Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவத்திடம் இறுதிப் போர்க் குற்ற உள்ளக விசாரணை ஆரம்பம்! - ஜெகத் டயஸிடம் வாக்குமூலம் பதிவு

Featured Replies

jegath%20dias%202015%2005%2029.jpg
 
 
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் சம்பந்தமாக இராணுவத்தின் உயரதிகாரிகளிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்திவருகிறது. இதன் ஒரு கட்டமாக அனைத்துலக மட்டத்தில் போர்க்குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவரும், அண்மையில் அரசால் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸிடம் உள்ளக விசாரணைக்குழு வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளது.
 
போரின் இறுதிக்கட்டத்தில் அதிகளவு மனித உரிமை மீறல்களைப் புரிந்த படைப்பிரிவுக்கு இவரே தலைமைதாங்கினார் என்ற குற்றச்சாட்டும் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், நந்தன உடவத்த, கமல் குணரத்தன ஆகிய உயர்மட்ட இராணுவ புள்ளிகளிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன என்று ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
சுமார் 3 மணித்தியாலங்கள் நடத்தப்பட்ட விசாரணைகளில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன என அறியமுடிகின்றது. இவை குறித்த விவரங்கள் ஓகஸ்டில் வெளிவரும் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படும் என அறியமுடிகின்றது.
 
காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மாத்திரம் ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட மெக்ஸ் வெல் பரணகம தலைமையிலான மூவரடங்கிய விசாரணைக்குழுவின் பணிகளை, உள்ளக போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல்மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஸ்தரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கமையவே படைத்தரப்பிடமும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு பரணகம குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்படி குழுவின் முன்னால் சாட்சிமளித்துள்ள மக்களுள் அநேகமானோர் படையினருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள விடயப்பரப்பில் முதலாவது கட்டத்தில் காணாமல்போனோர் பற்றியும், இரண்டாவது விடயப்பரப்பில் போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை செய்யும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
விசாரணை முடிவு: இலங்கை ராணுவம் எந்த போர் குற்றமும்  செய்யவில்லை. இலங்கை தமிழ் பிரஜைகளை புலி பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற ராணுவம் அளப்பரிய தியாகங்களை செய்தது.  :D
இலங்கை அரசின் விசாரணை முடிவை ஐ நா & இந்தியா உட்பட சர்வதேச சமுகம் வரவேற்கும். அதன் பின் போர்குற்ற விசாரணை மறைந்து விடும். சுபம்.  :(
 
  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக ஜகத் டயஸ் உள்ளுக்குள்ளே போவார் என நினைக்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக ஜகத் டயஸ் உள்ளுக்குள்ளே போவார் என நினைக்கிறேன். :)

 

:icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யாரு யாரை விசாரிக்கினம். தானே தன்னை விசாரிக்கிறார் போல. என்னமா உலகம் தமிழனை ஏய்க்குது.

 

புலிகள் குழந்தை படை வைச்சிருக்கினம் என்ற உடன எத்தனை பேர் வந்து போனாங்க விசாரணைக்கு. ஒரு இனக்கொலையே நடந்திருக்கு என்ற குற்றச்சாட்டை விசாரிக்கத் தான் ஆக்களில்ல. :o:rolleyes:

அநேகமாக ஜகத் டயஸ் உள்ளுக்குள்ளே போவார் என நினைக்கிறேன். :)

 

:D  :D  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக ஜகத் டயஸ் உள்ளுக்குள்ளே போவார் என நினைக்கிறேன். :)

 

உள்ளுகுள்ள போவாரா ?போடுவாரா? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.