Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈவ் டீஸிங்: போலீஸார் முன்னிலையில் வாலிபரை அடித்து உதைத்த மாணவி! (வீடியோ)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லக்னோ: ஈவ் டீஸிங் செய்த வாலிபரை காவலர் முன்னிலையிலேயே மாணவி ஒருவர் சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் திலீப்பட் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர், நேற்று பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த
வாலிபர் ஹங்கீத் சிங், மாணவியை ஈவ் டீஸிங் செய்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த மாணவி, பொதுமக்கள் உதவியுடன் ஈவ் டீஸிங் செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஆனாலும், ஆத்திரம் தீராத மாணவி, காவலர்கள் முன்னிலையிலேயே வாலிபரை தாக்கியதோடு, செருப்பால் சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும் வாலிபரை  காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார் மாணவி.

மாணவியை ஈவ் டீஸிங் செய்தது தொடர்பாக வாலிபரை  காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈவ் டீஸிங் செய்த வாலிபரை, மாணவி ஒருவர் காவலர் முன்னிலையிலேயே செருப்பால் அடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

போலீசில் ஒப்படைத்தவுடன் இந்த மாணவி, அங்கிருந்து விலகியிருக்க வேண்டும்!

அதன் பின்னர் நடந்த சம்பவங்களுக்காக மாணவியைப் போலீசார் கைது செய்திருக்க வேண்டும்!

இப்படியான சம்பவங்கள் இந்திய தேசத்தில் மட்டுமே ..கரகோஷம் பெற முடியும்!:wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஈவ்டீசிங் செய்ததாக எ.கே.யி படிக்கும் மாணவனை....

தவறே செய்தாலும், அந்த மாணவனை அரவணைத்து நல்லொழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதுதான் பள்ளிக்கு அழகு. எந்தத் தவறும் செய்யாத ஒரு அப்பாவிப் பிஞ்சின் நெஞ்சில் நஞ்சை விதைத்ததோடு, அந்தக் குழந்தையை பள்ளிக்கே வரக் கூடாது என்றும் ஒரு பள்ளி நிர்வாகம் பாடாய்ப்படுத்திய கொடுமையான சம்பவம் ஒன்று திருத்தங்கல் நகரத்தில் நடந்துள்ளது.''என் வீட்டுக்காரர் துணி வியாபாரம் பார்க்கிறார். 23 வருஷம் கழிச்சு எங்களுக்குப் பிறந்த குழந்தை இவன். ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்களுக்கு கிடைச்ச செல்வம் என்பதால், ஆசை ஆசையா சீராட்டி வளர்த்தோம். எப்பவும் துறுதுறுன்னு இருப்பான். இந்த வருஷம்தான் திருத்தங்கல் நாடார் வித்யாலயா ஸ்கூல்ல எல்.கே.ஜி. சேர்த்தோம். எங்க பையனும் நல்லாப் படிச்சான். என் வீட்டுக்காரர்தான் தினமும் பஸ்ல கூட்டிட்டுப்போய் ஸ்கூல்ல விட்டுட்டு வருவார். போன 4-ம் தேதி பஸ்ஸில் நல்ல கூட்டம். பையனைத் தோளில் தூக்கிவெச்சிருக்கார். அப்ப பக்கத்துல நின்னுட்டு இருந்த ஒரு லேடியோட தலைமுடியைப் பிடிச்சு விளையாடி இருக்கான். முதல்ல அந்தம்மா டேய்னு அதட்டி இருக்காங்க. திரும்பவும் கொஞ்ச நேரம் கழிச்சு, அதே மாதிரி அவங்க தலைமுடியைப் பிடிச்சு இழுத்திருக்கான். உடனே அந்தம்மா, 'உங்க டீச்சர்கிட்ட வந்து சொல்றேன் பார்’னு நேம் பேட்ஜ் பார்த்து இருக்காங்க. என் வீட்டுக்காரரும் சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொல்றாங்கன்னு நினைச்சுட்டு, 'ரொம்ப சேட்டை பண்றாங்க. டீச்சர்கிட்ட சொல்லுங்க’னு விளையாட்டா சொல்லி இருக்கார் என்று சோகத்துடன் கூறினார் குழந்தையின் தாய். அந்த லேடி என் பையன் படிக்கிற ஸ்கூல் ஆபீஸ்லதான் வேலை பார்க்கிறாங்களாம். அது எங்களுக்குத் தெரியாது. ஸ்கூலுக்குப் போனதும் பிரின்ஸ்பால்கிட்ட போய், பையனின் பெயர் விவரம் எல்லாம் சொல்லி, 'நான் பஸ்ஸில் வரும்போது முதுகைத் தடவி ஈவ் டீசிங் செஞ்சான்’னு சொல்லி இருக்காங்க. உடனே என் பையனை கிளாஸை விட்டு வெளியே உக்காரவெச்சுட்டாங்க. எங்களைக் கூப்பிட்டு அனுப்பின பிரின்ஸிபால், 'இந்த வயசுலேயே பஸ்ஸில் ஈவ் டீசிங் பண்ணி இருக்கான். நான் சொல்ற சைக்காலஜி டாக்டரைப் போய்ப் பார்த்துட்டு, அதுக்குப் பிறகு ஸ்கூலுக்கு கூட்டிட்டு வாங்க’னு அனுப்பிட்டாங்க. 'இந்த வயசுல அந்த மாதிரிப் பண்றவனா? எங்க பையன் அப்படி இல்லை’னு எவ்வளவோ சொன்னோம். காது கொடுத்துக் கேட்கலை. எதுக்கும் போய் செக் பண்ணுவோம்னு அவங்க சொன்ன டாக்டரைப் போய் பார்த்தோம். அந்த டாக்டரும், 'உங்க பையனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நல்லா இருக்கான்’னு சொல்லிட்டாங்க. திரும்பவும் ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போனா, சேர்த்துக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க. 'இன்னும் அஞ்சு மாசம் ட்ரீட்மென்ட் எடுங்க. அடுத்த வருஷம் யு.கே.ஜி-யில் சேர்த்துக்கிறோம்’னு அசால்ட்டா சொல்றாங்க. அப்பாவி குழந்தை மேல அபாண்டமா ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி ஸ்கூலுக்கே வரவிடாமப் பண்ணிட்டாங்களே... இதைக் கேள்விப்பட்டா மத்தவங்க நம்ம புள்ளையைப் பத்தி என்ன நினைப்பாங்கனு பெத்த வயிறு எரியுது. இதுக்கு ஒரு நீதி வேணும். எங்க குழந்தைக்கு நடந்த மாதிரி இனி யாருக்கும் நடக்கக் கூடாது. தினமும் காலையில் யூனிஃபார்மை மாட்டிட்டு, என்னை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போங்கன்னு அழுறான். என்றார் கண்ணீருடன். அந்தப் பள்ளியின் முதல்வர் பிரீதாவிடம் இதுகுறித்து கேட்டபோது, ''அந்தப் பையன் மத்த குழந்தைகளைக் கடிச்சுவைக்கிறான். எல்லாரையும் கெட்ட வார்த்தையால் திட்டுறான். அவன் மீது பல தடவை புகார் வந்துடுச்சு. அதனால்தான் கவுன்சிலிங் கூட்டிட்டுப் போகச் சொன்னோம். இன்னும் இரண்டு கவுன்சிலிங் பாக்கி இருக்கு. அதை முடிச்சதும் கிளாஸுக்குக் கூட்டிட்டு வாங்கனுதான் சொன்னோம். அதுக்குள்ள அவனோட பெற்றோர் கோர்ட்டுக்குப் போவோம்னு தேவை இல்லாத பிரச்னை பண்றாங்க. மத்தபடி ஈவ்டீசிங் பண்றான்னு நாங்க சொல்லவே இல்லை'' என்று மறுத்தார். குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையத்தின் தமிழக சிறப்புப் பிரதிநிதியாக, 'மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பின் இயக்குநர் ஹென்றி டிஃபேன் பதவி வகிக்கிறார். அந்த அமைப்பின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரபாகரின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுசென்றோம். அந்தப் பெற்றோரின் தொடர்பு எண்களைப் பெற்றுக்கொண்டார். ''எங்கள் அமைப்பின் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கிறோம். நாளை மறுநாள் அந்தக் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்லச் சொல்லுங்கள்'' என்றார். அவர்கள் அந்தப் பள்ளியிடம் இதுசம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள். தற்போது அந்த மாணவனை பள்ளி நிர்வாகம் மீண்டும் பள்ளியில் சேர்த்து கொண்டதாக தக்வல்கள் வந்துள்ளன.

