Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

16 வயதில் காதல் தோல்வி.. குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளை செய்து அதிர வைத்த கோவை மாணவி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவி ஒருவர் குடிபோதையில் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த 16 வயதான பிளஸ் 2 மாணவி ஒருவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவரது ஆண் நண்பருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு கிளம்புவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சீருடையில் பள்ளிக்கு கிளம்பினார்.இருந்த போதிலும் அப்பெண்ணுக்கு காதல் தோல்வியால் பள்ளி செல்ல பிடிக்கவில்லை. இதையடுத்து காதல் தோல்வியை சக தோழிகளுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார். தனது செல்போனை எடுத்து தோழிகள் 3 பேருக்கு அழைப்பு விடுத்தார். தோழிகளும் அவர் அழைத்த பீளமேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு அப்பெண் மது விருந்து கொடுத்தார். பின்னர் அப்பெண்ணும், அவரது தோழிகளும் அங்கேயே பொழுதை கழித்தனர். தொடர்ந்து மாலையில் மீண்டும் மது அருந்தினர். தோழிகள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதால் மதுவாடை வெளியே தெரியாத அளவுக்கு அளவாக குடித்தனர். ஆனால் காதல் தோல்வியில் இருந்த அம்மாணவியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். போதை தலைக்கேறியதும் அம்மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தோழிகளிடமே தகராறில் ஈடுபட்டார். இதனால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த தோழிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தபடி இருந்தனர். நேரம் செல்ல செல்ல அப்பெண்ணின் தொல்லை அதிகரிக்கத் தொடங்கியது. அவரது தோழிகளில் ஒருவர் தனது ஆண் நண்பருக்கு போன் செய்து மாணவியின் ரகளை குறித்து விளக்கமாக கூறினார்.

இதைத் தொடர்ந்து அந்த மாணவர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு பீளமேட்டில் உள்ள வணிக வளாகத்துக்கு வந்தார். அங்கு போதையில் இருந்த அவரை மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறினார். ஆனால் அப்பெண்ணோ அந்த வாலிபரை ஆபாசமாக திட்டி மோட்டார் சைக்கிளில் ஏற மறுத்தார். இதையடுத்து தோழிகள் 3 பேரும் சேர்ந்து மாணவியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றினர். பின்னர் அந்த மாணவர் அப்பெண்ணை அவரது வீட்டில் கொண்டு சென்று விடுவதற்காக பீளமேட்டில் இருந்து குறுக்கு பாதையில் துடியலூர் நோக்கி சென்றார். மோட்டார் சைக்கிளில் செல்லும்போது அப்பெண் போதையில் பாட்டுப் பாடியபடி ரகளை செய்து கொண்டே வந்துள்ளார். சேரன் நகர் தாண்டி துடியலூர் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவர் ரோட்டில் தவறி கீழே விழுந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவர் மோட்டார் சைக்கிளை ரோட்டோரத்தில் நிறுத்திவிட்டு அவரை எழுப்ப முயன்றார். அந்த மாணவரை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய அம்மாணவி போதையில் தகாத வார்த்தைகளால் வசை பாட தொடங்கினார். நடுரோட்டில் போக்குவரத்து மிகுந்த பகுதியில் பள்ளி சீருடையில் மாணவி ஒருவருடன் மாணவர் மல்லுகட்டுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவி அருகே சென்று பார்த்த போது தான் அவர்களுக்கு மாணவி போதையில் இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவியை மீட்க முயன்றனர். அவரோ பொதுமக்களையும் காலால் எட்டி உதைத்து ரோட்டில் வட்டமடித்தார்.

பின்னர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாறி, மாறி ஆபாசம் கலந்த தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார். தகவலறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் அங்கு குவிந்தனர். அப்பெண்ணோ ஒருவரையும் விடாமால் வளைத்து, வளைத்து திட்டிக் கொண்டிருந்தார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் துடியலூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ மற்றும் பெண் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.மாணவியின் நிலை கண்டு பதறிய போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர். ஆனால் மாணவியோ போலீசாரை கூட அடையாளம் தெரியாமல் போதையில் இருந்தார். போதையில் இருந்த மகளின் நிலையை கண்டு அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கதறி அழுதனர். போலீசார் அப்பெண்ணுக்கு அறிவுரைகள் கூறி அவரது நலன் கருதி வழக்கு ஏதும் போடாமல் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 முறை மதுஅருந்தி தகராறில் அவர் ஈடுபட்டு உள்ளார். ஆனால் அவை வீட்டுடன் முடிந்து உள்ளதால் பெரிய பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் நேற்று அளவுக்கு அதிகமான போதையால் துடியலூர் பகுதியையே ரணகள்மாக்கி விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது

