Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறைமையை பாதுகாத்து நாட்டைக் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் தயார்! - நாடாளுமன்றில் மங்கள சமரவீர தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இறைமையை பாதுகாத்து நாட்டைக் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் தயார்! - நாடாளுமன்றில் மங்கள சமரவீர தெரிவிப்பு!!

55b5c079-7f5d-4bfd-a639-140ced08607f1.jp

இலங்கையின் நல்லிணக்கத்தையும், இறைமையையும் பாதுகாத்து ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் தயாராக உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; எனக் கூறி எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த மங்கள சமரவீர, பயங்கரவாதிகள் எனக் கூறி புலம்பெயர் தமிழர்களை ஒதுக்கத் தாம் தயாரில்லை என்றும் தெரிவித்தார். 

அதேவேளை, புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்க்கட்சியினர் தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா கடந்த வியாழக்கிழமை 23/2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறி னார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'புலம்பெயர் நாடுகளிலுள்ள இலங்கையர்கள், இங்கு பாடசாலைகளை அமைப்பதற்கும், வீடுகளை நிர்மாணிப்பதற்கும், சுகாதார வசதிகள் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகள் ஆகியவற்றை அர்த்தமுள்ளதாக்குவதற்கும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான காலம் கனிந்துள்ளது. 

சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் என எமது நாட்டிலிருந்த மக்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றனர். புலம்பெயர் தமிழர்கள் என்று கூறப்படுபவர்கள் கொம்பு முளைத்த பேய்களும் அல்லர். 

இவ்வாறு புலம்பெயர்ந்துள்ள 15 இலட்சம் மக்களில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைவரும் உள்ளடங்குகின்றனர். 

இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர்களில் பலர் நாடுகளிலும் பல்வேறு வகையான உயர்பதவிகளை வகிக்கின்றனர். இவர்களைத் தேடிக் கண்டுபிடித்து எமது நாட்டின் அபிவிருத்தியில் பங்கேற்கச் செய்யவேண்டும்.

இவ்வாறான நிலையில் புலம்பெயர் தமிழர்களை பயங்கரவாதிகள் எனக் கூறி ஒதுக்குவதற்கு நாம் தயாரில்லை. புலம்பெயர் தமிழர்களுடன் நாம் பேச்சு நடத்தியுள்ளோம். சிறு தரப்பினர் இன்னும் அந்த பிரிவினைவாத நிலைப்பாட்டில்தான் இருக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையானோர் பிரிக்கப்படாத இலங்கையை ஏற்றுக்கொள்கின்றனர்.

இலங்கையின் நல்லிணக்கம், இறைமையைப் பாதுகாத்து புனர்நிர்மாண நடவடிக்கைகளை மீளக்கட்டியெழுப்பி, மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட புலம்பெயர் இலங்கையர்கள் தயாராக இருக்கின்றனர். அவர்களை அன்புடன் வரவேற்க நாமும் தயாராக இருக்கின்றோம். அனைவரும் இணைந்து இலங்கையை முன்னோக்கிக் கொண்டுசெல்வோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=55b5c079-7f5d-4bfd-a639-140ced08607f

  • கருத்துக்கள உறவுகள்
பயங்கரவாதிகள் எனக் கூறி புலம்பெயர் தமிழர்களை ஒதுக்கத் தாம் தயாரில்லை என்றும் தெரிவித்தார்.
அடுத்த தேர்தலில் வாக்கு கிடைப்பது கஸ்டம்

இவ்வாறான நிலையில் புலம்பெயர் தமிழர்களை பயங்கரவாதிகள் எனக் கூறி ஒதுக்குவதற்கு நாம் தயாரில்லை. புலம்பெயர் தமிழர்களுடன் நாம் பேச்சு நடத்தியுள்ளோம். சிறு தரப்பினர் இன்னும் அந்த பிரிவினைவாத நிலைப்பாட்டில்தான் இருக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையானோர் பிரிக்கப்படாத இலங்கையை ஏற்றுக்கொள்கின்றனர்.

இலங்கையின் நல்லிணக்கம், இறைமையைப் பாதுகாத்து புனர்நிர்மாண நடவடிக்கைகளை மீளக்கட்டியெழுப்பி, மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட புலம்பெயர் இலங்கையர்கள் தயாராக இருக்கின்றனர். அவர்களை அன்புடன் வரவேற்க நாமும் தயாராக இருக்கின்றோம். அனைவரும் இணைந்து இலங்கையை முன்னோக்கிக் கொண்டுசெல்வோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

எப்பதான் வடகிழக்கிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி மக்களின் இருப்பிடங்களை அவர்களிற்கு கொடுக்கப் போகிறீர்கள்?

பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் இணைந்து செயற்பட புலம்பெயர் தமிழர்கள் விருப்பம்

 

mangala13_CI.jpg


உலகத் தமிழர் பேரவையுடன் இடம்பெற்ற கலந்துடையாடல் இலங்கையில் தேசியத்தை கட்டியெழுப்ப உதவும் என வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். 

பிபிசிக்கு வழங்கிய செவ்வியி கருத்து வெளியிட்ட அவர்...

புலம்பெயர் சமூகத்தினரிடையே இலங்கையர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்த அவர்களுடன் கலந்துரையாட வேண்டியது அவசியம் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கை பிரஜைகள் குறித்து கவனம் செலுத்துவதோடு தமிழ் டயஸ்போராக்களுடன் கலந்துரையாடி அவர்களை ஈர்ப்பதும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பெரும்பான்மையான தமிழ் டயஸ்போராக்கள் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கையுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120864/language/ta-IN/article.aspx

 

புலம் பெயர் தமிழ் மக்கள் வெளி நாட்டில் தான் வாழுகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் வெளி நாட்டில் தான் பிறந்தவர்கள்.அந்த நாட்டில் அவர்களுக்கு எல்லா சுதந்திரமும் உண்டு அதே சுதந்திரத்தை இலங்கை வழங்கத்தயாரா? சும்மா தேர்தலில் வெற்றி பெர அல்லது தோல்வியுற வார்த்தைகளை அள்ளி வீசாதீர்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக, ஒரு நாட்டின் இறைமை என்பது.. உள்நாட்டிலுள்ளவர்களால் பாதிக்கப் படுவதில்லை!

 

வெளியாரினால் அல்லது பிற நாடுகளினால் மட்டுமே அது அபகரிக்கப்படலாம்!

 

உள்நாட்டில் வாழ்பவர்களால் ஒரு நாட்டின் இறைமை பாதிக்கப் படுமெனின்.. அந்த நாடு அங்கு வாழும் ஒரு பகுதியினரை 'தனது குடிமக்களாக' ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே அதன் பொருள்!

 

இந்தச் சிந்தனை அரசியல்வாதிகளிடமிருந்து விடைபெறும் நாள் வரை.. இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை!

 

ஒரு சந்தேகப் பிராணியான கணவனுடன் வாழ்க்கை நடத்தும் ஒரு மனைவியின் வாழ்வைப்போலவே தமிழர்களின் வாழ்வு இருக்கப் போகின்றது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.