Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் பதவியேற்பு! கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பதற்றம்!

Featured Replies

எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் பதவியேற்பு! கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பதற்றம்!
[ வியாழக்கிழமை, 03 செப்ரெம்பர் 2015, 06:09.35 PM GMT ]
SAAAA.jpg
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இன்று எதிர்கட்சி தலைவராக தெரிவாகியதன் பின்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செல் நம்பர் J பிரிவில் அடைக்கப்பட்ட கணிசமான தமிழ் அரசியல் கைதிகள் சித்திரவதைக்குட்பட்டுள்ளனர்.

அப் பகுதிக்கு இன்று மாலை 4:00 மணியளவில் குறித்த J பிரிவுக்கு சென்ற சிறைக் காவலர்கள் எதிர்க் கட்சி தலைவராக உங்கள் தலைவரா தெரிவாகியுள்ளார் எனக் கேட்டு தாக்கியதோடு, இது எங்களுடைய நாடு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது எனக் கேள்விகளைக் கேட்டவாறே அரசியல் கைதிகளை நிர்வாணப்படுத்தியதுடன் அடைமழைக்குள் அவர்களை தள்ளிவிட்டு அவர்களது போர்வைகளையும் வீசி எறிந்துள்ளனர்.

இவ்வாறு மிகவும் அநாகரிகமான முறையில் தமிழ்க் கைதிகளை காவலாளிகள் நடத்தியதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிறைக்கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டு அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதிலும் இவ்வாறு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சித்திரவதைக்குட்பட்டுள்ளனர். அதே போன்றே இன்று இரா.சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றதன் பிற்பாடு இவ்வாறு சிறைச்சாலைக் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டமை 1983ம் ஆண்டு வெடித்த கலவரம் போன்று மீண்டும் வெடித்துவிடுமா என சிறைக்கைதிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் அன்றைய அதாவது 1983ம் ஆண்டு நடந்த சிறைச்சாலை வதையின் போதும் இன்றைய எதிர்க்கட்சி பதவியேற்பின் பின்னரும் ஏற்பட்ட சிறைச்சாலை வதையின்போதும் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியில் இருந்கமை குறிப்பிடத்தகது.

http://www.tamilwin.com/show-RUmtyJTXSVkw0J.html#

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கைதிகள் வதைக்கப் பட்டதற்கு....
எதிர் கட்சித் தலைவர் சம்பந்தன்....  வாயை திறந்து,  சிறை நிர்வாகத்திடம் பேச மாட்டாரா?
இனி... முன்பு போல், வாயில் கொழுக்கட்டை வைத்துக் கொண்டிருக்கப் படாது. 
தனது பதவியின் பெயரையாவது... காப்பாற்றிக் கொள்ள, சம்பந்தன் முன்வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவரா இருக்கேக்க தான்.. வெலிகடை சிறைப்படுகொலை மற்றும் கறுப்பு யூலையை ஏற்படுத்தி அழகு பார்த்தார். எனி அந்த மிச்சத்தை இவர் செய்து முடிப்பார்.. சாக முதல். 

ஒரு சதத்துக்கும் பிரயோசனம் இல்லாத பதவி. இதனை வைச்சு சிங்கள இனவாதத்தை வளர்க்கலாமே தவிர.. சொறீலங்காவை தமிழர்கள் ஆள முடியாது கண்டியளோ.

தமிழர்களின் உரிமைக் குரலை நலினப்படுத்தும் பழைய அத்தியாயத்தின் புதிய பக்கமே  சம்பந்தனுக்கு.. இந்த எதிர்கட்சி தலைவர் பதவி.:rolleyes:

Appapillai Amirthalingam.jpg
 
Leader of the Opposition
In office
4 August 1977 – 24 October 1983

https://en.wikipedia.org/wiki/A._Amirthalingam

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் வெலிக்கடைப் படுகொலை மற்றும் கறுப்பு ஜூலை திருநெல்வேலி தாக்குதலின் எதிரொலி, இவற்றிற்கும் அமிருக்கும் என்ன தொடர்பு? 

  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலி தாக்குதலுக்கு முதலும் சிங்கள இராணுவம் தாக்குதல்களை குண்டுவெடிப்புக்களை சந்திச்சிருக்குது.

மேலும்.. ஒருவர் எதிர்கட்சி தலைவரா இருக்கிறார் என்றால் அவர் சார்ந்த மக்கள் அடிவாங்கிச் சாகும் போது அதை விடுப்புப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார். மாறாக உலகறியச் செய்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதை கூடிய அளவு தவிர்க்க அல்லது முடிவுறுத்த தான் நினைப்பார். இங்க....??! தமிழனின் அழிவில் தான் இவர்களின் பதவி சுகங்கள் என்றாகிவிட்டதால்.. இப்படி நடக்குது போலும். :rolleyes:

அமிர்தலிங்கம்.. என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை.. எனியும் உங்களால் ஊகிக்க முடியல்லைன்னா.. சம்பந்தனுக்கும்.. அதே தமிழ் மக்களை ஏய்க்க வாய்ப்பு வழங்கிய "பெருமை"யை தற்போதைய தமிழர் தலைமுறையும் சுமக்கும். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்படுத்தி அழகு பார்த்தார் என்பதற்கும் நடக்கும் போது அழகு பார்த்தார் வேறுபாடு உள்ளதல்லவா.

ஆனால் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் இவரும் ஒருவர் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. 

அமிர் தான் ஜெயிலுக்கு ஆயுதங்களை கடத்தி கொடுத்தவர் .

எல்லாம் தோற்று போச்சு இனி இப்படி அடுத்தகட்டம் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் என்றவர் இரத்தப் பொட்டு எடுத்து வைச்சிட்டு.. எதிர்க்கட்சி கதிரையில்.. குந்த.. இவரால உசுப்பப்பட்ட பொடியள்.. வெலிகடையில் சிங்களத்தால் அழிய.. அவர் கொழும்பிலும்.. சென்னையிலும்.. பங்களாவில் உருண்டு பிரண்டு கொண்டிருந்தவரே தவிர... எதனையும் பண்ண லாக்கில்லாமல் இருந்தது தான் இவைட கடந்த கால அரசியல். அந்தப் பழைய கிழடியை.. சம்பந்தன் கிழவன்.. மீண்டும் கொண்டு வந்து தமிழர்களை இன்னும் இன்னும் ஏமாற்றி.. அரசியல் சீரழிவை.. நிர்கத்தியை... நோக்கி தள்ளிவிட்டு சிங்கள இனவாதக் கட்சிகளின் பின்னால் தமிழர்களை அணிவகுக்கச் செய்த பெருமையை பெறுவார்கள்.

இன்னும் இரண்டு தசாப்தத்தில் சொறீலங்கா சுத்தமான சிங்கள பெளத்த நாடாகும். அதனை பதவி ஆசைக்கு சகோதரத்துவம் பேசி செய்து முடித்தவர்கள் வரிசையில் துரோகி அமிர்தலிங்கத்துக்கு பக்கத்தில் சம்பந்தன் கொட்டாவி விட்டபடி தோன்றுவார். அவ்வளவும் தான் எங்கட சாணக்கிய அரசியல். tw_angry:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.