Thatstamil
 

எல்லாம் தமிழ் படங்களால் வந்த கலாச்சாரம். :o

பொம்பிளைப் பிள்ளையை பொடியனாய் வளர்த்து இருக்கினம் போல. :(

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இவ்வளவு நேரம் பெரிய ரணகளமே நடந்திருக்கு.......ஒருத்தரும் வீடியோ / போட்டோ ஒண்டும் எடுக்கேல்லையோ??? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மாணவன், காதலில் தோல்வி அடைந்தால்.... தாடி வளர்த்திருபான்.
மாணவியால்.... தாடி வளர்க்க முடியுமா? அது தான்.. தண்ணி அடித்து, தனது கவலையை போக்கியிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தமிழ் படங்களால் வந்த கலாச்சாரம். :o

பொம்பிளைப் பிள்ளையை பொடியனாய் வளர்த்து இருக்கினம் போல:(

16 வயசில பொடியன் என்றால் இப்படி செய்யலாமோ நாதா.....? (சிரிப்புக்குறி போடமுடியாததற்கு வருந்துகின்றேன்)

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெடியள் தண்ணி போட்டு கவுளுறது வழக்கம் தானே... காதல் தோல்விக்காக என்று 16 வயதில கவுள்வது குறைவு தானே.

இது படிக்கிற பெட்டை. தண்ணி வித்தது யாரு எண்டு விசாரித்து உள்ள போடனும்.... வீட்டில ேதப்பன் வாங்கி வைச்சதை, பள்ளிக் கூட டிரிங் போத்தலுக்க விட்டுக் கொண்டும் போய் அடிச்சிருக்கலாம்.

இந்த வயசில காதலும் கத்தரிக்காயும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெடியள் தண்ணி போட்டு கவுளுறது வழக்கம் தானே... காதல் தோல்விக்காக என்று 16 வயதில கவுள்வது குறைவு தானே.

இது படிக்கிற பெட்டை. தண்ணி வித்தது யாரு எண்டு விசாரித்து உள்ள போடனும்.... வீட்டில ேதப்பன் வாங்கி வைச்சதை, பள்ளிக் கூட டிரிங் போத்தலுக்க விட்டுக் கொண்டும் போய் அடிச்சிருக்கலாம்.

இந்த வயசில காதலும் கத்தரிக்காயும்.

இப்ப இருவரும்

ஒரே லைனில வந்திட்டம்...

 

கதறி அழுதார் தந்தை; தவறை மறுத்தார் தாய்: மது அருந்திய மாணவியால் சிக்கல்

கோவையில் தனியார் பள்ளி மாணவி மது அருந்தி, பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக, அந்த மாணவி மற்றும் பெற்றோரிடம், கல்வி அதிகாரிகள் விசாரணையை துவங்கினர். மாணவியை மது அருந்த துாண்டியோரை, கண்டுபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை பிறப்பித்த உத்தரவுப்படி, பள்ளிக் கல்வித்துறை மற்றும் மெட்ரிக் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று, மாணவியின் பெயர் மற்றும் பெற்றோர் முகவரியை அறிந்து அவர்களை சந்தித்துப் பேசினர்.அப்போது, மாணவியின் தாய், 'என் மகள் எந்த தவறும் செய்யவில்லை; நீங்கள் முகவரி மாறி வந்துள்ளீர்கள்' எனக்கூறி, அதிகாரிகளை சந்திக்க மறுத்தார்.அதிகாரிகள், கொஞ்சம் கொஞ்சமாக பெற்றோரிடம் எடுத்துக் கூறி, மாணவியை சந்தித்து பேசினர். மாணவி யின் தந்தை, மத்திய அரசு அதிகாரி. அவர், அதிகாரிகள் முன்னிலையில், மகளின் போக்கை நினைத்து கதறி அழுதுள்ளார்.

தான் பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பதால், மனைவி தான் மகளை கவனித்து வந்ததாகவும், தன்னால் மகளின் நடவடிக்கையை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறி தன் முகவரி மற்றும் மகள் விவரங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, மாணவிக்கும், பெற்றோருக்கும், அதிகாரிகள் ஆறுதல் கூறினர். கவுன்சிலிங்குக்கு ஏற்பாடு செய்வதாகவும், அதில் கண்டிப்பாக, மூன்று பேரும் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

* மாணவியை இந்த நிலைக்கு துாண்டியது யார்?
* அவரை மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமை
யாக்கியது ஆண் நண்பரா அல்லது தோழியரா?
* அவர்கள் பள்ளி மாணவ, மாணவியரா அல்லது வெளியில் உள்ளவர்களா என விசாரணை நடத்த, தனியார் பள்ளிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழியரிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

