Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாதஸ்வர மேதை இசைப்பேரறிஞர் சாவகச்சேரியூர் கே.எம்.பஞ்சாபிகேசன் காலமாகிவிட்டார்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1907501_10206114676318658_784136295820193945_n

 

நாதஸ்வரமேதை இசைப்பேரறிஞர் சாவகச்சேரியூர் கே.எம்.பஞ்சாபிகேசன் 26.06.2015 இன்று அதிகாலை 12.20 மணியளவில் கொழும்பில் காலமாகிவிட்டார். இறக்கும் போது அவருக்கு வயது 91. அவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை சாவகச்சேரியில் நடைபெறவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இருந்து சாவகச்சேரிக்குப் பூதவுடல் எடுத்துவரப்படவுள்ளது. திங்கட்கிழமை அவரது சாவகச்சேரி சங்கத்தானையில் உள்ள வீட்டில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன. தென்மராட்சியின் இசை முகவரியாகத் திகழும் இசைப்பேரறிஞருக்கு எங்கள் இதயபூர்வமான அஞ்சலி

உலகளாவிய ரீதியில் புகழடைந்த பஞ்சாபிகேசன் அவர்கள் 01.07.1924 ஆம் ஆண்டு தவில்வித்துவான் முருகப்பாபிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வராய்ப் பிறந்தார். இவரது சகோதரன் நடராஜ சுந்தரம்பிள்ளை. அவர்கள் பிரபல தவில் வித்துவான் ஆவார். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கல்வி கற்ற இவர் 1934 ஆம் ஆண்டளவில் பிர பல நாதஸ்வர வித்துவான்களான சண்முகம்பிள்ளை, அப்புலிங்கம்பிள்ளை, ராமைய்யாபிள்ளை, கந்தசாமிப்பிள்ளை ஆகியோரிடம் நாதஸ்வர இசைப் பயிற்சியினைப் பெற்றார்.

தொடர்ந்து தனது இசையாற்றலை வளர்த்துக் கொள்வதற்காக தமிழகம் சென்ற இவர் நாதஸ்வர இசை மாமேதைகளான திருவாவடுதுறை ராஜரட்ணம்பிள்ளை “கக்காயி” நடராஜசுந்தரம்பிள்ளை ஆகியோரிடம் பயின்றார். பின்னர் ஐயம்பேட்டை வேணுகோபால்பிள்ளையிடம் பயிற்சி பெற்று பாரம்பரிய மரபுவழிக்கச்சேரி செய்யும் முறைமையினை நன்கு பயின்று கொண்டார்.

தனது 14வது வயதில் முதல் நாதஸ் வரக் கச்சேரியை நிகழ்த்திய இவர் அன்றுதொட்டு படிப்படியாகப் பெரும் புகழ்கொண்டார். அளவெட்டி மாணிக்கம் இரத்தினம் அவர்களைத் தனது வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொண்ட இவருக்கு மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைக ளும் உள்ளனர். இவரது புதல்வர்களான நாகேந்திரம் அவர்களும்இ விக்னேஸ்வரன் அவர்களும் தந்தையின் தடம்பற்றி நாதஸ்வரத் துறையில் புகுந்து வித்து வான்களாய் விளங்கி வருகின்றனர்.

தமிழகத்தின் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான்களான திருவாரூர் இலட்சியப்பா திருநெல்வேலி பிச்சையப்பா கம்பர், மாசிலாமணி போன்றோரோடும் நம் நாட்டின் பிரபல கலைஞர் களான நல்லூர்சிவாசாமி, அளவெட்டி பத்மநாதன் போன்றோரோடும் இணைந்து பல கச்சேரிகளை இவர் வாசித்துள்ளார். உலகப்புகழ்பெற்ற தவில்மேதை தட்சிணாமூர்த்தி அவர்களுடன் இணைந்து இவர் செய்த கச்சேரிகள் மறக்க முடியாதவை.

இவர் அகில இலங்கை கம்பன் கழகத்தின் “இசைப்பேரறிஞர்” விருதினையும், கலாசார அமைச்சின் “கலாபூஷணம்” விருதினையும், யாழ். இந்து கலாசார சபையின் “சிவகலாபூஷணம்” விருதினையும் பெற்ற வராவார். 1998 இல் வடகிழக்கு மாகாண சபையினால் இவருக்கு ஆளுநர் விருதும் வழங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்திருந்தது. தென்மராட்சியில் இதனையொட்டி நடைபெற்ற பராட்டுவிழாவில் உரையாற்றிய என்னை மிகவும் வாயாரப்பாராட்டி மகிழ்ந்தமை இன்றும் என் கண்ணுள் நிழலாடுகின்றது.

திருக்கேதீஸ்வர தேவஸ்தானத்தினால் “இசைவள்ளல் நாதஸ்வரகலாமணி” எனும் பட்டமும், கல்வி அமை ச்சினால் “நாதஸ்வர கானவாரிதி” எனும் பட்டமும், இந்து கலாசார அமைச்சினால் “ஸ்வரஞானதிலகம்” எனும் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டன. மலேசியா, சிங்கப்பூர், பாங்கொக், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் இவரது இசைக்கச்சேரிகள் நிகழ்ந்துள்ளன.

2010 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்திருந்தது. தென்மராட்சியில் இதனையொட்டி நடைபெற்ற பராட்டுவிழாவில் உரையாற்றிய என்னை மிகவும் வாயாரப்பாராட்டி மகிழ்ந்தமை இன்றும் என் கண்ணுள் நிழலாடுகின்றது. இவரது வழியில் புதல்வர்களான கே.எம்.பி. நாகேந்திரம், கே.எம்.பி. விக்கினேஸ்வரன் (அனார்) பேரப்பிள்ளைகளான சித்தார்த் மற்றும் சகோதரர்கள் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான்களாகத் திகழ்கின்றனர்.

bbc

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாபிகேசன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

இணைப்புக்கு நன்றி குமாரசாமி.

இவரது மகன் நாகேந்திரன் எனது திருமணத்திற்கு நாதஸ்வரம் வாசித்திருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மிடையே வாழுகின்ற கலைஞர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றுச் செல்கையில்.. மனதின் மூலையில் ஒரு சிறு வலியொன்று ஏற்படுகின்றது!!

மரணம் என்பது இயற்கையே எனினும்.. இவர்கள் விட்டுச் செல்லும் வெற்றிடங்கள்..என்றும் வெறுமையாக இருக்கப்போகின்றன என்ற கவலையால் தான் அந்த வலி ஏற்படுகின்றது!

அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாபிகேசன் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்திக்கு, பிரார்த்திக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.