Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர் : இலங்கையின் வளர்ச்சிக்கு பங்காற்ற அவர்களும் ஆவலாக இருக்கின்றனர் : சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர் : இலங்கையின் வளர்ச்சிக்கு பங்காற்ற அவர்களும் ஆவலாக இருக்கின்றனர் : சம்பந்தன்

புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே புலிகளும் அல்லர். அவர்களில் முதலீட்டாளர்கள், கல்விமான்களும் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு  தமது அறிவு, புலமை, நீதி ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றனர்.
 
வடக்கில் மட்டுமல்லாது முழு நாட்டிலும் முதலீடுகளை செய்து இந்நாட்டினை அபிவிருத்தி செய்ய அவர்கள் விரும்புகின்றனர். என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
 
புலம்பெயர் தமிழர்கள், ஐக்கிய இலங்கைக்குள் செயற்படவே விரும்புகின்றனர். ஆனால், அவர்களைப் புலிகள் என்று சித்தரித்து அவர்கள் இலங்கைக்கு திரும்புவதையும் முதலீடுகளை மேற்கொள்ள முற்படுவதையும் தடுக்கிறீர்கள்.
 
 சமூகப் பொறுப்புள்ளவர்களை இந்நாட்டிற்குள் அனுமதிக்க மறுக்கின்றீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்டதான சர்வதேச பாதுகாப்பு தொடர்பில் 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கை குறித்து பேராசிரியர் ஜி. எல். பீரிஸினால் கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் கூறுகையில்இ
 
சர்வதேச ரீதியில் இன்னும் புலிகள் இயங்கி வருவதாகக் கூறுகின்றனர். இது ஒரு புதிய விடயமல்ல. இதனை நாமும் அறிந்தே வைத்திருக்கின்றோம். இருந்த போதிலும் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்று வேண்டும் என்பதை வலியுறுத்தியே கடந்த அனைத்து தேர்தல்களிலும் எமது மக்கள் வாக்களித்து வந்துள்ளனர்.
 
நாம் முன்னைய அரசுடன் 18 சுற்றுப் பேச்சுகளை மேற்கொண்டிருந்தோம். இருப்பினும் எந்தவித முடிவும் இன்றிய நிலையில் அவர்களே அந்த பேச்சுக்களை முறித்துக் கொண்டனர்.
 
 சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்து கொள்ளாமைக்காக அன்றைய ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். உள்ளக விசாரணை ஒன்றையே 2012, 2013 மற்றும் 2014 ஆகிய திகதிகளில் சர்வதேச மனித உரிமைப் பேரவையில் சர்வதேச நாடுகளின் கோரிக்கையாக இருந்தது.
 
எனினும், முன்னைய அரசு அதனை செயற்படுத்தாத காரணத்தால்தான் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு தள்ளப்பட்டுள்ளது.
 
 அக்காலப்பகுதிகளில் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விடயங்களை அன்றைய பெருந்தோட்ட அமைச்சர் நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளை அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் பின்வரிசையில் அமர்ந்திருந்ததையிட்டு வெட்கப்படுகின்றேன்.
 
 இப்படியான தகுதியற்றவரான பீரிஸ் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பில் பேசுவதற்கோ எமது நாட்டினதும் மக்களினதும் இறைமை பற்றி பிரஸ்தாபிப்பதற்கோ எந்த அருகதையும் அற்றவர் என்பதையும் கூறிக் கொள்கின்றேன்.
 
சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர். அவர் தனது நிர்வாகப் பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூறுவதற்கு அனைத்து உரிமையும் கொண்டிருக்கிறார். அவர் அவ்வாறு கூறுவதால் சி.வியை விடுதலைப் புலியாக சித்திரிக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
 
இவர்கள் இந்நாட்டில் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் புலிகள் என்றும் அச்சுறுத்தல்காரர்கள் என்றும் சர்வதேசத்துக்கு சித்தரித்துக் காட்ட முயற்சிக்கின்றனர்.
 
இவர்கள் தொடர்பில் நான் அலட்டிகொள்ளவில்லை. ஆனால், நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என்று கூறிக்கொள்கிறேன். இந்நாட்டில் வாழும் சகலருக்கும் சமத்துவம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதுவிடின் இறைமைபற்றி பேசுவதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com  

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர் : இலங்கையின் வளர்ச்சிக்கு பங்காற்ற அவர்களும் ஆவலாக இருக்கின்றனர் : சம்பந்தன்

புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே புலிகளும் அல்லர். அவர்களில் முதலீட்டாளர்கள், கல்விமான்களும் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு  தமது அறிவு, புலமை, நீதி ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றனர்.
 
