Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகவரி தெரியாக் கல்லறைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மூன்றுவருடங்கள் இருக்கும். இருள் கெளவ்விய மாலைப் பொழுதில் ஆயிரக் கணக்கானவர் மத்தியில் ஒழுங்காகக் அடுக்கப்பட்டிருந்தன அவை. சாம்பலும், கறுப்புடன் இடையிடையே வெள்ளையும் கொண்டு பூசப்பட்ட கல்லறைகள். 

 

ஒவ்வொரு கல்லறையின் தலையிலும் மண்ணுக்காக மரித்துப் போன தெய்வங்களின் திருவுருவப் படங்கள். நானும் மாவீரர் குடும்பம்தான், ஆனால் எதற்கு முன்னால் போய் நிற்பது?அங்கிருந்த எல்லோருக்கும் மலர்தூவ எனக்கு ஆசைதான், ஆனால் ஒவ்வொரு படத்தினதும் முன்னால் அந்ததந்தக் குடும்பங்கள் அழுதுகொண்டிருக்க நான் எப்படி...........முடியவில்லை. 

 

முகவரி தெரியாத கல்லறை தேடிக் கண்களும், கூடவே கால்களும் சேர்ந்துகொள்ள அடுக்கப்பட்டிருந்த கல்லறைகளிலே அதனைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு ஓரத்தில் அது இருந்தது. படம் ஏதுமில்லாமல், மரணித்தவனின் பெயரும் இல்லாமல் தனியே அது கிடந்தது. முன்னால்ப் போய் நின்றேன். கண்கள் மூடி கண்ணீர்வழிய சிறிது நேரம் அங்கே நின்றேன். மனம் முழுதும் தம்பியின் நினைவுகள். அவனைப் போலவே மண்ணுக்காக மரணித்துப் போன அனைவரினதும் நினைவுகள். 

 

நினைவுகள் பெருக்கெடுத்து, துக்கம் அழுகையாக மாறி வாய்வழியும் கண்வழியும் வழிந்தோடியது. நான் அப்படி அங்கே நின்றிருப்பதைப் பார்த்த ஒருவர் என்னிடம் வந்தார். ' நீங்கள் மாவீரர் குடும்பமென்றால், உங்களது உறவின் விபரங்களைத் தந்துவிட்டுப் போங்கள், வருகிற மாவீரர் தினத்தில் அவரையும் வைக்க ஏற்பாடு செய்கிறோம்' என்றார். கொடுத்துவிட்டு வந்தேன். 

 

அதன் பின்னரான ஒவ்வொரு மாவீரர் நாளிலும் எனது தம்பி அங்கு இருப்பான். நான் வருவேன் என்று அவனுக்குத் தெரியும், அதனாலாவது நான் போகவேண்டும் என்று  நினைத்துக்கொள்வேன்.

 

முகவரி தெரியா கல்லறைமேல் நான் அன்று அழுததுபோல இன்றும் தாய்மார்கள், சகோதரர்கள், மனைவிகள் அழுகிறார்கள். முள்ளிவாய்க்கால் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் காணொளி ஒன்று கண்ணில் பட்டது. அடையாளத்துக்காக கற்கலால் அடுக்கப்பட்ட மாதிரிக் கல்லறைகளின் முன்னால் அந்த உறவுகள் உண்மையாகவே கதறியழுதபோது கூடவே மனதும் அழுதது. அந்த மாதிரிக் கல்லறைகளில் பெயரில்லை, முகமில்லை, வேறு எந்த விபரமோ இல்லை. ஆனாலும், அங்கு நின்ற ஒவ்வொருவரும் அதனைக் கட்டித்தழுவி தேம்பினார்கள். 

 

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது எனக்கு. இந்தக் கல்லறைகளுக்கு இனிமேல் முகவரி தேவையில்லை, விபரம் தேவையில்லை, அவர்கள் யாரென்று கூட எமக்குத் தெரியத் தேவையில்லை. ஆனால் அவர்கள்தான் இனி எமக்கு எல்லாமே. அங்கிருப்பவன் எனது தம்பி, எனது மகன், எனது தகப்பன், எனது அக்காள், எனது தங்கை, எனது தாய், எங்களின் நம்பிக்கை தெய்வங்கள். முகவரி தெரியாத எவருக்காகவும் இனி இந்த மனது அழும். 

 

எம்முயிர் காக்க தமுதியிர் தந்த அந்த தெய்வங்களுக்கு இனி முகவரி தேவையில்லை! முகவரி தெரியாக் கல்லறைகளாகவே அவை இருக்கட்டும், எல்லோரும் வந்து தொழுது செல்ல அவை அப்படியே இருக்கட்டும் !

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கல்லறைக்கு 'முகவரி' இருந்தால்.. அவனைப் பற்றிய விமரிசனங்களால். அந்தக் கல்லறையின் 'மகிமை' கொஞ்சம் குறைந்து போகும்.. அல்லது குறைக்கப் படும் சாத்தியங்கள் உண்டு!

