Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெக்கா விபத்தில் 52 பேர் பலி .

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெக்கா விபத்தில் 52 பேர் பலி 

சவூதி அரேபியாவில் மெக்கா மசூதியில் கிரேன் விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர்.     கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன் விழுந்த இந்த விபத்தில் பலர் படுகாய மடைந்துள்ளனர்.

 
 

mekka.jpg

 

 

 

 

மெக்கா மசூதியில் கிரேன் விழுந்து 107 பேர் பலி

மெக்கா: முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவில், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்த விபத்தில் 107 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் பெரிய மசூதி முஸ்லிம்களின் புனித தலமாக விளங்குகிறது. இந்த மாத இறுதியில் ஹஜ் யாத்திரை நடக்கிறது. உலகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கில் முஸ்லிம்கள் இங்கு கூடுவர்.இங்குள்ள பெரிய மசூதியில், கட்டுமான வேலைகள் நடக்கிறது. மூன்றாவது தளத்தில் இருந்த கிரேன், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 11 மணிக்கு சரிந்து விழுந்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் சிக்கினர். அதில்,107 பேர் சடலமாக மீட்கப்பட்டனர், அவர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை.

00க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பொதுவாகவே வெள்ளிக் கிழமைகளில் இங்கு சிறப்பு தொழுகைக்காக கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால், பலியானோர் எண்ணிக்கை உயரும் என்று கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

 

gallerye_013841424_1339971.jpg

இந்த சம்பவத்தில் 9 இந்தியர்கள் காயமாகியுள்ளதாக, இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறினார்.

மெக்காவில் சோக சம்பவங்கள் இதுவரை...:

*1990 ஜூலை 2: மெக்காவில் புனித யாத்திரையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 1,426 பேர் பலி.

*1994 மே 23: மெக்காவில் ஹஜ் யாத்திரையின் ஒரு பகுதியாக சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 270 பேர் பலி.

* 1997 ஏப்., 16: மெக்காவில் ஹஜ் யாத்திரையின் கடைசி நாளில் பக்தர்கள் தங்கியிருந்த இடத்தில் சமையல் காஸ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 217 பேர் பலி .

*1998 ஏப்., 9: மெக்காவின் ஜமராத் பாலத்தில், ஹஜ் புனித யாத்திரையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 118 பேர் பலி.

* 2001 மார்ச் 5: சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 35 பேர் பலி.

* 2003 பிப்., 11: சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 14 பேர் பலி.

* 2004 பிப்., 1: சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 251 பேர் பலி.

* 2006 ஜன., 12: மெக்காவில் ஹஜ் புனித யாத்திரையின் கடைசி நாளில், ஜமராத் பாலத்தில் நெரிசலில் சிக்கி 346 பேர் பலி.

* 2015 செப்., 11: மெக்காவில் கிரேன் விழுந்ததில் 107 பேர் பலி.

http://www.dinamalar.com/

Edited by குமாரசாமி
http://www.nakkheeran.in/

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு செத்த... முஸ்லீம்கள், நல்ல முஸ்லீம்.
சாகாத  முஸ்லீம், பாவம் செய்து கொண்டெ... இருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செப்டம்பர் 11 அமெரிக்காவுக்கும் விசேசமான நாள்.

bd1a4811-aa96-4fa8-8a8d-b4f055ed6b5c_4x3

  • கருத்துக்கள உறவுகள்

மூட நம்பிக்கைகளின் 
அறுவடைகள் இவைகள் மட்டுமே ......

உண்மையானவன் அல்லாவை அருகில் இருக்கும் ஒரு ஏழைக்கு 
உணவு கொடுத்து அந்த ஏழை பசியாறுவதில் கண்டுகொள்வான். 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று தாயகத்தில் நல்லூர்க் கந்தன் தேரோட்டம் இலட்சக்கணக்கில் அடியார்கள்கூட்டம் சிறு அசம்பாவிதமும் இல்லை. எதுக்கோ தம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டவர்கள்போல் அந்த ஐந்து இலட்சம் மக்களும் ஒருவர் தவறாது, ஒரு மணிநேரத்துக்குள் சுற்றிவரும் தேரினில் முருகனைத் தரிசித்து வீடுசென்றார்கள் 

ஆயிரத்துக்கும் குறைவான  காவல்துறையினர், ஒருசில திருட்டுச்சம்பவங்கள்  இந்தநிலை எதிவரும்காலங்களிலும் நீடிக்கவேண்டும்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் எப்படிச் சாத்தியமானது?

இது ஒரு சமூகக் கலாச்சாரத்தின் வெளிப்பாடு  ஒரு அமெரிக்க வெளியுறவு அதிகாரி "நீங்கள் ஏன் இலங்கைத்தமிழர்கள் எனப் பெருமை கொள்கிறீர்கள் எனக்கேட்டார்.

அவருக்கான பதிலும் இதில் இருக்கின்றது.

எங்களை, எங்கள் சுற்றாடலிலிருந்தே ஏனையவர்கள் கவனிக்கிறார்கள், நாங்கள் வெளியிடும் வார்த்தைகளிலிருந்தே எம்மை அளவிடுகிறார்கள் 

ஆம் நான் தமிழன் பெருமைகொள் ஈழத்தமிழன்.

நேற்றைய தினம் தாயகத்தின் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும் கடைப்பிடித்த சமூக ஒழுக்கத்துக்கு நன்றிகூறுகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழன் என்பவன் யார்? ஓர் வரைவிலக்கணம் தர முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழன் என்பவன் யார்? ஓர் வரைவிலக்கணம் தர முடியுமா?

இலங்கைக்கு இன்னொரு பெயர் ஈழம்.....இலங்கை தமிழன் எல்லொரும் ஈழத்தமிழன்......

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானல் இலங்கையன் என்றும் சொல்லலாமே.
மேலும் ஈழத்தமிழன் என்று அழைப்பதை விட‌, தமிழ் ஈழத்தான் என அழைக்கலாம்.

சிங்களவர்களை, சிங்கள ஈழத்தான் (ஈழ சிங்களவன்) என அழைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானல் இலங்கையன் என்றும் சொல்லலாமே.
மேலும் ஈழத்தமிழன் என்று அழைப்பதை விட‌, தமிழ் ஈழத்தான் என அழைக்கலாம்.

சிங்களவர்களை, சிங்கள ஈழத்தான் (ஈழ சிங்களவன்) என அழைக்கலாம்.

இலங்கைதமிழன் என்று அழைக்கலாம்,ஈழத்தமிழன் என்று அழைக்கலாம் ஆனால் தமிழ் ஈழத்தான் என்று அழைக்கும் பொழுது அந்த நாடு தமிழனுக்கு மட்டும் சொந்தம் என்று மாயை தோண்றுகிறது ஆகவே ஈழத்தான் என்று சொல்வது மிகவும் நல்லது மற்றது சிங்களவர்கள் ஈழம் என்ற சொல்லை விறும்பமாட்டார்கள் ஆகவே அவர்களை ஈழசிங்களவர்கள் என்று அழைத்தால் எங்கன்ட பிடரிக்கு சேதம்:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.