வடக்கில் மட்டுமல்லாது முழு நாட்டிலும் முதலீடுகளை செய்து இந்நாட்டினை அபிவிருத்தி செய்ய அவர்கள் விரும்புகின்றனர். என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
 
புலம்பெயர் தமிழர்கள், ஐக்கிய இலங்கைக்குள் செயற்படவே விரும்புகின்றனர். ஆனால், அவர்களைப் புலிகள் என்று சித்தரித்து அவர்கள் இலங்கைக்கு திரும்புவதையும் முதலீடுகளை மேற்கொள்ள முற்படுவதையும் தடுக்கிறீர்கள்.
 
 சமூகப் பொறுப்புள்ளவர்களை இந்நாட்டிற்குள் அனுமதிக்க மறுக்கின்றீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்டதான சர்வதேச பாதுகாப்பு தொடர்பில் 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கை குறித்து பேராசிரியர் ஜி. எல். பீரிஸினால் கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் கூறுகையில்இ
 
சர்வதேச ரீதியில் இன்னும் புலிகள் இயங்கி வருவதாகக் கூறுகின்றனர். இது ஒரு புதிய விடயமல்ல. இதனை நாமும் அறிந்தே வைத்திருக்கின்றோம். இருந்த போதிலும் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்று வேண்டும் என்பதை வலியுறுத்தியே கடந்த அனைத்து தேர்தல்களிலும் எமது மக்கள் வாக்களித்து வந்துள்ளனர்.
 
நாம் முன்னைய அரசுடன் 18 சுற்றுப் பேச்சுகளை மேற்கொண்டிருந்தோம். இருப்பினும் எந்தவித முடிவும் இன்றிய நிலையில் அவர்களே அந்த பேச்சுக்களை முறித்துக் கொண்டனர்.
 
 சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்து கொள்ளாமைக்காக அன்றைய ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். உள்ளக விசாரணை ஒன்றையே 2012, 2013 மற்றும் 2014 ஆகிய திகதிகளில் சர்வதேச மனித உரிமைப் பேரவையில் சர்வதேச நாடுகளின் கோரிக்கையாக இருந்தது.
 
எனினும், முன்னைய அரசு அதனை செயற்படுத்தாத காரணத்தால்தான் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு தள்ளப்பட்டுள்ளது.
 
 அக்காலப்பகுதிகளில் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விடயங்களை அன்றைய பெருந்தோட்ட அமைச்சர் நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளை அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் பின்வரிசையில் அமர்ந்திருந்ததையிட்டு வெட்கப்படுகின்றேன்.
 
 இப்படியான தகுதியற்றவரான பீரிஸ் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பில் பேசுவதற்கோ எமது நாட்டினதும் மக்களினதும் இறைமை பற்றி பிரஸ்தாபிப்பதற்கோ எந்த அருகதையும் அற்றவர் என்பதையும் கூறிக் கொள்கின்றேன்.
 
சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர். அவர் தனது நிர்வாகப் பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூறுவதற்கு அனைத்து உரிமையும் கொண்டிருக்கிறார். அவர் அவ்வாறு கூறுவதால் சி.வியை விடுதலைப் புலியாக சித்திரிக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
 
இவர்கள் இந்நாட்டில் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் புலிகள் என்றும் அச்சுறுத்தல்காரர்கள் என்றும் சர்வதேசத்துக்கு சித்தரித்துக் காட்ட முயற்சிக்கின்றனர்.
 
இவர்கள் தொடர்பில் நான் அலட்டிகொள்ளவில்லை. ஆனால், நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என்று கூறிக்கொள்கிறேன். இந்நாட்டில் வாழும் சகலருக்கும் சமத்துவம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதுவிடின் இறைமைபற்றி பேசுவதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com  

கற்றது கை மண்ணளவு. சம் முதலில் முதலீட்டாளர்களை குறிப்பிட்ட பிறகே கல்விமான்களை குறிப்பிடுகிறார். 

சம்பந்தரின் பந்து வீச்சு சிலவேளை அந்த மாதிரி வருது .ஆடுபவர் மட்டையை வைத்துக்கொண்டு வெறுமனே வாய் பார்த்துக்கொண்டு நிற்கவேண்டி கிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம்.....