 

அதனால் தானோ என்னவோ.. அநேகமான வெளிநாடுகளில் நான் கண்ட கல்லறைகள் அனைத்தும்.. பெயர் தெரியாத போர்வீரன் ஒருவனின் கல்லறை என்ற பெயரிலேயே உள்ளன!

 

இங்கு.. தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையும்.. விமரிசனங்களையும் தாண்டி..அந்தக் கல்லறை மகிமை பெறுகின்றது!

 

நினைவு நாள் வீர வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.

The tomb of the unknown warrior எனும் போது அங்கே அரசியல் அடிபட்டுப் போகிறது. அவர் யார், நல்லவர்களுடன் போராடினானானா தீயவர்களுடன் போராடினானா? அவன் கொள்கைகள் என்ன? எல்லாமே அடிபட்டுப் போக, பிறருக்காய் தன் வாழ்வைக் கொடுத்துப் போராடினான் என்ற ஒற்றை செய்தி மட்டுமே நிலைகிறது.

ஒரு சண்டையில் வீரச்சாவடையும் புலிவீரனின் புகழுடம்பை அடையாளம் காண்பதற்காக மூன்று இடங்களில் தகடுகள் கட்டப்பட்டு இருக்கும். கழுத்து, கை மற்றும் இடுப்பு பகுதிகளில் அவை தொங்கி கொண்டு இருக்கும். (இது பொதுவான உலக இராணுவ நடைமுறை என்று நினைக்கிறேன்)

குறிப்பிட்ட ஒரு சண்டையில் கிடைக்கும் புகழுடம்பில் இருக்கும் இலக்க தகட்டை அடிப்படையாக வைத்தே அந்த மாவீரனின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும்.வித்துடல் விதைக்கப்படும்.

வித்துடல் கிடைக்கபெறாத கரும்புலிகளுக்கு மற்றும் மாவீரர்களுக்கு நினைவு கற்கள் அமைக்கபட்டு இருக்கும்.

முகம் தெரியா கரும்புலிகளுக்கு என விசேட கல்லறைகள் மாவீரர் துயிலுமில்லங்கள் தவிர்த்து கரும்புலி பாசறைகளுக்கு நடுவே அமைக்கபட்டிருக்கும்.

இருப்பினும் மேலே ரகு அண்ணா கதையில் குறிப்பிட்டது போல மாவீரர் துயிலுமில்லங்களில் படமோ பெயரோ குறிப்பிடப்பாமல் "தியாக சீலம்" என்று மட்டும் எழுதிய எத்தனையோ கல்லறைகள் அமைக்கபட்டு இருக்கிறது.

தங்கள் உறவுகளுக்கு என ஒரு கல்லறை இல்லாத உறவுகளும் அல்லது அந்த மாவீர்களின் வித்துடல் விதைக்கபட்ட துயிலுமில்லத்துக்கு போகமுடியாதவர்களும்,மறைமுக கரும்புலிகளின் உறவுகளும் இவ்வாறான தியாக சீலங்களை தெரிந்தெடுத்து மாவீரர் நாட்களில் விளக்கேற்றுவார்கள்.

உண்மையிலேயே இந்த "தியாக சீலம்" என குறிப்பிட்ட கல்லறைக்குள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட மாவீரர்களில் உடல் உறுப்புகள் புதைக்கபட்டிருக்கும்.

சில சண்டைகளின் முடிவில் எறிகணைகளினால் தாக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட மாவீரர்களின் உடற்சிதைவுகள் ஒரு குவியலாகவே அள்ள வேண்டி ஏற்படும். அப்போது அந்த உடற்பாகங்களை ஒரு மாவீரரின் பெயரால் உரிமைகோர முடியாது.

அவ்வாறான உடற்பாகங்கள் ஒன்றாக விதைக்கபட்டு அமைக்கபட்டது தான் ரகு அண்ணா சொல்லும் "தியாக சீலம்" என்று அழைக்கப்படும் "முகவரியற்ற கல்லறைகள்".

நன்றி ரகு அண்ணா மீண்டும் ஒரு முறை எங்கள் தியாக சீலங்களை கண்முன்னே கொண்டுவந்தமைக்கு.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு ரகுநாதன். பச்சை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன்,

விளக்கத்துக்கு நன்றி.

மாவீரர் நாள், துயிலுமில்லங்கள் உருவாக்கம் பெற முன்னமே, கிட்டு மாமாவின் சிந்தனையில் வீரர்களை நினைவுகூறும் முகமாக, சிறுவர் பூங்காவுடன் சேர்த்து, தியாகசீலம் எனும் வித்துடல் புதைக்கப் படதா நினைவாலயம் ஆனைக்கோட்டையில் அமைக்கப் பட்டிருந்தது.

இதுக்கு ஒருமுறை சியாமாசெட்டியில் வந்து குண்டுவீசியும் போனார்கள்.

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.