 

நவகிரி.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

ஈவ்டீசிங் செய்ததாக எ.கே.யி படிக்கும் மாணவனை....

தவறே செய்தாலும், அந்த மாணவனை அரவணைத்து நல்லொழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதுதான் பள்ளிக்கு அழகு. எந்தத் தவறும் செய்யாத ஒரு அப்பாவிப் பிஞ்சின் நெஞ்சில் நஞ்சை விதைத்ததோடு, அந்தக் குழந்தையை பள்ளிக்கே வரக் கூடாது என்றும் ஒரு பள்ளி நிர்வாகம் பாடாய்ப்படுத்திய கொடுமையான சம்பவம் ஒன்று திருத்தங்கல் நகரத்தில் நடந்துள்ளது.''என் வீட்டுக்காரர் துணி வியாபாரம் பார்க்கிறார். 23 வருஷம் கழிச்சு எங்களுக்குப் பிறந்த குழந்தை இவன். ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்களுக்கு கிடைச்ச செல்வம் என்பதால், ஆசை ஆசையா சீராட்டி வளர்த்தோம். எப்பவும் துறுதுறுன்னு இருப்பான். 

எல்.கே.ஜி. என்பது, தமிழ் நாட்டில் முதலாம் வகுப்பு என்று நினைக்கின்றேன்.
ஆறு வயதுப் பிள்ளை, ஆயாவுக்கு..."ஈவ் டீசிங்" செய்ததை யாரும் நம்புவாங்களா.....
அந்த, ஆயா.... அட்டு பிகர் போலுள்ளது. தன்னை யாரும் ஈவ் டீசிங் செய்ய மாட்டாங்களா...என்ற ஏக்கத்கில், அலையுறார் போலுள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்

காவல்த்துறை வேடிக்கை பார்க்குது...

அவரை முதலில் உள்ள தள்ளணும்

இது தான் இந்தியாவின் சட்டத்தின் பெறுமதி

இதுக்குள்ள வல்லரசாகும் கனவு வேறு.......

  • கருத்துக்கள உறவுகள்

காவல்த்துறை வேடிக்கை பார்க்குது...

அவரை முதலில் உள்ள தள்ளணும்

இது தான் இந்தியாவின் சட்டத்தின் பெறுமதி

இதுக்குள்ள வல்லரசாகும் கனவு வேறு.......

அந்தப் பெண் அடிக்கும் போது.... காவல் துறையினன் வேடிக்கை பார்பதைப் பார்க்க, பத்திக் கொண்டு வருகுது.
பையன்... ஏதோ... செய்யக் கூடாததையா... செய்திட்டான்.
அவன், கூனிக்  குறுகி.... நிற்பதைப் பார்க்க, கவலையாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.