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம்.....

40  வருடங்கள்....

தொலைக்காட்சி  மட்டும்.......

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் இன்று அப்படித்தான்......எவ்வளவு போராடியும் ஒன்றும் கிடைக்கவில்லை எங்களுக்கு ......இனி பேட்டி கொடுத்து கொடுத்து போராட வேண்டியதுதான் .....சனம் தப்பி பிழைக்க வழியுண்டு....

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் இன்று அப்படித்தான்......எவ்வளவு போராடியும் ஒன்றும் கிடைக்கவில்லை எங்களுக்கு ......இனி பேட்டி கொடுத்து கொடுத்து போராட வேண்டியதுதான் .....சனம் தப்பி பிழைக்க வழியுண்டு....

துப்பாக்கி  வைத்திருப்பவனைப்பார்த்து

அணுகுண்டு வைத்திருப்பவன் பயங்கரவாதி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளும் நிலை போலத்தான்

சிங்களவன் புலிகளைப்பார்த்து பயங்கரவாதி என்பதும் பயப்படவதும்..

அதில் என்னைச்சேர்க்காதே என சிங்களவனிடம் மன்றாடுவதும்....

 

  • கருத்துக்கள உறவுகள்

 

துப்பாக்கி  வைத்திருப்பவனைப்பார்த்து

அணுகுண்டு வைத்திருப்பவன் பயங்கரவாதி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளும் நிலை போலத்தான்

சிங்களவன் புலிகளைப்பார்த்து பயங்கரவாதி என்பதும் பயப்படவதும்..

அதில் என்னைச்சேர்க்காதே என சிங்களவனிடம் மன்றாடுவதும்....

 

இன்றைய உலக ஒழுங்கில் பெரும்பான்மை செய்யும் அடாவடித்தனத்தை சிறுபன்மையினர் கண்னை மூடி தேவாரம் திருவாசகம் பாடி சகித்து கொண்டிருந்தால் தப்பி பிழைக்க‌லாம் இல்லை என்றால் அழிவுதான்...... :D

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன தான் தாளம் போட்டாலும் சிங்களவனுக்கு அது தப்புத்தாளம் தான். இவர் கொட்டாவி விட நல்ல சிங்களக் கொட்டகை தேடி இப்படிச் சொல்லிக்கிட்டு திரியுறார். இவருக்கு அவர் சும் சாவி செருகி விடுவார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா சபையே எங்களுடைய போராட்டம் தப்புதாளம் என்று சொல்லும்பொழுது ...அந்தமனுசன் வேறு என்னத்தை செய்ய முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா சபையே எங்களுடைய போராட்டம் தப்புதாளம் என்று சொல்லும்பொழுது ...அந்தமனுசன் வேறு என்னத்தை செய்ய முடியும்

ஐநா சபை அதில் ஆதிக்கம் செலுத்திறவையிட தாளத்தைப் பிரதிபலிக்குது. ஐநா சபை எந்த மக்களின் போராட்டத்தை தன்னிச்சையாக அங்கீகரித்திருக்குது. செல்வாக்கு மிகுந்தவையின் தேவைக்கு ஏற்பதான் அதன் அங்கீகாரமும் வருகுது. அதற்காக போராடும் மக்களின் பிரதிநிதிகளே.. தங்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக்குவது எங்கட இடத்தில தான் நடக்குது. வேறு எங்கும் இப்படி சுயலாப நோக்க..காட்டிக்கொடுப்புகள் நடப்பதாகத் தெரியவில்லை.

இவர் சம்பந்தனின் கூற்றுப்படி தானும் தன் குடும்பமும்.. புலி இல்லை. மிச்சாக்கள் புலியாக இருக்கலாம். சிங்களவனுக்கு தெரியும் தானே யார் புலி.. புலிகளின் தேவை என்ன.. தமிழர்களின் தேவை என்ன.. சம்பந்தனின் தேவை என்ன என்று. இடையில இவர் எதுக்கு அவனுக்கு  தாளம் போடுறார்..??! :o

அனுபவம்.....

அப்படி பந்து வீசி,

மட்டை பிடித்தவர்களை கேட்டால் தெரியும்

(யாழிலும் இடைக்கிடை போட்டுடிருக்கின்றன்) 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.