலும் இறுதியில் பேரினவாதத்திடமே தஞ்சமடைந்தார்.

இங்கேதான் இப்பத்தியாளர் தொடர்ச்சியாக வலியுறுத்துவது போல, சிங்கள சமூக உருவாக்கமும் அதன் வழி சிங்கள அரசுருவாக்கமும் மிகவும் முக்கியமானது. இதன்படி இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமானது. ஏனையவர்கள் வாழ்ந்துவிட்டுப் போகலாம். ஆனால் உரிமைகள் எதுவும் கேட்கக் கூடாது. இந்த அரசுருவாக்க கருத்து நிலையை மீற எந்த சிங்கள புத்திஜீவியும் எந்த சிங்கள அரசியல்வாதியும் தயாராக இல்லை.

பண்டாரநாயக்கா தொடக்கம் சந்திரிகா ஊடாக, வாசுதேவ நாணயக்கார வரை அரசியல்வாதிகள் தொடர்பாக இதுதான் அனுபவம். அதேபோல குமார் ரூபசிங்கா தொடக்கம் தயான் ஜயதிலக வரை புத்திஜீவிகள் தொடர்பாகவும் இதுதான் அனுபவம். சந்திரிகா போன்ற சிங்களத்தவர்களிடம் விருப்பமும் இல்லை. இயலுமையும் இல்லை என்பதே உண்மை நிலை.

சந்திரிகா பேரினவாதி மட்டுமல்ல இனப்படுகொலையாளியும் கூட. யாழ்ப்பாண இடப்பெயர்வு, நவாலி தேவாலயப் படுகொலை, நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் படுகொலை, கிரிசாந்தி குமாரசுவாமி படுகொலை, பண்டாரவளை பிந்தன்வேவ சிறைக்கைதிகள் படுகொலை, மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை என்பன சந்திரிகாவின் ஆட்சிக் காலத்திலேயே அரங்கேற்றப்பட்டன. முப்படைகளின் தலைவராக சந்திரிகா இருந்ததினால் இவரது கட்டளைகள் இன்றி இந்தப் படுகொலைகள் நடந்திருக்கும் எனக் கூற முடியாது.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் சந்திரிகா பதவியிலிருந்த காலத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினராலேயே கொலை செய்யப்பட்டார் எனக் கூறப்படுகின்றது. குமார் பொன்னம்பலம் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னரே சந்திரிகா தன்னை கொலை செய்யலாம் எனக் கூறியிருந்தார்.

இக்காலத்தில் தமிழ் மிதவாதிகளின் அரசியல் நிலைப்பாடு வேறு, புலிகளது அரசியல் நிலைப்பாடு வேறு என்றே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சமாதானச் செயற்பாட்டுக்கு எதிராகப் புலிகள் உள்ளனர் என இந்த மிதவாதிகள் எனக் கூறப்படுகின்ற சம்பந்தன், நீலன் திருச்செல்வம் வகையறாக்கள் சர்வதேச ரீதியாக பிரச்சாரம் செய்தனர். குமார் பொன்னம்பலம் அதனை நிராகரித்து தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்பதனை சர்வதேச ரீதியில் வலியுறுத்தினார். அதன் மூலம் ஒரு நாட்டிற்குள் தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்ப்பட்ட தீர்வை பெறுவதே புலிகளினதும், தமிழ் மிதவாதிகளினதும் அரசியல் இலக்கு என வாதிட்டார். தேர்தல் வரும்போது புலிகள் குமார் பொன்னம்பலத்தை முதன்மைப்படுத்தக் கூடிய நிலையும் இருந்தது. குமார் பொன்னம்பலம் முன்னிலைக்கு வந்தால் புலிகள் வேறு, மிதவாதிகள் வேறு என்ற பிரச்சாரத்தைக் கொண்டு செல்ல முடியாமல் போய்விடும் என்பதற்காகவே அவர் கொலை செய்யப்பட்டார்.

இனப்படுகொலை என்பது வெறுமனவே உயிர்க்கொலை மட்டுமல்ல. ஒரு மக்கள் கூட்டத்தின் அரசியலைக் கொலை செய்வதும் இனப்படுகொலைதான். சந்திரிகா தமிழ் மக்களது அரசியலையும் தமிழ் உயிர்களையும் கொலை செய்த ஒரு இனப்படுகொலையாளி. அவரது கைகள் முழுவதிலும் தமிழனின் இரத்தக் கறை. அந்த இரத்தக்கறை காய்வதற்கு முன்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவருக்கு பாவமன்னிப்பு வழங்கியுள்ளது.

சுயமரியாதை என்பது ஒவ்வொரு இனத்திற்கும் உண்டு. அந்த இனத்திற்கு தலைமை தாங்கும் அரசியல் இயக்கத்தினாலேயே அது வெளிப்படுத்தப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திரிகாவிற்கு பாவமன்னிப்பு வழங்கியதன் மூலம் தமிழ் மக்களின் சுயமரியாதையை மிக மோசமாக அவமானப்படுத்தியுள்ளது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=8&contentid=aa6a5b7b-f4f3-4a54-a410-163e5e2aeb09

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் கூட்டமைப்பு பிரமுகர் தந்தை செல்வாவின் சிராத்த தினத்துக்கு சந்திரிக்கா அழைக்கப்பட்டது ராஜதந்திரம் என தெரிவித்து உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் கூட்டமைப்பு பிரமுகர் தந்தை செல்வாவின் சிராத்த தினத்துக்கு சந்திரிக்கா அழைக்கப்பட்டது ராஜதந்திரம் என தெரிவித்து உள்ளார்.

 

 

ஊரில் ஒரு காலத்தில்

தெரியாத நோய்க்கு அம்மை நோய் என்று பெயர் வைத்தது போல்

இப்பொழுது பதில் சொல்லமுடியாத செயல்களுக்கு ராஜதந்திரம் என்று சொல்வது  வழமையாகிவிட்டது :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் கூட்டமைப்பு பிரமுகர் தந்தை செல்வாவின் சிராத்த தினத்துக்கு சந்திரிக்கா அழைக்கப்பட்டது ராஜதந்திரம் என தெரிவித்து உள்ளார்.

 

சந்திரிக்காவே.... திரிசங்கு சொர்க்க நிலையில்... பதவி எப்ப பறிபோகும், என்ற கட்டத்தில் இருக்கிறா.

நட்டுக் கழண்டதுகள் தான்..... ராசதந்திரம் என்று, தன்னையும் ஏமாத்தி... மற்றவனையும் ஏமாத்த நினைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
சுதந்திரதின விழாவிற்கு சென்று கொட்டாவி விட்டதை ராஜதந்திரம் (அம்மை நோய்) என்றவர்கள் 
 
இதை சொல்வதில் எந்த தப்பும் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.