முகவரியை கண்டுபிடிக்க திணறல்

போதையில் மாணவி பிடிபட்ட போது, அவரை துடியலுார் போலீசார் மீட்டு, அடையாள அட்டையில் உள்ள போன் எண்ணுக்கு தகவல் கூறி, பெற்றோரை வரவழைத்து, மாணவியை அனுப்பி வைத்தனர். ஆனால், மாணவியின் பெயர், பெற்றோர் முகவரி, எந்த பள்ளி, மொபைல்போன் எண் போன்ற விவரங்களை வாங்கி வைக்கவில்லை.
காவல் நிலைய, தரை வழி போன் மூலம் பெற்றோரிடம் பேசியதால், மொபைல்போன் எண்ணும் தெரியவில்லை. இதனால், மாணவியின் பள்ளி மற்றும் முகவரியை அறிய, பள்ளிக் கல்வி அதிகாரிகள் திணறினர்.

பத்திரிகைகளில் வெளியான புகைப்படத்தில் இடம் பெற்றிருந்த, மாணவியின் சீருடை அடிப்படையில், மூன்று பள்ளிகளில் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட பள்ளியை கண்டுபிடித்தனர்.
மது அருந்தியவர், தங்கள் பள்ளி மாணவி என்பதை மறுத்த பள்ளி நிர்வாகம், அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து, மாணவியின் முகவரியை கொடுத்தனர். இதேபோல், பள்ளியின் பெயரையும், போலீசார் சரியாக தெரிந்து கொள்ளாமல், கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் பெயரை கூறிவிட்டனர். ஆனால், அதிகாரிகள் விசாரணையில், அந்த மாணவி படித்தது மற்றொரு பள்ளி என, தெரிய வந்தது.

மாணவ, மாணவியர் மது அருந்த பெற்றோரே காரணம்

'மாணவ, மாணவியர் மது அருந்த, பெற்றோரே முக்கிய காரணம். 'டாஸ்மாக்'குகளில் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, கல்வியாளர்கள், குழந்தைகள் கூர்நோக்க குழுமத்தின் உறுப்பினர்களுக்கு, சமூக பாதுகாப்புத் துறை சார்பில், சென்னையில் நேற்று பயிற்சி நடந்தது.

துறை இயக்குனர் லல்வேனா தலைமையில் நடந்த பயிற்சி அரங்கில், மாணவ, மாணவி
யரிடையே வளரும் போதைப் பழக்கம் குறித்து, அதிகமாக விவாதிக்கப்பட்டது.பள்ளி மாணவ, மாணவியர் மது போதைக்கு அடிமையாவதற்கு முக்கியக் காரணம், பெற்றோரே. உயர்தட்டு மற்றும் அடித்தட்டு வகை பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் கண்முன்னே மது அருந்துவது, அவர்களை மது பாட்டில் மற்றும் மது அருந்துவதற்கான, இதர நொறுக்குத் தீனி எடுத்து வரச் சொல்வது போன்றவற்றால், அந்தப் பிள்ளைகளும் மதுப்பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றன என்று, கல்வியாளர்கள் புகார் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கப் பொதுச் செயலர் நந்தகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் கூர்நோக்கக குழுமத் தலைவர், வின்சென்ட் சுந்தராஜ் கூறியதாவது:
பள்ளி மாணவ, மாணவியர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது ஆபத்தானது. எனவே அவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் வகையில், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என, ஆலோசிக்கப்பட்டது.

பள்ளி அருகே, போதைப் பொருள் மற்றும் பான்பராக் போன்றவற்றின் விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளிக்கு செல்லும் ஏழை குழந்தைகளை கடத்துதல், அவர்களை பணிக்கு அனுப்புதல் போன்ற சூழலைத் தவிர்க்க, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை, முழுமையாக அரசு அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.தந்தையால், 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: சமூக பாதுகாப்புப் பயிற்சி அரங்கில் பள்ளி மாணவியர் கர்ப்பம் ஆவதைத் தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஓசூரில் தந்தையால், 10ம் வகுப்பு மாணவி கட்டாய பலாத்காரம் செய்யப்பட்டு, அந்த மாணவி தற்போது, 6 மாத கர்ப்பமாக இருக்கிறார்.இரும்புத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியின் தந்தை, மகளை பள்ளிக்கு விடுப்பு எடுக்க வைத்து, மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததைக் கண்டு
பிடித்து உள்ளனர். தற்போது, பலாத்காரம் செய்த தந்தை சிறையிலும், அந்த மாணவி, கிருஷ்ணகிரி குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டியில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் சமீபத்தில் நடந்து முடிந்த, 10ம் வகுப்புத் தேர்வில், 397 மதிப்பெண் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1292619

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.