Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் ஈழ வலைப்பதிவர்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

80களில் இருந்து ஈழத்தமிழர்கள் தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்க, மருத்துவ, பொறியியல் துறைக்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்து தெரிந்ததே. +2 பரிட்சையில் புள்ளிகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆகக்கூடிய புள்ளி எடுத்த மருத்துவ மாணவருக்கு சென்னையில் உள்ள பல்கலைக்கழகமும், அதன்பிறகு புள்ளிகளுக்கு ஏற்ப சில பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் சந்திரகாசனின் தலையீட்டால் சென்னையில் படிக்க வேண்டிய மாணவருக்கு செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்கியும், தனக்குத்தெரிந்த ஒரு மாணவருக்கு சென்னையில் இடம் கிடைக்கச் செய்தார்(ஒரு வேளை லட்சம் வாங்கினாரோ).

சந்திரகாசனின் மகள் தான் தென்னிந்தியாத்திரைப்படமான பி.சி. சிறிராமின் இயக்கத்தில் வெளியான 'வானம் வசப்படும்' படத்தின் நாயகியாக நடித்த பூங்கோதை

சாத்திரி அவர்களே உங்களுக்கு திருகோணமலை மூதூரில் படுகொலை செயப்பட்ட புளட்டின் மூதூர் பொறுப்பாளர் வல்லிபுரம் அல்லது கிருபாகரன் இவரும் பேராதனை பல்கலை கழக மருத்துவ பீட மாணவன் தனது 2 ம் வட்ருடத்தில் இயக்கத்தில் இணைந்தவர் மற்றும் அவரின் தோழர் அகிலன் போன்றோரை பற்றியும் தெரியுமா ஒரு மாமனிதர் விருது வாங்கியவர் ஒருவர்தான் தன் முன்னால் தலைவருக்காக இக்கொலையை செய்தார் என கதை அடிபடுகிறாது.பின் அத்தலைவரே அவரை கொலை செய்தது வேறு விடையம்!உண்மையா இச்சம்பவம்1985 ஆண்டு நடந்தது

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் தேர்வு எழுதவுள்ள இலங்கை மாணவர்கள்

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் அகதிகளில் சுமார் 125 மாணவர்கள் தங்களது இலங்கை படிப்புக்கான தேர்வை இந்தியாவில் தமிழக தலைநகர் சென்னையில் எழுத இருக்கிறார்கள்.

இலங்கை கல்வி முறையின்கீழ் ஓ லெவெல் என்றழைக் கப்படும் கல்விப்பொதுத்தராதர சாதாரண தேர்வு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான ஓ லெவெல் தேர்வினை சுமார் 125 தமிழ் அகதி மாணவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் சென்னையில் எழுத இருக்கிறார்கள்.

இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிதேர்வு ஒன்றுஇ இலங்கைக்கு வெளியே இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி அளிக்க விரும்பும் பெற்றோர்களுக்கு இந்த புதிய முயற்சி மிகப்பெரும் உந்துகோலாக அமையும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

இலங்கை அகதிகள் மத்தியில் செயற்பட்டு வரும் ழுகுகுநுசு எனப்படும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் தலைவர் சந்திரஹாசன் இதற்கான முன் முயற்சிகளை எடுத்தார். இது நடைமுறைப்படுத்தப்படும் பின்னணி பற்றி சந்திரஹாசனும்இ சென்னையில் இருக்கும் இலங்கையின் துணைத்தூதர் பி.எம் ஹம்ஸாவும் தெரிவித்துள்ள கருத்துக்களை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கில் கேட்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

80களில் இருந்து ஈழத்தமிழர்கள் தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்க, மருத்துவ, பொறியியல் துறைக்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்து தெரிந்ததே. +2 பரிட்சையில் புள்ளிகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆகக்கூடிய புள்ளி எடுத்த மருத்துவ மாணவருக்கு சென்னையில் உள்ள பல்கலைக்கழகமும், அதன்பிறகு புள்ளிகளுக்கு ஏற்ப சில பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் சந்திரகாசனின் தலையீட்டால் சென்னையில் படிக்க வேண்டிய மாணவருக்கு செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்கியும், தனக்குத்தெரிந்த ஒரு மாணவருக்கு சென்னையில் இடம் கிடைக்கச் செய்தார்(ஒரு வேளை லட்சம் வாங்கினாரோ).

சந்திரகாசனின் மகள் தான் தென்னிந்தியாத்திரைப்படமான பி.சி. சிறிராமின் இயக்கத்தில் வெளியான 'வானம் வசப்படும்' படத்தின் நாயகியாக நடித்த பூங்கோதை

எல்லாம் அந்த ராமர் ஆனவருக்கு தான் வெளிச்சம் ஹரி ராமா ஹரி ராமா... :(:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டத்தட்ட மறந்துபோன நிலையில் டேவிட் ஐயாவின் கதை மீண்டும் அடிபடுகிறது. இவர்பற்றி தமிழ்வலைப்பதிவொன்றில் ரமணிதரன் கந்தையா உட்பட சிலர் கதைத்தது ஞாபகம் வருகிறது.

இவர் சென்னை அண்ணாநகர், திருமங்கலம் பகுதியிலுள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், அக்கம் பக்கமுள்ள சிறுவர்களுக்கு ட்யூசன் எடுத்து மிகவும் நலிந்த நிலைமையில் வாழ்ந்து வருவதாக சில காலமுன் விகடன் இதழில் வந்தது.

Edited by Suresh

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.